Thursday, March 10, 2011

அருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2


முதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் -



குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் யாரேனும் நுழைய முயற்சித்தால் கொடிய விஷ பாம்புகளிடம் கடிபட்டு இறப்பு நிச்சயம் என்பது சத்திய வாக்கு.


இப்பகுதிவாழ் மக்கள் தங்கள் தோட்டங்களில் வாழும் விஷ ஜந்துக்கள் தங்களை தீண்டக்கூடாதென வேண்டுதலிட்டு குலுக்கையை பாதுகாக்கும் பாம்பு புற்றுக்கு பூக்கள் இட்டு வணங்கி வருதல் இன்றும் நடந்து வருவது சிறப்பு.

தற்போதுள்ள மகாமண்டபம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சா.குருசாமி முதலியாரின் தீவிர முயற்சியின் பேரில் உருவானது.தற்போது அவர் தம் குடும்ப வாரீசுகளால் பராமரிக்கப்படுகிறது.

சபா மண்டபம் ஆலாம்பாளையம் அமரர் நஞ்சமுதலியார் அவர்களால் கட்டப்பட்டது. இன்றும் இவர் குடும்ப வாரிசுகளுக்கு திருவிழாவில் உரிய மரியாதை செய்யப்படுகிறது.

குருநாதர் சாமி வனம் கோவில் உருவான விதம் : -

ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ள வனப்பகுதி ஒன்றினை தேர்தெடுக்க அது தற்போதைய புதுப்பாளையம் கோவிலில் இருந்து வடமேற்கில் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

அக்காலத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் செய்ய இவ்வனத்திற்கு செல்ல அப்போது அங்கே பல மாய மந்திர சக்தி கொண்ட உத்தண்ட முனிராயன் அவ்விடத்தை நான் விடமாட்டேன் என தடுக்க அம்மன் திரும்பி வந்து தன் மகன் குருதாதரிடம் சொல்ல தாயை தடுத்த மகா முனி உத்தண்டரை அழித்தே தீருவேன் என வாக்கு தந்து தம் சீடர் அகோர வீரபத்திரனை அழைத்து வனப்பகுதியை விட மறுக்கும் உத்தண்ட முனியை அழித்து வா எனக்கட்டளை இட சீடர் வீரபத்திரன் வனம் சென்று, உத்தண்ட முனிக்கு நல் உபதேசம் செய்தார்.


முனிராயரோ தன் அழிவு தெரியாமல் ஆணவமாக பேசினார். தற்போதுள்ள அந்தியூர் குருநாதசாமி வனத்தில் குருநாதரின் சீடர் அகோர வீரபத்திரனுக்கும் உத்தண்ட முனிக்கும் பெரிய சண்டை நிகழ்ந்தது .மாய தந்திரம் அறிந்த அறிந்த முனிராயர் தன் உருவத்தை பெரிதாக்கி உயரமாகி எதிர்க்க குருநாதசாமி மகாமேரு தேரில் முனிராயரை விட உயரமாகி சண்டையிட்டு உயிர் துறக்கும் முன் முனிராயர் குருநாதரிடம்

"என் அகந்தையை அழித்த குருநாதா.! எனக்கு பூர்வஜன்ம சாபம் உன்னால் நீங்கப்பெற்றேன். தங்கள் தாயார் காமாட்சி அம்மன் ஆர்வப்படி இங்கு தவம் மேற்கொள்ளட்டும். இன்றிலிருந்து இது குருநாதர் வனம் ஆகட்டும். ஆனால் நான் இல்வனத்தில் உன் சீடரான பாதுகாவலரான அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க அருள் புரிவாயா . ?

எனக் கேட்க குருநாதரும் மனமுவந்து

" அப்பா முனிராயா ! உன் பசிக்கு உணவு தர என் மனம் யோசிக்கிறது. ஏனெனில் என் தாயார் காமாட்சி அம்மன், பெருமாள் சாமி,நான் அனைவரும் சைவம்.எங்களுக்கு தேங்காய்,பழம்., பொங்கல் போதும்.

