Monday, July 25, 2011

Arulmigu balathantayuthapani temple,kanjikovil,perundurai


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவிலில் இருந்து நசியனூர் செல்லும் வழியில் 1 கி.மீட்டரிலும் நசியனூரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் கனககிரி குமரன் மலை என்னும் இடத்தில் அழகிய குன்றில் அமர்ந்துள்ள அற்புதமான முருகர் ஆலயமாகும்.



அருகில் கொங்கு வேளாளர் மெட்குலேசன் பள்ளி அமைந்துள்ளது.

திருக்கோவில் அடிவாரத்தில் வைத்திய விநாயகர் சன்னதியும் ஸ்தலமரமாக 500 வருட பழமை வாய்ந்த நகப்பழமரமும் அதன் அடியே நாகர் அமர்ந்திருக்க அருகில் இடும்பன் சன்னதியும் யோகி அருளானந்த சுவாமிகளின் ஜீவசமாதியும் அவர்கென சன்னதியும் அதை "ஓம் கார மண்டபம் " என்று அழைகிறார்கள்.



இச்சன்னதியில் அமையாய் அமர்ந்து கேட்க ஓம் எனும் ஒலி கேட்பதை உணரலாம் .பின் சுமார் 50 நுட்பமாய் கருங்கல் மலையில் செதுக்கிய படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் திருமுருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக வரும் பக்தர்கள் குறைதீர்க்கும் குமரனாக அருள் புரிகிறார்.



முருகர் அழகுடன் அமர்ந்து அருள் தரும் அற்புதத்தை காண காஞ்சிக் கோவில் அருகிலுள்ள கனககிரி குமரன்மலை மலைக்கு வாருங்கள் .

வந்து தரீசனம் செய்து புதுப்பொலிவுடன் உருவாகிக் கொண்டிருக்கும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகள் தாருங்கள்.

ஓம் முருகா சரணம் முருகா ...


நட்புடன் ஆன்மீகத்தேடலில்

குரு.பழ.மாதேசு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...