Tuesday, November 15, 2011

அரசு அருங்காட்சியம் , ஈரோடு





ஈரோட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும் பல ஆவணங்களின் கலைக்கூடமாக திகழ்வது அரசு அருங்காட்சியகங்கள் ஆகும் . அருங்காட்சியங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதன் உபயோகப்படுத்திய பொருட்கள் புதைபொருள் ஆய்வுகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை சேகரித்து நிகழ்கால மக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது,


ஈரோடு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அகழ்வராய்ச்சிகளால் ,தொல்பொருள் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பழங்கால ஆவணங்கள் இங்கு உள்ளது. ஈரோட்டில் வ.உ.சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஈரோடு அரசு அருங்காட்சியகம் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பராமரிப்புக்காகவும் ,அனுமதிக்கட்டணமாகவும் ரூ 5 பெற்றுக்கொள்கிறார்கள் . நுழைவாயிலில் பல ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற திருக்கோவில் கல்லால் ஆன சிற்பங்கள் உள்ளன.

அருங்காட்சியகத்தில் காணப்படுபவை :

புவியியல் கற்கள், விலங்கியல் மாதிரிகள் , கல்லாகிய எலும்புகள் , வலம்புரி இடம்புரி சங்குகள் ,பவளம்,கடற்பஞ்சு,மரவகைகள் ,செடிகள் ,தொல்லியல் ,நாணயவியல் , பழங்கால ஆவணங்கள் , ஓவியங்கள் ,பாணைகள் , ஜோதிட சுவடிகள் , மரச்சிற்பங்கள் ,குந்தாணி,ஈமத்தாளி. தோல் பதுமைகள் அருங்காட்சியக நூல்கள் ,துகிலியல் படைப்புகள் ,அரிய பழங்கால புகைப்படங்கள்,தமிழ் எழுத்து வளர்ந்த விதங்கள் .போன்ற அரிய ஆவணங்கள் உள்ளன.


பெரிய எதிர்பார்புடன் செல்லாதீர்கள் . ஒரு மணி நேரம் செலவழிக்க பழங்கால ஆவணங்களை அறியலாம் . குழந்தைகளை கூட்டிச்சென்று காண்பிக்க ஏற்ற இடம் . வெளியில் இருக்கும் சுவாமி சிலைகள் மழையால் பாதிக்காமல் பாதுகாத்தால் நன்றாக இருக்கும் .

ஈரோடு பக்கம் வந்தால் பஸ் நிலையம் அருகில் உள்ள வ.உ.சி.பூங்கா நுழைவாயில் எதிரே உள்ள அழகாக பராமரித்து வரும் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு எழுதுங்கள்.


நட்புடன் குரு.பழ.மாதேசு

Monday, November 14, 2011

ஈரோட்டுக்கு வந்த திருப்பதி ஸ்ரீ சீனிவாசப்பெருமான்



ஈரோட்டுக்கு வந்த திருப்பதி ஸ்ரீசீனிவாசப் பெருமாள்

திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ வாரி சேவா டிரஷ்ட் இணைந்து நடத்திய சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவவிழா 14.11.2011 அன்று ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கில் இலட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது.

திருப்பதி திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருப்பதியில் உற்சவர் சிலைகளான ஸ்ரீதேவி,பூதேவி ,சீனிவாசப்பெருமாள் பெரிய வாகனங்களில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பெற்று சிறப்பு செய்தனர் .திருப்பதியில் பெருமாளுக்காக பூஜை செய்யும் பெரியோர்கள் அனைவரும் இறைவனுக்கு பூஜை செய்தார்கள் .

முதலில் கருங்கல்பாளையம் வந்த சீனிவாசப்பெருமாளின் உற்சவ சிலைகளுக்கு காவிரி ஆற்றங்கரையில் ஸ்ரீ வாரி டிரஸ்ட் மூலம் கேரளா சென்டை மேளம் முழங்க வரவேற்று பெருந்துறை ரோட்டில் உள்ள யு.ஆர்.சி பள்ளியில் பக்தர்கள் தரிசனம் செய்ம வைக்கப்பட்டது. பின்பு ஈரோட்டின் பஸ் நிலையம் அருகிலுள்ள வ.உ.சி மைதானத்தில் அமைந்திருந்த பிரமாண்ட மேடைக்கு சீனிவாசப்பெருமாள் அழைத்து வரப்பெற்றார் .


சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலை 06.00 மணிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் துவங்கியது. உள்ளே வந்த பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி டிரஸ்ட் மூலமாக திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள்,பிரசாதங்கள் ,துளசி தீர்த்தம் கொடுத்து நாமங்கள் இடப்பட்டன. ஸ்ரீசீனிவாசப்பெருமாளின் பதிகங்கள் தரப்பட்டன.

ஈரோடு தினமலர் குழுமத்தால் இறைவன் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு பதிப்பு அழகாக வெளியிடப்பட்டது.

திருக்கல்யாண விழாவில் தேவர்களை வரவேற்று பின் சீனிவாசப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு கங்கணம் கட்டி ,திருமண ஆடை சமர்பித்து ஸ்ரீ பெருமாளிடம் இருந்த ஆடைகள் ஸ்ரீதேவி ,பூதேவிகளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதியில் இருந்து வந்திருந்த சுந்தர வரத பட்டாச்சரியர் குழுவினர் சிறப்பாக பக்தர்கள் கண்டு களிக்குமாறு திருக்கல்யாணத்தை நடத்தி முடித்தார்கள் . இரண்டு டிஜிட்டல் திரைகள் மூலம் அனைத்து பக்தர்களும் இறைவன் திருக்கல்யாணம் தெளிவாக ரசிக்கும்படி அமைந்திருந்தது பாராட்டுக்குரியது. விழாவின் கடைசியாக கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.


"கோவிந்தா கோவிந்தா" என பக்தர்கள் கோஷம் முழங்க வழிபட்டனர் ,மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த வ.உ.சி மைதானம் பார்க்கையில் திருப்பதியில் இருந்ததைப்போல உணர்வு .

