Saturday, December 31, 2011

நாளைய விடியல் உனக்காக


ஒவ்வொரு வருடமும்
முன்னைப்போலவே
புதிதாய் பிறக்கிறது..!

நட்பே ,

உனக்காகதான் அது.!
அறிவை மேம்படுத்தி
உயர் சிந்தனைகள் வளர்த்து..!
உரியதோர் இலக்கை தொட்டு.!
புதியதோர் அத்தியாயம் படைத்திடு..!
நீ முயற்சிக்கின்ற
எதிலும் வெற்றி பெறு..!
முடியுமாவென யோசிக்காதே..!
முயற்சித்தால் கண்டிப்பாக
வானம் வசப்படும் ..!
நாளைய விடியல் 1.1.2012
அதன் தொடக்கமாயிருக்கட்டும் ..!




(எமது வலைப்பூவை தொடர்கின்ற அன்பு நட்புகளுக்கும் ,பேஸ்புக் ,டிவிட்டர் தொடர்கிற நட்புகள் ,மற்றும் சக வலைப்பூ நட்புகளுக்கும் , என் குருவை வாழ் நட்புகளுக்கும் , உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012 . HAPPY NEW YEAR WISHS - 2012 )

நட்புடன்
குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்

ஸ்ரீ திருமண்மலை கல்யாண லஷ்மிநாராயணப்பெருமாள் திருக்கோவில் ஒட்டப்பாளையம் . ஒலகடம்



திருமண்மலை
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் .
.ஒலகடம்


திருக்கோவில் செல்லும் வழி : ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஒட்டப்பாளையம் கிராமம் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் சாலையில் வெடிக்காரன்பாளையம் .தாண்டாம்பாளையம் என்னும் கிராமத்தில் உள்ளது. ஒலகடம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது.

திருக்கோவில் மூலவர் :
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோவில் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர் ஸ்ரீ கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் முற்றிலும் திருமண்ணால் திருமேனி கொண்டும் தாயாரை வலப்புறம் கொண்டு திருமண் கல்யாண லஷ்மி நாராயணராக திருமணக்கோலத்தில் திருமண்பெருமளாக காட்சி அளிக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் குன்றின் மேல் பெருமாள் திருக்கோவில் . சில நேரங்களில் இப்பெருமாள் உக்கிரமாகி நரசிம்ம மூர்த்தியாக மாறுவதால் இவர் "திருமண் லஷ்மி நரசிம்ம பெருமாளாக அழைக்கப்படுகிறார் . திருப்பதியைப் போன்று வேங்கடவன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார் . திருமண் என்றால் நாமக்கட்டி எனபொருள் . மூலவர் நாமக்கட்டியால் ஆனவர் என்பதே விஷேசம் . திருமண் எனப்படும் நாமக்கட்டியே இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இறைவனுக்கு பழமையான ஆலயம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட அழகான வைணவத்திருத்தலம் என போற்றப்படுகிறது. திருக்கோவில்
பலன்கள் : தனது வலப்புறத்தில் அன்னை பத்மாவதி தாயாரோடு இறைவன் திருமணகோலத்தில் காட்சி தருவதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால் நல்லபடியாய் திருமணம் நடைபெறுகிறது .
திருக்கோவில் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் வழியில் 3வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. திருக்கோவில் மேல் செல்ல பழங்காலத்தில் அமைக்கப்பட்ட 50 படிகட்டுகளும் ,

தற்போது அமைக்கப்பட்ட பாதைகள் சிறிய வாகனங்கள் செல்ல ஏதுவான பாதையும் உள்ளது. முகப்பில் உள்ள பெரிய ஸ்ரீ ஆஞ்சனேயர் சிலையும் ,அழகிய கொடிமரமும் வணங்கத்தக்கது. பூஜைகள் : பிரதிமாதம் ஏகாதசி திதி அன்று திருமண்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் . பிரதி மாதம் பெளர்ணமி மாலை 06.00 மணி முதல் 08.00 மணிவரை சத்திய நாராயண பூஜையும் ,சுதர்சண ஹோமமும் ,திருவிளக்கு பூஜையும் நடைபெறும் . பிரதிமாதம் பஞ்சமி திதி அன்று மகாலட்சுமிக்கு சிறப்பு சகஸ்கர நாமவளி பூஜை நடைபெறும் . பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனமும் ,சஹஸ்ரநாமாவளியும் ,தீபாரதனையும் நடைபெறும் . பிரதிமாதம் மூல நட்சத்திரத்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும் . திருக்கோவில் பற்றிய விரிவான ஆராய்வுகள் தேவைப்படுவதால் விரிவுபடுத்தப்படும் .

ஸ்ரீ சௌந்திரநாயகி உடனமர் வாகீஸ்வரர் திருக்கோவில் .பட்லூர் .வெள்ளித்திருப்பூர்





ஸ்ரீ செளந்திர நாயகி உடனமர் வாகீஷ்வரர் திருக்கோவில் ,பட்லூர் .வெள்ளித்திருப்பூர்


ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் புகழ் பெற்ற பழங்கால சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பழமையான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும் .

திருக்கோவில் செல்ல வழி :

பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி செல்லும் வழியில் 20கி.மீட்டர் தொலைவில் பட்லூர் என்னும் அழகிய ஊரில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிக்கிறார் . அந்தியூரில் இருந்து நால்ரோடு வந்து (8 கி.மீட்டர் ) பட்லூரை அடையலாம் .

பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் நால்ரோட்டில் இறங்கி சுமார் 1 கி.மீட்டர் வடக்கில் பயணித்தால் திருக்கோவிலை அடையலாம் . திருக்கோவில் தோன்றிய காலம் 1000 ஆண்டுகள் இருக்குமென இங்குள்ள ஸ்தல மரமான வில்வமும் ,அருகேயுள்ள அரசமரங்களும் இயம்புகின்றன.

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ வாகீஷ்வரர்(தாமரை பீடத்தில் சிவ லிங்கமாக அமைந்துள்ளார் )

அம்பாள் :

ஸ்ரீ செளந்திர நாயகி

மூலவர் :
திருக்கோவில் சாமி லிங்க உருவில் தாமரை மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வாகீஷ்வரர் காட்சி அளிக்கிறார் .திருக்கோவில் சிவலிங்கம் கிழக்கு பார்த்தவாறு அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறம் பழங்காலத்தில் சிறுகற்களால் வெளிப்பிரகாரம் கட்டப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. திருக்கோவில் எப்போதும் திறந்திருக்கும் . அமைதியான சூழலில் சிவதரிசனத்திற்கு ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் ஏற்புடையது.

திருக்கோவில் பெரிய அளவில் எடுத்துச்செய்ய யாரேனும் வருங்காலத்தில் வரக்கூடும் . எளிமையாக இருந்தாலும் கம்பீரமாக காட்சிதரும் சிவாலயம் . ஸ்ரீ செளந்திரவல்லி அம்பாள் தனிச்சன்னதியாக அழகாக நேர்த்தியான வடிவமைப்பில் அமர்ந்திருக்கிறார் . முகப்பில் உள்ள நந்தீஷ்வரர் உயிர்புடையவர் ,

திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்ரீ கணபதி, பன்னிருகரம் கொண்ட ஸ்ரீமுருகப்பெருமான் .ஸ்ரீ சண்டிகேஷ்வரர் , ஸ்ரீ காலபைரவர் என ஓர் பழங்கால சிவாலயத்தை வழிபட்ட திருப்தி ஏற்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் சிவாலயத்தை தேடி வழிபடுபவர்களாக இருந்தால் வந்து வணங்கி செல்லுங்கள் .

