SRI APPATHAL TEMPLE, NASIYANUR
பழங்காலத்தில் வாழ்ந்த முன்னோர்களை அவர்களையே பிரதிஷ்டை செய்து கடவுளாக வணங்கி வருகிற கோவில்கள் பல உண்டு .
அந்த வகையில் நசியனூரில் சுமார் 1000முதல் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த
திருக்கோவிலாக நசியனூர் அப்பத்தாள் திருக்கோவில் விளங்கி வருகிறது .
கொங்கு வேளாளர் இனத்தின் நசியனூர் கண்ணன் குல கோத்திரத்தின் குல தெய்வமாகnஇந்த திருக்கோவில் அமைந்துள்ளது . கொங்கு வேளாளர் அல்லாது இங்குள்ள எல்லா சமுகத்தினரும் விரும்பி வணங்கிச்செல்கிற திருக்கோவிலாக நசியனூர் ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில் அமைந்துள்ளது .
மூலவர் அமைப்பு :
அம்மையும் அப்பனும் இணைந்துள்ள உருவச்சிலையாக பழங்காலத்தில் கண்ணன் குல முன்னோர்களான அப்பாவையும் +ஆத்தாவும் இணைந்து அருள்பாலிப்பதால் இத்திருக்கோவில் அப்பத்தாள் திருக்கோவில் எனப்பெயர் பெறுகிறது. தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிற திருக்கோவிலாகும் .
வார பூஜை;
வெள்ளிக்கிழமையன்றும்
வருட பூஜை;
மார்கழி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.
திருக்கோவில் செல்ல வழி:
ஈரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள நசியனூர் வந்து திருக்கோவிலை அடையலாம் . சேலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் பிரிவில் ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில் அமைந்துள்ளது .
சுற்றிலும் தென்னை மரங்கள் நிற்க திருக்கோவில் அமைதியான இடத்தில் அழகேஅமைந்துள்ளது. பழங்கால ஆலங்களில் பார்த்து வணங்க வேண்டிய ஆலயங்களில் நசியனூர் அப்பத்தாள் திருக்கோவிலும் ஒன்றாகும் .
No comments:
Post a Comment