வறுமையின் காரணமாகவும் ,வேலப்பளுவின் காரணமாகவும் திருப்பதி சென்று ஸ்ரீசீனிவாசப் பெருமானை வணங்க முடியாதவர்களுக்கு ஓர் பெரிய வரப்பிரசாதமாக ஸ்ரீசீனிவாசப்பெருமானின் திருக்கல்யாணத்தையே பிரமாண்டமாக நடத்தி எல்லோர்க்கும் இலவச அனுமதி அளித்து அனைவரும் கண்டுகளிக்கும் வரையில் விழாவை ஏற்பாடு செய்த ஸ்ரீ வாரிடிரஸ்ட்க்கும்,திருப்பதி திருமலை தேவஸ்தான சபாவுக்கு நம் வலைத்தளத்தின் மூலம் வாழ்த்துக்கள் .

உப செய்தி : கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வாரி டிரஸ்டால் ஸ்ரீசீனிவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தரிசனம் செய்ய முடியாதவர்கள் வருந்த வேண்டாம் .அடுத்த முறை திருக்கல்யாணம் நம் வலைப்பூவில் முன்பே அறிவிக்கப்படும்

நட்புடன் குரு.பழ.மாதேசு.

Saturday, November 12, 2011

sri malligeswarar tirukkovil,kothapalayam (karattupalayam) ,edapadi taluk






ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில்

அண்மையில் திருக்கோவில் விபரங்கள் சேகரிக்க காவேரி ஆற்றங்கரையின் படுக்கையில் அமைந்துள்ள பூலாம்பட்டி என்னும் அழகிய ஊரைக்கடந்து சித்தூர் வந்தடைந்தோம் , சித்தூரில் அமைந்த ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில் வணங்கிவிட்டு, அருகே உள்ள சிவாலயங்களைப் பற்றி விசாரித்தபோது அங்கே ஸ்ரீ மல்லிகேஸ் வரர் திருக்கோவில் இருக்கிறது.

எடப்பாடி சித்தூரில் இருந்து 7 கி.மீட்டர் என்க சரி பார்த்து விட்டு வரலாம் எனக்கிளம்பினோம் ..

இடையே மிகப்பெரிய முனிஸ்வரர் சிலையை பார்த்து வியந்துவிட்டு சித்தூரில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் வழியில் கொத்தா பாளையம் என்னும் ஊரில் கரட்டுப்பாறை என்னுமிடத்தில் ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில் அடிவாரம் வந்தடைந்தோம் .

பழங்கால கோவிலை சுத்தம் செய்து தயார் செய்துள்ளார்கள் .தற்போது மண் சாலை அமைத்துள்ளார்கள் . இருசக்கர வாகனம் மட்டும் மலை மேல் செல்கிறது. குன்று இருக்குமிடத்தில் குமரன் தானே இருக்கவேண்டும் . ஆனால் இங்கே சிவபெருமான் மல்லிகேஷ்வரராக அமைந்துள்ளார் .

சிறிய குன்று போன்ற அமைப்பில் உள்ள சிறிய மலையில் சிவன் அமைந்திருப்பது சிறப்பாகும் . ஒரு சிவனடியார் குன்றின் மேல் அமர்ந்த சிவாலயம் சேலம் மாவட்டத்தில் அமைந்து இருப்பது இங்குதான் எனசொன்னார் . பழைய திருக்கோவிலாக இருந்த ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில் பார்க்க அழகாக தயராகி வருகிறது. ஓரு வருட காலத்தில் திருப்பணி நிறைவடையும் .

ஆன்மீக அன்பர்கள் நேரில் சென்று ஸ்ரீ மல்லிகேஷ்வரரை தரிசித்து திருப்பணிக்கு உதவலாம் . அண்மையில் நடந்த அன்னாபிஷேக விழாவில் பங்கு கொண்டுவிட்டு லிங்க உருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மல்லிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தோம் .

பஸ் வசதி அதிகம் இல்லாத கிராமம் என்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வது சிறப்பு . சிறிய மலைக்கோவில் தான் சிவாலயம் தேடிச் செல்பவர்களுக்கு நிறைவளிக்கும் .


சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்தில் சித்தூரில் இருந்து நாச்சி பாளையம் வழியில் கொத்தாபாளையம் (கரட்டுப்பாளையம் )என்னும் ஊரில் இருக்கும் ஸ்ரீ மல்லிகேஷ்வரரை நேரில் சென்று பார்த்து வணங்கி விட்டு எழுதுங்கள் .

Arulmigu sri pasupatheswarar &mangalanayagi tirukkovil ;sittur,edapadi taluk






ஆனந்த வாழ்வளிக்கும்


ஸ்ரீ மங்களநாயகி உடனமர் ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில்

அமைவிடம் :

சேலம்மாவட்டம் எடப்பாடி வட்டம் ,சித்தூர் கிராமம் மேல் சித்தூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ள பழங்கால சிவாலயங்களில் ஒன்றாகும் .பழங்காலமாக சிதிலமடைந்து இருந்த சிவாலயம் பல சிவனடியார்கள் முயற்சியால் பழங்கால கோவில் அமைப்பை மாற்றாமல் சுத்தம் செய்து அழகாய் வடிவமைத்துள்ளார்கள் .


மூலவர் :


ஸ்ரீ பசுபதீஸ்வரர் (லிங்க உருவில் அமைந்துள்ளார்)

அம்பாள் :ஸ்ரீ மங்களநாயகி

திருச்சிற்றம்பலம் :


குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக் கண்ணார் உறைபதியாகும் செறிகொள் மாடம்
சுற்றிய வாசலின் மாதர் விழாச் சொற்கவிபாட நிதானம் நல்க
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே.

பழங்கால திருக்கோவில் பல சிவனடியார்களால் புதுப்பிக்கப்பட்டு ஆவணி மாதம் 25 ஆம் நாள் 11.09.2011 அன்று புதுப்பிக்கப்பட்டு அழகாய் வடிவமைத்துள்ளனர். எடப்பாடி வட்டத்தில் அமைந்த திருக்கோவில் காவேரி ஆற்றிக்கும் (பூலாம்பட்டி) 7 கி.மீட்டர் தொலைவில் அருகே உள்ளது.

ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில் கொங்கு சோழர் காலத்தை சேர்ந்த திருக்கோவிலாகும் . திருக்கோவில் பழமை தெரிந்தாலும் ஆண்டுகள் அறியப்பட முடியவில்லை.

கிழக்கு நோக்கி இருக்கிறது திருக்கோவில் அமைப்பு. திருக்கோவில் கருவறை ,விமானம் ,மகா மண்டபங்கள் அழகானது. திருக்கோவில் அம்பாள் ஸ்ரீமங்களநாயகி சிலைகள் அழகானது. விநாயகர் ,முருகன் வள்ளி தெய்வானை ,நந்தீஸ்வரர் ,சண்டிகேஷ்வரர் ,தட்சிணாமூர்த்தி ,லிங்கேத்பவர் ,துர்க்கை,பைரவர் மற்றும் நவகிரககங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் முகப்பில் பழங்கால தெப்பகுளம் ஒன்று உள்ளது. திருக்கோவில் ஸ்தலமரமாக வில்வம் அமைந்துள்ளது.பிரதோஷம் ,மாசி மகா சிவராத்திரி ,சோமவாரப்பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.

பேருந்தில் செல்ல வழித்தடம் :

சேலம் மாவட்டம் எடப்பாடி வந்து அங்கிருந்து சித்தூர் என்ற ஊருக்கு வந்து மேல் சித்தூர் எனக்கேட்டால் விபரம் சொல்வார்கள் .
பேருந்து எண் :

6,3A, நாகநாதன் ,தண்டபாணி போன்ற பேருந்துகள் உள்ளன, பழங்கால சிவாலயங்களில் தரிசிக்கும் எண்ணம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . பார்த்துவிட்டு கருத்துரையிடுங்கள் .நன்றி.

Friday, November 4, 2011

sri velayuthasamy thirukkovil , thindal,erode






திருமுருகர் துதி:

அஞ்சுமுகந் தோன்றின் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும்
தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்


அருள்மிகு திண்டல் ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில் . ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் உள்ளது.எதிரே அருகே திண்டல் வேளாளர் மகளீர் கல்லூரி (thindal vellar womens college) அமைந்துள்ளது .

அடிவாரத்திலுள்ள அரசமர விநாயகரை வணங்கி அருகே மற்றொருவிநாயகரை வணங்கி சில படிக்கட்டுகள் ஏறினால் இடும்பர் சன்னதி வருகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 100 படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் நாம் அடைவது கொடிமரம் வணங்கி, பின்பு ராஜ கோபுர அழகை தரிசனம் செய்து உள்ளே பிரமாண்ட மண்டபத்தில் மூலவர் ஸ்ரீ வேலாயுதசாமியை (ஸ்ரீ முருகர் )தரிசிக்கலாம்.

ஈரோட்டு நகரின் அருகில் அமைந்த ஒரே அழகான மலைக்குன்று அதில் முருகப்பெருமான் ஆட்சி செய்து வருகிறார் . அழகாக வடிவமைக்கப்பட்ட திருக்கோவில் வலப்புற விநாயகர் என சிறப்பான அமைப்புடன் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் தங்கத்தேர் பார்ப்பதற்கு அழகான ஒன்றாகும் .

திண்டல் ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில் மலையை சுற்றிலும் அழகான புல்வெளிகள் ,கலைநயத்துடன் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் ,அழகான பூங்கா போன்ற அமைப்பை மலையை சுற்றிலும் அமைத்துள்ளார்கள் .


பிரதிவார செவ்வாய் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் ,கிருத்திகை ,சஷ்டி,அம்மாவசை,பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது . ஈரோடு நகர மக்கள் வணங்கும் முக்கிய திருக்கோவில்களில் திண்டல் வேலாயுதசாமி திருக்கோவிலும் ஒன்று. பார்க்கவேண்டிய முருகர் ஆலயங்களுள் இதுவும் ஒன்று.

திண்டல் முருகரை வணங்க திருமணத்தடை , காரிய வெற்றி,நன்மக்கட்பேறு , கிடைக்கும்மென்பது பெரியோர்களின் கூற்று.

திண்டல் ஸ்ரீ வேலயுதசாமியின் வலைப்பக்கம் : www.thindalmurugan.tinfo.in

ஈமெயில் முகவரி: thindalmurugantemple@gmail.com

ஈரோட்டுப்பக்கம் வந்தால் இறைவனை தரிசித்து விட்டு எழுதுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு

தமிழனின் ஓர் அற்புதமுயற்சி காலிங்கராயன் அணைக்கட்டு




காளிங்கராயன் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டம் பவானிக்கு அருகிலுள்ள ஓர் சிறிய அணைக்கட்டாகும் .பவானி ஆறு காவிரியில் கூடும் முன்பாக கடலில் வீணே கலக்கக்கூடாது என யோசித்து பவானி ஆற்றின் ஓர் பகுதி நீரைத்தடுத்து உருவானதுதான் காலிங்கராயன் அணைக்கட்டாகும் .

காலிங்கராயன் அணைக்கட்டையும் ,வாய்க்காலையும் ஏற்படுத்தியவர் காலிங்கராயன் என்பவராவார் .கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நஞ்சையன் என்பவர்க்கு மகனாக பிறந்த லிங்கையன் என்பவர் பாண்டிய மன்னரால் " காலிங்கராயன்" என கவுரவிக்கப்பட்டவர் .இவர் வெள்ளோட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தபோது கட்டப்பட்ட பணியாகும்


காலிங்கராயன் வாய்க்கால் செல்லும் தூரம் :

பவானி காலிங்காராயன் அணைக்கட்டில் இருந்து சுமார் 57 மைல்கள் பாசன வசதிக்காக பயன்பட்டு நொய்யல் ஆற்றில் ஆயுடயார் பாறை என்னுமிடத்தில் கலக்கிறது. அணை 12 ஆண்டுகாலமாக கட்டப்பட்டு கி.பி 1283ல் முடிக்கப்பட்டு பாசன வசதிக்காக திறக்கப்பட்டது. காலிங்கராயன் வாய்க்காலின் சிறப்பம்சமே இடப்புற மதகுகளை மட்டுமே கொண்டது. கோணவாய்க்கால் என்றும்,ஈரோட்டை கடந்து செல்லும்போது காரை வாய்க்கால் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.


700ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் ஒருவனால் பாசனத்திற்காக யோசித்து உருவாக்கப்பட்ட அருமையான முயற்சி. காலிங்கராயன் எனும் அந்த நல்ல உள்ளத்தின் பெயராலே அந்த ஊர் இன்றும் காளிங்கராயன் பாளையம் என்று அழைக்கபட்டு சிறப்பு பெற்று வருகிறது. சித்தோடு லட்சுமி நகரில் இருந்து பவானி செல்லும் வழியில் உள்ளது.

தற்போது அழகிய முறையில் நம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் காலிங்கராயன் அணைக்கட்டில் பூங்கா தயராகி வருகிறது. திறக்க சற்று காலம் ஆகும். இந்த அணையில் இருந்து வெளியாகும் பவானி ஆற்றின் உபரி நீர் காவிரியாக மாறி கூடுதுறையில் கலந்து விடுகிறது. காலிங்கராயன் அணைக்கட்டை பார்வையிட பொதுப்பணித்துறையினர் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் .

பெரிய எதிர்பார்ப்புடன் வந்தால் ஏமாற்றமே மிஞ்சும் .பவானி பகுதிக்கு வந்தால் பார்த்துவிட்டுச்செல்லலாம் . இங்கு அழகிய தீம் பார்க் அமைத்தால் நன்றாக இருக்கும் . தைப்பண்டிகை கருநாள் அன்று குடும்பத்துடன் வந்து இப்பகுதிமக்கள் காலிங்காராயன் அணைக்கட்டை பார்வையிட்டு அழகை ரசித்துச்செல்வது வழக்கம் .

தமிழனின் ஓர் அற்புத படைப்பான காலிங்கரான் அணைக்கட்டு வரலாற்றில் முத்திரையிடப்பட்ட ஆவணம் . பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நீர்பாசன வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு வாய்க்கால்களை உருவாக்கிய திரு.லிங்கையன் எனப்படும் காலிங்கராயனை வணங்குகிறேன்.

பார்த்துவிட்டு எழுதுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு.

அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவில் பவளமலை ,கோபி





" விழிக்குத் துணை திருமென்மலர்பாதங்கள்
மெய்மை குன்றா மொழிக்குத்துணை முருகா என்னும்
நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன்
பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத்துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே."


அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில் ;
(Arulmigu sri muthukumarasamy tirukkovil ,PAVALAMALAI,cobichettypalayam ) :


ஈரோடு மாவட்டம் கோபிவட்டம் கோபிசெட்டியபாளையத்தில் (GOBI) பவளமலை எனும் அழகிய குன்றில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகர் ஆலயமாகும் .

எப்படிச்செல்வது :
கோபியில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் பி.கே .ஆர் மகளீர் கல்லூரி (P.K.R ARTS COLLEGE FOR WOMENS) பஸ் ஸ்டாபில் இறங்கி சுமார் ஒரு கி.மீட்டர் கிழக்கு நோக்கி சென்றால் பவளமலை அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவில் வருகின்றது. அடிவாரத்தில் பெரிய அரசமரமும் விநாயகரை தரிசனம் செய்து பயணிக்கலாம் .

மூலவர் :

அருள்மிகு முத்துக்குமாரசாமி (முருகர் ) அழகிய குன்றில் சுமார் 60படிகள் ஏறிச்சென்றால் திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்யலாம் . "அழகன் முருகன் " என்ற சொல்லிற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீ முத்துக்குமாரசாமியின் அழகு முகம் காண்போர்க்கு பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் .

பிரதி செவ்வாய் கிழமைகளில் காலை 06.00மணிக்கு திரிசதை அர்ச்சனை நடைபெறுகிறது. கிருத்திகை,சஷ்டி,காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.திருக்கோவில் கொடிமரமும் நவகிரக சன்னதிகளும் காண வேண்டிய ஒன்று .திருக்கோவில் வளாகத்தில் அருள்மிகு கைலாசநாதர் சன்னதி தரிசிக்க வேண்டிய ஒன்றாகும் .

திருக்கோவில் படி அல்லாது கார்,பைக் போன்ற வாகனங்களும் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டித்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. பாடல் பெற்ற ஸ்தலம் .பார்க்கவேண்டிய ஆலயம் .

கோபி பக்கம் வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவிலை
தரிசித்து விட்டு எழுதுங்கள் .

Tuesday, November 1, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,அம்மாபேட்டை பவானி வட்டம்






அருள்மிகு மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவில் (Arulmigu sokkanathar and meenatshi amman temple, ammapet post,bhavani taluk erode district);

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டையில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிவாலயமாகும்.அம்மாபேட்டை எனும் ஊர் பவானியிருந்து மேட்டூர் செல்லும் வழியில் 20 வது கி.மீட்டரில் அமைந்துள்ளது.

சேலம்மாவட்டம் மேட்டூரில் இருந்தும் 20கி.மீட்டர் தொலைவில் அம்மாபேட்டை உள்ளது.அந்தியூரில் இருந்தும் சுமார் 20கி.மீ தொலைவில் அம்மாபேட்டை உள்ளது. காவிரி ஆறு துவங்கி ஈரோடு மாவட்டத்தில் பயணித்து வருகையில் காவிரி படித்துறையில் உள்ள முதல் சிவாலயமாகும் .

திருக்கோவில் அமைப்பு :

திருக்கோவில் கிழக்கு நோக்கியும் , காவிரி வடக்கிருந்து தெற்காக ஓடுகிறது. பிரமாண்ட அரசமரத்தடி விநாயகர் தரிசனம் செய்து திருக்கோவில் முகப்பில் உள்ள ஆதிமூல கணபதியையும் ,வீரபத்தரர் சன்னதியும் வணங்கி ராஜ கோபுரம் தரிசித்து உள்ளே சென்றால் நந்திதேவர் தரிசனம் செய்து மூலவரான அருள்மிகு சொக்கநாதசாமியை லிங்க உருவில் தரிசனம் செய்யலாம் .

