Monday, February 13, 2012

அருணகிரி நாதருக்கு படிச்காசு வழங்கி காட்சி தந்த ஸ்ரீ சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி



ஸ்ரீசென்னிமலை முருகரின் அற்புதங்கள்

sri chennimalai murgar special

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணியர் (தண்டாயுதபாணி கோலம் )

அமைவிடம் : ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஊரின் பெயரும் ,மலையின் பெயரும் ஒருங்கே அமையப்பெற்ற சென்னிமலை சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 1750அடி உயரத்தில் அமைந்துள்ள பெரிய குன்று ஆகும் இது சென்னியங்கிரி,சிரகிரி, சென்னிமலை என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்தலவரலாறு :

ஆதிஷேசனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு முறை யார் பலசாலி என பலபரிட்சை நிகழ்ந்த போது வாயுபகவானால் தூக்கி வீசப்பட்ட ஆதிஸேசனின் சிரசு விழுந்த மலை சிரகிரி (சிரம் என்றால் தலை கிரி என்றால் மலை) என்றும் பீடம் விழுந்த இடம் திருப்பதி ஏழுமலை என்றும் ஷ்தலபுராணாங்கள் இயம்புகின்றன.

பழங்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் பகுதியில் வேளாளர் இனத்தின் பசுமாடு குறிப்பிட்ட புற்று மணல் உள்ள இடத்தில் பால் செரிவதை ஆச்சர்யத்துடன் தோண்டிப்பார்க்க சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ முருகப்பெருமான் இடுப்பு பகுதிவரை மட்டுமே செதுக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டார் .

அழகிய முருகரின் சிலை அனைவரும் மெய் சிலிர்த்து கொண்டாட அங்கு வந்த முருகர் அடியார் முருகர் அருள் வந்து ஸ்ரீமுருகப்பெருமானை பிரதிஷ்டை செய்ய சிரகிரி குன்றில் வைத்து வழிபாடு செய்யுங்கள் எனச்சொல்ல ஆன்மீக அன்பர்கள் முருகப்பெருமானே நேரில் வந்து சொன்ன வாக்காக எண்ணி பாதி உருவமேயுள்ள முருகர் சிலையை அழகாக செதுக்கலாம் என சிற்பி செதுக்க முதல் வெட்டிலேயே ஏற்பட்ட காயம் காரணத்தால் இரத்தம் வர ஸ்ரீ முருகப்பெருமானை அப்படியே கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர் .

இன்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தரும் மூலவர்க்கு இடுப்பு பகுதிக்கு கீழ்பகுதி செதுக்கப்படாமல் அப்படியே உள்ளது. உளிபட்ட சிறுகாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப்பெருமான் இங்கு கிரக அதிபதியாக வீற்றிருக்கிறார்

சிறப்புகளும் அதிசயங்களும் :

ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் பாடல் பாலன்தேவராயன் அவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஸ்தலம் பின்நாக்கு சித்தர் உறையுமிடம் ,அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் முருகப்பெருமானை காண வேண்டி அருணகிரி நாதர் " உனை எனதுள் நினையும் அன்பைத்தருவாயே" எனப்பாடி மனமுருகி வேண்டியதால் சென்னிமலையில் காட்சி தந்து முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு "படிக்காசு" வழங்கினார் என்பது ஸ்தலவரலாறு கூறும் உண்மை.

,9 நவக்கிரகங்களை தன் மூலவிமானத்தில் ஒருங்கே கொண்ட பரிகாரத்தலம் ( இங்கு வணங்கினால் நவகிரகங்களை வணங்கிய புண்ணியம் கிட்டும் ) , வள்ளி தெய்வானை தேவியர் அமுதவள்ளி சுந்தரவல்லியாக தவமிருந்த தலம் ,செங்கத்துறை பூசாரி அவர்களால் மாட்டு வண்டியை 1320படிகளை ஏற்றிய ஷ்தலம் , மாமாங்க தீர்த்தம் பொங்கும் சுணை, சரவணமுனிவர் ,தன்னாசியப்பர் அருளும் மலை, காளைகள் வாயிலாக முருகப்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வரும் அதிசயமென எண்ணிலடங்காக அதிசயங்களை கொண்ட மலையாக விளங்குகிறது சென்னிமலை .

திருக்கோவில் செல்ல வழி :

ஈரோடில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 30கி.மீட்டரில் சென்னிமலை முருகர் திருக்கோவில் உள்ளது . சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 80கி.மீட்டர் தொலைவிலுள்ள பெருந்துறையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் 10 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை உள்ளது.

ஆறு காலபூஜை நேரங்கள் :

விழாகாலபூஜை காலை 7 மணி காலசந்தி காலைபூஜை 8 மணி உச்சிகால பகல் பூஜை பகல் 12 மணி சாயரட்சை மாலை பூஜை 5 மணிக்கும் இராக்காலம் பூஜை இரவு 7 மணிக்கும் அர்த்தசாம பூஜை இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்:

தைப்பூசம் ,பங்குனி உத்திரம் ,சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் , ஆடி அமாவசை கிருத்திகை,கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம் , கார்த்திகை தீபம்,

மரத்தேர் :

ஸ்ரீமுருகப்பெருமான் வேங்கைமரமாக வந்து வள்ளியை மணம்புரிந்ததும் ,திருக்கோவில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஆன்மீகமரமான வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட மரத்தேர் பக்தர்கள் விரும்பும் நாளில் நேர்த்திக்கடன் செய்யலாம் கட்டணம் ரூ700 ஆகும் . திருப்பணி செய்யவிரும்பும் பக்தர்கள் செயல் அலுவலர் தொலைபேசியில் அழைக்கலாம் .

அலுவலகம் : 04294- 250223

மலைக்கோவில் : 04294-250263 ,292595
இணையத்தள முகவரி : www.chennimalaitemple.org

மின்னஞ்சல் : chenkovil@sancharnet.in


திருக்கோவில் பற்றிய மேலும் விபரங்கள் எமது நன்பர் திரு பிரகாஷ் அவர்களின் பிளாக்கில் அறியலாம்

www.chennimalaimurugan.blogspot.com

இந்த வலைப்பூவில் சென்னிமலை முருகரின் முழு விபரத்தொகுப்பு உள்ளது . அல்லது இப்போது படித்துக்கொண்டிருக்கின்ற வலைப்பூவில் உள்ள முருகர் படத்தை கிளிக்கினால் மேற்கண்ட வலைப்பூவிற்கு (blog) செல்லும் . இங்கு வாழ்ந்த அடியார்கள் சித்தர்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் .

சிறிய பகுதியில் அடைக்க முடியாத பெரும் புகழும் 2000வருடங்கள் பழமையான உலகலாவிய பெருமைகள் சிறப்புகள் கொண்ட ஸ்ரீசென்னிமலை சுப்பிரமணியசாமியை வந்து வணங்குங்கள் .

கலியுகத்தில் ஸ்ரீ தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழங்கால சரித்திரம் கொண்ட ஸ்ரீ சென்னிமலை பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழுங்கள் .ஓம் முருகா சரணம் முருகா

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank you friend

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்

ஜி உங்கள் ஆன்மீகபணி
தொடர ,

மேலும் உங்களின் முயற்ச்சி தொடர
தில்லைக்கூத்தன் தாழ் பணியும்
தொண்டன் .

என்றும் நட்புடன்
யுவராஜா

ஓம் சிவாய நம சிவாய நம ஓம்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

உங்களுக்கும் சென்னிமலை முருகப்பெருமான் அருள் கிட்டடும்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...