

அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில்
ஈரோடு மாவட்டம் (erode district) பெருந்துறை வட்டம் (perundurai taluk)காஞ்சிக்கோவிலில் (kanjikovil) எனும் ஊரில் அமைந்துள்ள அற்புத ஆலயமாகும் . காஞ்சிக் கோவிலுக்கு ஈரோட்டில் இருந்து சுமார் 16 கி.மீட்டரும் சித்தோட்டில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத ஆலயமாகும். ஆலய முகப்பில் பெரிய அரசமரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது.
வருடம் ஒரு முறை குண்டத்திருவிழா நடைபெறுகிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால் கொடிமரம் வணங்கி விட்டு சிம்ம வாகனம் தரிசித்து மூலவரான சீதேவியை அழகிய தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி வீரமாத்தி ,குப்பண்ணசாமி ,முனியப்பன் ஆகிய சன்னதிகள் தரிசனம் செய்யலாம்.
ஸ்தல விருட்சமாக இலந்தை மரம் இருப்பது சிறப்பான ஒன்றாகும். அருகில் பக்தர்கள் தண்ணீர் வசதிக்காக திருக்கோவில் உள்ளே கிணறு உள்ளது. பெரிய குதிரை வாகனம் உள்நுழையும் போது அழகாய் நம்மை வரவேற்கிறது.
பழங்கால கோவில் தரிசனம் நிறைவாக இருக்கிறது. திருக்கோவில் மண்டபம் கட்ட சக்தி மசாலா குழுமத்தினர் பெருளுதவி அளித்துள்ளது பாராட்டத்தக்கது.
சீதேவி அம்பாள் தரிசனம் பெற காஞ்சிக்கோவில் வந்து செல்லுங்கள்.
வளங்கள் கூடட்டும் .
மேலும் தகவல்களுடன் இவ் இடுகை நீட்டிக்கப்படும்.
நன்றி
No comments:
Post a Comment