உயிர்புடன் உள்ள சிவனை தரிசனம் செய்ய நல்லதோர் ஸ்தலமாக அமைந்துள்ளது.திருக்கோவில் நல்ல அகலமாக தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. தட்சிணாமூர்த்த சன்னதி கன்னிமூலகணபதி ,மகாலட்சுமி சன்னதி, சூரிய சந்திரர்கள்,நவகிரகங்களென திருக்கோவில் எல்லா சிவாலயங்கள் போன்ற அமைப்பிலுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதி அருள்மிகு சொக்கநாதர் சன்னதியின் இடப்புறம் அழகாக அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மனின் உருவம் அழகாக அமைந்துள்ளது. ஸ்தலமரமாக பழங்கால வன்னி மரம் அமைந்துள்ளது. சிவாலயத்தில் வில்வமரம் வேண்டுமென்பதால் வன்னி மரமருகில் வில்வமரம் அமைந்துள்ளது.

பூஜைநேரங்கள் :

காலை 0600மணி முதல் மதியம் 0100மணிவரையிலும் ,மாலை 04.00மணிமுதல் 08.00மணி வரை திருக்கோவில் திறக்கப்பட்டிருக்கும் .விஷேச காலங்களில் முழுநேரமும் திறக்கப்பட்டிருக்கும் . வள்ளி,தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் ,பிரம்மா,துர்க்கை,சண்டிகேஸ்வரர் ,காலபைரவர் சிலைகள் பார்த்து தொழ வேண்டிய சன்னதிகளாகும் . அருகே திருக்கோவில் திருமண மண்டபமும் உள்ளது.

புது சிவாயலயங்கள் தேடி வழிபடும் சிவனடியார்கள் ,பக்தர்களுக்கு நிறைவு செய்யும் ஆலயமாக அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் இருக்கும் .முடிந்தால் ஓர் பிரதோஷ வேளையில் கலந்துவிட்டு எழுதுங்கள் ,

நட்புடன் குரு.பழ.மாதேசு

கோபி பச்சைமலையில் அருளும் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில்




முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே-யொருகைமுகன்
nம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் .

முருகப்பெருமானின் ஆலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் பல உண்டு . அதில் குறிப்பிடத்தக்க ஓர் அழகிய குன்றில் அமைந்த பச்சை மலை எனும் அழகிய ஓர் மலை கோபி வட்டம் மொடச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

கோபி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அழகான ஓன்று.பாடல் பெற்ற ஸ்தலமும் ஆகும் .

சுமார் 100படிக்கட்டுகள் ஏறினால் அழகிய அழகன் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் . அழகிய கொடிமரமும்,முகப்பில் ஏழு கலசம் கொண்ட பிரமாண்ட இராஜ கோபுரமும் அழகானது.

முன்பாக உள்ள வித்யா கணபதியாரை தரிசித்து அங்கிருந்து சென்றால் உள்ளே பெரிய மண்டபமும் நேரே சென்றால் முன்பாக காக்கும் கடவுளாக வீரபாகு ,வீரமகேந்திர் நிற்க உள்ளே மூலவராக நேர்த்தியாக அழகே உருவான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்யலாம் . சுற்றிலும் கருப்பு பளிங்குகற்களால் கட்டப்பெற்றுள்ளது.

பளபளக்கும் திருக்கோவிலை பார்க்கும் போதே மதிப்புமிகுந்த ஒன்றாக உள்ளது. கோபிசெட்டிய பாளையத்தின் பசுமை மிகுந்த அழகிய அமைப்பை திருக்கோவிலில் இருந்து ரசிக்கலாம் . திருக்கோவில் வளாகத்தில் சீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ மரகத வெங்கடேசப்பெருமாள் சன்னதியும் ,ஆதிவிநாயகர்,ஆதி ஸ்ரீமரகதீஸ்வரர்,மரகதவள்ளி சன்னதிகளும், தரிசித்து அருள்பெறவேண்டிய ஒன்றாகும் .

வள்ளி ,தெய்வானை உடனமர் கல்யாணசுப்பிரமணியர் சன்னதியை வணங்க திருமணத்தடைகள் அகலும்.சுபகாரியங்கள் கைகூடும் . அருணகிரிநாதர் சன்னதிகளும் ,இடும்பன் சன்னதிகளும் பார்த்து தரிசிக்கலாம் . பிரமாண்ட மகா மண்டபத்தில் குருபகவான், நவகிரக சன்னதிகளும் உள்ளன. நவகிரக சன்னதிகளில் சற்றே வித்தியாசமாக நடுவே சூரியபகவானுக்கு பெரிய சிலையும் ,சுற்றிலும் மற்ற நவகிரகங்களும் மற்ற கோவில்களில் உள்ளதைப்போல அல்லாமல் அழகாய் அமைத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .


கிருத்திகை,சஷ்டி,பெளர்ணமி,அம்மாவசை, நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .செவ்வாய் கிழமைகளில் விஷேச பூஜை நடைபெறும் .சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் சிறப்பாக செய்யப்படுகிறது. மலைக்கோவில் வாகனங்கள் மேலே செல்ல ஏதுவாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. பச்சை மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய வாழ்வில் தடைகள் நீங்கி உயர்வு பெறுவது கண்கூடு.


அழகிய முருகர் ஆலயங்களில் ஒன்றான பார்க்க வேண்டி ஸ்தலங்களில் ஒன்றான பச்சை மலை முருகரை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அழைக்கும் அன்பன்


குரு .பழ மாதேசு. குருவரெட்டியூர் .

Sunday, October 30, 2011

மோதிரக் கையால் குட்டு





வலைப்பூ தொடங்கி ஒரு வருடமாகிவிட்டது. எதைப்பற்றி எழுதுவது என யோசித்தபோது தோன்றியதை விட , எதைப்பற்றியாவது எழுதி அடுத்த தலைமுறையை தவறான வழிக்கு இட்டுச்சென்று விடக்கூடாது என்ற எண்ணமே அதிகம் .

சரி வலைப்பூவில் எழுதுகிறோம் .அது நல்ல இடுகையா என எப்படி அறிந்து கொள்வது ? யாராவது சொன்னால் தானே தெரியும்.. ? சொன்னார் அவர் தான் " பதிவர் தென்றல்" என பதிவர்களுக்காக தொடங்கப்பட்ட மாத இதழ் ஆசிரியர் திரு அன்புமணி .