ஸ்ரீ வாகீஷ்வரர் உங்களுடன் இருக்க வேண்டுகிறேன் .

Friday, December 30, 2011

நன்பா 2012


நன்பா .. !
முந்தைய வருடங்கள் போலவே
இந்த வருடமும்
"புகை பிடிக்கமாட்டேன்"
" சாரயம் குடிக்கமாட்டேன்"
அதை மறப்பேன்
இதை விடுவேன் என

ஆயிரமாயிரம் சபதங்களை
ஏற்றுக்கொண்டு மறந்து விடு..?
கண்டிப்பாக நியாபகப்படுத்த வரும்
அடுத்த வருடமும்
ஓர் இனிய புத்தாண்டு .




எமது வலைத்தளத்தை பின் தொடர்கின்ற வலைப்பூ நன்பர்களுக்கும் ,இதர வலைப்பூவை நிர்வாகிக்கும் என் இனிய வலைப்பதிவாளர்களுக்கும் ,பேஸ் புக் ,டுவிட்டரில் உள்ள என் ஆழ்ந்த அன்பு நட்புகளுக்கும் , எனது குருவரெட்டியூர் நட்புகளுக்கும் எப்போதும் என்னைக்கருத்துரைகளில் குட்டுகிற வாசக நட்புகளுக்கும் என் இதயம் கனிந்த 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

ஜொள்


மலர்களைப் பார்த்து
ஜொள் விட்டது..!

இலையில் பனித்துளி..!

ஹக்கூ



எத்தனை முறை முத்தமிட்டாலும்

அலுத்துக் கொள்ளவேயில்லை


அட

அவளின் போட்டோ.!

அன்பானவளே புரிந்து கொள்


அன்பே ...!

நீ கண்ணிமைக்கும் கணங்களில்
சிரித்து விட்டு போகவும்...!
நீ ஆர்வப்படுகிற நேரங்களில்
முத்தமிட்டு போகவும் ..!
நீ அன்பு காட்டுகிற நேரங்களில்
கொஞ்சி குலாவவும்..!
உனக்கு வேண்டாத தருணங்களில்
அலைக்கழித்து விட்டு போகவும்..!

நான் ஒன்றும்

உன் எதிர் வீட்டுக்குழந்தையல்ல ..!

அழகான கவிதை


அன்பே ...!
என் கவிதைகள்
உனக்கு
பிடித்திருப்பதாக சொன்னாய் ...!
ஆச்சர்யம் தான்
ஓர் கவிதைக்கே
இன்னொரு கவிதை
பிடித்திருப்பதாக சொல்வது..!

Monday, December 26, 2011

இயற்கையில் அழகில் பாலமலை ஸ்ரீ கவ்விய பெருமாள் திருக்கோவில்






அருள்மிகு கவ்வியப்பெருமாள் திருக்கோவில் .பாலமலை . கொளத்தூர்.


சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும், ஈரோடு மாவட்டத்தின் வடக்கு எல்லையான பாலமலை என்னும் அழகிய சூட்சமமலை அமைந்துள்ளது. பாலமலையின் உச்சியில் அருள்மிகு சித்தேஷ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு நம் வலைப்பூவில் எழுதியுள்ளோம் . பாலமலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பழங்காலமாக வெளித்தெரியாத பழங்கால திருக்கோவிலாக ஸ்ரீ கெவ்வியப்பெருமாள் temple அமைந்துள்ளது.



கெவ்விய பெருமாள் திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ பாமா ருக்மணி உடனமர் ஸ்ரீ கிருஷ்ணர் (கெவ்வியப் பெருமாள் )

அழகான வடிவமைக்கப்பில் ஸ்ரீ அர்ஜீனர் சிலைகள் அமைந்துள்ளன.


திருக்கோவில் முகப்பில் விநாயகப்பெருமானின் சிலை இருக்க கடந்த 2 வருடம் முன்பாக திருக்கோவில் மதிப்பை அறிந்து புதிதாக சிலைகள் பிரதிஷ்டை செய்து அழகு செய்துள்ளார்கள் .பழங்கால மூலவர் சிலையும் அருகே அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள இடம் முற்றிலும் இயற்கையின் குழுமைக்கு நம்மை இழுத்துச்செல்கிறது. சற்று தூரத்தில் ஆஞ்சனேயர் தனிச்சன்னதியாக அமைந்துள்ளார் .


பயண விபரம் :

திருக்கோவிலுக்கு செல்ல மூலமெத்தையில் இருந்து மலைப்பாதையில் நடக்க வேண்டும் இது குருவரெட்டியூர் கண்ணாமூச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது . இரண்டாவது வழியாக குருவரெட்டியூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் கண்ணாமூச்சி எல்லைபோர்டுக்கு முன்பாக வலப்பக்கம் திரும்பி மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ கெவ்வியப்பெருமாளை தரிசனம் செய்யலாம் .

திருக்கோவில் நிலமட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் மலைப்பாதையில் உள்ளது.ஒற்றையடிப் பாதையில் பயணித்து மலை ஏற வேண்டும் . பாலமலையில் பயப்படும் படியான மிருகங்கள் இல்லாததால் பயமின்றி பயணத்தை தொடரலாம் . அவ்வப்போது இடையில் பயணத்தில் பாம்புபுற்றுகள் இருக்கின்றன. அதைத்தாண்டி பயணித்தால் இரண்டு இடத்தில் உட்கார்ந்து செல்ல ஏதுவாக பெரிய பாறைகள் உள்ளன.


சுமார் 2மணி நேரப்பயணத்தில் அழகிய திருக்கோவிலை அடையலாம் . உணவு ,தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. அங்கு கடைகளோ மக்களோ இல்லாத மலைப்பாங்கான இடமாகும் . திருக்கோவில் பூஜை பிரதி மாதம் அம்மாவசை நாட்களில் மட்டும் நடைபெறுகிறது. அம்மாவசை அன்று சென்றால் இறைவனை நன்றாக தரிசித்து வரலாம் . வருடத்திய சிறப்பு பூஜையாக கோகுலாஷ்டமி அன்று சிறப்பாக நடைபெறுகிறது.

பழங்காலமாக திருக்கோவில் பூஜை செய்து வரும்

பூசாரி 97157- 69559

அவர்களிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று திருக்கோவிலுக்கு செல்லலாம் .

