
அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில்
ஈரோடு (erode ) மாவட்டம் பவானி வட்டம் (bhavani taluk )அம்மாபேட்டையில் (ammapet )இருந்து 10கி.மீட்டர் தொலைவில் குருவரெட்டியூரில் (guruvareddiyur)இருந்த 1கி.மீட்டர் தொலைவில் தொப்பபாளையம் (thoppapalayam)எனும் சிற்றூரின் வனத்தில் அமைந்துள்ளது.
திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது, இங்குள்ள வனத்தில் இருசியம்மன் மூலவராக அமைந்து பக்தர்களுக்கு அருள் தரும் அம்பிகையாக அமைந்துள்ளது ஓர் சிறப்பாகும்.
இருசியம்மன் அந்தியூரில் (anthiyur) அமைந்துள்ள சின்ன குருநாதசாமிக்கும் வெள்ளித்திருப்பூரில் (vellitirupur) அமைந்திருக்கும் பெரிய குருநாதசாமிக்கும் சகோதரி முறையிட்டு அழைப்பார்கள்.
தொப்பபாளையத்தில் அமைந்துள்ள இருசியம்மன் கோவிலில் மல்லியம்மன் ,வீரகாரகன்,வீரபத்திரன் இடும்பன் ஆகிய சிலைகள் தரிசனம் பெறலாம். வைகாசி மாதத்தில் வருடம் ஒரு முறை வனத்தில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அப்போது தொப்பபாளையத்தில் இருந்து இருசியம்மனுக்கு மகா தேர் கட்டி வனத்திற்கு அழைத்து வருவதுண்டு.
இரட்டை தேரில் குருவரெட்டியூர் பகுதி மக்களை அழைத்து ஓரு தேரை இழுக்க வைத்து வனத்திற்கு இருசியம்மனை காலம் காலமாக நடந்து வரும் மரபாகும்.மற்றொரு தேர் தொப்பபாளையம் ஊர் மக்கள் இழுத்து வந்து வனத்தில் இருசியம்மனை அலங்கரித்து பூஜை நடைபெறுகிறது. இக்கோவில் பூச்சாட்டின் போது தொப்ப பாளையம் வனத்தில் உள்ள எமதர்மராஜாவுக்கும் பூச்சாட்டுதல் மற்றும் விழா தொடங்கும்.
அருள்மிகு இருசியம்மனுக்கு வார பூஜையாக வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு நடைபெறும். வனத்தில் கட்டுவர்த்தனை பூஜையாக ஞாயிறு மதியம் 12.00மணி அளவில் நடைபெறுகிறது. தொப்பபாளையம் வாருங்கள்
அருள்மிகு இருசியம்மன் அருள் பெற்று எல்லா வளமும்
நலமும் பெற வாழ்த்துக்கள்
நட்புடன் குரு.பழ.மாதேசு
by.guru.pala.mathesu
No comments:
Post a Comment