Monday, October 30, 2017

டெக்ஸ்வேலி TEX VALLEY

டெக்ஸ்வேலி  ( Tex Valley )                                                     அண்மையில் தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க செல்ல முடிவு செய்து எங்கே செல்வது என்று யோசித்த போது டெக்ஸ்வேலி சித்தோட்டில் இருக்கிறது அங்கு செல்லலாம் என நன்பர் கூற பயணித்தோம்
எங்கு உள்ளது? ஈரோட்டில் இருந்து 14 கி.மீ தொலைவில் சித்தோடு to கங்காபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. சேலம் to கோவை செல்லும் வழியில் சித்தோடு பை பாஸ் பிரிவு தாண்டி கங்காபுரத்தில் டெக்ஸ் வேலி அமைந்துள்ளது .
               
பயணித்து ஓர் வழியாய் டெக்ஸ்வேலி முகப்பு வந்ததாக விட்டது. கங்காபுரம் பைபாஸ் ரோடு மெதுவாக கடந்து வர வேண்டும்' இந்த பகுதிக்கு வந்தவுடன் நாம் ஏதோ வெளிநாட்டில் உள்ளது போல ஓர் உணர்வு , டெக்ஸ்வேலியின் முகப்பே அழகான வடிவமைப்பு கடந்து உள்ளே சென்றால் வலப்புறம் வாரச்சந்தை விற்பனை கூடம் கிட்டத்தட்ட 200 கடைகள் இவைகள் எளிமையான விலையில் துணிகள் விற்பனைக்கு உள்ளது. இதை தாண்டி பயணித்தால் மிகப் பெரிய கட்டிடம் நம்மை வரவேற்கிறது

 சுமார் 18 ஏக்கர் பரப்பில் 16 லட்சம் சதுர அடியில் சுமார் 450 கோடி மதிப்பீட்டில் 1650 கடைகள் பிரமாண்டமான 3 கட்டிடங்களில் உயர்ந்து நிற்கிறது. இங்கு கர்சீப் முதல் நமக்கு தேவையான அனைத்து துணிகளும் வாங்கலாம். இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக வளாகம், இங்கு பல ஆயத்த ஆடை நிறுவனங்கள் தங்கள் ஷோருமை திறந்துள்ளனர் .  

எல்லா தரப்பு மக்களும் வந்து துணிகள் வாங்கும் அளவிலேயே விலைகளும் உள்ளது. ஒரு நாள் வந்து பாருங்கள்.  சர்வதேச தரத்திற்கான ஓர் முயற்சி இதன் கட்டிடங்கள் அமைப்பு, அழகு ,                                                        டெக்ஸ் வேலியை உருவாக்கிய நல் உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்         

Tuesday, October 24, 2017

மனம் கவர்ந்த பாடகி -பிரியங்கா


விஜய்டி.வி சூப்பர்சிங்கர்பிரியங்கா                                    :    - -                                                                                                                             கடந்த சில நாட்களுக்கு பேஸ்புக்கில் எனது நண்பர் பதிவிட்டு இருந்த ஒரு வீடியோவை ரசித்தேன். விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பைனலில் பாடிய பாடல் அது.' " சின்ன சின்ன வண்ணக் குயில் " என துவங்கிய அந்த பாடல் கேட்டு மெய் மறந்த தருணம் அது, அட என்ன ஓர் அழகான குரல்.                                                                            " -                                  ஜென்சி, ஜானகி, அவர்கள் குரலை ரசித்து கொண்டிருந்த எனக்கு பிரியங்காவின் பாடல் கேட்ட போது இவர் நல்ல நிலைக்கு வருவார் என தோன்றுகிறது,.                                                                                          தனது உழைப்பால் தற்போது ஒரிரு சினிமா பாடல்கள் பாடி வரும் இவருக்கு தமிழ் திரையுலகம் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்' என்பது என் ஆவல் , மீண்டும் ஒரு ஜென்சி, ஜானகி வரிசையில் பிரியங்கா குரல் .                                                                                      பிரியங்கா மேன் மேலும் பல படங்களில் பாடி  நல்ல நிலைக்கு வர வேண்டும் அதுவே நம் ஆவலும் எம் வலைப்பூவில் இவரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் # வாழ்த்துக்கள் ப்ரியங்கா
     







பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...