Thursday, December 23, 2010

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை







நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனது பிறந்த நாளை கொண்டாட எங்கே செல்லலாம் என யோசித்த போது ஏற்கனவே பல முறை சென்றிருந்த்தாலும் நினைத்தாலே உற்சாகம் தரும் மாதேஸ்வர மலை (matheswaran temple) சென்று வரலாம் என முடிவு செய்து இருவரும் எங்கள் கிராமத்திலிருந்து பயணித்தால் 70கி.மீட்டர் தொலைவில் இருக்கும் மலை மாதேஸ்வர மலைக்கு (matheswaran hills) கிளம்பினோம்.

25 கி.மீட்டர் பயணித்து கொளத்தூர் வந்தடைந்து பயணத்தை தொடர்ந்தோம். அங்கிருத்து 2வது கி.மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தான் சின்னத்தண்டா (chinna than;da) எனும் ஊர்க்கு செல்ல பிரிவு உள்ளது. அங்கு நம் வாகனத்திற்கு தேவையான பெட்ரோல் நிரப்பிக் கொண்டு கிளம்பினொம்.

சேலம்(SALEM) மேட்டூர் (METTUR)கொளத்தூர்(KOLATHUR) வழியாக மாதேஸ்வர மலைக்கு வாகனத்தில் வருகிற பக்தர்கள் இவ்விடத்தில் தங்கள் வாகனத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்வது சிறப்பு . அடுத்த 40கி.மீட்டருக்கு அதாவது மாதேஷ்வர மலை வரை பெட்ரோல் பங்க் கிடையாது. அங்கிருத்து கருங்கல்லூர்(KARUNKALLUR) ,வெடிக்காரனூர்,(VEDIKARANUR) காவேரிபுரம் (KAVERI PURAM),என கிராமங்களின் அழகு நம்மை வரவேற்கின்றன.

நாங்கள் செல்கிற இவ்வழி மேட்டூரில் இருந்து மாதேஷ்வர மலை செல்கிற வழிதான் என்பதை அறியவும். நாம் செல்கிற வலது புறம் காவிரியின் தொடர்ச்சியாக சென்று மேட்டூர் அணைக்கு செல்கிறது.காவேரிபுரம் தாண்டிச்சென்றால் வலதுபுறம் கோட்டையூர் (KOTTAYUR)பரிசல் துறை 5கி.மீட்டர் சென்றால் காவிரியில் பரிசலில் பயணம் செய்து வரலாம். செல்லும் வழிகள் எல்லாம் வாழைத்தோட்டங்களும் மிளகாய் தோட்டங்களும் நம்மை கடந்து செல்ல கொளத்தூர் மிளகாய்க்கு பெயர் பெற்றது.

அடுத்ததாக நாம் வந்தடந்தது கோவிந்தப்பாடி மேட்டூரில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இங்கு சற்றே 5 நிமிடமாவது இளைப்பாறி செல்வது வழக்கம். நாமும் சற்றே இளைப்பாறியவாறு நம் பயணத்திற்கு தேவையான முருக்கு .பண்,(குரங்களுக்கு உணவாக கொடுக்க ) குடிநீர் ஆகியவை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனப்பயணத்தை தொடர்ந்தோம். அடுத்து நாம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது.

இடையில் காவிரியின் சிற்றோடகள்கள் அழகாய் குறுக்கிட பயணித்தால் சில கி.மீட்டர் தூரத்தில் பாலாறு சோதனைச்சாவடி வருகிறது.அங்கு புகைப்படம் எடுக்கும் அளவு காவிரியின் குறுக்கே பெரிய பாலமும் அழகிய பாலாறு நம்ம வியக்கவைக்கிறது. இவ்விடத்தில் இருந்து கர்நாடக எல்லைப்பகுதிக்கு நாம் வந்து விடுவதால் சோதனை சாவடியில் நம் வாகனத்தை தணிக்கை செய்து அனுப்புகிறார்கள் .


அடுத்து எங்கள் பயணம் தொடர்ந்தது . சற்று தூரத்திலியே வலது புரம் ஒகேனக்கல் 29 கி.மி,ஆலம்பாடி 34 கி.மீ கோபிநத்தம் 16 கி.மீட்டர் என பிரிகிறது. இவ்வழியே ஒகேனக்கல் செல்லலாம். ஆனால் முக்கிய நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாது என அங்கிருந்த பெரியவர் சொல்ல நேராக நம் பயணித்தை தொடர்ந்தோம்.

ஆங்காங்கே இலந்தை மரங்கள் ,குரங்கள் பசியால் ரோட்டின் ஒரங்களில் மக்கள் வரவுக்காக நாங்கள் வாங்கிச் சென்ற பண், பொரிகளை உணவாக கொடுத்து விட்டு கிளம்பினோம். அடர்ந்த மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாத அமைதி 18 குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் தாண்டி செல்ல வேண்டி இருப்பதால் கார். இரு சக்கர வாகனத்தில் கவனமாக செல்வது சிறப்பு.