திருக்கோவில் வரலாறு :

பழங்காலத்தி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா குழந்தை உருவம் கொண்டு தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியில் பால் அருந்திக்கொண்டு இருந்ததாகவும் , அப்போது பசுவைக்காணாது வந்த பசுவின் சொந்தக்காரர் பசுவின் மடியில் பால் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தையைக்கண்டு ஆச்சர்யம் கொள்ள ,

பின் அக் குழந்தை பாம்பு உருவமாகி தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்திலுள்ள சிறு குகையில் உள்ளே சென்று விட்டதாகவும் , பின்னர் அதை பலரிடமும் இயம்பி விபரம் சொல்லி திருக்கோவில் பூஜை செய்து வருவதாகவும் ,ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக வந்து நாகசர்பமாக மாறி குகைகுள் சென்றதால் "கவ்விய" பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுவதாகவும் பழங்கால செவிவழிச்செய்திகள் இயம்புகின்றன.

இயற்கை நீருற்று(சுனை) :

திருக்கோவில் வலப்புறம் இயற்கை நீர் ஊற்று வேர்களைப்பிடித்து இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. கோவிந்தா கோவிந்தா எனக்குரல் எழுப்ப சுனையில் வருகின்ற நீரின் அளவு அதிகரிக்கிறது. சுனையின் நீர் தொடங்கும் இடத்தையும் முடியும் இடத்தையும் காண முடியாதது ஓர் ஆச்சர்யமே.

பாலமலையின் அதிக குளுமையான பகுதியாக திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைவிடமே பெரிய குகை போன்ற அமைப்பில் பெரிய பாறைக்கு அடியில் உள்ளது சற்று பயத்தை தந்தாலும் இங்கு இறைவன் இருப்பதை அருமையாக உணரலாம் . ஸ்ரீகவ்விய பெருமாள் திருக்கோவிலை கெவ்வியப் பெருமாள் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்கோவில் அமைவிடத்தில் ஸ்ரீஅர்ஜீனர் தவசிக்கு புறப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது. பாலமலையில் அமைந்துள்ள ஸ்ரீ கவ்வியப் பெருமாள் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும் . வழிகாட்டி இல்லாமல் செல்லமுடியாதென்பதால் திருக்கோவில் செல்ல ஆர்வமிருப்பவர் எமது செல்லிடப் பேசியில் அழைக்கலாம் .

மற்ற திருக்கோவில் போல் அல்லாமல் முற்றிலும் வித்யாசமாக இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஸ்ரீ கெவ்வியப்பெருமாளை தரிசித்து தரித்திரங்கள் போக்கி செல்வநிலை மேலோங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட அழைக்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு

SRI ULAGEASHWARAR tirukkovil, olagadam ,bhavani taluk




அருள்மிகு உலகேஸ்வரி உடனமர் உலகேஷ்வரர் திருக்கோவில் ,ஒலகடம்


திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஒலகடம் என்ற அழகிய ஊரில் அமைந்துள்ளது.

செல்லும் வழி :

பவானியில் இருந்து சுமார் 16 கி.மீட்டர் தொலைவில் வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் ஒலகடம் என்ற சிற்றூர் உள்ளது . அங்கு இறங்கி 500 மீட்டர் கிழக்கு நோக்கி நடந்தால் திருக்கோவில் வருகின்றது .

ஒலகடம் என்ற ஊர் பழங்காலத்தில் "உலகடம் " என்று ஸ்ரீ உலகேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருப்பதால் பெயர் வந்திருக்கும் என்றும் .காலப்போக்கில் பேச்சுவழக்கில் மருவி ஒலகடம் என்றும் பெயர் மாறி இருக்கும் என்பது நம் ஆய்வு .

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ உலகேஸ்வரர்



அம்பாள் :


ஸ்ரீ உலகேஸ்வரி

மூலவர் ஸ்ரீ உலகேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அழகாக அமர்ந்துள்ளது தனிச்சிறப்பாகும் .பழங்கால சிவாய திருக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும் . திருக்கோவில் முகப்பில் இராஜகோபுரம் அழகானது . உள்ளே நந்தீஷ்வரர் தொழுது மூலவர் ஸ்ரீ உலகேஷ்வரரை தரிசனம் செய்து அம்பிகை ஸ்ரீ உலகேஸ்வரி தனிச்சன்னதியில் தரிசிக்க அழகான ஒன்றாகும் . திருக்கோவில் வளாகம் பெரியது.


திருக்கோவில் "பன்னிருகரத்தாய் போற்றி " என்னும் பாடலுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் பன்னிருகரங்களுடன் அழகாய் ஸ்ரீவள்ளி தெய்வானை உடன் நிற்க அழகன் முருகன் என்னும் சொல்லிற்கு ஏற்ப அழகான சிற்பமாய் இறைவன் முருகர்அமர்ந்திருக்கிறார். எல்லா சிவலயங்களைப் போலவே திருக்கோவில் சண்டிகேஷ்வரர் ,காலபைரவர் ,துர்க்கை ,நவகிரகங்கள் அழகாய் அமர்ந்துள்ளார்கள் .

அழகுடன் அமைந்த ஸ்ரீ உலகேஷ்வரி உடனமர் உலகேஷ்வரர் திருக்கோவிலை தரிசனம் செய்து நலன்கள் பல பெற்றிடுங்கள் . பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரி பூஜை வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

திருக்கோவில் காலத்தை அறிய முடியவில்லை எனினும் சுயம்பு மூர்த்தியாய் லிங்க உருவில் சிவபெருமான் அருள்பாலிக்கின்ற காரணத்தால் திருக்கோவிலை ஓர் முறையேனும் வாழ்வில் தரிசித்து இறையருள் பெற அன்புடன் அழைக்கிறேன்

Tuesday, December 20, 2011

அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் கல்யாணசுப்பிரமணியர் திருக்கோவில் .குருவரெட்டியூர் பவானி வட்டம்




அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் குருவரெட்டியூர்

ARULMIGU SRI KALYANA SUBRAMANIYAR THIRUKKOVIL GURUVAREDDIYUR

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பல திருக்கோவில்களை நம் வலைப்பூவில் எழுதப்பட்டிருந்தாலும் நம்மை சுற்றி நமக்கருகே உள்ள கோவிலைப்பற்றி எழுதுவதில் தனிச்சுகம் உண்டு. அப்படி இன்றைய தினம் தரிசித்த பவானி வட்டம் குருவரெட்டியூரில் (GURUVAREDDIYUR)அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் சுவாரஷ்யமானது .

குருவரெட்டியூர்(GURUVAREDDIYUR) உட்பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் திருக்கோவில் எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ முருகர் துதிப்பாடல் :

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள்,
மெய்மைகுன்றா மொழிக்குத்துணை முருகா என்னும்
நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை
அவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

மூலவர் :

வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்

திருக்கோவில் பழங்காலத்திய கோவிலாகும் .முலவர் ஸ்ரீ முருகப்பெருமானின் சிலை அழகும் சிறப்பும் தன்னகத்தே கொண்டு தம்மை நாடி வரும் பக்தர்களை குறைதீர்த்து அருள்பாலிக்கிறார் .திருக்கோவில் வளாகத்தில் அமைந்த வன்னி மரம் அழகானது.

திருக்கோவில் முன்மண்டபமும் ,கல்யாணமண்டபமும் தற்போது பெரும் முயற்சியால் உருவாகியுள்ளது .திருக்கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நம் குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR)பகுதிவாழ் நண்பர்கள் திருக்கோவிலுக்கு உதவ விரும்பினால் திருக்கோவில் நன்பர்கள் குழுவை (75022-19348) தொடர்பு கொள்ளலாம் .

