Thursday, October 27, 2011

சேலன்ஜ் (" சவால் சிறுகதைப்போட்டி -2011)

ஆள் அரவமில்லாத சேலத்தில் இருந்து கோவை செல்லும் பைபாஸ்ரோட்டின் ஓரத்தில்அமைந்த தனி வீட்டில் பிரகாஷ் உட்கார்ந்திருத்தான்.
பிரகாஷ் யாருமல்ல சேலத்தில் பெண்கள்,சிறுமிகளை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்கும் கும்பலின் தலைவன்.

போலீஸ்க்கு தகவல் சொன்னால் தடயமில்லாமல் கொலை செய்து காவிரி ஆற்றில் உருத்தெரியாமல் விட்டுவிடுகிற நிகழ்காலகுற்றவாளி

அந்த வீட்டில் பிரகாஷ் கூடவே நன்கு மாடு,பன்றிகளாய் சாப்பிட்டு (சமைத்துதான் )உடம்பை வளர்த்து தலைவன் பிரகாஷ் சொல்வதை கேட்க நான்கு பேர்கள் அந்த வீட்டில் கூடவே ஓர் வசதியான குடும்ப பர்பியூம் வாசனையில் 20வயதானலும் 16 வயதிலேயே இருக்கும் இளம்பெண் வாயை துப்பட்டாவால் கட்டியநிலையில் கை,கால்களுக்கு கயிறு கட்டியவாறு பயத்தால் மயங்கிலையில் ஓர் ஓரமாக கிடந்தாள் சுகந்தி .

பிரகாஷ் ஓர் தடி மாடு போல இருந்த ரவுடியை கூப்பிட்டான் "டேய் ! நம்ம இன்பார்மர் விஷ்ணு நம்மகிட்டயே காசு வாங்கிட்டு நம்மள போலீஸ்கிட்ட காட்டிக் கொடுத்துடப்போறான் .. அவன்ஆள்எப்படி?

"அண்ணே அவன் நம்ம ஆளுண்ணே..! நம்மள போலீஸ் கிட்ட காட்டி கொடுக்கமாட்டான் !அவன்எஸ்.பிகோகுல் கிட்டநெருக்கமா இருக்கிறதே நமக்கு தகவல் சொல்லத்தான் ..!


ஆமா ..! அப்படி ஏதாச்சும் பண்ணுனான்னா அவன் குடும்பத்தை காலி பண்ணிட ஆள்வெச்சிடு.!

சரிண்ணே என்றவாறு தலையாட்ட பிரகாஷின் செல்போன்எஸ்.எம்.எஸ் ஒலித்தது.அது இன்பார்மர் விஷ்ணு அனுப்பியது.








அதில் " சார் எஸ் .பிகோகுல் இந்த பொண்ணு கடத்துன விவகாரத்துல டீப்பா இன்வஸ்டிகேசன் பண்ணீட்டு இருக்கார் . ஆனா நான் எஸ் பி கோகுலிடம் குழம்பி போக தவறான தகவல் குறியீட்டை கொடுத்திருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என அதில் எஸ் எம் எஸ் இருந்தது.

சந்தோஷத்தில் பிரகாஷ் பிற ரவுடிகளிடம் "டேய் விஷ்ணு இருக்கிற வரைக்கும் போலீஸ் நம்ம கிட்ட வராது " ஓகே பணம் எவ்வளவு வேணும்ங்கிறத நாளைக்கு இந்த பிள்ளையோடஅப்பன் கிட்டபேசிக்கலாம் கார்ல கிடக்கற சரக்க கொண்டு வாடா ! சாப்பிடலாம் என்றவாறு ஹாயாக சோபாவில் சாய்ந்தான் .


எஸ் அலுவலகத்தில் அவசரமாக ரகசியமாக கூட்டப்பட்ட மீட்டிங் .