ஆனால்,உனக்கு ?என்க

அதற்கு முனிராயரோ
"குருவே ! பக்தர்கள் வைக்கும் இரட்டை பொங்கலில் எனக்கு ஒன்றை நீங்கள் எமக்கு தர வேண்டும் என கை கூப்பி வேண்டி நின்றார்,

குருநாதரும் சரியென வாக்களிக்க அன்று முதல் இன்று வரை பக்தர்கள் வெட்டும் சேவல் குருநாதரின் காவல் தெய்வமாக விளங்கும் உத்தண்ட முனிக்காகும்.வனத்துக்கோவிலில் கல் உருவம் வைத்து சீடர்கள் வீரபத்திரனும் உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதாக வரலாறு.அன்று வைத்த கற்சிலை இன்றும் சிற்பியால் செதுக்காத பொற்சிலையாக வளர்ந்து வருகிறார்.


வரட்டுப்பள்ள நீர்தேக்க நீர் பள்ளத்தில் ஒட இயற்கையின் குளுமை நம்மை தாலாட்ட சுமார் 1 ஏக்கரில் குருஸ்தலமாகி நில மட்டத்தில் இருந்து 3 அடி குழிக்குள் மலை அடிவாரத்தில் குருநாத சாமி வனம் இருப்பது வியப்பு , சிறப்பு

.இங்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் தவநிலை எதிரில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன் , அம்மன் வலபுறம் கீழ் நவ நாயகிகள்.ஏழுகன்னிமார்கள் .மேலும் மகா விஷ்ணு சன்னதியில் பெருமாள், ராமர்.லட்சு ணர்,சீதை ,பரத சத்துருக்ன்,ஆஞ்சநேயர் கருடாழ்வார் ஆகியோர் உள்ளதாக ஐதீகம்.

குருநாதர் இங்கே குன்றாய் இருக்க நாகதேவதை. தண்டகாருண்யர் ,தர்ப்பை அம்மன் எதிரில் அண்ணன்மார் முன்னுடையாரும் குருநாதர் கீழே பதினெட்டு சித்தர்களும் ,மூதாதையர்கள் மூவர் சிலையும் இடது ஓரம் சீடர் அகோர வீரபத்திரனும் ,எதிரில் உத்தண்ட முனிராயரும் அன்னப்பறவையும் காட்சி தர அருகே பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் உள்ளது.

குருநாதசாமி திருவிழா விபரம் :-

ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் முதல் புதன்கிழமை -பூச்சாட்டுதல் 2- வார வதுபுதன்கிழமை -கொடியேற்றுதல் 3-வது வார புதன்கிழமை வன பூஜை 4 வது வார புதன்,வியாழன்.வெள்ளி சனி ஆகிய நான்கு நாட்கள் ஆடிப் பெருந்தேர்விழா ( மிக விஷேசம் கூட்டம் அதிகமுள்ள பார்க்க வேண்டிய நாள் ). 5வது புதன்கிழமை பால்பூஜையுடன் முடிவடையும். ஆவணி மாதம் முதல் புதன்கிழமை சிதம்பரப்பூஜை எனும் படித்தரப்பூஜை வன்னியர் குல சத்திரியர்களால் நடைபெற்று வருகிறது.

சிதம்பர பூஜை முடித்து பூசாரி பூசை செய்ததும் அருள் வந்து திருவால விளக்கு என்னும் விளக்கில் பச்சை தண்ணீரில் விளக்கு எரித்தீக்காட்டி வணங்கி நிற்கும் பக்தர்களுக்கு பொது வாக்கு அளித்து பின்பூஜை முடித்து பிரசாதம் வழங்குதல் வழக்கம் ,இத்திருவிழாவில் மூலவரே உற்சவராக காட்சி தருவதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் 4ஆம் புதன்கிழமை பல்லாக்கில் ஸ்ரீ காமாட்சி அம்மனும் ,சிறிய மகாமக தேரில் ஸ்ரீ பெருமாள்சாமியும் பெரிய மகாமகதேரில் ஸ்ரீ குருநாதசாமியும் வனத்திற்கு வரும். வனபூஜைகள் முடித்து அன்று இரவு 12.00மணிக்கு மேல் புறப்பட்டு காலை 6.00மணிக்கு அந்தியூர் புதுப்பாளையம்

( PLEASE SEE PART 3)

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...