Tuesday, August 16, 2011

ஸ்ரீ குருநாதசாமி வனம் அந்தியூர் , ஈரோடு மாவட்டம்


அருள்மிகு குருநாதசாமி திருக்கோவில் வனம் :


அருள்மிகு குருநாதசாமி வனம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் இருந்து 3கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.



வனத்தில் மூலவராக வீற்றிருப்பது குருநாதசாமியாகும். உடன் பெருமாள் சாமியும்,காமாட்சி அம்மனும் அருள்புரிகின்றனர். அருகே நாகப்புற்று அமைந்துள்ளது. ஊஞ்சல் போன்ற அமைப்பும் உள்ளது.


சமதளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி தரிசனம் செய்ய பள்ளம் போன்ற அமைப்பில் குருநாதசாமி வனம் அமைந்துள்ளது.

சுமார் 500 மீட்டரில் இவ்வனத்தில் வேம்பு,தென்னை,ஆலமரம்,ஊஞ்சன்மரங்கள் மற்றும் பழங்கால மரங்கள் அமைந்து குளுமையாக உள்ளது.

வேண்டுதல் நிறைவேறிய பின் பல குடும்பங்கள் வந்து ஆடிமாத கோவில் திருவிழா நாட்களில் இங்கு பொங்கல் இட்டு ஆடு,கோழிகளை பலியிட்டு , செல்வது வழக்கம்.

அருள்மிகு குருநாதசாமி வனத்தில் இருந்து திருவிழாவின் போது மடப்பள்ளிக்கு புதுப்பாளையத்திற்கு தேரில் குருநாதசாமி,பெருமாள் சாமி,காமாட்சி அம்மன் ஆகியோர் திருவிழா நாளில் பக்தர்கள் வரமளிக்க தேரில் வருவார்கள்.இந்த வருடம் 2011 ன் திருவிழா சிறப்பாக லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தர 5 நாட்கள் நடந்தது .

திப்புசுல்தான் ஆட்சியில் தன் குதிரைப்படைக்கு தேவையான குதிரைகளை வாங்க அந்தியூரில் குதிரைச்சந்தை அமைத்ததாக வரலாறு இந்த வருடம் நொக்ரா,காட்டியவாடி ,கத்தியவார் போன்ற பல ரக குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.5லட்சம் வரை குதிரை விலை சொல்கிறார்கள்.


,மாட்டுச்சந்தையில் மலைமாடுகள் காங்கேயம் காளைகள்,சிந்து ,ஜெர்சி வந்திருந்தன. குஜராத்தில் இருந்து வந்த ஜாப்ரா இன எருமைமாடுகள் வித்தியாசமாய் இருந்தன.

காது நீண்ட ஜமுனாபாரிஆடுகள் பல வகையான வளர்ப்பு பிராணிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. பலவகையான ராட்டினங்கள்,கம்பி வளைக்குள் கார்,பைக் சர்க்கஸ் மற்றும் தூரிகள் குழந்தைகள் ரயில் கப்பல் தூரி, என அழகாய் நடந்தது. பேரிக்காய்,கொள்ளேகால் மிட்டாய், சோழக்கருது சாப்பிடாமல் வரமுடியாது.


மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் அடுத்த வருடம் ஆடிமாதமாவது வந்து கலந்துகொண்டு அருள்மிகு குருநாதர் அருள்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்

அன்பன் குரு.பழ.மாதேசு

Friday, August 12, 2011


வலைப்பூ தொடங்கி வருடம் ஒன்றாகி விட்டது. ஜுலை 12 ல் தொடங்கி இன்றுவரை 75 இடுகைகள் உலகமெங்கிலும் 1036 பேர் வந்து சென்றது மகிழ்ச்சியே. ஆனாலும் எம் எழுத்து உங்களுக்கு பயன்படுகிறதா ???என்ற கேள்வி இடையறாது எம்மை துளைக்கிறது. எமது வலைத்தளம் தரமானதாக வேண்டுமென்ற ஆர்வத்தில் உங்களின் கருத்துரைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன். முடிந்தால் இன்ட்லி தமிழ் மணத்தில் ஓட்டிப்போட்டுட்டு போங்க, இறை சித்தத்தால் இன்னும் பல கோவில் வரலாறுகளும் படைக்க உங்கள் கருத்துரைகளே எம்மை வழிப்படுத்தும் வலிமைப்படுத்தும் என நம்பி (டிரிட்டா ? வலைப்பூவின் இரண்டாம் வருட கொண்டாட்டத்தில் கண்டிப்பாக அழைப்பு வரும் ) நட்புடன் குரு.பழ.மாதேசு

தீரன் சின்னமலை எனும் வரலாற்று காவியம்



மாவீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.

வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.

கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்."ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் " எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.


அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .

இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .

இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.


அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன். உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.

ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


அடுத்த தலைமுறைக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இடங்களுக்கு உங்களால் முடிந்த நாட்களில் ஈரோடு வரும்போது சுற்றிக்காட்டலாமே?

Monday, August 8, 2011

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?


ஜோக்,கவிதை,கதை எழுதுதும் திறமை பல பேருக்கும் இருந்தும் அதை எப்படி அனுப்புவது என தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியம் ,

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து திறமையை ஜோக் என்றால் ஒரு அஞ்சல் அட்டையில் முகவரி எழுதம் பக்கத்தில் எந்த வார இதழ்களுக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த வார இதழின் முகவரி இட்டு அதன் இடப்பக்கத்தில் உங்கள் முகவரி இட்டு அதன் பின்பு முழு அஞ்சல் அட்டையின் முழு அளவுள்ள பக்கத்தில் ஜோக் என தலைப்பிட்டு தெளிவாக எழுதி



குமுதம்,ஆனந்தவிகடனுக்கு அல்லது ஜோக் பிரசுரமாகும் வார இதழ்களுக்கு அனுப்பினால் உங்கள் ஜோக்குகளை சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானால் அந்த ஜோக்குக்கு பரிசும் மணியார்டரில் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

அல்லது முழு வெள்ளைதாளை இரண்டாக கட் செய்து ஜோக் தலைப்பிட்டு கவரில் வைத்தும் அனுப்பலாம்.

கவிதைகளையும் மேற்கண்டவாறு அனுப்பலாம். ஒருபக்க கதைகளை அனுப்பும் போது முழு வெள்ளைதாழின் ஒருபக்கம் மட்டும் எழுதி வெள்ளைதாளின் பின்பக்கம் ஏதும் எழுதாமல் முகவரி மட்டும் எழுதி அனுப்பலாம்.

பெரிய கதைகளை அனுப்பும் போது 5 பக்கம் வருமாறு வெள்ளைதாளின் ஒருபக்கம் மட்டும் எழுதி தங்கள் படைப்புகளை அனுப்பலாம். தங்களுக்கு எழுத்து திறமை இருப்பதாக கருதினால் முதலில் அஞ்சல் அட்டையில் வாசகர் கடிதம் எழுதிப்பழகுங்கள் ,

பின்பு குடும்ப மலர் வாரமலர் போன்றவற்றில் ஜோக்,கவிதை, கதைகளை அனுப்புங்கள்.பின்னர் பெரிய வார இதழ்களுக்கு அனுப்புங்கள். அதற்கு முன் எந்த மாதிரியான ஜோக்,கவிதைகள்,பிரசுரமாகின்றன என்பதை கவனியுங்கள்.

பின்பு தொடர்ந்து முயற்சியுங்கள்.

உங்களுக்குள் ஓர் எழுத்தாளன் இருந்தால்
கண்டிப்பாய் வெளிப்படுவான்.

வாழ்த்துக்கள்.

