



வலைப்பூ தொடங்கி ஒரு வருடமாகிவிட்டது. எதைப்பற்றி எழுதுவது என யோசித்தபோது தோன்றியதை விட , எதைப்பற்றியாவது எழுதி அடுத்த தலைமுறையை தவறான வழிக்கு இட்டுச்சென்று விடக்கூடாது என்ற எண்ணமே அதிகம் .
சரி வலைப்பூவில் எழுதுகிறோம் .அது நல்ல இடுகையா என எப்படி அறிந்து கொள்வது ? யாராவது சொன்னால் தானே தெரியும்.. ? சொன்னார் அவர் தான் " பதிவர் தென்றல்" என பதிவர்களுக்காக தொடங்கப்பட்ட மாத இதழ் ஆசிரியர் திரு அன்புமணி .
SEPTEMPER- 2011 பதிவர் தென்றல் இதழில் நம் வலைத்தளத்திற்கு (www.kavithaimathesu.blogspot.com) மோதிரக்கையால் குட்டு வாங்கினாற் போல நமது வலைத்தளத்தின் இடுகையான " நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா..?" என்ற இடுகை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவர் தென்றல் இதழில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள்.
சந்தோஷமான செய்தி ,நீங்களும் வலைத்தளத்தில் எழுதுபவர் எனில் உங்கள் படைப்புகள் இடம் பெற வேண்டுமானால், தங்களின் வலைத்தள முகவரி,மெயில் முகவரி,உங்களின் இல்ல முகவரியை மின் அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
thambaramanbu@gmail.com
பதிவர் தென்றல் மாத இதழ் ஆசிரியர் திரு.அன்புமணி
அலைபேசி - 98409-92769
பதிவர் தென்றல் முகவரி :
ஆசிரியர் ஜெ.அன்புமணி, பதிவர் தென்றல் 163,திருவள்ளுவர் தெரு, கிழக்குதாம்பரம் ,சென்னை -600059
வலைத்தளம் : http://anbuvanam.blogspot.com மற்றும் http://thagavalmalar.blogspot.com ஆகிய இணையத்தை காணுங்கள் .
நமது இடுகையை வெளியிட்ட பதிவர் தென்றல் ஆசிரியர் அன்பு மணிக்கு வாழ்த்துக்கள் கூறி இத்துடன் முடிக்கிறேன் .
நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்
No comments:
Post a Comment