கிரைம் புலி என்று சேலம் மாவட்டக் காவல்துறையினயரால் பாராட்டை வாரம் ஒருமுறை பெறுபவர் . எஸ் பி கோகுல் முன்பு ஏ.டி.எஸ்.பி மாதேஸ்வரன் , டி.எஸ்.பி சிவசங்கரன் மூவரும் அமர்ந்திருந்தனர் .

எஸ் .பி கோகுல் பேச ஆரம்பித்தார்.

"நம்ம அமைச்சர் பொண்ணு சுகந்தி காணாம போயி 12 மணி நேரம் ஆச்சு..! எல்லா இடத்தில இருந்தும் போன்ல பிரசர் .! நம்ம அமைச்சர் குழந்தை மாதிரி அழறார் . ஏதாச்சும் க்ளு கிடைச்சுதா மாதேஸ்..?

ஏடி.எஸ்.பி மாதேஸ் தனது பைலை புரட்டியவாறு " சார் பொண்ணுங்களை கடத்தற அக்கயுஷ்ட் லிஸ்ட்ல 5 கும்பல் இருக்கு சார் ..! இப்ப மூன்று டீம் இடத்தை மாத்திட்டாங்க சார் ! அவங்களை வாட்ச் பண்ணி ஓர் டீம் தேடிட்டிருக்கு சார் ! இரண்டு டீம் கோவை மத்திய சிறையில் இருக்காங்க ! ஆனா ஓர் சின்ன க்ளு நாம நம்புற இன்பார்மர் விஷ்ணு ஒர் டீம் கூட தொடர்பு இருக்கிறதாக ஓர் தகவல் இருக்கு சார் ..!


எஸ்.பி கோகுல் ஆச்சரியமாக ஏடி .எஸ்.பி மாதேசை பார்த்து விட்டு " அப்ப விஷ்ணுவையும் குளோஸ் வாட்ச் பண்டிறீங்களா..?

மாதேஸ் சற்றே உறுதியுடன் பேசினார் " ஆமாசார் ! அவன் நமக்கு வேலை செய்யற மாதிரி நம்ம டவுன் இன்ஸ்பெக்டர் ராஜீவ் கூட சுத்திட்டு இருந்துட்டு இப்பதான் வீட்டுக்கு போறானாம் !

எஸ்.பி கோகுல் தொடர்ந்தார் .

ஓ.கே அவனை அப்ப டீப்பா வாட்ச் பண்ணுங்க ! நம்ம மேல அவனுக்கு டவுட் வந்திடக்கூடாது.

இன்பார்மர் விஷ்ணு லிங்க் வைச்சிருக்கிற அக்யூஸ்ட் டீம் யாரு?

மற்றோர் பைலை எடுத்துக்காட்டிய ஏடி. எஸ் .பி மாதேஷ் சார் இவன் பேரு பிரகாஷ் .சேலம் அம்மாபேட்டை பக்கத்துல வீடு .இவன் இப்போ வீட்ல இல்லையாம் .அவன் வீட்டை வாட்ச் பண்ற எஸ் .ஐ புகழ் மாறன் அங்க இருந்து தகவல் சொன்னார் சார் !


அப்போது எஸ் .பி கோகுல் செல்போன் எஸ்.எம். எஸ் ஒலி ஒலித்தது .

அதில் ஓர் எஸ் எம் எஸ் SW H2 6F இதுதான் குறியீடு அதை ஏடிஎஸ்பி மாதேஸ் வாங்கிப்பார்த்தார் . சார் இதை நான் நோட் பண்ணிக்கறேன் .என்ற மாதேஸ்
'' சார் இன்பார்மர் விஷ்ணு யாருக்கு போன் செய்தாலும் டெக்கினிக்கல் எஸ் ஐ பார்த்தீபனை வாட்ச் பண்ணச் சொல்லிருக்கேன்''

. எஸ் பி கோகுல் வெரி குட் ஏடி எஷ் பி இப்ப எல்லா ஸ்டேசன்லயும் இன்ஸ்பெக்டர்ஸ் அலார்ட் பண்ணாடுங்க !