மார்கழி மாதத்தில் சிறப்பான பஜனைக்குழுவால் அழகான திருவாசகம் ,கந்தர் அநூபூதி,கந்தர் அலங்காரம் ,தேவாரம் இசைக்க அழகான பாடல்கள் பாடி ஊருக்கே ஆன்மீகத்தால் இறைவனை இழுக்கின்ற பஜனைக்குழு போற்றுதலுக்குரியது.

அமைதியான அழகாக அமைந்துள்ள குருவரெட்டியூர்(GURUVAREDDIYUR) ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியரை தரிசனம் செய்து எல்லா வளமும் நலமும் பெறுங்கள் . குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR-638504)பவானியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

Monday, December 19, 2011

Arulmigu SRI MAGUDESWARAR temple KODUMUDI ,erode ,




அருள்மிகு கொடிமுடி நாதர் ஸ்ரீ மகுடேஷ்வரர் திருக்கோவில்


ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்கால சிவத்தலங்களில் ஒன்றாகும் .

மூர்த்திகள் :

ஸ்ரீ மகுடேஸ்வரர் (கொடுமுடி நாதர் ) ,
ஸ்ரீ வடிவுடைநாயகி ,
ஸ்ரீவீரநாராயணப்பெருமாள் ,
பிரம்மா ,
சனீஸ்வரர்

தீர்த்தம் :

தேவதீர்த்தம் காவிரிதீர்த்தம், பிரம்மதீர்த்தம் பரத்வாசதீர்த்தம்

திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் சிறப்புகள் :

சுமார் 2000ஆண்டுகள் பழமையான சிவத்தலம் .
சிவபெருமான் சுயம்பு மூர்த்த்தியாக உள்ள ஸ்தலம் .
கொங்கு நாட்டில் புகழ்பெற்ற 7 சிவத்தலங்கள் ஒன்று .
நால்வர்களில் அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரி நாதரால் பாடல் பெற்ற திருத்தலம்,
காவிரி நதிக்கரையின் படுக்கையில் அமைந்த அழகிய திருத்தலம் ,
பிரம்மா விஷ்ணு.சிவன் மூவரும் ஒருங்கே அமைந்த ஸ்தலம் என பல வகையான சிறப்புகள் பெற்ற கொடிமுடி நாதர் , திருபாண்டிக்கொடுமுடி என்றெல்லாம் அழைக்கப்படும் சிவாலயத்தை பார்த்து அறிய வேண்டியது ஏராளம் .

பிரம்மா ,விஷ்ணு ,அகத்தியர் பரத்வாசர் வழிபட்ட ஸ்தலம் . மேருவின் சிகரமே லிங்கமாய் விளங்குவாதால் கொடுமுடி என பெயர் பெற்றதாக வரலாறு.

ஆலயம் உருவாக்கிய அரசர்களும்

அக்காலத்திய கல்வெட்டும் கி.பி 2 இம் நூற்றாண்டில் கோமவர்மரும் , தேர்மாறன் நரசிம்ம பல்லவன் 7ஆம் நூற்றாண்டிலும் ,சுந்தரபாண்டிய கேசரிவர்மன் 13 நூற்றாண்டிலும் , தண்டிகை காளியண்ணன் 17 ஆம் நூற்றாண்டிலும் திருக்கோவில் திருப்பணி செய்ததாக திருக்கோவில் வரலாறும் கல்வெட்டுகளும் இயம்புகிறது.

5காலப்புஜைகள் நடைபெறுகிறது . பிரமோற்சவம் ,சிவராத்திரி,பிரதோஷம் , ஆகிய விஷேச காலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

7 சன்னதிகள் கொண்ட 1 ஆம் சன்னதியாக அருள்மிகு ஸ்ரீ மகுடேஷ்வரர் ஸ்ரீதிருக்கோவில் சுயம்புவாக அழகாக அமைந்துள்ளார் . தட்சிணாமூர்த்தி ,காவிரிகண்ட விநாயகர் , சோமஸ்கந்தர் , அகஸ்தீஷ்வரர் ,கஜலட்சுமி ,ஸ்ரீசுப்பிரமணியர் ,சண்டிகேஷ்வரர், துர்க்கை ஆகியோர்களை திருக்கோவிலில் தரிசிக்கலாம் .

2ஆம் சன்னதியாக வடிவுடை அம்மன் அமைந்துள்ளார் .அழகான அம்பாள் சன்னதி நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது .திருக்கோவில உள் பிரகாரத்தில் வல்லப கணேசர் ,சோழிச்சரர் ,விசுவேசுவர் ,காசி விஷ்வநாதர் , விசாலட்சி ,சரஷ்வதி, சப்தமாதக்கள் சிலைகள் ரசிக்கவேண்டியனவாகும் .

3 ஆம் சன்னதியாக ஸ்ரீ பிரம்மாவின் சன்னதியாகும் . பிரம்மா தனியாக சன்னதிகொண்ட பெருமை மிக்க இடம் . 2000 வருடங்கள் கடந்த பழமையான வன்னி மரத்தடியில் அமர்ந்த பிரம்மாவின் சிலை அழகே உருவானதாகும் .

4 ஆம் சன்னதியாக ஸ்ரீ வீரநாராயணப்பெருமாள் சன்னதியாக அமைந்துள்ளது. திருக்கோவில் கொடிமரமும் கருடாள்வார் சன்னதியும் அழகானதாகும் . திருக்கோவில் மூலவர் பள்ளிகொண்டுள்ள அழகு தரிசனத்திற்குரியது. திருமங்கையாள்வார் ,கருடாள்வார் , தொண்டரடிப் பொடியாள்வார் , திருமங்கையாள்வார் , குலசேகராள்வார் , பொய்கையாள்வார் , திருப்பாணாள்வார், பூதத்தாள்வார் ,பெரியாள்வார் ,மதுரகவி , பேயாள்வார் ,நம்மாள்வார் ,பிரம்ம நாதர் என அழகான சிலைகள் வணங்கத்தக்கது.

5.வது சன்னதியாக ஸ்ரீ லட்சுமி தாயார் ( ஸ்ரீமகாலட்சுமி) அழகான சன்னதியாகும் .
6 வதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியாகும் 7வது சன்னதியாக உள்ள ஸ்ரீசனிஸ்வரர் சன்னதி காக வாகனத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சனிஷ்வரருக்கு தனிச்சன்னியும் ,நவகிரக பீடத்தில் இருப்பது போன்று மேற்கு நோக்கி அமைந்திருப்பது விஷேசமான ஒன்றாகும் .

திருக்கோவில் வந்து செல்ல கொடுமுடியில் ரயில் நிலையம் .பழங்காலத்திலும் ,இப்பொழுதும் ,எப்பொழுதும் உயர்ந்து நிற்கிற காவிரிக்கரையில் அழகில் அமைந்துள்ள கொங்குநாட்டிலுள்ள 7 சிவஸ்தலங்களின் ஒன்றான ஸ்ரீ மகுடேஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி இறையருள் பெற்றுச்செல்லுங்கள் .

