📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Monday, October 24, 2011

தீபாவளி (முற்றுப்பெறாத பயணம் )

பட்டாசு,
வீட்டில் அனைவருக்கும் புத்தாடை ,
இனிப்புகள் வாங்கி
இருசக்கர வாகனத்தில்
பயணித்து சாலையில் வருகையில்
அனாதை ஆசிரம வாயிலில்
அழுக்குத் துணியுடன்
தீபாவளி வாழ்த்துச் சொல்கின்ற குழந்தைக்கு ,
டாடா காட்டி விட்டு
வீட்டுக்கு வந்த சேர்ந்த பின்னும்
மனம் அந்த அநாதை ஆசிரமத்தின வாசலியே
நின்று அதற்றிக்கொண்டிருக்கிறது .
ஒர் சுவிட் பாக்ஸ்யேனும்
அந்தக்குழந்தையின்
கையில் கொடுத்து விட்டு
வந்திருக்ககூடாதாவென ..!

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்