Wednesday, March 16, 2011

சமணர் கோவில், ஒற்றைக்கோபுரம் (விஜயபுரி) விஜயமங்கலம்,




திருக்கோவில் அமைவிடம்: விஜயமங்கலம்.,

பெருந்துறை வட்டம்,ஈரோடு மாவட்டம்.

மூலவர் : சந்திரபிரபா தீர்த்தங்கரர் (8 ஆம் தீர்த்தங்கரர்)

அம்பாள் : குஷ்மாண்டணி தேவி (தர்மதேவி)

காணப்படும் சிலைகள் : வர்த்தமான் மகாவீரர் .ரிஷப தீர்த்தங்கரர் (ஆதிநாதர்) நிபக்ஷாயக்ஷிகள் (5 இறைவன் புகழ் பாடிய புலவர்கள் )

கோவிலின் சிறப்புகள் : விஜய நகரப்பேரரசு ஆட்சிக்காலத்தில் விஜயபுரி (விஜயமங்கலம்)தலைநகராகவும் இருந்து வந்துள்ளது. இங்குதான் வரலாற்று சிறப்புமிக்க இல்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் சுமார் 2800 வருடங்கள் பழமையானது என்கிறார்கள் .அண்மையில் இத்திருக்கோவில் சென்று பார்த்தபோது பலவீனமாக இருப்பதை உணர முடிந்தது.

"நெட்டைக்கோபுரம்"ஒற்றைக்கோபுரம் என விஜயமங்கலம் மக்களால் அழைக்கப்படும் இத்திருக்கோவில் மிகப்பழமை வாய்ந்த கோவிலாக தெரிகிறது. ஆனால் சிலருக்கு மட்டுமே இக்கோவில் பற்றி தெரிகிறது. பழங்காலத்தில் பல சமண மதத்தை சார்ந்தவர்கள் இங்கு குடியிருந்து வந்ததாகவும் ,கால மாற்றங்களினால் அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு குடியேற்றம் ஆகிவிட்டதாக தெரிகிறது. இந்த திருக்கோவிலை கொங்கு வேளீர்கள் கட்டியதாக வரலாறு. காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் கூறப்படுகின்றது.

தற்போது கேரளாவின் வயநாடு பகுதிகளில் இத்திருக்கோவில் சம்பந்தப்பட்ட சொந்தங்கள் வசிப்பதாக சொல்கிறார்கள். தற்போது இக்கோவில் வளாகத்தில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள்தான் இத்திருக்கோவில் பூஜை புனஸ்காரங்கள் செய்து கோவிலை தற்போது பராமரித்து வருகின்றனர்.

இத்திருக்கோவிலில் மூலவர்(சந்திரபிரபா தீர்த்தங்கரர் 8 ஆம் தீர்த்தங்கரர்) சிலை சில வருடங்களுக்கு முன் திருட்டுப்போய் விட்டதால் பூஜை குஷ்மாண்டணிதேவி எனும் அம்பாள் சிலைக்கு தான் செய்யப்படுகிறது.

கோவில் தற்போது தேசிய முக்கியதுவம் வாய்ந்து சின்னமாக (1958 எண் 24 கீழ்) கருதி மத்திய தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சின்னங்களையோ ,கோவிலையா சேதப்படுத்துதல்,அகற்றுதல் ,திருத்துதல் ,தகாத முறையில் உபயோகித்தால் 3மாத சிறை 5000 அபராதமாகும் எனும் அறிவிப்பு பலகையாகவும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும் இப்பகுதியை சுற்றி 200மீட்டர் தோண்டுதல் கட்டிடப்பணிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பழங்கால இக்கோவில் பற்றி கேள்விப்பட்டு மக்கள் பலரும் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். நீங்களும் முடிந்தால் பழங்கால கோவில் பார்க்க ஆசையிருப்பின் கோயமுத்தூரில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் (பெருந்துறையில் இருந்து 12 கி.மிட்டர்)உள்ளது. அங்கிருந்து கள்ளியம்புதூர் செல்லும் சாலையில் வலதுபுறம் செல்லவேண்டும் .நெட்டைக்கோபுரம் என விசாரித்தால் சொல்லுவார்கள். திருக்கோவிலுக்கு ஸ்ரீ அமணேஸ்வரர் ஆலயம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. திருக்கோவில் சிற்பங்கள் கல்தூண் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள ராசி சக்கரங்கள் , சமணர்கள் வாழ்க்கை வரலாறு,தத்துவம் ,பண்பாடு சமணர் இலக்கியத்தை விளக்கும் நல்லதொரு சான்றாக திருக்கோவில் விளங்குகின்றது