Friday, August 5, 2011

சாலை விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்


வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விதிகள் :


அவசர உலகம் ., வாகனத்தின் பெருக்கம், இப்படி பல தடைகளை தாண்டி நாம் வீட்டை விட்டுச் சென்றால் திரும்பி வந்தால் போதும் என்கிற அளவில் சாலை விபத்துக்கள் நம் மனதை கரைக்கின்றன.



எத்தனையோ படித்த இளைஞர்களை சாலை விபத்துக்களில் பறிகொடுத்து மனித வளத்தை இழக்கலாமா?

சரி தனிமனிதனாக நம்மால் விபத்து ஏற்படுத்தாமல் எப்படிச் செல்வது ...?

செய்ய வேண்டியது :

1. வாகனத்தை எடுக்கும் போது டயரில் போதுமான காற்று ,எரிபொருள் உள்ளதா என பரிசோதிப்பது

2.ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டுவது

3.வாகனத்தின் இடப்புறம் வலப்புறம் திருப்பும் போது இன்டிக்கேட்டர்,கை சிக்னல் பயன்படுத்துவது.

4.முன்னால் செல்லும் வாகனத்தை முந்த நினைக்கும் போது நம் பின்னால் வரும் வாகனத்தை கண்ணாடியில் (side mirror ) கவனித்து முந்துவது

5.தரமான டயர் ,பிரேக் ஷுக்களை பயன்படுத்தல்

6.நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டிப் பழகி ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்வது

7.சாலைவிதிகள் போக்குவரத்து காவலர் சைகை சிக்னல்களை மதிப்பது, அறிந்து கொள்வது
8.மிதவேகம்

9.இன்சூரன்ஸ் எப்போதும் நடப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்வது

10.இரவு பயணத்திற்கு ஏற்றவாறு நல்ல தரமான வெளிச்சம் தரும்
பல்புகள்,பேட்டரிகளை பயன் படுத்துதல்


செய்யக்கூடாதது :

1.செல்போன் பேசியபடி பணிப்பது நம் கவனத்தை சிதறவைக்கும்

2 மதுபோதையில் பயணம் செய்வது

3. அதிகப்படியான எடை,நிர்ணயிக்கப்பட்ட நபர்களை விட அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டி செல்வது அல்லது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது

4.வாகன ஓட்டும்போது சாகசம் செய்வது

5.நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வது

6.அதிக ஒலி,ஒளியை பயன்படுத்துவது

7. சரியான தூக்கம் இல்லாமல் பயணிப்பது

8. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென எண்ணுவது

9.நீண்ட பயணம் ஓய்வு எடுத்துக்கொள்ளாத பயணம்

10.வாகனத்தை நிறுத்தும் போது இடப்பக்கம் ஒரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்துவது இப்படி செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் நிறைய இருந்தாலும் முக்கியமான வற்றை மற்றும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


ஓரே அடிப்படையான விஷயம் என்ன வென்றால் 40கி.மீட்டர் வேகத்தில் மிதமான வேகத்தில் பயணித்தால் கண்டிப்பாக சாலை விபத்து ஏற்படாது.

மெடிக்கிளைம், மெடிக்கேர் பாலிசிகளை எடுத்து வைத்துக்கொள்வதும், அறிந்து கொள்வதும் சாலச்சிறந்தது. நாம் பயணிக்கும் சாலையில் விபத்து ஏற்பட்டால் எல்லோரையும் போல் வேடிக்கை பார்க்காமல் 108 க்கோ ,அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கும் முடிந்தால் அடிபட்டவரின் வீட்டிற்கும் தகவல் தாருங்கள்.


எத்தனையோ மனித உயிர்கள் உரிய நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கிறார்கள்.

தனிமனிதனாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட உறுதி கொள்வோம்.

வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர்வோம்.

குத்தம் குறையிருந்தா குட்டி சொல்லுங்க.
நன்றி

அருள்மிகு தன்னாசி முனியப்பர் ஆலயம் ,பூதப்பாடி .அம்மாபேட்டை பவானி வட்டம்



அருள்மிகு தன்னாசி முனியப்பன் திருக்கோவில் பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் 5வது கி.மீட்டரில் பூதப்பாடி என்னும் சிற்றூரில் அமைந்த அழகான ஆலயமாகும்.



பூதப்பாடி சந்தையில் இருந்து பருத்தி பல தமிழகத்தின் பல ஊர்களுக்கும் செல்லும் இடமாகும்(சனிக்கிழமை அன்று ஊஞ்சப்பாளையத்தில் பருத்தி டெண்டர் விடப்படும்). பூதப்பாடியில் இருந்து சிங்கம்பேட்டை ( 1 கி.மீட்டர் ) செல்லும் வழியில் தன்னாசி முனியபன் சன்னதி உள்ளது.



கோவில் அருகே பிரமாண்ட ஸ்தலமரமும் பிரமாண்ட முனியப்பர் சிலைகளும் அலகரிக்கிறது. திருக்கோவில் உள்ளே மூலவராக தன்னாசி முனியப்பர் காட்சி தருகிறார் .



திருக்கோவில் பின் புறம் சப்த கன்னிமார் சிலைகள் உள்ளது.

ஆடிமாத இறுதியில் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக நடைபெறுகிறது.


நீங்களும் இப்பகுதிக்கு வந்தால்

அருள்மிகு தன்னாசி முனியப்பரை வந்து

தரிசனம் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துரைகளை எழுதுங்கள்.

நன்றி

Friday, July 29, 2011

Arulmigu gurunathaswamy temple anthiyur


குருநாதசாமி திருக்கோவில் அந்தியூர் திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூருக்கு வடக்கே 2 வது கி.மீட்டரில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் உள்ள புதுப்பாளையத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருநாதசாமி திருக்கோவிலுக்கு மகாமண்டபம்,சபாமண்டபம்.




பிரகார மண்டபம் கட்ட 50,50,000/ ரூபாய் ஐம்பது லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் கட்ட இறை அருள்வாக்கின் படி துவங்க இருப்பதால் நன்கொடைகளை மக்களிடம் எதிர்பார்க்கும் கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.



நன்கொடைகள் செக், D.D M.O அனுப்ப வேண்டிய முகவரி THE EXCUTIVE OFFICER AND THE HERIDITARY TRUSTEE, ARULMIGU GURUNATHASWAMY THIRUKKOIL THIRUPPANI, PUDUPPALAYAM, ANTHIYUR -638501


உங்களால் முடிந்த தொகையை அனுப்பி அருள்மிகு குருநாத சாமி அருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறது. இந்த 2010 ஆண்டு ஆடி மாத இறுதியில் 10.8.2011 அன்று புதன் கிழமை தொடங்கி 4 நாட்கள் பிரமாண்டமாக மாட்டுச்சந்தை,குதிரைச்சந்தையுடன் அருள்மிகு குருநாதசாமி பண்டிகை தொடங்குகிறது.

நம் இணைய பிளாக்கர்களையும்,வாசகர்களையும் வருக வருக என வரவேற்கிறேன். வந்து விட்டு முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். திருவிழா முடித்ததும் திருப்பணி துவங்கும்.

இந்த வருட குருநாத சாமி பண்டிகைய பார்த்து விட்டு நல்ல தகவல்களை பகிரலாம்.அந்தியூர் குருநாதசாமியை பற்றி மேலும் அறிய இதே பிளாக்கில் உள்ள குருநாதசாமி வரலாறு பாகம் 1,2,3, இடுகைகளை பார்க்கவும் நட்புடன் குரு.பழ.மாதேசு.

Wednesday, July 27, 2011

அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T




அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில்

வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளது.


திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையத்தில் குடி கொண்டு கொங்கு வேளாளர் இனத்தில் சேரன்,பாண்டியன்,பனங்காடை குலத்தவர்களுக்கும், தேவர் குலத்தவரில் கணக்கன் கூட்டத்தாருக்கும் குலதெய்வமாகிய அருள் மிகு தங்கம்மன் கோவில் வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் அம்பிகையாக விளங்கி வருகிறது.


மூலவராக தங்கம்மன் சப்த கன்னிமார் வடிவில் அழகாக அமர்ந்திருக்கிறது.அருகிலேயே பிரமாண்டமான அக்கினீஷ்வரர் சன்னதியும் அலங்கரிக்கிறது. வெண்நாகப்புற்று சன்னதி தங்கம்மன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது.


பூஜை விபரங்கள் ; பிரதி அமாவசை காலை 11.00 மணிக்கும் பிரதி பெளர்ணமி அன்று மாலை 06.00மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நாட்களில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்காக ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அருகிலுள்ள அக்கினீஷ்வரருக்கு பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

போக்குவரத்து வசதி ;

தினமும் தங்கம்மன் கோவில் வழியாக செல்லும் பேருந்துகள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் ;


காலை 8.20 SRRBS பஸ் ஈரோடு ,8.45 ஆனந்த் பஸ் கொடிமுடி 0945 பஸ் நெம்பர் 47 கீரனூர் 10. 50 மணிக்கு 4B/47Bபஸ் படியூர்

மதிய நேரத்தில் திருப்பூரில் இருந்து செல்லும் பஸ்கள் 1.20 ஆனந்த் பஸ் கொடுமுடி 3.00 மணிக்கு 4B/47B படியூர் 3.15 SRRBS ஈரோடு ஆகியவையும்


மாலையில் திருப்பூரில் இருந்து தங்கம்மன் கோவிலுக்கு வர 6.20 ஆனந்த்பஸ் கொடுமுடி 6.50 பஸ் நெ 20 நால்ரோடு இரவு 9.10க்கு பஸ் நெ 20 நால்ரோடு ஆகிய பஸ் வசதிகள் உள்ளன.

வருடாந்திர பூஜை ; தமிழ்மாதம் ஆடிமாதக்கடைசியிலும் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் சிறப்பாக நடைபெறும். அது வருகிற கர வருடம் ஆடிமாதம் 25 ஆம் நாள் 10.08.2011 புதன் கிழமை அன்று சிறப்பாக பொங்கல் விழா நடைபெறும்.



அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு பூஜை, அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும் ; கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணி சங்கத்தினர்,, தம்மரெட்டிபாளையம் அஞ்சல், காங்கேயம் வட்டம் திருப்பூர் வட்டம் .


தொலை தொடர்புக்கு ;-STD 04294

திருக்கோவில் 258252,293278,
செயலாளர் வீடு 258224 258101

செயலாளர் அழைபேசி -;9486047324

பொருளார் அழைபேசி -9360194485.

காங்கேயம் நால்ரோட்டில் இருந்து 10கி.மீட்டர் தொலைவில்
உள்ள அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு வாருங்கள்.

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.
வாழ்வில் எல்லா உயர்வுகளும் பெறுங்கள் .

திரக்கோவில் ஸ்தல வரலாற்றுடன் இடுகை விரிவாக்கப்படும்.
நட்புடன் குரு.பழ.மாதேசு.
குருவரெட்டியூர்

Monday, July 25, 2011

Arulmigu balathantayuthapani temple,kanjikovil,perundurai


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவிலில் இருந்து நசியனூர் செல்லும் வழியில் 1 கி.மீட்டரிலும் நசியனூரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் கனககிரி குமரன் மலை என்னும் இடத்தில் அழகிய குன்றில் அமர்ந்துள்ள அற்புதமான முருகர் ஆலயமாகும்.



அருகில் கொங்கு வேளாளர் மெட்குலேசன் பள்ளி அமைந்துள்ளது.

திருக்கோவில் அடிவாரத்தில் வைத்திய விநாயகர் சன்னதியும் ஸ்தலமரமாக 500 வருட பழமை வாய்ந்த நகப்பழமரமும் அதன் அடியே நாகர் அமர்ந்திருக்க அருகில் இடும்பன் சன்னதியும் யோகி அருளானந்த சுவாமிகளின் ஜீவசமாதியும் அவர்கென சன்னதியும் அதை "ஓம் கார மண்டபம் " என்று அழைகிறார்கள்.



இச்சன்னதியில் அமையாய் அமர்ந்து கேட்க ஓம் எனும் ஒலி கேட்பதை உணரலாம் .பின் சுமார் 50 நுட்பமாய் கருங்கல் மலையில் செதுக்கிய படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் திருமுருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக வரும் பக்தர்கள் குறைதீர்க்கும் குமரனாக அருள் புரிகிறார்.



முருகர் அழகுடன் அமர்ந்து அருள் தரும் அற்புதத்தை காண காஞ்சிக் கோவில் அருகிலுள்ள கனககிரி குமரன்மலை மலைக்கு வாருங்கள் .

வந்து தரீசனம் செய்து புதுப்பொலிவுடன் உருவாகிக் கொண்டிருக்கும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகள் தாருங்கள்.

ஓம் முருகா சரணம் முருகா ...


நட்புடன் ஆன்மீகத்தேடலில்

குரு.பழ.மாதேசு

Sunday, July 24, 2011

அழகாய் முடிந்த கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேக விழா



கக்குவாய் மாரீயம்மன் கும்பாபிஷேகம் :




ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur ) அரசமர வீதியில் அமர்ந்து ஆட்சி செய்யும்


அருள் நிறை கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில் (kakkuvai marriamman temple guruvareddiyur),அருள் நிறை சக்தி விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் (10.07.2011) ஞாயிற்றுக்கிழமை நாளில் விடியல் காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சரியாக 6.07 மணிக்கு மிதுன லக்கினத்தில் அமரர் திரு .G.G குருமூர்த்தி EX.MLA அவர்களின் ஆசியாலும்



ஊராட்சி மன்றத் தலைவர் திரு .தாயகம் சிவ நடராசன் அவர்கள் மற்றும் கொமராபாளையம் அங்கப்பன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்க திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க வேள்விப்பணியில் பவானியை சேர்ந்த சிவ .மாரியப்பன் மற்றும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.


பல சிவனடியார்கள் அடியார் பெருமக்களும், குருவரெட்டியூர் (guruvareddiyur) சுற்று வட்டார பெருமக்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர்.

விழா நாள் இரவு ஆடுதுறை அழகு பன்னீர் செல்வம் அவர்களின் பட்டி மன்றம் சிறப்பாக நடந்தது. அதில் பேசிய அனைவரும் நன்றாக பேசினார்கள் . தாரமங்கலம் செந்தில் அவர்கனின் சிரிப்பில் மயங்க வைத்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.


சிறியதாய் இருத்த கக்குவாய் மாரியம்மன் கோவிலை நேர்த்தியாக வடிவமைத்து கொடுத்த பொறியாளர் திரு. துரை.செல்வக்குமார் மற்றும் ஆலய சிற்பிகள் திரு.அத்தியப்பன்,திரு.வேலாயுதம், மற்றும் மங்கள இசை அமைத்த கொளத்தூர் அப்பு குழுவினர் அவர்களுக்கு கக்குவாய் மாரீயம்மன் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.


எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல திருக்கோவில் கட்ட தன் ஒரு வருட உழைப்பை அற்பணம் செய்த திரு. அருள்சண்முகம் ஜோதிடர்,ப.அர்ச்சுணன், செ.முத்துராமலிங்கம். ஆசிரியர் தங்கவேல் ,தனசேகர் மற்றும் பலருக்கும் வாழ்த்துக்கள் கூறி


குருவரெட்டியூர் (guruvareddiyur) என்னும் சிற்றூரில் கட்டப்பட்டிருக்கும் அருள் நிறை கக்குவாய் மாரீயம்மன் திருக்கோவிலுக்கு வந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கும்


குரு.பழ.மாதேசு, (guru.pala.mathesu)

குருவரெட்டியூர். (guruvareddiyur)

Tuesday, July 12, 2011

சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள்




சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள் :

1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்
2. பின் கொடிமரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும்(நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது)விழுந்து வணங்க வேண்டும் ,பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை.காமம் ,குரோதம் ,கோபம் போன்ற தீய குணங்களை அற்பணிக்க வேண்டும்

3.தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து )வணங்க வேண்டும் .

4.சிவனுக்கு பிடித்த வில்வம்,மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து நம " பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா " எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல் ,பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்


6.அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை ,துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்

8.நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்

9.அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஷ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)


11. த்திரயங்க நமஷ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும் . திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது.அர்சகர் கொடுக்கும் திருநீரு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.


இம்முறை பின்பற்றி இறைவன வணங்குங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.

இந்த இடுகையை பாராயணம் செய்த

உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டி விரும்பும்

குரு.பழ.மாதேசு

Friday, July 1, 2011





அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க நடைபெற உள்ளது .

அனைத்து ஆன்மிக பெருமக்களும் ,பொது மக்களும் வருகை தருமாறு அழைக்கப்படுகிறது. விழா அன்று காலை 09.00
மணிக்கு அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருக

Tuesday, June 28, 2011

இறைவழிபாட்டில் தீபங்கள் ஏற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்கள்


இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்





இலுப்பை எண்ணெய்- ஆரோக்கியம்,

நல்லெண்ணைய்- எமபயம் போக்கும்
நெய் தீபம்-ஞானம் ஏற்படும் .
விளக்கெண்ணெய் தீபம்- சகல சம்பத்தும் கிட்டும் .

தீபங்கள் அனைத்திற்கும் பருத்தி நூல் திரி ஏற்றுதல் சிறப்பாகும்.

வெண்கல விளக்கில் தீபமேற்றினால் - வீரிய விருத்தி .நாள்தோறும் சிவாலயங்களில் தீபமேற்றுவதன் மூலம் எல்லா நன்மைகளும் பெறலாம்.
சனிக்கிழமைகளில் இரும்பு அகலில் தீபம் ஏற்றினால் சனி ப்ரிதி உண்டாகும்.

இறைவனுக்கு தீபம் ஏற்றுங்கள் எல்லா வளங்களும் பெறுங்கள்.

தோஷப்பரிகாரமும் இறைவனுக்கு இட வேண்டிய தீபங்களின் எண்ணிக்கையும்


ஜாதக தோஷங்கள் நீங்க இறைவனுக்கு ஏற்ற வேண்டிய தீபங்கள் :-



சனிஸ்வர தோஷம் 9 தீபங்கள் ,

துர்க்கை அம்மனுக்கு 9 தீபங்கள்,

ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள் ,

ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள்
,
திருமண தோஷம் நீங்க -21 தீபங்கள்
,
காலசர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள்,

குரு தோஷம் நீங்க -33 தீபங்கள் ,

சர்ப்ப தோஷம்-48 தீபங்கள் ,

புத்திர தோஷம் நீங்க -51 தீபங்கள்


,களஷ்திரதோஸம் நீங்க- 108 தீபங்கள்

Thursday, June 23, 2011

அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம் ,சித்தோடு. ஈரோடு மாவட்டம் Arulmigu MANGALAMPIGAI & MATHESWARAR temple history chithode ,erode district






அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம்



ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் (chithode) அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும் .சித்தோடு நான்கு ரோடு சந்திப்பில் சித்தோட்டில் இருந்து பவானி செல்லும் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும்.இங்கு மூலவராக மாதேஸ்வரர் அமைந்துள்ளார் .அருகே மங்களாம்பிகை சன்னதி உள்ளது.


இங்கு குரு,லிங்கபத்மர் ,பிரம்மா,சனிஸ்வரர், துர்க்கை அம்மன்,காலைபைரவர் சன்னதிகள் உள்ளது. சிவராத்திரி பிரதோஷ பூஜைகள் சிறப்பாக செய்யப்படுகின்றது.

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு காலை 11.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கோவில் அமைவிடம் சிறியதாக இருப்பினும் அழகாக இருக்கிறது.


ஈரோட்டில் இருந்து 8 கி.மிட்டர் தொலைவில் இருக்கும் சித்தோட்டிற்கு நீங்களும் வந்து

அருள்மிகு மாதேஸ்வரர் ,மங்களாம்பிகை

(arulmigu matheswarar & mangalampigai temple)

அருள்பெற்று செல்லுங்கள் .

நன்றி

அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில் ,காஞ்சிக்கோவில் பெருந்துறை வட்டம். arulmigu SEEDEVI ammpal thirukkovil. kanjikovil , perundurai taluk






அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் (erode district) பெருந்துறை வட்டம் (perundurai taluk)காஞ்சிக்கோவிலில் (kanjikovil) எனும் ஊரில் அமைந்துள்ள அற்புத ஆலயமாகும் . காஞ்சிக் கோவிலுக்கு ஈரோட்டில் இருந்து சுமார் 16 கி.மீட்டரும் சித்தோட்டில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத ஆலயமாகும். ஆலய முகப்பில் பெரிய அரசமரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது.

வருடம் ஒரு முறை குண்டத்திருவிழா நடைபெறுகிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால் கொடிமரம் வணங்கி விட்டு சிம்ம வாகனம் தரிசித்து மூலவரான சீதேவியை அழகிய தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி வீரமாத்தி ,குப்பண்ணசாமி ,முனியப்பன் ஆகிய சன்னதிகள் தரிசனம் செய்யலாம்.

ஸ்தல விருட்சமாக இலந்தை மரம் இருப்பது சிறப்பான ஒன்றாகும். அருகில் பக்தர்கள் தண்ணீர் வசதிக்காக திருக்கோவில் உள்ளே கிணறு உள்ளது. பெரிய குதிரை வாகனம் உள்நுழையும் போது அழகாய் நம்மை வரவேற்கிறது.

பழங்கால கோவில் தரிசனம் நிறைவாக இருக்கிறது. திருக்கோவில் மண்டபம் கட்ட சக்தி மசாலா குழுமத்தினர் பெருளுதவி அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

சீதேவி அம்பாள் தரிசனம் பெற காஞ்சிக்கோவில் வந்து செல்லுங்கள்.

வளங்கள் கூடட்டும் .
மேலும் தகவல்களுடன் இவ் இடுகை நீட்டிக்கப்படும்.
நன்றி

Tuesday, June 21, 2011

அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில், தொப்பபாளையம் ,குருவரெட்டியூர். ARULMIGU IRUSI AMMAN TEMPLE HISTORY ,THOPPA PALAYAM (guruvareddiyur )




அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில்


ஈரோடு (erode ) மாவட்டம் பவானி வட்டம் (bhavani taluk )அம்மாபேட்டையில் (ammapet )இருந்து 10கி.மீட்டர் தொலைவில் குருவரெட்டியூரில் (guruvareddiyur)இருந்த 1கி.மீட்டர் தொலைவில் தொப்பபாளையம் (thoppapalayam)எனும் சிற்றூரின் வனத்தில் அமைந்துள்ளது.

திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது, இங்குள்ள வனத்தில் இருசியம்மன் மூலவராக அமைந்து பக்தர்களுக்கு அருள் தரும் அம்பிகையாக அமைந்துள்ளது ஓர் சிறப்பாகும்.

