📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Sunday, October 23, 2011

ஔவையார் அருளிய விநாயகர் அகவலும் ,அதன் புராணக்கதையும்


கயிலாயத்தில் சிவன் சந்நதியில் ஆதியுலா அரங்கேற்றம் செய்வதற்காக நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் ரதத்தில் கிளம்புகிறார் . நாயன் மார்களில் ஒருவரான சேரமாநாயனாரும் அயினாவரம் எனும் பட்டத்து யானையில் கிளம்புகிறார் .பாதி வழி சென்றதும் ஔவையாரை கூட்டி வர மறந்து விட்டோமே என வருந்தினார் . அப்போது ஔவையார் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருந்த ஔவைக்கும் அட நாமும் கயிலாயம் செல்லாமல் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் உதித்தது.


பூஜையை பாதியில் நிறுத்த முடியாதே என எண்ணி விநாயகப் பெருமானை வேண்டினார் . விநாயகப் பெருமான் உடன் தோன்றி "ஔவையே.. ! பூஜையை முழுமையாக செய்து , எமக்காக பாடல் ஒன்றைப் பாடு நான் உன்னை கயிலாயம் செல்ல ஆவன செய்கிறேன் ". என்றாராம் . உடனே ஔவையார் துரிதமாக பூஜை செய்து "விநாயகர் அகவல்" என்ற பதிகத்தை இயற்றி பாடினார் .

விரைந்து பூஜையை முடித்தார் . உடனே அங்கு தோன்றிய விநாயகப் பெருமான் யானை உருவமெடுத்து,துதிக்கையால் ஔவையை எடுத்து கயிலாயம் தூக்கிச் சென்று விரைவாக விட்டாராம் . பின்னர் வந்து சேர்ந்த சேரமா நாயனார் எப்படி எனக்கு முன்பே கயிலாயம் வந்தீர்கள். என ஆச்சர்யப்பட்டு கேட்க அதற்கொரு பாடல் பாடினார் .

கட்டளைக்கழித்துறை

மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிர நினைய வல்லார்க் கரிதோ முகிழ்போன் முழங்கி
யதிரநடந் திடும் யானையுந் தேமருதன் பின்வருங்
குதிரையுங் காதங் கிழவியங்காதங் குலமன்னனே



எனப்பாடி தாம் வந்த விதத்தை விவரித்தார் .
"சீதங்களம்பச் செந்தாமரைப்பூவும்" எனத்தொடங்கும் விநாயகர் அகவல் பாடலை நாம் நற்காரியங்கள், செயல்களை துவங்கும் போது பாடினால் , பாராயணம் செய்தால் தடையில்லாமல் நம் வாழ்வில் நம்மை முன்னேற வைக்கும் என்பது உறுதி. இது நமக்காக ஔவையார் அருளிய அருள் வாக்காகும்.

ஆகவே "சீதங்களம்பச் செந்தாமரைப்பூவும்" எனத்தொடங்கும் விநாயகர் அகவலை பாடுங்கள் . செய்யும் செயலை தடையில்லாமல் இனிதே தொடங்குங்கள் . விநாயகர் அகவல் பாடல் படிக்க இதே வலைப்பக்கத்தில் உள்ள " ஆலய தரிசனம் " எனும் தலைப்பில் உள்ள இடுகையில் உள்ள விநாயகர் அகவலை படியுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்