இக்கோவில் பற்றி எழுதப்பட்டுள்ள இவ்விடுகை பழங்கால ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கில் பலரையும் கேட்டு செவி வழிச்செய்தியாக உங்கள் முன் வைக்கிறேன். ஆகவே இதன் உண்மைதன்மைகள் ஆய்ந்து உணர வேண்டியுள்ளது.இக்கோவில் பற்றி தகவல்கள் கிடைக்கும் போது இப்பகுதி நீட்டிக்கப்படும். உங்களுக்கு தெரிந்தால் மெயில் செய்யவும்.மற்றபடி உங்களின்
விமர்சனங்கள் வேண்டி
குரு.பழ.மாதேசு.

Saturday, March 12, 2011

அருள்மிகு அந்தியூர் குருநாதசாமி வரலாறு பாகம் - 3 arul migu anthiyur gurunathasamy temple history part -3





அந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் .


(இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத்தில் உள்ளது அதைப்படிக்கவும்)

இது அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் வழியாக 4கி.மீ ல் குருவரெட்டியூர் செல்லும் வழியில் உள்ளது.

இங்கு பில்லி,சூன்யம்,காற்று, கருப்பு,வைப்பு,பைத்தியம், என பல வியாதிகளைகளை குணப்படுத்தும் அழகிய ஆலயம்.இங்கு பிரதி வருடம் பங்குனி மாதம் 4 ஆம் வெள்ளிக்கிழமை நாள் ஒருநாள் திருவிழா ஆகும்.

அருள்மிகு கொன்னமரத்தய்யன் கோவில் வனம். இது சித்திரை மாதம் 4ஆம் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவாக உள்ளுர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பிரதிவாரம் மாலை 6.00 மணிக்கு பூஜை நடைபெறும். இவ்விரண்டும் அந்தியூர் குருநாதசாமி சம்பந்தப்பட்ட உபகோவில்களாகும்.

வாரபூஜை விபரங்கள் :

செவ்வாய் மாலை வேளை- அந்தியூர் குருநாதசாமி வனத்தில் பூஜை.

புதன்மாலை வேளை-

கொன்னமரத்தி அம்மன் கோவில் அந்தியூர்.

வெள்ளி மாலை வேளை-

பெரிய குருநாதர் பொரவிபாளையம்.

சனிக்கிழமை மாலை வேளையில் -அந்தியூர் குருநாதசாமி கோவில் பூஜை,
(Anthiyur gurunathasamy temple ) மற்றும் அமாவசை,மார்கழி அதிகாலை பூஜை ஆகியனவாகும்.

மாட்டுச்சந்தை :

தமிழ்நாட்டில் (tamilnadu) கூடும் பெரிய மாட்டுச்சந்தையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவின் போது கூடும் மாட்டுச்சந்தையும் ஓன்றாகும்.

