

அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம்
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் (chithode) அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும் .சித்தோடு நான்கு ரோடு சந்திப்பில் சித்தோட்டில் இருந்து பவானி செல்லும் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும்.இங்கு மூலவராக மாதேஸ்வரர் அமைந்துள்ளார் .அருகே மங்களாம்பிகை சன்னதி உள்ளது.
இங்கு குரு,லிங்கபத்மர் ,பிரம்மா,சனிஸ்வரர், துர்க்கை அம்மன்,காலைபைரவர் சன்னதிகள் உள்ளது. சிவராத்திரி பிரதோஷ பூஜைகள் சிறப்பாக செய்யப்படுகின்றது.
தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு காலை 11.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கோவில் அமைவிடம் சிறியதாக இருப்பினும் அழகாக இருக்கிறது.
ஈரோட்டில் இருந்து 8 கி.மிட்டர் தொலைவில் இருக்கும் சித்தோட்டிற்கு நீங்களும் வந்து
அருள்மிகு மாதேஸ்வரர் ,மங்களாம்பிகை
(arulmigu matheswarar & mangalampigai temple)
அருள்பெற்று செல்லுங்கள் .
நன்றி
No comments:
Post a Comment