SEPTEMPER- 2011 பதிவர் தென்றல் இதழில் நம் வலைத்தளத்திற்கு (www.kavithaimathesu.blogspot.com) மோதிரக்கையால் குட்டு வாங்கினாற் போல நமது வலைத்தளத்தின் இடுகையான " நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா..?" என்ற இடுகை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவர் தென்றல் இதழில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள்.


சந்தோஷமான செய்தி ,நீங்களும் வலைத்தளத்தில் எழுதுபவர் எனில் உங்கள் படைப்புகள் இடம் பெற வேண்டுமானால், தங்களின் வலைத்தள முகவரி,மெயில் முகவரி,உங்களின் இல்ல முகவரியை மின் அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:


thambaramanbu@gmail.com

பதிவர் தென்றல் மாத இதழ் ஆசிரியர் திரு.அன்புமணி

அலைபேசி - 98409-92769

பதிவர் தென்றல் முகவரி :

ஆசிரியர் ஜெ.அன்புமணி, பதிவர் தென்றல் 163,திருவள்ளுவர் தெரு, கிழக்குதாம்பரம் ,சென்னை -600059

வலைத்தளம் : http://anbuvanam.blogspot.com மற்றும் http://thagavalmalar.blogspot.com ஆகிய இணையத்தை காணுங்கள் .

நமது இடுகையை வெளியிட்ட பதிவர் தென்றல் ஆசிரியர் அன்பு மணிக்கு வாழ்த்துக்கள் கூறி இத்துடன் முடிக்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

சவால் சிறுகதை போட்டிக்கு வாழ்த்துக்கள்


வலைப்பதிவாளர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நடத்தும் "சவால் சிறுகதைப்போட்டி - 2011 " அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை தரமான சிறுகதை எழுத வரவேற்கும் ஓர் புதிய முயற்சி. இரண்டாவது வருடத்தில் அடி எடுத்துவைக்கும் சவால் சிறுகதைப்போட்டியை அமைப்பினர் வலைப்பதிவாளர்கள் திரு .பரிசல்காரன் மற்றும் திரு.ஆதிமூலகிருஷ்ணன் (தாமிரா) மற்றும் யுடான்ஸ் வலைத்திரட்டி ,யுடான்ஸ் டி.வி அமைப்பினர்கள் அனைவருக்கும் , எனது பாரட்டுக்கள் .

கதைக்காக ஓர் படத்தை தேர்வு செய்து ,அந்தப்படத்தின் துண்டுசீட்டுகளை வைத்தும் ,படத்தை உள்வாங்கியும் சிறுகதை எழுதச்சொன்னார்கள் . நானும் சேலஞ்ச், சித்தரின் எழுத்துக்கள் என்ற தலைப்பில் இரண்டு சிறுகதைகளை அனுப்பி உள்ளேன் .எனது வலைத்தளத்தை பார்வையிடும் நீங்கள் எமது கதையை படித்துவிட்டு நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்கள் .

எமது சிறுகதை பிடித்திருந்தால் ,நன்றாக இருந்தால் சிறுகதைக்கு கீழே உள்ள like பட்டனை தட்டிவிட்டு செல்லுங்கள் . கதைக்கு நீங்களும் 10 மதிப்பெண் போடலாம் . மீதி 90மதிப்பெண்களை நடுவர் குழு ஆராய்ந்து தீர்மானித்து நவம்பர் 15 ஆம் நாள் சவால் சிறுகதையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் .

கதையை படித்துவிட்டு எமக்கு தேவைப்படுவதெல்லாம்

உங்கள் கருத்துரையே மறவாமால் இட்டுச்செல்லுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்

Saturday, October 29, 2011

சித்தரின் எழுத்துக்கள் ( சவால் சிறுகதைப்போட்டி-2011 )

ஐ.ஜீ அலுவலகம். ஐ.ஜீ ரவியை பார்க்க கதவை திறந்து உள்ளே வந்த எஸ்.பி கோகுல் க்ரைம் பிராஞ்ச் ஓர் சல்யூட் அடிக்க வாங்க எஸ்.பி கோகுல் ஓர் முக்கியமான தகவல் சேகரிக்கற விஷயமா உங்களை வரச் சொன்னேன் சார் சொல்லுங்க என்றவாறு ஐ.ஜீ ரவியை பார்த்தவாறு எஸ்பி கோகுல் இருக்க ஓர் பைல் ஒன்றை எடுத்துபார்த்துவிட்டு நிமிர்ந்தஐ.ஜி" ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் நம்மகிட்ட ஓர் உதவி கேட்டுருக்காங்க ..!


அது சம்பந்தப்பட்ட விபரங்கள் இந்த பைல்ல இருக்கு இது சம்பந்தமா உங்களுக்கு உதவ ஓர் இன்பார்மர் தயார் பண்ணிருக்கேன் அவன் பேர் விஷ்ணு அவனோட விபரங்கள் இந்த பைல்ல இருக்கு உங்களுக்கு சந்தேகம்னா எனக்கு எப்ப வேணா கூப்பிடலாம் "என தன் உரையை முடித்த ஐ.ஜரவிக்கு ஓர் சல்யூட் அடித்து பைலை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

எஸ்.பி கோகுல் இந்த பைலில் என்ன தான் இருக்கும்.? ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் போலீஸ் உதவி தேவைப்படுகிறதா ஏன் ? என்பது உட்பட மனதில் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு யோசித்துக் கொண்டிருக்கையில் எஸ்.பி கோகுலின் கார் தன் வீட்டின் முன் வந்து நின்றது உள்ளே வந்ததும் தனியறையில் உட்கார்ந்த எஸ்.பி.கோகுல் பைலை புரட்டி பார்த்தார்.. அதில் கண்ட வாசகங்கள் பின்வருமாறு இருந்தன

சேலம் பாலமலை அடிவாரத்தில் அமைந்த பாலமலை சித்தர் ஆசிரமம் என்ற ஒன்று உள்ளது .மனித உலகிற்கு இந்த ஆசிரமம் பிரபலமாக அறியாவிட்டாலும் ,பாலமலை சித்தரின் சித்த மருத்துவத்தின் மூலம் மருத்துவ உலகை திரும்பி பார்க்க வைத்துவிட்டார். தற்காலத்தில் மனிதனை வேகமாக கொன்று வரும் எச்.ஐ.வி எய்ட்ஸ்க்கு தனது தளராத முயற்சியால் மருந்து கண்டு பிடித்து சிலருக்கு சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் குணமாகி தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள்..