ஆடிமாதம் 4 ஆம் புதன் கிழமை மாட்டுச்சந்தையுடன் குதிரைச்சந்தையும் தொடங்கி விடும். 4 நாட்கள் நடக்கும் இச்சந்தைக்கு இந்தியாவின் (INDIA) பல பகுதிகளில் இருந்து குதிரை,மாடுகள் ஆயிரக்கணக்கில் வந்து பிரமாண்டமாக வியாபாரம் நடக்கும். இது 1951முதல் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

மாட்டுச்சந்தைக்கு தனியாக இடம் இல்லை எனினும் இப்பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலங்களை பலகாலமாக மாட்டுசந்தை நடைபெற உதவியாக உள்ளனர். தங்கள் நிலங்களில் ஆடிமாதம் மட்டும் பயிர் செய்யாமல் வைத்து மாடுகள்,குதிரைகள் கட்ட ஏக்கர் கணக்கில் உதவிசெய்வது சிறப்பு,


இந்த இடுகையை எழுத உதவியாக இருந்த "குருநாதசாமி திருக்கோவில் வரலாறு புத்தகம் " பி.ஜி பெருமாள் & சகோதர்கள் பரம்பரை அறங்காவலர் குடும்பம், குருநாதரின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிந்து கொண்டு குருநாதசாமி வரலாற்று புத்தகத்தை பரிசளித்த தற்போதைய அறங்காவலர் குழு திரு.சாந்தப்பன் என்கிற செல்வன் அவர்களுக்கும்,ஜீ.பி.ராஜன் எல்.ஐ.சி ஏஜென்ட் (G.p Rajan l.i.c agent. guruvareddiyur ) அவர்களுக்கும், கோவில் பற்றி கேட்ட இடத்தில் எல்லாம் குருநாதசாமியின் பழங்கதைகள் கூறி உதவியாக இருந்த அனைத்து ஆன்மீக செம்மல்களுக்கும் என் மனம் உவந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

நீங்களும் ஆடிமாதத்தில் நடைபெறும் அந்தியூர் குருநாதசாமியை ( ANTHIYUR ARULMIGU GURUNATHASAMY TEMPLE )தரிசனம் செய்து, குதிரை .மாட்டுச்சந்தைகளை தரிசித்து


அருள்மிகு குருநாதர் அருள் பெற்று எல்லா நலமும் வளமும் பெற

இறை துணை வேண்டுகிறேன்.

Thursday, March 10, 2011

அருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2


முதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் -



குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் யாரேனும் நுழைய முயற்சித்தால் கொடிய விஷ பாம்புகளிடம் கடிபட்டு இறப்பு நிச்சயம் என்பது சத்திய வாக்கு.


இப்பகுதிவாழ் மக்கள் தங்கள் தோட்டங்களில் வாழும் விஷ ஜந்துக்கள் தங்களை தீண்டக்கூடாதென வேண்டுதலிட்டு குலுக்கையை பாதுகாக்கும் பாம்பு புற்றுக்கு பூக்கள் இட்டு வணங்கி வருதல் இன்றும் நடந்து வருவது சிறப்பு.

தற்போதுள்ள மகாமண்டபம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சா.குருசாமி முதலியாரின் தீவிர முயற்சியின் பேரில் உருவானது.தற்போது அவர் தம் குடும்ப வாரீசுகளால் பராமரிக்கப்படுகிறது.

சபா மண்டபம் ஆலாம்பாளையம் அமரர் நஞ்சமுதலியார் அவர்களால் கட்டப்பட்டது. இன்றும் இவர் குடும்ப வாரிசுகளுக்கு திருவிழாவில் உரிய மரியாதை செய்யப்படுகிறது.

குருநாதர் சாமி வனம் கோவில் உருவான விதம் : -

ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ள வனப்பகுதி ஒன்றினை தேர்தெடுக்க அது தற்போதைய புதுப்பாளையம் கோவிலில் இருந்து வடமேற்கில் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

அக்காலத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் செய்ய இவ்வனத்திற்கு செல்ல அப்போது அங்கே பல மாய மந்திர சக்தி கொண்ட உத்தண்ட முனிராயன் அவ்விடத்தை நான் விடமாட்டேன் என தடுக்க அம்மன் திரும்பி வந்து தன் மகன் குருதாதரிடம் சொல்ல தாயை தடுத்த மகா முனி உத்தண்டரை அழித்தே தீருவேன் என வாக்கு தந்து தம் சீடர் அகோர வீரபத்திரனை அழைத்து வனப்பகுதியை விட மறுக்கும் உத்தண்ட முனியை அழித்து வா எனக்கட்டளை இட சீடர் வீரபத்திரன் வனம் சென்று, உத்தண்ட முனிக்கு நல் உபதேசம் செய்தார்.