இருசியம்மன் அந்தியூரில் (anthiyur) அமைந்துள்ள சின்ன குருநாதசாமிக்கும் வெள்ளித்திருப்பூரில் (vellitirupur) அமைந்திருக்கும் பெரிய குருநாதசாமிக்கும் சகோதரி முறையிட்டு அழைப்பார்கள்.

தொப்பபாளையத்தில் அமைந்துள்ள இருசியம்மன் கோவிலில் மல்லியம்மன் ,வீரகாரகன்,வீரபத்திரன் இடும்பன் ஆகிய சிலைகள் தரிசனம் பெறலாம். வைகாசி மாதத்தில் வருடம் ஒரு முறை வனத்தில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அப்போது தொப்பபாளையத்தில் இருந்து இருசியம்மனுக்கு மகா தேர் கட்டி வனத்திற்கு அழைத்து வருவதுண்டு.

இரட்டை தேரில் குருவரெட்டியூர் பகுதி மக்களை அழைத்து ஓரு தேரை இழுக்க வைத்து வனத்திற்கு இருசியம்மனை காலம் காலமாக நடந்து வரும் மரபாகும்.மற்றொரு தேர் தொப்பபாளையம் ஊர் மக்கள் இழுத்து வந்து வனத்தில் இருசியம்மனை அலங்கரித்து பூஜை நடைபெறுகிறது. இக்கோவில் பூச்சாட்டின் போது தொப்ப பாளையம் வனத்தில் உள்ள எமதர்மராஜாவுக்கும் பூச்சாட்டுதல் மற்றும் விழா தொடங்கும்.


அருள்மிகு இருசியம்மனுக்கு வார பூஜையாக வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு நடைபெறும். வனத்தில் கட்டுவர்த்தனை பூஜையாக ஞாயிறு மதியம் 12.00மணி அளவில் நடைபெறுகிறது. தொப்பபாளையம் வாருங்கள்

அருள்மிகு இருசியம்மன் அருள் பெற்று எல்லா வளமும்

நலமும் பெற வாழ்த்துக்கள்

நட்புடன் குரு.பழ.மாதேசு

by.guru.pala.mathesu

Saturday, June 18, 2011

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில், பவானி Arulmigu palani ahandavar thirukkovil. Bhavani




முருகர் துதிப்பாடல் ;

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு,
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் ,
செந்தமிழ்தநூல் விரித்தோனை விளங்கு,
வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக்,
கார்மயில் வாகனைச் சாந்துணைப் போதும் மறவா தவர்கொரு தாழ்வில்லையே..!

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மத்தியில் பவானி அஞ்சல் அலுவலகம் அருகிலும் ராணா திருமண மண்டபம் அருகில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகிலும் பவானி பழைய பஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முருகருக்கு என பவானி நகரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.கோவில் நுழைவாயிலில் வலப்புறமுள்ள ஆனைமுகத்தோன் கணபதியை வணங்கி விட்டு இடப்புறமுள்ள ஐயப்பனை வணங்கி திருக்கோவில் உள்ளே சென்றால் வெளிப்பிரகாரத்தில் அழகிய கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரம் சென்றால் வலப்புறம் அருள்மிகு பொன்னம்பலவாணரை தரிசித்து இடப்புறம் சிவகாமி அம்மாள் திரு உருவங்களை தரிசித்து திருக்கோவில் மூலவரான அருள்மிகு பழனி ஆண்டவரின் தரிசனம் கிட்டுகிறது.



நின்றவாறு வேலுடன் காணப்படும் முருகப்பெருமான் அழகு கம்பீரமானது. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கும் அற்புதமான ஆலயமாக பழனி ஆண்டவர் தரிசனம் இருக்கும் என்பது திண்ணம்.

திருக்கோவிலின் உள்ளே வீரமுத்துக்குமாரசாமி, பிரம்மா, இடும்பன் துர்க்கை, நவநாயகர்கள் காலபைரவர் என திருக்கோவில் சுற்றி வரும் போது தரிசனம் செய்யலாம். தமிழக அறங்காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்படும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

பெளர்ணமி, கிருத்திகை ,அமாவசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் பார்க்க வேண்டிய ஆலயமாகும்.

கூடுதுறை பவானிக்கு வரும்போது தரிசித்து விட்டு மெயில் செய்யுங்ஙள்.

நன்றி

Sunday, June 12, 2011

ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள் erode district important places,temples,dam ,tourist places





ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள்

1.அருள்மிகு சங்கமேஷ்வரர் ஆலயம் கூடுதுறை பவானி
2.அருள்மிகு வேதகீரிஷ்வரர் ஆலயம் ஊராட்சிக்கோட்டை
3.அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்,பண்ணாரி சத்தியமங்கலம்
4.சமணர் கோவில் விஜயமங்கலம்
5. வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் அதைச்சுற்றியுள்ள கோவில்கள்
6. அருள்மிகு சென்னிமலை முருகர் திருக்கோவில் (கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட ஸ்தலம் ,அருணகிரியார் பாடிய ஸ்தலம்,பிண்ணாக்கு சித்தர் குகை உள்ள இடம்)
7.சீனாபுரம் முருகர் கோவில்
8. துடுப்பதி பெருமாள் கோவில்
9. பாலமலை சித்தேஷ்வரர் திருக்கோவில்
10.அருள்மிகு நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் (சாவடி பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள அகத்தியரால் பாடல் பெற்ற ஸ்தலம்)
11.தம்பிக்கலை அய்யன் திருக்கோவில்
12. திண்டல் முருகர் கோவில்
13.கொடிமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில்
14. பாரியூர் கொண்டத்து காளியம்மன் ,அமர பரணிஷ்வரர் திருக்கோவில்
15.பவளமலை முருகர் கோவில்
16. வட்டமலை முருகன் கோவில்
17. திங்களுர் அப்பிச்சிமார் மடம் ( புஷ்ப நந்த தீர்த்தங்கரர் சமணக்கோவில்)
18.அருள்மலை முருகன் திருக்கோவில் திங்களூர் ( நஞ்சைய புலவரால் 1,000 திருப்புகழ் பாடிய இடம் )
19.அருள்மிகு நாட்டராயன் திருக்கோவில் ,வள்ளியரச்சல்
20.ஆதிநாதர் சமணக்கோவில், மமுட்டித்தோப்பு
21 அருள்மிகு தவளகிரி முருகன் கோவில் ,சத்தியமங்கலம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வெண் குன்று
22. சிவன்மலை முருகர் திருக்கோவில்
23.அந்தியூர் குருநாதசாமி திருக்கோவில்

ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் , &அணைகள் :

1. பவானிசாகர் அணைக்கட்டு (மண்ணால் கட்டப்பட்ட அணை )
2.கொடிவேரி அணைக்கட்டு
3. குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு
4. வரட்டுப்பள்ளம் அணை
5.வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
6.பழமங்கலம் நடுகல்லில் பாடல் பொறிக்கப்பட்ட தென்னகத்தின் ஒரே நடுகல்
7.ஈரோடு அண்ணா ,பெரியார் நினைவகம்
8.ஈரோடு வ.உ.சி பூங்கா& அரசு அருங்காட்சியகம்
9.ஒடா நிலை தீரன் சின்னமலை நினைவு மண்டபம்
10.சமண முனிவர் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டின் இசைக்கல்வெட்டுள்ள அறச்சலூர் மலை 11 காலிங்கராயன் கி.பி 1282 ல் கட்டிய காலிங்கராயன் அணைக்கட்டு

