
சைவத்திருமார்களும் சிவனடியார்களும் சிவவழிபாடு செய்வது மரபு . அதில் மாதமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியை மிகுந்த விஷேச நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர் .
மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் நினைப்போடு மாலையில் நன்கு குளித்து சிவாய நமஹ எனச்சொல்லி சுத்த வெண் திருநீறு தரித்து
" ஓம் சிவாய நமஹ"
'' ஓம் நமச்சிவாய''
எனும் பஞ்சாட்சர மந்திரங்களை இடைவிடாது உச்சரித்து விரதமிருந்து ஏதேனும் ஓர் சிவாலயத்தில் கண்விழித்து வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்சனை செய்து தேவாரம்,திருவாசகம் , பாரயணம் செய்வது சிவபெருமானுக்கு அருகில் நாம் செல்ல வைக்கும் அரியதோர் வாய்ப்பு
மகா சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவதன் பலன் :
நூறு அசுவமேதயாகம் செய்த பலன் .
அறிந்தும் அறியாமலும் செய்த பாவ நிவர்த்தி ,
அடுத்த பிறவியில் சிவலோக பதவி, ஆகியவை கிட்டும் .
சிவன் ஜோதி வடிவில் உருவமாகவும் அருவவடிவில் லிங்கமாகவும் அருள்புரிகிறார் . அப்படி சிவன் லிங்கத்தில் அருவமாகி காட்சி தரும் நாளே சிவராத்திரியாகும் . மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்தசி திதியில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. வருடம்முழுவதும் சிவராத்திரி விரதமிருக்கமுடியாதவர்கள் மாசிமகா சிவராத்திரியன்று வணங்குவது வருடமுழுவதும் சிவனை வணங்கியதற்கு சமமாகும்.
கயிலாயத்தில் ஓர் நாள் பார்வதி தேவி சிவபெருமான் கண்களை மூட சிவனின் இரு கண்களான சூரிய சந்திரகளை மறைத்தது போலகிவிட உலகம் இருண்டு ஜீவராசிகளும் மக்களும் பயந்து நடுங்க அப்போது சிவன் தன் அக்னி வடிவான நெற்றிக்கண்ணைத்திறக்க அனைத்து உயிர்களும் மேலும் பயம் கொள்ள பார்வதி தேவியார் தான் செய்த தவறை உணர்ந்து அன்றிரவு சிவனுக்கு நான்கு காலபூஜைகள் செய்து சிவனை வழிபட்டார் .
பூஜையில் மகிழ்ந்த நெற்றிக்கண் அக்னி தளர்ந்து அருள் ஒளியாக்கினார் . பார்வதியை நோக்கி சிவன் என்ன வரம் வேண்டுமெனக்கேட்க தாம் செய்த பூஜை சிவனுக்குரிய பூஜைநாளாக சிவராத்திரி பூஜையாக அருள வேண்டுமெனவும் , இந்த சிவராத்திரியில் நான்கு காலபூஜை செய்து அபிஷேகித்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் எல்லா ஐஷ்வர்யங்களும் கிட்ட வேண்டுமென அருள்புரியுங்கள் எனக்கேட்க அப்படியே ஆகட்டும் தேவி என ஆசிர்வதித்தார் சிவபெருமான் .
புராணங்கள் சிவராத்திரியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :
அர்ஜீனன் தவமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்றது ஓர் சிவராத்திரியில்
பகிரத முனிவர் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது. கண்ணப்பநாயானார் முக்தி பெற்றது சிவராத்திரி நாளில்தான் .
சிவன் பார்வதிக்கும் தம் இடப்பாகம் கொடுத்து மகாசிவராத்திரி நாளில்
இப்படி ஆயிரமாயிரம் புண்ணியங்கள் நிறைந்தது மகா சிவராத்திரி என சிவபுராணங்கள் இயம்புகின்றன. வயதானவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் சிவபுராணம் பாராயணம் செய்யுங்கள் .
இளம் வயதினர் தூங்கமலிருந்து அருகிலுள்ள சிவாலயங்கள் பலவற்றிக்கும் சென்று சிவதரிசனம் செய்யுங்கள் .கல்வி,வேலை ,திருமணம் போன்ற உயர்வுகள் கிட்ட சிவபெருமான் உங்களுடனிருப்பார் .
வெளியூர் வெளிநாடுகளில் வாழ்ந்தால் என்ன சிவாலயம் செல்ல முடியாவிட்டாலும் சிவனின் படங்களை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள் . யாருக்கேனும் இந்த இனிய நாளில் அன்னதானமிடுங்கள் . அல்லது அன்னதானத்திற்கு உதவுங்கள் .
அன்பே சிவம் .
எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள் .சிவபெருமான் உங்கள் உடனிருந்து வழி நடத்துவார் . ஓம் சிவாய நமஹ