முனிராயரோ தன் அழிவு தெரியாமல் ஆணவமாக பேசினார். தற்போதுள்ள அந்தியூர் குருநாதசாமி வனத்தில் குருநாதரின் சீடர் அகோர வீரபத்திரனுக்கும் உத்தண்ட முனிக்கும் பெரிய சண்டை நிகழ்ந்தது .மாய தந்திரம் அறிந்த அறிந்த முனிராயர் தன் உருவத்தை பெரிதாக்கி உயரமாகி எதிர்க்க குருநாதசாமி மகாமேரு தேரில் முனிராயரை விட உயரமாகி சண்டையிட்டு உயிர் துறக்கும் முன் முனிராயர் குருநாதரிடம்

"என் அகந்தையை அழித்த குருநாதா.! எனக்கு பூர்வஜன்ம சாபம் உன்னால் நீங்கப்பெற்றேன். தங்கள் தாயார் காமாட்சி அம்மன் ஆர்வப்படி இங்கு தவம் மேற்கொள்ளட்டும். இன்றிலிருந்து இது குருநாதர் வனம் ஆகட்டும். ஆனால் நான் இல்வனத்தில் உன் சீடரான பாதுகாவலரான அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க அருள் புரிவாயா . ?

எனக் கேட்க குருநாதரும் மனமுவந்து

" அப்பா முனிராயா ! உன் பசிக்கு உணவு தர என் மனம் யோசிக்கிறது. ஏனெனில் என் தாயார் காமாட்சி அம்மன், பெருமாள் சாமி,நான் அனைவரும் சைவம்.எங்களுக்கு தேங்காய்,பழம்., பொங்கல் போதும்.

ஆனால்,உனக்கு ?என்க

அதற்கு முனிராயரோ
"குருவே ! பக்தர்கள் வைக்கும் இரட்டை பொங்கலில் எனக்கு ஒன்றை நீங்கள் எமக்கு தர வேண்டும் என கை கூப்பி வேண்டி நின்றார்,

குருநாதரும் சரியென வாக்களிக்க அன்று முதல் இன்று வரை பக்தர்கள் வெட்டும் சேவல் குருநாதரின் காவல் தெய்வமாக விளங்கும் உத்தண்ட முனிக்காகும்.வனத்துக்கோவிலில் கல் உருவம் வைத்து சீடர்கள் வீரபத்திரனும் உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதாக வரலாறு.அன்று வைத்த கற்சிலை இன்றும் சிற்பியால் செதுக்காத பொற்சிலையாக வளர்ந்து வருகிறார்.


வரட்டுப்பள்ள நீர்தேக்க நீர் பள்ளத்தில் ஒட இயற்கையின் குளுமை நம்மை தாலாட்ட சுமார் 1 ஏக்கரில் குருஸ்தலமாகி நில மட்டத்தில் இருந்து 3 அடி குழிக்குள் மலை அடிவாரத்தில் குருநாத சாமி வனம் இருப்பது வியப்பு , சிறப்பு

.இங்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் தவநிலை எதிரில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன் , அம்மன் வலபுறம் கீழ் நவ நாயகிகள்.ஏழுகன்னிமார்கள் .மேலும் மகா விஷ்ணு சன்னதியில் பெருமாள், ராமர்.லட்சு ணர்,சீதை ,பரத சத்துருக்ன்,ஆஞ்சநேயர் கருடாழ்வார் ஆகியோர் உள்ளதாக ஐதீகம்.