ஓகே சார் ! மறுபடி எஸ்.பி கோகுலின் செல்போன் ஒலித்தது .

அதில் விஷ்ணு இன்பார்மர் புகைப்படத்துடன் அழைப்பு

எஸ் பி கோகுல்போன் எடுத்து விஷ்ணுதகவல் ஏதாச்சும்இருக்கா?

சார் நான்முன்புஅனுப்பின எஸ்.எம் .எஸ் ஸ்டேட் ஹ வேஸ் H2 ல 6பீட்ல ஓர் கார் நிற்க்குது. இது சேலம் டு ஆத்தூர் ரோட்ல இருக்கு .பார்க்கச்சொல்லுங்க !அத விளக்கமா சொல்லத்தான் கூப்பிட்டேன் சார் !

உடனே எஸ்.பி கோகுல் தேங்ஸ் விஷ்ணு என்னோட ஆபீஸ் வரைக்கும் வந்திட்டு போ ஓர் வேலை இருக்கு!

அதற்கு விஷ்ணு "உடனே ஒரு மணி நேரத்தில் வர்றேன் சார் " என்றவாறு எஸ்.பியை பார்க்க எஸ்.பி அலுவலகம் கிளம்பினான்.

எஸ்.பி கோகுல் டெக்னிக்கல் எஸ் .ஐ பார்த்தீபனை போனில் அழைத்து உடனே இன்பார்மர் விஷ்ணுவின் இன்றைய தினம் யாருக்கெல்லாம் போன் செய்தார் என்ற விபரங்களை கொண்டு வரச்சொன்னார்.


அதே வேளையாக காலையில் இருந்து வாட்ச் செய்து கொண்டிருந்த எஸ்.ஐ பார்த்தீபன் கால்லிஷ்ட் உடன் எஸ்.பி கோகுல் முன்பு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முன் நின்றார் .

"பார்த்தீபன்,இன்பார்மர் விஷ்ணுசெல்போன்லயார்அதிகமாதொடர்புவச்சிருக்காங்க?

சார் பிரகாஷ்ன்னு ஓர் பழைய குற்றவாளி அவன் கூட 30 தடவை பேசியிருக்கான் பிரகாஷ் டவர்லொக்கேசன் சேலத்திலிந்து கோவை செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் காட்டுது சார் .! அதுபழைய குற்றவாளி பிரகாஷ் உடைய குரல்தான் என சோதித்து சரியாக சொல்ல வெரிகுட் தேங்க்ஸ் என்றவாறு

எழுந்த எஸ்பி கோகுல் டிஎஸ்பி சிவசங்கரனிடம் கீழ் புளோர்ள உங்க டீம் கூட வெயிட் பண்ணுங்க.அவனை நம்ம டவுன்ஸ்டேசன்ல வச்சு நல்லா கவனிங்க!

என்றார் வந்த விஷ்ணுவை தூக்கிப்போய் கவனித்தார் டிஎஸ்பி.
உண்மையை ஒப்புக்கொண்டான்.வோறொரு போலீஸ் டீம் கோவை ரோட்டில் பறந்தது.

அடுத்த நாள் காலைச்செய்தியின் தலைப்பு

"அமைச்சர் மகள் மீட்பு.பழங்குற்றவாளி
பிரகாஷ் உட்பட 4 பேருடன் போலீஸ் இன்பார்மர் விஷ்ணு கைது

2 comments:

middleclassmadhavi said...

உங்கள் போட்டிக் கதைகள் நன்றாக, வித்தியாசமாக உள்ளன. வாழ்த்துக்கள்!

உங்களை நான் வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் குறிப்பிட்டிருந்தேன். அப்போது உங்கள் வலைப்பூவினை திறக்க முடியாமல் என் கணிணி சண்டித்தனம் செய்ததால், சொல்ல முடியாமல் போனது! மன்னிக்கவும்.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank u friend ,naan unga blog parthan ,yenna introduce pannunathuku ,nandri.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...