📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Wednesday, January 25, 2012

உறவுகள்



இறந்தவனின்
சொத்துக்காக உறவுகள்
சண்டையிட்டுக்கொள்ள
அவர்களைப் பார்த்து
தப்பித்து விட்டதாய்
எண்ணி
சிரித்துக் கொண்டிருந்தது...!

சடலத்தின் நெற்றியிலிருந்த
ஒற்றைக்காசு...!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்