ஓம் சிவாய நமஹ

Friday, December 16, 2011

அம்மா


அவளுக்காக இவனும்
இவனுக்காக அவளும்
இதயம் துடிக்குமென
கனவு கண்டு கொண்டிருக்கையில்
அவர்களுக்காக அவரவர் வீட்டில்
ஓர் இதயம் உண்மையாய்
துடித்துக்கொண்டிருந்தது-

அம்மா

Wednesday, December 14, 2011

கி.பி 1300 ல் தோன்றிய ஸ்ரீ விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவில் .சீனாபுரம் .பெருந்துறை





ஸ்ரீ விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவில்.மலைச்சீனாபுரம்


திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சீனாபுரம் என்னும் ஊரில் அமைந்த பழமைஅற்புத ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயமாகும் .

முருகப்பெருமான் துதிப்பாடல் :

கந்த சஷ்டி கவசம் நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம் :துன்பம்,
போம் : நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்து ஓங்கும் நிஷ்டையு ங்கை
கூடும் : நிமலரருள் கந்தசஷ்டி கவசந்தனை.


திருக்கோவிலுக்கு எப்படிச்செல்வது :

ஈரோட்டில் இருந்து பெருந்துறை வந்து பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் சுமார் ஐந்தாவது கி.மீட்டரில் ஆயிக்கவுண்டம் பாளையம் பிரிவில் மலைச்சீனாபுரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பும் சிறப்பும் :

"குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடம்" என்பது பெரியோர்கள் வாக்கு .ஆனால் இங்கு குன்று இல்லை. ஆனால் குன்று ஒன்றை உருவாக்கி ஸ்ரீ முருகரை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவில் எழுப்பப்பட்டுள்ளது . கி.பி 1300ஆண்டுகளில் நன்னூலை இயற்றிய பவணநந்தி முனிவரால் திருக்கோவில் எழுப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வு.

நன்னூலை எழுதி வெளியிடப்பட்ட காலமும் கி.பி 1300 அல்லது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதால் திருக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்தது என்பது உறுதியாகிறது.

பவனந்தி முனிவர் சமண மதத்தை சார்ந்தவர் என்றும் சில கருத்துக்கள் உண்டு . அதை ஏற்கும் வண்ணம் அக்காலத்தில் விஜயநகர பேரரசின் தலைமையிடமாக இருந்த விஜயபுரி தற்போது விஜயமங்கலமாக திகழும் இடத்தில் சமணர் கோவிலில் பவணந்தி முனிவருக்கு சிலை இருக்கிறது .

அதேபோல திங்களுர் செல்லும் வழியில் உள்ள கோவில்களிலும் பவணந்தி முனிவர் வணங்கிய ஷ்தலம் பற்றிய புனைவுகள் உள்ளதால் சீனாபுரத்தில் பவணந்தி முனிவர் வாழ்ந்த இடமாகும் .

முருகப்பெருமானின் மேல் கொண்ட பற்றின்பால் பவணந்திமுனிவர் ஸ்ரீ முருகருக்காக ஓர் திருக்கோவிலை உருவாக்கி பலகாலம் பூஜைசெய்தார் . அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ முருகர் ஆலயமே விஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவிலாகும் .


திருக்கோவில் தற்போதைய அமைப்பு :

பெருந்துறை அருகேயுள்ள மலைச்சீனாபரம் என்னும் அழகிய ஊரின் துவக்கத்தில் அமைந்த திருக்கோவில் அடிவாரத்தில் முருகப்பெருமானின் வாகனமான மயிலை தொழுது படிக்கட்டின் முகப்பில் யானைச்சிலையை ரசித்து நான்கு படிக்கட்டுகள் ஏறினால் வலப்புறம் அரசமரத்தடி விநாயகரை வணங்கிவிட்டு மேலே படிக்கட்டில் நடக்கவேண்டும் . அருகே வில்வமும் ,பாலை மரமும் அமைந்துள்ளது .

சமதளத்தில் உருவாக்கப்பட்ட சிறிய குன்றில் சுமார் 25 படிக்கட்டுகள் மட்டுமே ஏறினால் திருக்கோவில் முகப்பை அடைந்து கொடிமரம் தரீசித்து உள்ளே சென்றால் மூலவரான ஸ்ரீ வேலாயுதசாமியை தரிசனம் செய்யலாம் . அழகாக நேர்த்தியாக வடிவமைக்கபட்ட ஸ்ரீ முருகப்பெருமான் சிலை எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும் . நம்மை பார்த்து அடிக்கடி வரச்சொல்கிற சக்தியுடையவர் .

திருக்கோவில் சுற்றிலும் சிவாலயங்களைப்போல நவகிரக சன்னதிகள் ,தட்சிணாமூர்த்தி சன்னதி,சனீஷ்வரர் சன்னதி. என நிறைய சன்னதிகள் விஷேசமானது. நிறவான தரிசனத்திற்கு ஏற்ற கோவில் . விழாக்காலங்களில் ,சஷ்டி,தைபூசம் , செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . இப்பகுதிக்கு வந்தால் ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் பெற்றுச்செல்லுங்கள் .

நன்னூல் பற்றியும் பவணந்திமுனிவர் பற்றியும் சிலகுறிப்புகள் :

நன்னூல் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் இலக்கணத்தை தெளிவாக சுருக்கமாக கூறும் நூலாகும். "அருங்கலை விநோதன்" என்ற பட்டம் வாங்கிய சீயங்கன் என்னும் அரசனின் வேண்டிக்கொண்டதற்கு இணங்க நன்னூலை பவணநந்தி முனிவரால் இயற்றப்பட்டதாக வரலாறு.

தற்போதும் எழுத்து .சொல் இலக்கணத்தை கற்க நல்ல நூல் நன்னூலகும் .பவநந்தி முனிவர் முனிவரால் உருவாக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீவிஜயகிரி வேலாயுதசாமி திருக்கோவிலை வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

பவணந்தி முனிவரின் இறுதிக்காலம் அறிய இயலாததால் தேடல் தொடரும் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Tuesday, December 6, 2011

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏற்படும் பலன்களும் சிறப்பும்


திருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும்




உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் .


பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் .

திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக்தர்கள் உரக்க பேசாமலும் ,யாருக்கும் இடையூறு செய்யாமலும் அமைதியாக "சிவாய நமஹ" என்று சொல்லி கிரிவலம் செல்ல நாம் கிரிவலம் செல்வதன் உண்மையான பலன் ஏற்படும் .


திருவண்ணாமலையை( thiruvannamalai) கிரிவலம் செல்லும் போது ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிர் நேரே கயிலாயத்திற்கு செல்லும். அப்படிச்செல்லும் போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிப்பார் என்றும் ,சூரியன் கையில் விளக்கேற்றி வருவார் இந்திரன் மலர் தூவுவார் ,குபேரன் பணிந்து வரவேற்பார் என்று அருணாசலீஸ்வரர் ஸ்தல புராணம் இயம்புகிறது.


திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள் :

ஞாயிறுக்கிழமே - சிவபதம்
திங்கள் கிழமை உலகாளும் வல்லமைகிட்டும்
செவ்வாய்கிழமை - கடன் ,ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில்
இருந்து விடுதலை கிட்டும்

புதன் - கலைகளில் தேர்ச்சி
வியாழக்கிழமை- ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும்
வெள்ளிக்கிழமை - விஷ்ணுபதம் கிட்டும்
சனிக்கிழமை - நவகிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும் .

தீபத் திருவிழா திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.7 அடி உயரமுடைய செப்புக்கொப்பரையில் 3000 கிலோ நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் காடா துணியால் 10நாட்களுக்கு தொடர்ந்து கார்த்திகை தீபம் எரிந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும் .
மலையே சிவனாக ,நினைத்தாலே முக்தி தருகின்ற அரிய சிறப்புகளை உடைய சிவபெருமானை கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தையும் தரிசித்து எல்லா நலமும் வளமும் பெறுங்கள் .

ஓம் சிவாய நமஹ

Monday, November 28, 2011

ஸ்ரீ பிரகலநாயகி உடனமர் ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவில் . மடவிளாகம் ,பாப்பினி .காங்கேயம்






ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவில்
SRI ARUTHRA KABALISHWARAR TEMPLE,MADAVILAGAM.BABBINI,GANGAYAM TALUK


மடவிளாகம் செல்லும் வழி:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து ஈரோடு செல்லும் (அரச்சலூர் )வழியில் 5கி.மீட்டரில் மடவிளாகம் என்னும் அழகிய ஊருக்கு வலப்பக்கம் 3 கி.மீட்டரில் உள்ளது. பாப்பினி என்னும் ஊரின் அழகிய ஊராட்சி ஒன்றியத்தில் ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

கொங்கு நாட்டில் பழங்கால சிலாலயங்கள் பல இருப்பினும் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில் மிகப்பிரமாண்டமானது. அழகானது . திருக்கோவில் வளாகமும் அமைந்துள்ள இடமும் மிகப்பெரிய சிவாலாமாகவும் இருப்பது இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்து விட்டோமே என்ற எண்ணம் ஏற்படும் .இது போன்ற சிவாலய திருக்கோவில் அமைப்பை கும்பகோணம் ,தஞ்சாவூர் பகுதியில் தான் காண முடியும் .

திருக்கோவில் மூலவர் : ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீ பிரகல நாயகி அம்மன்

திருக்கோவில் தோற்றம் : திருக்கோவில் முன்பாக இரட்டை விநாயகர் சிலை அழகுடன் அமைந்திருக்க பழங்கால வேம்பும் அரச மரமும் அழகு செய்திருக்கிறது. திருக்கோவில் உள்ளே கொடிமரமும் அழகான நந்தீஸ்வரர் சன்னதியும் அழகானது. மூலவர் ஸ்ரீ ஆருத்ர கபாலிஷ்வரர் லிங்க வடிவில் அழகாக அமைந்திருக்கிறார் . திருக்கோவில் உள்ளே தனிச்சன்னதியாக அம்பாள் சன்னதி ஸ்ரீ பிரகல நாயகி அம்மன் சிலை அழகே உருவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் தான்தோன்றி ஈஸ்வரர் , கன்னி மூல கணபதி, வன்னி மர விநாயகர் ,நின்ற நிலை விநாயகர் ஆகியவை பார்க்க வேண்டிய சன்னதியாகும் . சிவாலயம் பின்புறமாக பெரிய கிணறு அமைந்துள்ளது.

sri ragupathi narayana perumal temple,madavilagam,babini.gangayam taluk;

அருகே அமைந்துள்ள சீதேவி பூதேவி உடனமர் ரகுபதி நாராயணப்பெருமாள் சன்னதி ,மகாலட்சுமி தாயார் சன்னதி, அனுமன் சன்னதி ,ஆழ்வார் சன்னதி மடவிளாகம் ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவில் அருகிலேயே அமைந்துள்ள அழகிய வைணவத் திருத்தலமாகும் . பார்க்க வேண்டிய இடம் . சைவம், வைணவத் திருத்தலங்கள் ஒன்றாக அமைந்து இருப்பது பழங்கால ஆலயங்களில் மட்டுமே காண முடிகின்ற ஒன்றாகும் .

sri angala parameashwari temple, madavilagam,babbini;

50மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் தரிசிக்க வேண்டிய அழகிய இடமாகும் . ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளே பேச்சியம்மன் ,சடைச்சி அம்மன் சன்னதிகளும் , இருளப்பன் ,கருப்பண்ண சாமி ,பாவாடை ராயன் சன்னதிகளூம் , மதுரை வீரன்,பொம்மியம்மன் , வெள்ளை அம்மன் சன்னதிகளும் திருக்கோவில் கொடிமரம் முன்பாக நந்தீஷ்வரர் சிலை அழகானது. ஸ்தலமரமாக துரட்டிமரம் அமைந்துள்ளது. 60 அடி குண்டம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு அமைத்துள்ளார் .

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலும் ,ஸ்ரீ ரகுபதி பெருமாள் திருக்கோவிலும் மடவிளாகம் ஸ்ரீ ஆருத்ரகபாலீஷ்வரர் திருக்கோவில் அருகே அமைந்துள்ளது. அதனால் சிவாலயம் தரிசனம் செய்து அருகேயுள்ள இந்த இரு திருக்கோவிலையும் பார்த்து விட்டு வரலாம் .

நீங்களும் காங்கேயம் பகுதிக்கு செல்லும் வாய்ப்பிருந்தால் ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரரை தரிசறம் செய்து விட்டு எழுதுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு.

Sunday, November 27, 2011

பில்லூர் ஸ்ரீ வேதநாயகி உடனமர் வீரட்டீஷ்வரர் திருக்கோவில் .பரமத்தி வேலூர்


பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில்


அமைவிடம் :

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பில்ல களத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பில்லூர் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோவில் பழங்கால சிவாலயங்களில் ஒன்றாகும் .பரமத்தி வேலூரில் இருந்து சுமார் 10 கி.மீட்டரில் சிவாலயம் அமைந்துள்ளது .


திருக்கோவில் மூலவராக ;

ஸ்ரீ வீரட்டிஸ்வரர் சிவலிங்க உருவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


அம்பாள் :ஸ்ரீ வேதநாயகி

திருக்கோவில் சிறப்பு :

பஞ்சபாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிவத்தலமென பெருமைமிகு வரலாறு இத்திருக்கோவிலுக்கு உண்டு. ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டு பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும் . நாமக்கல் குடவரைக்கோவில் பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்திய கல்வெட்டாகும் .நாமகிரியின் அடையாளச்சின்னம் இத்திருக்கோவிலில் காணப்படுவதால் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவிலும் பல்லவர்காலத்தில் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது புலனாகிறது. திருக்கோவிலில் கல்லால் ஆன கலசம் இந்தக்கூற்றை மேலும் உண்மையாக்குகிறது.


