Friday, November 25, 2011

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் .சிவன்மலை காங்கேயம் Sri Balasupramaniyar temple ,sivan malai ,kangayam ,






சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் ,காங்கேயம்

SIVANMALAI SRI SUBRAMANIYAR TEMPLE, GANGAYAM

கொங்கு நாட்டில் ஏராளமான திருக்கோவில் புகழ் பெற்றவை அதில் சிவன் மலை குறிப்பிடத்தக்க ஓர் ஆலயமாகும் சிவன் மலை என்றதும் சிவனே மூலவராக இருப்பார் என்று நினைத்து சென்றால் அங்கே இருப்பது ஸ்ரீ முருகப்பெருமான் ஸ்ரீ சுப்பிரமணியராக வரும் பக்தர்கள் துயர்போக்கும் கடவுளாய் அருள் பாலித்து அழகு செய்கிறார் .

திருக்கோவில் முன்பு ஈரோடு மாவட்டத்தில் இருந்தது.திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு சிவன் மலை திருப்பூர் மாவட்டத்திற்கு சொந்தமானது .

குன்றுகள் தோறும் குமரன் இருக்குமிடம் என்னும் வாக்கிற்கு இணங்க காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 7 வது கி.மீட்டரில் அமைந்த அழகிய குன்று சிவன் மலையாகும் . திருக்கோவில் குன்றின் மேலே செல்ல படிகட்டு வழி மற்றும் எல்லா வகையான வாகனங்களில் செல்லும் விதமாக தார் சாலை அழகாக அமைத்துள்ளார்கள் .மலைப்பாதை வழியில் சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் திருக்கோவில் முகப்பை அடையலாம் .

சுமார் 20படிக்கட்டுக்கள் ஏறிச்சென்றால் நாம் காண்பது பெரிய வளாகமும் அங்கு பெரிய அரசமரத்தடி விநாயகர் அருகே பெரிய வேப்ப மரமும் அமைந்துள்ளது. விநாயகர் வணங்கி விட்டு அடுத்து 10
படிக்கட்டுகளை கடந்தால் நாம் இராஜகோபுரத்தை அடையலாம் (இராஜகோபுரம் புதிதாக தயராகி வருகிறது).

பின்பு உள்ளே சென்றால் கொடிமரம் அதைத்தாண்டி நீண்ட தூரத்தில் அமைந்த வளாகத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் சிவன்மலையில் அருள்மிகு சுப்பிரமணியராக திருக்கோவில் மூலவராக அருள்புரிகிறார் .

திருக்கோவில் மூலவர் அழகாக சிலை அமைந்த சிலை பக்தர்களை அடிக்கடி தரிசிக்க தூண்டும் விதத்தில் அழகாக அமைந்திருப்பது சிறப்பு. தரிசனம் செய்த பின்பு அருகே ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீசுப்பிரமணியர் சன்னதி உள்ளது .அதை தரிசனம் செய்து வெளியே வந்தால் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் என சிவாலயத்தை நினைவு செய்யும் விதமாக தனிச்சன்னதிகள் பல உள்ளன.

திருக்கோவில் ஸ்தலமரங்களாக துரட்டிமரமும் .பழங்கால புளிய மரமும் உள்ளது. திருக்கோவில் வளாகம் நல்ல அகலமுடையது.சிவன் மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை திருக்கோவில் மலை அமைப்பும் , காங்கேயம் சுற்றுபுற அழகும் , திருப்பூர் சாயக் கழிவால் உயிரிழந்த நொய்யல் ஆற்றின் அழகிய அமைப்பும் தெரிகிறது. பழங்கால திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கலாம் .

சென்னி மலைக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அவசியம் சுமார் 12 கி.மீட்டர் தொலைவே உள்ள சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணியரையும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம். திருக்கோவில் மேலே பக்தர்கள் சென்று வர பஸ் வசதி உள்ளது. பார்க்கவேண்டிய ஆலயம் முருகர் ஆலயமாகும் .

முருகருக்குரிய சஷ்டி,கிருத்திகை, செவ்வாய் கிழமை மற்றும் அம்மாவசை போன்ற விஷேச நாட்களில் ஆறுகாலபூஜை நடைபெறுகிறது. வந்து தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அருள் பெற்று எழுதுங்கள் .

"ஓம் முருகா சரணம் முருகா "

நட்பு நாடும் குரு.பழ.மாதேசு.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...