குருநாதர் இங்கே குன்றாய் இருக்க நாகதேவதை. தண்டகாருண்யர் ,தர்ப்பை அம்மன் எதிரில் அண்ணன்மார் முன்னுடையாரும் குருநாதர் கீழே பதினெட்டு சித்தர்களும் ,மூதாதையர்கள் மூவர் சிலையும் இடது ஓரம் சீடர் அகோர வீரபத்திரனும் ,எதிரில் உத்தண்ட முனிராயரும் அன்னப்பறவையும் காட்சி தர அருகே பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளது.

குருநாதசாமி திருவிழா விபரம் :-

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் முதல் புதன்கிழமை -பூச்சாட்டுதல் 2- வார வதுபுதன்கிழமை -கொடியேற்றுதல் 3-வது வார புதன்கிழமை வன பூஜை 4 வது வார புதன்,வியாழன்.வெள்ளி சனி ஆகிய நான்கு நாட்கள் ஆடிப் பெருந்தேர்விழா ( மிக விஷேசம் கூட்டம் அதிகமுள்ள பார்க்க வேண்டிய நாள் ). 5வது புதன்கிழமை பால்பூஜையுடன் முடிவடையும். ஆவணி மாதம் முதல் புதன்கிழமை சிதம்பரப்பூஜை எனும் படித்தரப்பூஜை வன்னியர் குல சத்திரியர்களால் நடைபெற்று வருகிறது.

சிதம்பர பூஜை முடித்து பூசாரி பூசை செய்ததும் அருள் வந்து திருவால விளக்கு என்னும் விளக்கில் பச்சை தண்ணீரில் விளக்கு எரித்தீக்காட்டி வணங்கி நிற்கும் பக்தர்களுக்கு பொது வாக்கு அளித்து பின்பூஜை முடித்து பிரசாதம் வழங்குதல் வழக்கம் ,இத்திருவிழாவில் மூலவரே உற்சவராக காட்சி தருவதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் 4ஆம் புதன்கிழமை பல்லாக்கில் ஸ்ரீ காமாட்சி அம்மனும் ,சிறிய மகாமக தேரில் ஸ்ரீ பெருமாள்சாமியும் பெரிய மகாமகதேரில் ஸ்ரீ குருநாதசாமியும் வனத்திற்கு வரும். வனபூஜைகள் முடித்து அன்று இரவு 12.00மணிக்கு மேல் புறப்பட்டு காலை 6.00மணிக்கு அந்தியூர் புதுப்பாளையம்

( PLEASE SEE PART 3)

Saturday, March 5, 2011

Arulmigu gurunatha samy temple history.anthiyur அருள்மிகு குருநாதசாமி தோன்றிய வரலாறு.அந்தியூர்



குருநாதசாமி திருக்கோவில் வரலாறு

அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் (erode district )அந்தியூரில்(anthiyur) இருந்து வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் மேற்கு மலை தொடர் அருகே அழகாய் அமர்ந்திருக்கிறது குருநாத சுவாமி கோவில் பாண்டிய மன்னர்களில் ஒரு குறு நில மன்னன் கற்கோவில் கட்டி வைத்ததாக கதை கூறும் நல் உலகம் கூறுகிறது.

ஆனால் அதற்கான கல்வெட்டிக்களோ செப்பேடு பட்டயங்கங்களோ காலப்போக்கில் அழித்து விட்டது.ஆனால் அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர்களிடம் திருக்கோவில் பற்றிய பன்நெடுங்கால கதையினை செவிவழிச்செய்தியினை உங்கள் முன் வைக்கிறேன்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுவின் ஆட்சிக்காலம்.அப்போது தற்போதும் அந்தியூரில் வசித்து வரும் அமரர். குருசாமி பூசாரியார் அவர்களின் குடும்பத்திற்கு மூத்த தலைமுறையினர் சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாபுரம் எனும் வனத்தில் "குட்டியாண்டவர்" என்னும்பெயரில் கோவில் எடுத்து பூஜை செய்து வந்தனர்.