திருமணி முத்தாறு ஆற்றங்கரையின் மேற்குகரையில் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வு செய்த போது கிடைத்த விநாயகர் சிலையில் பில்லூர் என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பழங்காலத்தில் "புல்லார் விநாயகர் சிலை " எனக்குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லால் ஆன கோபுரத்தை அக்காலத்தில் இரட்டை வரிக்கல்லால் அந்த காலத்தில் உருவாக்கியது வியப்பான ஒன்று.

பழங்காலத்தில் புல்லார் என அழைக்கப்பட்டு காலத்தால் மருவி பில்லூர் என மாறி உள்ளதாக தெரிகிறது. பல ஆன்மீக தகவல்கள் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் உள்ளது. தற்போது : பழங்கால சிவலயமான பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் பல சிவனடியார்கள் ,ஆன்மீக அன்பர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.திருக்கோவில் திருப்பணி அழகே செய்யப்பட்டு மெருகேறி வருகிறது.

திருக்கோவில் பற்றி மேலும் அறிய இப்பகுதியில் உள்ள சிவனடியார்
திரு. கார்த்திக்ராஜா அலைபேசி : 94434- 62072 தொடர்பு கொள்ளுங்கள் .

திருக்கோவில் பற்றிய இந்த இடுகை மேலும் விரிவாக்கப்படும் . எல்லா சிவாலயங்கள் போல தோற்றத்தில் இருப்பினும் பல சிறப்புகளை பெற்றுள்ள ஸ்ரீ வேதநாயகி உடனமர் வீரட்டீஸ்வரர் திருக்கோவிலை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அழைக்கும்

.ஓம் சிவாய நமஹ எனச்சொல்லி நட்பு

குரு.பழ.மாதேசு

தமிழகத்தில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்


சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உற்பத்தியாகின்ற திருமணிமுத்தாறு என்ற அழகிய நதி சேலம் மாவட்டம் நாமக்கல் மாவட்டங்களில் ஒடுவது நாம் அறிந்த ஒன்றாகும் .

தமிழகத்தில் பல சிவலாயங்கள் ஒவ்வொரு சிறப்பு பெற்று இருப்பினும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிவாலயங்கள் ஐந்தும் "பஞ்சபாண்டவர்களால் வழிபட்ட ஸ்தலம் " என்னும் சிறப்பை பெற்ற அழகிய ஸ்தலங்களாகும் .

அவை

1. சேலம் ஸ்ரீ சுகவனேஷ்வரர் திருக்கோவில்
2. சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சங்ககிரி ரோட்டில் பெரியூரில் அமைந்துள்ள உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் திருக்கோவில்
3.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில்
4. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் மாவுரட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருவுடையார் திருக்கோவில்
5.நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையாரில் அமைந்துள்ள ஸ்ரீ திருவேலீஸ்வரர் திருக்கோவில்

எங்கும் நிறைந்துள்ள சிவபெருமான் திருமணிமுத்தாரின் மேற்குகரையில் மேற்கூறிய ஐந்து ஆலயங்களும் அமைந்துள்ளது மிகச்சிறப்பான ஒன்றாகும் .

அழகிய இந்த ஐந்து சிவாலயங்களில் ஒன்றை ரசித்து அடுத்த இடுகையில் எழுதியுள்ளேன் .படித்துப்பாருங்கள் .மேற்கூறிய ஐந்து ஆலயங்கள் ,அமைப்புகள் பற்றி விபரங்கள் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட அலைபேசியில் உள்ள சிவனடியாரை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் .

திரு. கார்த்திக்ராஜா 94434-62072 .

பெருமை வாய்ந்த பஞ்சபாண்டவர்களால் வணங்கப் பெற்ற பழங்கால சிவத்தலங்கள் ஐந்தையும் தரிசனம் செய்து நலம் பெற அன்புடன் விழையும்

குரு.பழ.மாதேசு

Friday, November 25, 2011

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் .சிவன்மலை காங்கேயம் Sri Balasupramaniyar temple ,sivan malai ,kangayam ,






சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் ,காங்கேயம்

SIVANMALAI SRI SUBRAMANIYAR TEMPLE, GANGAYAM

கொங்கு நாட்டில் ஏராளமான திருக்கோவில் புகழ் பெற்றவை அதில் சிவன் மலை குறிப்பிடத்தக்க ஓர் ஆலயமாகும் சிவன் மலை என்றதும் சிவனே மூலவராக இருப்பார் என்று நினைத்து சென்றால் அங்கே இருப்பது ஸ்ரீ முருகப்பெருமான் ஸ்ரீ சுப்பிரமணியராக வரும் பக்தர்கள் துயர்போக்கும் கடவுளாய் அருள் பாலித்து அழகு செய்கிறார் .

திருக்கோவில் முன்பு ஈரோடு மாவட்டத்தில் இருந்தது.திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு சிவன் மலை திருப்பூர் மாவட்டத்திற்கு சொந்தமானது .

குன்றுகள் தோறும் குமரன் இருக்குமிடம் என்னும் வாக்கிற்கு இணங்க காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 7 வது கி.மீட்டரில் அமைந்த அழகிய குன்று சிவன் மலையாகும் . திருக்கோவில் குன்றின் மேலே செல்ல படிகட்டு வழி மற்றும் எல்லா வகையான வாகனங்களில் செல்லும் விதமாக தார் சாலை அழகாக அமைத்துள்ளார்கள் .மலைப்பாதை வழியில் சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் திருக்கோவில் முகப்பை அடையலாம் .

சுமார் 20படிக்கட்டுக்கள் ஏறிச்சென்றால் நாம் காண்பது பெரிய வளாகமும் அங்கு பெரிய அரசமரத்தடி விநாயகர் அருகே பெரிய வேப்ப மரமும் அமைந்துள்ளது. விநாயகர் வணங்கி விட்டு அடுத்து 10
படிக்கட்டுகளை கடந்தால் நாம் இராஜகோபுரத்தை அடையலாம் (இராஜகோபுரம் புதிதாக தயராகி வருகிறது).

பின்பு உள்ளே சென்றால் கொடிமரம் அதைத்தாண்டி நீண்ட தூரத்தில் அமைந்த வளாகத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் சிவன்மலையில் அருள்மிகு சுப்பிரமணியராக திருக்கோவில் மூலவராக அருள்புரிகிறார் .

திருக்கோவில் மூலவர் அழகாக சிலை அமைந்த சிலை பக்தர்களை அடிக்கடி தரிசிக்க தூண்டும் விதத்தில் அழகாக அமைந்திருப்பது சிறப்பு. தரிசனம் செய்த பின்பு அருகே ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீசுப்பிரமணியர் சன்னதி உள்ளது .அதை தரிசனம் செய்து வெளியே வந்தால் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் என சிவாலயத்தை நினைவு செய்யும் விதமாக தனிச்சன்னதிகள் பல உள்ளன.

திருக்கோவில் ஸ்தலமரங்களாக துரட்டிமரமும் .பழங்கால புளிய மரமும் உள்ளது. திருக்கோவில் வளாகம் நல்ல அகலமுடையது.சிவன் மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை திருக்கோவில் மலை அமைப்பும் , காங்கேயம் சுற்றுபுற அழகும் , திருப்பூர் சாயக் கழிவால் உயிரிழந்த நொய்யல் ஆற்றின் அழகிய அமைப்பும் தெரிகிறது. பழங்கால திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கலாம் .