அந்த மூலிகை பற்றியும் அதன் தாதுக்கள் கலந்த விபரங்களேயும் ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்த சித்தர் கடந்த வாரம் தள்ளாத வயதினால் இறந்துவிட்டார் உதவிக்கு கூட ஆள் வைத்துக்கொள்ளாத சித்தர் இறந்த பின்பு அவர்எச்.ஐ.வி எய்ட்ஸ்க்கு மருந்து தயாரித்த விதம் ரகசியம் காக்கப்பட்டதால் இன்று வரைஅறியமுடியாத தாக உள்ளது .

எங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் இந்த ரகசியங்கள் சித்தர் எங்குவைத்துள்ளார் ?

அதன்விபரங்கள் என்ன ? என்பதைஇந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு தேவைப்படுகிறது.! சித்தர்யார்என்கிற விபரங்களும் ? தேவைப்படுகிறது. முக்கியமான விஷயம் இந்த உதவியை உங்கள் காவல்துறை செய்வதன் மூலம் வரும் காலத்தில் எச்.ஐ.வி இல்லாத இந்தியாவை உருவாக்க உதவி செய்வதாக இருக்கும் இப்படிக்கு மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா


அடுத்த பக்கத்தில் இன்பார்மர் விஷ்ணுவின் முகவரியும் செல்போன் நம்மரும் இருந்தது படித்து முடித்த எஸ்பி கோகுல் இந்த விபரங்களை வைத்துக்கொண்டு எப்படி கண்டு பிடிப்பது என யோசித்துக்கொண்டு இருக்கையில் விஷ்ணுவின் செல் நம்பர் கண்ணில் பட்டது . ஓ.கே விஷ்ணுவிடம் பேசினால் சில தகவல் இருக்காலாம் என எண்ணிய எஸ் பி தனது செல்போனில் விஷ்ணுவை அழைத்தார்

ரிங்ஆனது

விஷ்ணு புது நம்பரா இருக்கே என யோசித்தவாறு எடுத்து விஷ்ணு

ஹலோ..!

ஹலோநான் எஸ் பி கோகுல் பேசறேன்.
ஐஜீ ரவி பாலமலை சித்தர் ரகசியம் சம்பந்தமாக உங்களிடம் சில விபரங்கள் இருப்பதாக சொன்னார் அதைச் சொல்ல முடியுமா ?

சார் நான் ஒரே ஒரு க்ளு மட்டும் பாலமலை சித்தர் ஆசிரமத்துல எடுத்தேன் . இப்ப வண்டில போயிட்டு இருக்கேன். வீட்டுக்கு போய்ட்டு உங்களுக்கு எஸ்.எம் .எஸ் ல அந்த குறியீட்டை அனுப்பறேன் சார் . ஓகே என்றவாறு போனை கட் செய்தார் எஸ்பி கோகுல் .



அடுத்த நிமிடம் ஐஜீ இன்பார்மர் விஷ்ணுவை அழைத்து எஸ் பி கோகுல் உனக்கு போன் செய்து குறியீடு கேட்டால் சரியான குறியீடு கேட்டால் கொடுக்காதே ! மாற்றிக்கொடு காரணம் கேட்காதே . என்றார் சரிங்க சார் என்றவாறு குழம்பி போனை வைத்தான் விஷ்ணு



20நிமிடத்தில் எஸ்பி கோகுலுக்கு ஓர் எஸ் எம் எஸ் வந்தது . அதை திறந்து பார்த்தார் எஸ்பி அதில் MR கோகுல், SW H2 6F இதுதான் குறியீடு .விஷ்ணு . தனது டேபிளில் ஓர் துண்டுசீட்டில் எழுதி வைத்துக்கொண்டு யோசிக்கஆரம்பித்தார்


அடுத்த நிமிடம் ஐ.ஜீக்கு செல்லுக்கு ஓர் எஸ்எம் வந்தது. அதில் சார் நான் எஸ்பி கோகுலிடம் தவறான குறியீட்டை தான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம் என இருந்தது படித்துவிட்டு மெளனமாய் சிரித்தார் ஐஜீ

தன்னிடம் கொடுக்கப்பட்ட முக்கியமான பணியை அறிந்த எஸ்பி கோகுல் மொபைல் டிரேஸிங் வசதி மூலம் ஐ.ஜிக்கு விஷ்ணு அனுப்பிய எஸ்எம் எஸ் ஐ படித்தார் .சற்றே அதிர்ச்சி அடைந்தவாராக ஏன் இப்படி ?விஷ்ணு தவறான குறியீட்டை கொடுக்கவேண்டும் என யோசித்தவாறு இருக்க அந்தக் குறீயீட்டின் அர்த்தம் தேட ஆரம்பித்தார் .

விளங்கவேயில்லை .அடுத்த நாள் தனியாக பாலமலை சித்தர் ஆசிரமம் சென்று ஓர் ரிப்போர்ட்டர் போல விசாரித்து விட்டு வந்தார் பலனில்லை. சித்தர் எட்டாம் வகுப்புவரை படித்தவர் சொந்த பந்தம் யாருமில்லை என்பதை தவிர உபயோகமான குறிப்பு ஏதும் இல்லை.

சரி மனதில் உதித்த கேள்விகளை ஐ.ஜியிடம் கேட்டுவிடலாமென எண்ணி ஐ.ஜி ரவிக்கு போன் செய்தார் .

ஹலோ ஐஜீ ரவி ஹியர்,

சார் நான் எஸ்பி கோகுல் பேசறேன்.

நேரடியா விஷயத்திற்கு வந்துடறேன் விஷ்ணுவோட மொபைல் டிரேஷ் பண்ணுனப்ப உங்களுக்கு ஓர் எஸ்எம்எஸ் அனுப்பிருக்கிறத பார்த்தேன் 'ஏன் எனக்கு குறீயீட்ட தப்பா அனுப்ப சொன்னீங்க??