அங்காங்கே மலைப் பசுக்கள் ,குரங்குகள் இவைகளை தான் காண முடிந்தது. வெயில் காலங்களில் யானைகள்,மான்களை பார்க்கலாம். கடைசியாக நாம் மலை உச்சிக்கு சென்றது போல் ஒரு பிரமிப்பு. அதே அளவில் பக்கத்தில் அழகான மலைகள்,அதன் மேல் மலைவாழ் மக்களின் குடியிருப்பு என தொடர்ந்த நம்பயணத்தை மற்றொரு சோதனைச்சாவடியில் நிறுத்தி வாகனத்திற்கேற்றவாறு வாகனக்கட்டணம் செலுத்தி அனுப்ப நாம் வந்தைடைந்தது மலை மாதேஸ்வர மலையின் முகப்பை அடைந்தோம்.

அட! இங்கு இருந்து பார்த்தால் சுற்றிலும் அழகான மலை நடுவில் மாதேஸ்வரர் திருக்கோவில் பிரமாண்டமாக அமைந்து நம்மை ஆச்சரியப்பட வைத்தது.

கோவில் முன்பாக நெய் தீபம் என குச்சியால் சுற்றி வித்தியாசமாய் விற்கிறார்கள். பூக்கள் சிறுமிகள் ஒடி வந்து விற்கிறார்கள். விலை குறைவே. சற்றே நடந்தால் நம் காலணிகளை பாதுகாக்க விட்டு திருக்கோவில் புத்தக நிலையம், குழந்தை வரம் வேண்டி தொட்டிகள், ஆகியவற்றை ரசித்து போனால் சிவப்பு கலர் உடையணிந்து நம்மூரில் மயிலிரகால் ஆசிர்வாதம் கொடுத்து காசு கேட்கிறார்களே அதைப்போல ஆசிர்வதிக்கிறார். விருப்பமிருந்தால் காசு கொடுக்கலாம்.

சற்று தூரத்தில் அங்கப்பிரதட்சனம் செய்து கடவுளை வழிபடுகிறார்கள். சற்று தூரத்தில் ஸ்ரீ மகா கணபதி சன்னதியை வணங்கி விட்டு அருகில் வாழைப்பழங்கள்,தேங்காய்,பூக்கள் அபிஷேகப்பொருட்கள் கடைகளில் வாங்கி கொண்டு மிகப் பெரிதான கோமாதாவை (நந்தி) வணங்க படிக்கட்டில் ஏறி தரிசனம் செய்து விட்டு கோமாதவிற்க்கு நேர்த்திக் கடனாய் நெய்,பால்., தானியங்கள் கொண்டு வந்து தந்து பூஜிக்கிறார்கள். இந்த நந்தியை சுற்றிலும் பணம்,காசுகளை ஒட்டி அழகு பார்க்கின்றனர்.

கோமாதாவின் தரிசனம் முடித்து கோவிலுக்குள் கிளம்பினோம்.உள்ளே கோவில் அறங்காவலர் குழுவால் பக்தர்கள் பாதுகாப்பாகவும் வரிசையாகவும் செல்ல கம்பித்தடுப்புகள் அமைத்து அருமையாக செய்திருக்கிறார்கள்.தேங்காய், பழங்கள் மாற்றி உள்ளே சென்றால் மலை மாதேஸ்வரர் தரிசனம் நிம்மதி தரிசனம் கிடைக்கிறது. சிவ தரிசனம் செய்ய வில்வம் கொண்டு செல்வது சிறப்பு. கூட்டமில்லாத நாட்களில் சென்றால் நன்றாக தரிசனம் செய்து வரலாம். திருநீரும் வில்வமும் மாதேஸ்வரர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

முதல் கால பூஜை காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை இரண்டாம் கால பூஜை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை, மூன்றாம் கால பூஜை மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை. ஆயினும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மேட்டூர் வழியாக வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் பயணம் வன விலங்குகளால் ஆபத்து என அறிக. இரவு கோவில் தங்க தங்குமிட ஏற்பாடுகள் ,மற்றும் லாட்ஜ் வசதிகள் உள்ளன. இங்கே மதிய உணவு பக்தர்களுக்காக விஷேசமாக தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

அருள் மிகு மாதேஸ்வரர் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள் .
நன்றி

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

Good Article....

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thanks sangavi sir

Unknown said...

நல்ல இடுகை.... எனக்கு மிகவும் பிடித்த கோவில்....

guru.pala.mathesu said...

உங்கள் கருத்துரைக்கு நன்றி நன்பா...! மாதேஸ்வரரை வேண்டி பிறந்த குழந்தைகளில் நானும் ஒருவன் . சிறப்பான கோவில் வருடமிருமுறை நான் செல்வதுண்டு.நட்புடன் குரு.பழ.மாதேசு www.kavithaimathesu.blogspot.com

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...