சென்னி மலைக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அவசியம் சுமார் 12 கி.மீட்டர் தொலைவே உள்ள சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணியரையும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம். திருக்கோவில் மேலே பக்தர்கள் சென்று வர பஸ் வசதி உள்ளது. பார்க்கவேண்டிய ஆலயம் முருகர் ஆலயமாகும் .

முருகருக்குரிய சஷ்டி,கிருத்திகை, செவ்வாய் கிழமை மற்றும் அம்மாவசை போன்ற விஷேச நாட்களில் ஆறுகாலபூஜை நடைபெறுகிறது. வந்து தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அருள் பெற்று எழுதுங்கள் .

"ஓம் முருகா சரணம் முருகா "

நட்பு நாடும் குரு.பழ.மாதேசு.

Wednesday, November 23, 2011

வழி


வறியவனும் ,
பிச்சைக்காரர்களும்
இல்லையென்றால்
மனிதன் செய்த
பாவங்கள் போக்கிட
வழியிருக்காது!

மறக்காமல் இரு


அன்பே... !
உனக்காக கொடுத்த பரிசை
நீ தொலைத்து விட்டு நின்றபோது
உன்னை திட்ட தோன்றவில்லை..!
அப்படியாவது மறக்காமலிருப்பாய் ..!

நான் கொடுத்த பரிசையும் என்னையும் !

Thursday, November 17, 2011

வியப்பில் ஆழ்த்தும் தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோவில்






TANJAI PRAGATHESWARA TEMPLE VISIT :

அண்மையில் முதன் முதலில் தஞ்சாவூர் பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை பெரிய கோவிலை பார்த்தவுடன் இவ்வளவு நாளாக இப்படி ஓர் அழகான திருக்கோவிலை தரிசிக்காமல் ,பார்க்காமல் விட்டு விட்டோமே என வருந்தும் அளவுக்கு கட்டிடக்கலேயில் ,சிற்பங்கள் ,திருக்கோவில் விமானம் என மன்னர் முதலாம் இராசராசனால் சிற்பக்கலையில் சாதனை செய்துள்ளார் என்றே கூறவேண்டும் .


தமிழ்நாட்டில் இப்படி அழகான ஸ்தலத்தை உருவாக்கி 1000 ஆண்டுகளாகியும் அதன் தன்மை கெடாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யமே. திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் இருந்து கிளம்பினால் முதலில் நாம் காண்பது மராட்டா நுழைவாயில் அது சிறிய கோபுரமே ஆனாலும் சிற்பங்கள் அழகானது.

அதன் பின்பு கேரளாந்தகன் திருவாசல் கோபுரம் அதை பார்த்து விட்டு அடுத்து நாம் சந்திப்பது இராசராசன் திருவாசல் அதையும் கடந்து சென்றால் நந்திமண்டபம் தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி இதுதானோ என வியக்குமளவுக்கு மிகப்பெரிய நந்தி ஒன்றை ஒரே கருங்கல்லால் அழகாக செதுக்கி இருப்பது வியப்பான ஒன்று. நந்தீஷ்வரரை சுற்றி வந்து வணங்க பெரிய சுற்றுப்பாதையும் உள்ளது.

அதன் பின் அழகிய கொடிமரம் வணங்கி வராஹி சன்னதியை தொழுத்து மூலவர் சன்னிதானத்தை அடையலாம் . மிகப்பெரிய லிங்கம் திருக்கோவில் பிரமாண்டத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் லிங்க வடிவில் அழகாக அமைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும் .

பல கோடி பேர் வந்து வணங்கிய சிவஸ்தலம் .சிவபெருமானை வணங்கி விட்டு வெளியே வந்தால் தட்சிணாமூர்த்தி சன்னதி ,விநாயகர் சன்னதி, நவகிரகங்கள் லிங்க வடிவில் சன்னதி,பிரகதீஷ்வரர் திருக்கோவில் பின்புறம் வேம்புடன் இணைந்த கருவூரார் சன்னதி அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி,சண்டிகேஷ்வரர் சன்னதி ,அம்பாள் சன்னதி என பார்க்க பார்க்க மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கும் அற்புத திருக்கோவிலாகும் .

தஞ்சை பெரிய கோவில் தொடங்கப்பட்ட காலமும் விளக்கமும் :

முதலாம் இராச இராசனால் கி.பி 1003 ல் துவங்கப்பட்டு 7 வருடங்கள் திருப்பணிகள் செய்து பல ஊர்களில் இருந்தும் சலவைக்கருங்கற்கள் கொண்டு வந்து கி.பி 1010 ஆண்டு திருப்பணி நிறைவு பெற்றதாக வரலாறு. தஞ்சைப்பெரிய கோவிலின் லிங்கம் 3.66 அடி உயர லிங்கமாகும் .

எட்டு துண்டுகளான 81.284 டன் எடையுள்ள சிகரத்தை கொண்டதாக அமைந்துள்ளது. திருக்கோவில் விமானம் 60.96 மீட்டர் உயரமுடையதாகும் . திருக்கோவில் சிற்பங்களில் விநாயகர் ,சீதேவி,பூதேவி உடன் திருமால் ,துவாரபாலகர்கள் ,பிட்சாடனார் ,வீரபத்திரர் நடராஜர் ,ஹரிஹரர் ,சந்திர ஆகிய சிலைகளும் , 81 வகையான சிவனின் பல்வேறு நடனங்கள் அழகாக இடம் பெற்றுள்ளன.

கி.பி 985ல் ராஜராஜீஷ்வரம் பெருவுடையார் கோவில் உருவாக முயற்சி தொடங்க அடிகோலப்பட்டு பின்பு முதலாம் ராசராசனால் கி.பி 1003 ல் முழு முயற்சியை துவங்கி கி.பி 1010ல் முடிக்கப்பட்டதாக வரலாறு.

நாம் எழுதிய இந்த ஸ்தல வரலாறு என்பது யானைக்கு எறும்பு கொண்டு சென்று உணவிட்டதைப்போல சிறிய முயற்சியே .தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில் மிகப்பெரிய ஆய்ந்து கற்றுத்தெளிய வேண்டிய அற்புதம் .ஏனெனில் ஒவ்வொரு பிரகாரத்திற்கும் ,சன்னதிக்கும் தனித்தனி புராணக் கதைகளுண்டு. திருக்கோவில் நீளமும் அகலமும் பிரமிக்க வைக்கும் ஒன்றாகும் .

கண்டிப்பாக வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய சிவாலயமாகும் . வெளிநாட்டுப் பயணிகள் வந்து ஆர்வமுடன் பார்க்குமிடமாக தஞ்சைப்பெரிய கோவில் உள்ளது. திருக்கோவில் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளது.

நம்மால் முடிந்தவற்றை எழுதாயுள்ளோம் .எல்லாம் எழுதினால் பக்ககளால் நம் வலைப்பூ நிரம்பி விடும் . நேரில் வந்து பார்த்து ,
ரசித்து விட்டு எழுதுங்கள்

நட்புன் குரு.பழ மாதேசு

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...