Sunday, June 5, 2011

ரஜினி (RAJINI) என்றோர் மந்திரச்சொல்

ரஜினி என்றொரு மந்திரச்சொல் சுறுசுறுப்பின் இலக்கணம் . கோடிக்கணக்கில் பணம் இருந்தும் ,உடைகளில் பழக்கவழக்கங்களில் எளிமை. இப்படி ரஜினிகாந்த் ( RAJINIGANTH) பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய செய்தி. ரஜினிகாந்த்க்கு என்னவாயிற்று ..! என ரஜினிகாந்த் ரசிகர்களும், ஆன்மீகவாதிகளும் பெரியோர்களும் ,மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை சற்றே அசைபோடுகையில் ஈஸ்வரர் மேல் அளவுகடந்த பக்தியை சற்றே கூர்ந்து பார்த்தால் அறிய முடியும். .திருவண்ணாமலை என்றால் அண்ணாமலையாரையும் உண்ணாமலையம்மன், ரமண மகரிசி ஆகியோரைப்பற்றி மட்டுமே தெரிந்திருந்த தமிழக மக்களுக்கு அண்ணாமலையாரின் சூட்சம சக்தியை ,கிரிவலத்தின் மேன்மையை ,கிரிவலத்தில் நடந்துபோக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்காக கிரிவலப்பாதையில் மின் விளக்கிட்டு கொடுத்த அகல்விளக்கு திரு. ரஜினிகாந்த் ஆவார். அண்மையில் நடந்த திருவண்ணாமலை தீபம் கார்த்திகை 2010 ல் அண்ணாமலையாருக்காக ஏதேனும் செய்து தர வேண்டும் என விரும்பி ராட்சத ஒளிவிளக்குகள் வசதி செய்து திருவண்ணாமலையின் உள்பிரகாரங்கள் கோபுரங்கள் ,வீதிகளை அழகாக்கியவர் நடிகர் ரஜினிகாந்த். திருவண்ணாமலையின் பெருமைகளை யோகிராம் சுரத்குமார் அவர்களைப்பற்றி நிறைய சொல்லிருக்கின்ற அடிக்கடி வந்து செல்கின்ற எழுத்துச்சித்தர் பாலகுமாரன், இளையராஜா ஆகியோரும் பாரட்டிற்குரியவர்களே. ரஜினி அவர்களின் ஒயாத உழைப்பிற்கு ஓய்வு தேவை. அதன் பொருட்டே அவர் உடல் நிலையில் சற்றே பாதிப்பு . அண்ணாமலையாரின் அருளால் அவர் இந்த சிறுபிணியில் இருந்து மீண்டு (ம்) வருவார். நல்லதொரு ஒய்வுக்குபின் ரஜினிகாந்த் அவர்களால் ஆன்மீகத்திற்கும் ,பொதுவாழ்விற்கும், ரசிகர்களுக்கும் தமிழகத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். நல்லா குணமாகிட்டு சீக்கிரம் வாங்க தலைவா ...!

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோவில் தொப்ப பாளையம் ( thoppa palayam )








அருள்மிகு எமதர்மராஜா திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து 10 கி.மீ ல் உள்ள குருவரெட்டியூருக்கு மேற்கே 2 கி.மீட்டரில் உள்ள தொப்பபாளையம் எனும் ஊரின் வனத்தில் அமைந்துள்ளது.இங்கு மூலவராக எமதர்மராஜா அமைந்துள்ளார். இக்கோவிலை ஏமராசா என்றும் எமராசா என்றும் இப்பகுதியில் அழைக்கின்றனர்.

திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது. கோவிலின் ஸ்தலமரமாக 700 ஆண்டு பழமையான புளியமரம் அமைந்துள்ளது.இதன் அருகே வன்னி மரமும்,ஆலமரமும் மற்றும் பல மரங்களுடன் அமைதியான சூழழில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஏமதர்மராஜா கோவிலின் உள்ளே இருசியம்மன் ,இடும்பன் வீரகாரகன் குருநாதசாமி, மல்லியம்மன் ,ஐயனாரப்பன் சன்னதிகள் உள்ளது.முக அமைப்பில் இது குருநாதசாமி கோவில் போன்ற அமைப்பு உள்ளதால் இது குருநாத சாமியின் சார்புடைய கோவிலாக கருதலாம்.இங்கு பேய் பிடித்து அவதிப்படுபவர்களுக்கும் செய்வினை ,எதிரிகள் தொல்லைகளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பிரதி வெள்ளிக்கிழமை இரவு 8.00மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது .வருடத்தின் ஜீன் மாதத்தின் முதல் வாரத்தில் சார்பு கோவிலான இருசியம்மன் கோவில் உடன் எமதர்மராஜா கோவிலும் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.அமாவசை அன்று மதியம் 1200 வரும் பக்தர்களுக்காக கற்பூர ஆராதனைபூஜை செய்யப்படுகிறது.

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிலை,பாக்கு பழம் இரும்பு விழங்கு ஆரியவைகள் தலா 1 மற்றும் பெற்று கட்டுவர்த்தனை பூஜை செய்கிறார்கள்.இங்கு பச்சை பூஜை நம் காரியம் நிறைவேற வேண்டி, வேண்டுதல் நடந்தவர்களுக்கும், சாந்திபூஜை என்பது நமக்கு துன்பம் செய்யும் எதிரிகளை அமைதிப்படுத்தும் பூஜையாக வரும் பக்தர்களுக்காக செய்யப்படுகிறது.

கை,கால் வராமல் படுத்த படுக்கையாக கிடந்த நோயளிகள் கூட இங்கு வந்து சரியானதுண்டு.

நீங்களும் வந்து வணங்கி விட்டு உங்கள் கருத்துகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

Saturday, June 4, 2011

அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் .பாலமலை அடிவாரம் கரடிப்பட்டியூர் ,குருவரெட்டியூர்









பாலும் தெளிதேனும் பாகும்பருப்புமிவை நாளும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்க கரிமுகத்து தூமானியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும்தா -

ஔவையார்


அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில்,

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை வழியாக குருவரெட்டியூரில் இருந்து கரடிப்பட்டியூர் சென்று அங்கிருந்து பாலமலை சித்தேஷ்வரர் மலைக்கு செல்லும் அடிவாரத்தில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

பாலமலையின் இயற்கை சாரலில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயமும் பிரமாண்ட அரசமரமும் அழகானது,சுத்தமான காற்றும் இயற்கையின் தாலாட்டும் மிக்க ஓர் அருமையான ஆலயமாகும்.

கோவில் பின்புறம் இடப்பக்கமாக பாம்பு புற்று உள்ளது. புரட்டாசி மாதத்தில் சித்தேஷ்வரரை வழிபட பாலமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த அடிவார சித்தி விநாயகரை தரிசனம் செய்தும் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம்.

புரட்டாசி 3வது,4வது சனிக்கிழமைகளில் சித்தி விநாயகருக்கு பெரும்பூஜை செய்து அன்னதானத்தை சில ஆன்றோர்கள் செய்வது வழக்கம். குருவரெட்டியூரில் இருந்து ( 3கி.மீ ) அவ்வப்போது வந்து பக்தர்கள் சித்தி விநாயகரை வழிபடுவதுண்டு.

அருகில் கரடிப்பட்டியூர் ஏரி உள்ளது. மற்ற நாட்களில் கூட்டம் இருக்காது என்றாலும் அமைதியான அழகான மலைப்பாங்கான தூய்மையான இடத்தில் இருக்கும் சித்திவிநாயகரை ,அருகே சுதகையில் உள்ள அடிவார சித்தேஷ்வரரையும் வணங்குகள்,

உங்கள் காரியம் " சித்தி " அடையும் நம்புங்கள்.

Friday, June 3, 2011

குருவரெட்டியூர் (Guruvareddiyur)




GURUVAREDDIYUR VILLAGE ,


ANTHIYUR TALUK ,ERODE DISTRICT  


குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR) எனும் இலிப்பிலி கிராமம் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியமாகும்.