அக்காலத்தில் இக்கோவில் பூசாரி வீட்டுப்பெண்ணை ஆற்காடு நவாபு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்க அதற்கு பூசாரியாரோ தன் உறவினர்களுடன் கலந்து பேசி தன் முடிவை சொல்வதாக கூறி நவாபின் ஜவானிடம் கூறி அனுப்பி வைத்து பின் தன் உறவினர்களிடம் கேட்க அவர்கள் சம்மதிக்க வில்லை.

நவாபோ சிறிது நாள் அவகாசம் கேட்டு பெண் கொடுக்க மறுத்தால் சிறைச்சேதம் செய்து விடுவேன் என்பது நியாபகம் வர யோசித்தவாறு இருக்க, அப்போது பூசாரியின் உறவினர் ஒருவருக்கு சுவாமி அருள் வந்து

"நீங்கள் வணங்கி வரும் இம் மூன்று கற்சிலைகளையும் எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக வேறு ஊருக்கு சென்று விடுங்கள் "

என அருள்வாக்கு அளிக்க பூசாரியின் மொத்த உறவுகளையும் அழைத்துக்கொண்டு அம்மூன்று கற்சிலைகள் மற்றும் சிற்சிலைகளை எடுத்து பூசைக்கூடையில் வைத்துக்கொண்டு பிச்சாபுரத்தை விட்டு ஒர் நெடுந்தூர பயணத்தை துவக்கினர்.

இச்செய்தி கேட்ட நவாபும் ஆட்களும் அங்கு சென்று பார்த்தபோது யாரும் அங்கு இல்லை என்பதை அறிந்து கோபம் கொண்டு அத்திருக்கோவில் கோபுரம், குதிரைப்பந்தி, யானைப்பந்திகளை உடைத்துச்சென்று விட்டனர்.

இக்கோவில் குடும்பத்தினர் பல ஊர்கள் சுற்றி பசியாலும் பட்டினியாலும் கஷ்டப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சிலைகளின் சுமை தாங்காமல் ஆற்றில் வீசிவிட்டு பஞ்சம் பிழைக்க செல்லலாம் என முடிவெடுத்து ஆற்றில் வீசிவிட்டனர்.அப்போதுதான் அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

அப்போது பல திசைகளுக்கு செல்ல குடும்பம் குடும்பமாக பிரிய தயாரான நிலையில் தற்போதைய அறங்காவலர் குடும்ப மூதாதையர் வன்னியர்குலத்தை சேர்ந்த சாத்தப்பன் என்பவரது கூடையில் ஆற்றில் வீசப்பட்ட மூன்று சிலைகளும் இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டு அன்றிலிருத்து தம் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூத்த மகனுக்கு சாந்தப்பன் என்றும் பெண் பிறந்தால் சாந்தா என்றும் பெயர் அவர்கள் மூதாதையரின் பெயர் வைப்பது வழக்கமான ஒன்று.

கூடையில் இருக்கும் கற் சிலைகளை நம் குலதெய்வமாக வழிபட வேண்டும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் அனைவரும் சாத்தப்பன் பின்னால் கிளம்பினர். பல தூரம் நடந்து ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்நுழைந்து வருகையில் தொப்பபாளையம் (thoppapalayam) என்னும் ஊரில் இருக்கும் இருசியம்மன், எமராசா,கோவில்களில் தங்கி அங்கு சாமிக்கு சிறப்பு செய்ததாகவும்,

