Monday, October 24, 2011

அஞ்சல் குறியீட்டு எண்ணின் ( PINCODE ) பயன்களும் விபரங்களும்

பின்கோடு என்று அழைக்கப்படுகின்ற அஞ்சலக குறீயீட்டு எண் முக்கிய மான ஒன்றாகும் . அதன் பயன்களை விளக்கவே இந்தப்பதிவு .

நாம் அஞ்சலகங்கள் மூலம் அனுப்பும் தபால்கள்,பதிவுத்தபால்கள் ,மணியார்டர்கள்,விரைவு அஞ்சல் ஆகியவற்றில் பெறுபவரின் பெயர் மற்றும் விலாசத்துடன் செல்ல வேண்டிய ஊரின் அஞ்சல் அலுவலகத்தின் குறியீட்டு எண் (PINCODE) பயன் படுத்துவோம் .

இந்த முறை 15. 08. 1972 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு நாம் அஞ்சலகங்கள் மூலம் எளிதாக ,விரைவாக தபால்களை அனுப்ப ஆவண செய்யப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை தபால்களை அனுப்ப 6 இலக்க அஞ்சல் குறியீட்டு எண்ணை வழங்கியுள்ளது.

புரியும் விதமாக சொன்னால் எமது குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR) அஞ்சல் குறியீட்டு எண் 638504 என்பதாகும் .குருவரெட்டியூர் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும் . இதில் 6 என்பது தமிழ் நாடு அஞ்சல் மாநிலத்தையும் 38 என்பது ஈரோடு அஞ்சல் மாவட்டத்தையும் , 504 என்பது குருவரெட்டியூர் என்னும் ஊரின் அஞ்சலகத்தையும் குறிக்கிறது.

அஞ்சல் குறியீட்டு எண் பயன் படுத்துவதால் பயன்கள் :

1.நீங்கள் அனுப்பும் கடிதங்கள் உடனே பெறுபவர்களுக்கு கால தாமதம் இல்லாமல் சென்றடைகிறது .

2.ஓரே பெயரில் பல நகரம் ,கிராமம் ,ஊர்கள் இருப்பதால் சரியாக அஞ்சல் குறியீட்டு எண் தபாலில் இடுவதன் மூலம் தபால் களை குறிப்பிட்ட ஊருக்கு பிரித்து அனுப்ப ஏதுவாக இருக்கும் .

3. முகவரி எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அஞ்சல் குறியீட்டு எண் உதவியுடன் பெறுபவர்க்கு உடன் அனுப்ப முடியும்.

முன்பு எல்லாம் கடிதம் அனுப்ப அஞ்சலகத்தை நம்பியிருந்த நாம் தற்போது இமெயில் ,பேக்ஸ் ,எஸ்.எம் . எஸ் என புதிய பரிணாமத்திற்கு வந்து விட்டாலும்

அஞ்சலகத்தின் வழியே நமக்கு முக்கிய தபால்கள் ,ஆவணங்கள் , பல்கலைகழக தபால்கள் வங்கி தபால்கள் ,ஷேர் மார்க்கெட் தபால்கள்,திருமண அழைப்பிதழ் போன்ற அஞ்சல்களை நம் வீட்டிற்கு அஞ்சலகத்தின் மூலமே பெற்று வருகிறோம் என்பதை மறக்க கூடாது .


அஞ்சலகம் வழங்கும் தரமான இந்த சேவையில் நாமும் கடிதங்களில் சரியான அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் குறிப்பிட்டு நமது கடிதங்கள் எளிதில் சென்றடய உதவி செய்வோம் . அஞ்சல் அலுவலகத்தின் பயன்கள், விபரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற இணையத்தளம் உதவுகிறது.


நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...