வடகிழக்கில் பாலமலை எனும் சித்தேஷ்வரமலையும் கிழக்கில் அம்மாபேட்டையும் (10கி.மீ) தெற்கில் பூனாச்சி (5கி.மீ) மேற்கில் அந்தியூர் வனப்பகுதியும் வெள்ளித்திருப்பூர்(7கி.மீ) வடக்கில் கொளத்தூர் (30கி.மீ) என எல்லைப்பகுதிகளாக கொண்ட சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஒர் அழகிய ஊராகும்.

குருவரெட்டியூரில் (guruvareddiyur) கக்குவாய் மாரியம்மன் செல்வ விநாயகர் ,ஈஷ்வரன் கோவில் ,சக்தி மாரியம்மன் கோவில் மற்றும் ஊரின் முகப்பில் உள்ள அக்னி மாரியம்மன் கோவில்,நாகர்கோவில்,மதுரைவீரன் ஆகிய திருக்கோவில்கள், குறிப்பிடத்தக்கதாகும். இங்கு முதலியார்,ரெட்டியார்,கொங்கு வெள்ளாளக்கவுண்டர்கள், படையாட்சி கவுண்டர்கள் வேட்டுவக் கவுண்டர்கள் இனத்தைச்சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி (GURUVAREDDIYUR G .H. S.SCHO0L) பழமை வாய்ந்த புகழ்பெற்ற இருபாலர் பயிலும் பள்ளியாகும்.கண்ணாமூச்சி,கொளத்தூர் செல்லும் வழியில் குருவரெட்டியூர் அரசு மருத்துவமனை உள்ளது. விரிவாக்கப்படும்.

குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR)அருகில் பொரவி பாளையத்தில்(PORAVIPALAYAM) பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவிலும் ( 3 கி.மீ ) தொப்பபாளையத்தில்(THOPPAPALAYAM) உள்ள ஏமராசா,இருசியம்மன் (2கி.மீ),வெள்ளித்திருப்பூர் (VELLITHTHIRUPUR) அருகிலுள்ள பளிங்கிஷ்வரர் ஆலயம் (5கி.மீ),மற்றும் கோனார்பாளையத்திலுள்ள (konarpalayam)கருப்பணசாமி,ஆஞ்சநேயர் கோவில்ஆகிய கோவில்கள் பிரசித்தி பெற்றவை.


 GURUVAREDDIYUR ERODE DISTRICT


அருகிலுள்ள பாலமலை அடிவார சித்தி விநாயகர் கோவில்,

7 மலை தாண்டியுள்ள சித்தேஷ்வரர் மலையும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

Sunday, May 29, 2011

சிவாலயத்தின் காலபைரவர் வழிபாடு




காலபைரவர் துதி :

விரித்த பல்கதிர் கொள்சூலம் வெடிபடு தமருகம் கை, தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகிவேழம், உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச், சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரை. . -திருநாவுக்கரசர் .

சிவாலயத்தில் உள்ள காலபைரவரை தேய்பிறை அஷ்டமி திதியில்

வணங்குபவர்களுக்கு மூலம் கடன்,திருமணத்தடை,
மனநிலை பாதிப்பு, புத்திரபாக்கியதடை போன்ற குறைபாடுகள் நீங்கி

எல்லா வளமும் நலமும் பெறுவார்கள்.

குருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு





குருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு :

குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ;

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பலாய்,
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்,
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத் தொடக்கை வெல்வாம்.

திருவிளையாடற்புராணம்.

ஆலமர் எனச் சொல்லக்கூடிய குருபகவானை மேற்கண்ட துதியை பாராயணம் செய்து வழிபடுபவர்களுக்கு குருபகவானை கல்வி,ஞானம். போன்றவற்றை தருவார் என்பது கண்கூடு.

குருபகவான் பற்றி உப தகவல்கள் ;

1.குணம் ;ஆண். 2. பதவி ;அமைச்சர் மந்திரி 3.திசை ;ஈசான்யம் 4.உலோகம் ;சிலேத்துமம் .நகை,பொன் ,தங்கம் 5.உணவு ;கடலை 6.தூயதீபம் ;ஆம்பல் 7.மலர்கள் ;முல்லை மலர்,புஷ்பராகம் 8.வாகனம் ;யானை 9.வலிமை ;பகல் நேரம் 10.உறுப்பு ;வயிற்றுப்பகுதி 11.சுவை ;இனிப்பு 12.வடிவம் ; நீள்சதுரம் 13.ஜாதி-பிராமணர் 14.உடலமைப்பு -உயரமானவர் 15.கடவுள் - பிரம்மா16.மொழி -கன்னடம், தெலுங்கு17.நாடி -வாத நாடி.18. நிறம்-மஞ்சள் மேற்கண்ட 18 ம் குரு தட்சிணாமூர்த்தி ஆட்சி செய்பவை அல்லது பிடித்தவை ஆக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

ஜாதகத்தில் குருபகவான் ; -

ஜோதிடத்தில் குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 பார்வையாக பார்ப்பதாக கூறுகிறது. "குரு பார்த்தால் கோடி நன்மையுண்டு" என்பது பொது விதியாகும்.

சிவாலயத்தில் சிவனுக்கு வலப்புறம் இருக்கும் குரு பகவான் எனப்படும் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை,கொண்டைக்கடலை மாலை கோர்த்து முல்லைப்பூ அணிவித்து நேருக்கு நேராக நின்று வழிபடுங்கள்.

திருமணம் போன்ற சுபகாரீயங்கள் குரு அருளால்தான் நடைபெறுகிறது.

உங்கள் வாழ்வில் ஏற்றம் பெற வியாழக்கிழமையில் குருஓரையில் சிவாலய தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

எல்லா வளமும் நலமும் பெறுங்கள் நன்றி

Thursday, May 19, 2011

அருள்மிகு வேதநாயகி அம்மன்(sri vethanayaki amman and sangameswaran temple. thirunana bhavani temple history ) உடனமர் சங்கமேஸ்வரர் சன்னதி பாகம் 2 ( திருநணா ) பவானி





அருள்மிகு வேதநாயகி அம்மன் சன்னதி

(sri vethanayaki amman temple )


ஈரோடு (erode) மாவட்டம் பவானியில் (bhavani) காவிரிஆறும் (kaveri river ), பவானி ஆறும் ( bhavani river) சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அம்பாள் சன்னதியாகும்

கூடுதுறை (kududurai) என்றும் சங்ககாலத்தில் "திருநணா " என்றும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் இறைவியின் திருக்கோலம் அழகானதாகும். சங்கமேஸ்வரரை பற்றி முன்பே இடுகையில் எழுதப்பட்டுள்ளதால் இந்த இடுகையில் அம்மனின் அற்புதங்களை காண்போம்.

சங்கமேஷ்வரர் ஆலயத்தில் உள்ள வேதநாயகி அம்மன் ஆலயத்தில் தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளும் அழகானதாகும். குறிப்பாக உள் சிற்ப வேலைப்பாட்டில் " சிரிக்கும் சிலை" பெண் உருவத்தில் நாம் பார்க்கும்போது நம்மைப்பார்த்து சிரிக்கும் சிலையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கி.பி 1804 ல் கோவை மாவட்ட கலெக்டாராக இருந்தவர் சர் வில்லியம் கேரோ ((villiam kero) (தற்போது பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையாக கோவிலுக்கு வெளியே உள்ளது) இக்கட்டிடத்தில் தங்கி இருந்தார்.