பின் கிளம்பி பொரவிபாளயம் எனும் ஊருக்கு வருகையில் அங்கு கடும் சுமை தாங்காமல் தாங்கள் கொண்டு வந்ததில் பெரிய கற்சிலையை இறைவாக்கின் படி நட்டு கும்பிட்டு ( இவ்விடம் தற்போது அந்தியூரில் இருந்து குருவரெட்டியூர் செல்லும் வழியில் பொரவிபாளையம் எனும் ஊரில் பெரிய குருநாதசாமி என்ற பெயரில் பிரதிவார வெள்ளிக்கிழமைகளில் இரவு 7மணிக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் விபரங்களை மேற்படி கோவில் தனி இடுகையில் காணவும்)

மற்ற சிலைகளுடன் அந்தியூர் நோக்கி கிளம்பினர் . ஆதிரெட்டியூர் வழியாக கொண்ணமரத்தியம்மன் கோவில் வந்து சில சிலைகள் வைத்து வணங்கி அந்தியூர் புதுப்பாளயத்தை அடைந்து அப்போது ஆண்ட பாண்டிய மன்னரை அனுமதி கேட்க சில நிபந்தனைகளுடன்

" எம்மீது படை எடுத்து வரும் அரசர்கள் மீது போர் தொடுக்க உதவியாக இருங்கள் எனச்சொல்லி"

நிபந்தனை விதித்து அதன்படியே இவர்களும் அந்தியூர் அருகிலியே தங்க ஆரம்பித்தனர். அங்கு பாண்டிய மன்னரால் கொடுக்கப்பட்ட கல் மண்டபம் மீன் சின்னங்கள் இன்றும் காணலாம் .தாங்கள் கொண்டு வந்த சிலைகளுக்கு முறையான பூஜைகள் செய்து அதன் பின் உணவு அருந்தி வந்தனர்,

பின் தாம் கொண்டு வந்த சிலைகளுக்கு குலதெய்வமாக ஸ்ரீகாமாட்சி அம்மன் ,மற்றொன்று ஸ்ரீ பெருமாள் சாமி (வைணவம் )என்றும் மூன்றாவதாக ஓர் சிலைஎடுத்து சைவக் கடவுளான சிவன்,முருகரை இணைத்து "ஸ்ரீகுருநாதசாமி " எனப்பெயரிட்டு அழைத்தனர். குரு என்றால் ஈஸ்வரரையும் நாதன் என்றால் முருகன் எனச்சொல்லி வணங்கி வந்தனர், இவருக்கு சின்ன குருநாதசாமி,பாலகுருநாத சாமி, உக்கிர குருநாதர் என பல பெயர்கள் உண்டு.

பின் அக்கல் மண்டபத்தில் மூன்று கோபுரங்கள் அமைத்தனர்.அக்காலத்தில் கொள்ளுக்காசுகள் கூலியாக தரம்பட்டதாம்.பெரும் கோவிலாக குருநாதசாமி ஆனபோது யார் பூஜை செய்வது எனக்குழப்பம் வரும்போது இன்றைய பரம்பரை அறங்காவலரின் நான்காம் பாட்டனார் மழு எடுத்து பூஜை செய்தாராம் அப்படி என்றால் தூபக்காளை பித்தளயால் ஆனைதை தீயில் வேக வைத்து அதை எடுத்து சாமிக்க தூபம் காட்டி பூஜை செய்தாராம்.

பின் சாமி பூஜை பொருட்கள் பாதுகாக்க குலுக்கை எனும் பெட்டகம் பிரதி வருடம் ஆடிமாதத்திருவிழாவின் போது முதல் பூஜைக்கு முந்தைய நாள் மேள தாளத்துடன் திறந்து பூஜை பொருட்கள் எடுத்து பூஜை செய்வாக்களாம்.

இன்றும் இம்முறை பின்பற்றப்படுவதுண்டு.மேலும் பாதுகாப்பிற்காக பாம்புகளை விட்டு காற்றோட்டம் அமைத்து பாதுகாப்பதாக சொல்கிறார்கள்.கடும் விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவரே இதை திறப்பார்,

பாகம் 2 ல் காண்க.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...