Wednesday, December 29, 2010

அருள்மிகு குப்பியண்ணசாமி கோவில் ஸ்தல வரலாறு ,துக்காச்சி,அறச்சலூர். ஈரோடு மாவட்டம் ARULMIGU KUPPIYANNA SAMY TEMPLE HISTORY,TUKKATSI, ARASALUR ,ERODE DISTRICT.


குப்பியண்ணசாமி செல்வக்குமார சாமி தோன்றிய வரலாறு:



சுமார் 400ஆண்டுகளுக்கு முன்பு பூந்துறை நாட்டில் மேல் கரைப்பிரிவைச் சார்ந்த சென்னிமலை முருகனுக்கு தேரோட்டும் காணியாளர் நால்வரில் ஒருவரான எழுமாத்தூர் வோளாண் குடிமக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதியில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லாமல் மனம் வருந்தி சென்னிமலை, நாகமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வேண்டி விரதமிருக்கையில் அம்முருகப்பெருமான் ஒர் குழந்தை வரத்தை கொடுக்க அக்குடும்பம் அக்குழந்தையை "செல்வக்குமரன்" எனப் பெயரிட்டு திருமுருகன் பெயராலேயே அழைக்பட்டது.


அக்குழந்தையை செல்வக்குமரன் குருகுலத்தில் பயிற்றுவித்து அசுவசாஷ்திரங்களும் மூலிகைகளால் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகளையும் கற்றுணர்ந்தார். திருமண வயது அடைந்த செல்வக்குமாரசாமிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சிக்க அதற்கு செல்வக்குமரனோ "என்னைப் பெற்றோர்களே , என்னுடம்பு எடுத்ததின் பயனே பாசங்களை விட்டொழித்து இறைவனை அடைவதற்கே ஆகும் ."


எனச்சொல்லி மக்களுக்கு தொண்டு செய்யவும் மகேஸ்வரனுக்கு (இறைவன்)தொண்டு செய்யவும் விரும்பி முருகர் இருக்கும் குன்றுகளான சிரகிரி (சென்னிமலை) நாகமலை ,கனகாசலக்குன்றுகளில் தங்கி தவம் செய்தார். தற்போது கோவில் இருக்கும் இடமான துக்காச்சி என்னும் இடத்தில் வந்தவுடன் இவ்வூரில் பல தொன்மையான மரங்கள் இருக்குமிடத்தை பார்த்தவுடன் ஓர் நுட்பமான மன மாற்றம் மனதில் ஏற்பட நாம் இறைவனை அடைய இதுவே சிறந்த இடம் எனக்கருதி குடில் அமைத்து தங்கினார்.

அவ்விடத்தின் அருகில் காராம் பசு ஒன்று தினமும் காலை மாலையில் பால் செரியும் அற்புதம் கண்டு பசு மேய்பன் , அப்பசுவின் சொந்தகாரருடன் அவ்விடம் சுத்தம் செய்ய அங்கே லிங்கம் அற்புதமாய் வீற்றிருப்பதை கண்டு வணங்கினர். செல்வக்குமர சாமி அன்றிலிருந்து அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரலானார்.

இவ்விடம் தற்போதும் கோவில் வளாகத்தில் உள்ளது செல்வக் குமாரரிடம் பாம்பு,தேள், செய்யான்,பூரான், போன்றவகளால் கடிபட்டு வைத்தியம் பார்க்க நிறைய மக்கள் வர வேம்பாலும்,திருநீராலும் போக்கி வந்தார்.

அவரை மக்கள் தம்பிரான் செல்வக்குமார பூசாரியார் என அழைக்க அவரோ தம்மை வணங்குவதைக் காட்டிலும் இறைவனை வணங்குவதே சிறப்பு எனச்சொல்லி சுயம்பு மூர்த்திக்கு அருகில் யந்ரஸ்தாபனம் செய்து முத்தலைச் சூலமொன்றை நிறுவினார் அதுவும் தற்போது உள்ளது.

தாம் நிறுவிய மூர்த்திக்கு " செல்வ முத்துக்குமாரசாமி" எனப்பெயரிட்டு தானும் தம்மை நாடி வருபவர்களையும் வழிபடச்செய்தார். மறுபடியும் பெற்றோர்கள் அழைக்க செல்ல மறுத்து காவியுடை தரித்து தம்பிரான் சுவாமிகள் சிவனடியார் கோலத்தில் துறவியாக வாழ்ந்தார் பெற்றோர்கள் இறந்த பின் பல்லாண்டுகள் கழிந்தன , அவரால் நிறுவப்பட்ட ஆலயம் தான் இன்றும் தம்பிரான் கோவில், செல்வக்குமாரர் கோவில்,வினை தீர்த்தான் மடம் என பலவாறு அழைக்கப்படுகிறது.

இவவிடுகையின் தொடர்ச்சி "குப்பண்ணசாமி வருகை " எனும் இடுகையில் காணவும்.

ஆன்மீகத்தை அறிய வந்த உங்களுக்கு எம் சிவனருள் பெறுக. நன்றி.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...