ஒருநாள் இரவு பலத்தமழை கொட்டியது. பலத்த மின்னலும் இடியும் இடிக்க பவானி நகரமே அதிர்ந்து .நள்ளிரவு தாண்டியும் இடியும் மழையும் பவானியை நனைக்க கலெக்டர் சர் வில்லியம் கேரோ உள்ளே ஒய்வில் இருந்தார்.

அப்போது கலெக்டர் தங்கி இருந்த அறை கதவு படபடவென சத்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்த கலெக்டர் கேரோ ஒர் சிறுமி நிற்பதைக்கண்டு ஆச்சர்யமாகி பார்க்க அச்சிறுமி அவர் கையை பற்றி இழுத்து அவர் தங்கி இருந்த கட்டிடத்தின் வெளியே கூட்டி வந்து நிறுத்தியது.

ஏதோ சொல்லப்போகிறது இந்த சிறுமி என்றவாறு வியப்புடன் வந்த கலெக்டர் கேரோ என்னவென்று கேட்ட வேளையில் கலெக்டர் கேரோ தங்கி இருந்த மாளிகை இடிந்து விழுந்து சுக்கு நூறாகிப்போனது. அதைப்பார்த்த கலெக்டர் கேரோ அதிர்ந்து பயந்து கூச்சலிட்டவாறு நிற்க மழையும் நின்றிருந்த குளிர்வேளையில் சிறுமிக்கு நன்றி சொல்ல திரும்பி பார்த்த போது அச்சிறுமியை காணவில்லை.

கலெக்டரின் சப்தம் கேட்டு காவலர்களும் அக்ரகாரத்தின் கோவில் அய்யர்களும், சிவனடியார்களும் கூடிவிட கலெக்டரிடம் விபரம் கேட்க அவர் தன்னை ஓர் சிறுமி வந்து காப்பாற்றியதை ஆச்சர்யத்துடன் சொன்னார். கோவில்குருக்களுக்கு புரிந்தது .இது வேதநாயகி அம்மன்தான் சிறுமியாக வந்து உங்களை காப்பாற்றியது எனச்சொல்ல அப்படியா ..?

எனக்கேட்ட கலெக்டர் அப்படி எனில் அச்சிறுமியை பார்க்க வேண்டும் எனக்கூற அவர் ஆலயத்தில் நேரில் தரிசனம் வேண்டாம் பக்கவாட்டில் துளையிட்டு காண்பியுங்கள் எனச்சொல்ல அடுத்த நாள் வேதநாயகி அம்மன் சன்னதியில் இடப்பக்கம் மூன்று துளையிட்டு ( இத்துளை இன்றும் உள்ளது ) அம்பாள் திருஉருவம் காட்டப்பட்டது.


அதைப்பார்த்த ஆங்கிலேய கலெக்டர் சர் வில்லியம் கேரோ தன்னைக்காப்பாற்றிய சிறுமியின் உருவத்தில் வேதநாயகி அம்மனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்து. உங்கள் கடவுளின் அருட்பார்வை பெரியது நான் ஏதேனும் வேதநாயகி அம்மனுக்கு பரிசாக தர விரும்புகிறேன்.

கோவிலுக்கு வேண்டிய ஏதேனும் ஒன்றைகேளுங்கள் எனக்கூற அதற்கு கோவில் குருக்கள் வேதநாயகி அம்மன் உற்சவர் ,சங்கேmaஸ்வரர் உற்சவர்களுக்கு "ஊஞ்சல் தொட்டில்" தர ஆவணம் செய்யுமாறு கேட்க, அதைக் தொடர்ந்து கலெக்டர் அழகான ஓர் ஊஞ்சல் தொட்டில் தந்தத்தினால் நேர்த்தியாக தயார் செய்து அன்புப் பரிசாக வேதநாயகி அம்மனுக்கு பரிசாக தன் கையொப்பம் இட்டு கி.பி 11.01.1804 தந்தார்.

அவர் தந்த தந்ததினாலான உஞ்சல் தொட்டில் இன்றும் உள்ளது வேதநாயகி சன்னதியில் உள்ளத சிறப்பாகும்.

இரவு பள்ளியறை பூஜை முடிந்ததும் அருள்மிகு சங்கமேஸ்வரர் ,வேதநாயகி அம்மன் உற்சவர்கள் ஆங்கிலேயக் கலெக்டரால் தரப்பட்ட ஊஞ்சல் தொட்டிலில் வைத்து ஆராதிப்பது விஷேசமாகும்.

இன்றும் உள்ள இந்த உஞ்சல் தொட்டில் வேதநாயகி அம்மன் சன்னதியின் இடப்புறம் உள்ளது.

தமிழ் மாதத்தின் முதல் நாள் திருமணம் ஆகாத ஆண்,பெண்களுக்கு சிறப்பு பூஜை காலை 0600 முதல் 0800மணிவரை நடைபெறுகிறது.

3மாதம் தொடர்ந்து பலவகையான பழங்கள்,இரண்டு மாலைகளுடன் ஜாதகத்துடன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தால் திருமணம் தடையின்றி நடைபெறுகிறது.

பவானிக்கு வாருங்கள் வந்து தரிசித்து

அருள்மிகு வேத நாயகி அம்மன் அருள் பெற்றுச் செல்லுங்கள்.

அன்புடன்

குரு.பழ.மாதேசு.

Wednesday, May 11, 2011

ஸ்ரீ அக்னி மாரியம்மன் திருக்கோவில்.,ஆணைக்கவுண்டனூர்,குருவரெட்டியூர் பவானி வட்டம் sri agni mariamman tirukkovil ahanai goundanur, guruvareddiyur, bhavani t.k








ஸ்ரீ அக்னிமாரியம்மன் திருக்கோவில்

பவானி வட்டம் அம்மாபேட்டை யில் இருந்து குருவரெட்டியூர்க்கு முகப்பில் ஆணைக்கவுண்டனூரில் அமைந்த ஒர் அற்புதமான ஆலயமாகும்.

புதன் கிழமை தோறும் இரவு 7 மணிக்கு அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இரண்டு வருடத்திற்கு ஒர் முறை வைகாசி மாதத்தில் திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அலை மோதும். பக்தர்கள் பலரும் வேண்டுதல் நிறைவேறி ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடனை நிறைவு செய்வார்கள்.

திருவிழா அன்று இரவு பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெறும். திருக்கோவில் நிர்வாகத்தால் திருமண மண்டபம் குறைந்த வாடகையில் கொடுக்கப்படுவது சிறப்பு ,திருவிழாவின் முடிந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கம்பம் பிடுங்கியவுடன் ஊர் அருகில் உள்ள சந்திரா மணத்துக்கிணற்றில் கம்பம் இறக்கப்படும். இதன் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. ஆலயத்தின் அருகில் பிரமாண்ட ஆலமரம் அமைந்துள்ளது.

அமாவசை,பவுர்ணமி நாட்களில் விஷேசபூஜைகள் நடைபெறுகிறது.பார்க்கவேண்டிய ஆலயம். இறைவியிற் அற்புதங்ஙள் எண்ணிலடங்காதவை. திருக்கோவில் பிரசாதமாக வெண்திருநீரு தரப்படுகிறது . திருவிழா காலங்களில் கிராமியக்கலையான "கூத்து" இங்கு நடைபெறும்.

அவ்வப்போது இராமாயணம் ,மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வெண்திரையில் மக்களுக்கு காண்பித்து ஆன்மீக எழுச்சியை உருவாக்குகிறார்கள் . அதற்கு உதவும் ஆணைக்கவுண்டனூர் காவலர் சீனிவாசன் பாரட்டுக்குரியவர்.

உங்கள் குறைகளை அம்பிகையிடம் நம்பிக்கையுன் வைத்து வழிபடுங்கள் . நல்லது பலதும் நடக்கும்.

மேலும் திருக்கோவில் வரலாறு விரிவு செய்யப்படும்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...