

கல்வடங்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
SRI ANGALAPARAMESWARI TEMPLE, KALVADANGAM
அமைவிடம் :
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அமைந்துள்ள பழங்கால திருக்கோவில்களில் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் ஒன்றாகும். எடப்பாடியில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் திருக்கோவிலைக் காணலாம் கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் திருக்கோவில் அமைந்துள்ளது.
மூலவர் :
ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் திருக்கோவில் முகப்பில் பழங்கால தேர் நிற்க ரசித்து முன்னே சென்றால் பிரமாண்டமான ராஜ கோபுரம் தரிசித்து உட்பிரகாரம் சென்று நீண்ட கொடிமரம் அதைதொடர்ந்து காவல் தெய்வங்கள் வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஷ்வரியை வணங்கலாம் .
அழகிய அம்சங்கள் பொருந்தி பலர் வாழ்வில் ஏற்றம் அளித்த அழகிய அம்மன் . மூலவர் அருகில் பழங்காலத்தில் இருந்து காணப்படும் பாம்பு புற்று உள்ளது. திருக்கோவில் ஷ்தல மரமாக வில்வம் அமைந்துள்ளது. அருகே பிரமாண்ட அரசமரம் அமைந்துள்ளது.
இப்பகுதி மக்களால் விரும்பி வணங்குகின்ற பழங்காலத்திய காண வேண்டிய சக்தியான அம்மனாகும் ,வெள்ளிக்கிழமை, அமாவசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.
முடிவுரை:
காண வேண்டிய தரிசிக்க வேண்டிய ஆலயங்களில்
கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும் .