சிறிது மௌனத்திற்கு பின்

எய்ட்ஸ்கிற கொடிய நோய்க்கு மருந்தை சித்தர் கண்டுபிடிச்சிருக்கலாம் . அது சமுகத்திற்கு நல்லதுதான். ஆனால் இப்ப எய்ட்ஸ் இருக்கிற பயத்தால தான் மனிதன் ஒழுங்கமா பயத்துல இருக்கிறான்னு எனக்குபட்டுச்சு அதான் THAPPA சொன்னேன் என விளக்கினார் ஐ.ஜீ

இருக்கலாம்சார். ஆனா அடுத்த தலைமுறை குழந்தைகள் அப்பாவியா சாகறாங்களே அதுக்காகவாவது நாம இந்த மருந்து இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கனும் ' சரியான குறியீட்டை சொல்லுங்க சார்

சரி குறிச்சிக்கோ என மனம் மாறி ஐஜீ சொன்னார்

SW2HF6

ஆல்தபெஷ்ட் எஸ்பிகோகுல் இதான் உண்மையான குறீயீடு.

4ஆம் நாள் பாலமலை சித்தரின் ஓலைச்சுவடியுடன் பாதுகாக்கபட்ட பெட்டியுடன் ஐஜீ அலுவகத்திற்கு வந்தார் ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு எஸ்பி கோகுலை பாராட்டினர்.


ஐஜீ பொறுமைதாங்காதுகேட்டார்.SWக்கு(SIDDES WARAN )என்றும்2Hக்கு(HILLS 2)என்றும்F6க்கு (feet 6)என்றும் அர்த்தம்.
சித்தரின் ரகசிய பெட்டியை தன் இறப்பை முன்னமே அறிந்து பாலமலையில் உள்ள சித்தேஷ்வரன்என்னும் மலைக் கோவிலில் தான் தவம்செய்த இடத்தில் இந்த அரிய ஓலைச் சுவடியை பாதுகாத்து வைத்துள்ளார்.(பால மலையில் உள்ள ஒரு கோவில் தான் சித்தேஷ்வர மலை) அந்த குறியீட்டின் மூலம் இடத்தை கண்டுபிடித்து கொண்டு வந்து விட்டேன் சார் Eன்றார் எஸ்பிகோகுல் சபாஷ் என தட்டிக்கொடுத்தார் ஐஜி

Thursday, October 27, 2011

சேலன்ஜ் (" சவால் சிறுகதைப்போட்டி -2011)

ஆள் அரவமில்லாத சேலத்தில் இருந்து கோவை செல்லும் பைபாஸ்ரோட்டின் ஓரத்தில்அமைந்த தனி வீட்டில் பிரகாஷ் உட்கார்ந்திருத்தான்.
பிரகாஷ் யாருமல்ல சேலத்தில் பெண்கள்,சிறுமிகளை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்கும் கும்பலின் தலைவன்.

போலீஸ்க்கு தகவல் சொன்னால் தடயமில்லாமல் கொலை செய்து காவிரி ஆற்றில் உருத்தெரியாமல் விட்டுவிடுகிற நிகழ்காலகுற்றவாளி

அந்த வீட்டில் பிரகாஷ் கூடவே நன்கு மாடு,பன்றிகளாய் சாப்பிட்டு (சமைத்துதான் )உடம்பை வளர்த்து தலைவன் பிரகாஷ் சொல்வதை கேட்க நான்கு பேர்கள் அந்த வீட்டில் கூடவே ஓர் வசதியான குடும்ப பர்பியூம் வாசனையில் 20வயதானலும் 16 வயதிலேயே இருக்கும் இளம்பெண் வாயை துப்பட்டாவால் கட்டியநிலையில் கை,கால்களுக்கு கயிறு கட்டியவாறு பயத்தால் மயங்கிலையில் ஓர் ஓரமாக கிடந்தாள் சுகந்தி .

பிரகாஷ் ஓர் தடி மாடு போல இருந்த ரவுடியை கூப்பிட்டான் "டேய் ! நம்ம இன்பார்மர் விஷ்ணு நம்மகிட்டயே காசு வாங்கிட்டு நம்மள போலீஸ்கிட்ட காட்டிக் கொடுத்துடப்போறான் .. அவன்ஆள்எப்படி?

"அண்ணே அவன் நம்ம ஆளுண்ணே..! நம்மள போலீஸ் கிட்ட காட்டி கொடுக்கமாட்டான் !அவன்எஸ்.பிகோகுல் கிட்டநெருக்கமா இருக்கிறதே நமக்கு தகவல் சொல்லத்தான் ..!


ஆமா ..! அப்படி ஏதாச்சும் பண்ணுனான்னா அவன் குடும்பத்தை காலி பண்ணிட ஆள்வெச்சிடு.!

சரிண்ணே என்றவாறு தலையாட்ட பிரகாஷின் செல்போன்எஸ்.எம்.எஸ் ஒலித்தது.அது இன்பார்மர் விஷ்ணு அனுப்பியது.








அதில் " சார் எஸ் .பிகோகுல் இந்த பொண்ணு கடத்துன விவகாரத்துல டீப்பா இன்வஸ்டிகேசன் பண்ணீட்டு இருக்கார் . ஆனா நான் எஸ் பி கோகுலிடம் குழம்பி போக தவறான தகவல் குறியீட்டை கொடுத்திருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என அதில் எஸ் எம் எஸ் இருந்தது.

சந்தோஷத்தில் பிரகாஷ் பிற ரவுடிகளிடம் "டேய் விஷ்ணு இருக்கிற வரைக்கும் போலீஸ் நம்ம கிட்ட வராது " ஓகே பணம் எவ்வளவு வேணும்ங்கிறத நாளைக்கு இந்த பிள்ளையோடஅப்பன் கிட்டபேசிக்கலாம் கார்ல கிடக்கற சரக்க கொண்டு வாடா ! சாப்பிடலாம் என்றவாறு ஹாயாக சோபாவில் சாய்ந்தான் .


எஸ் அலுவலகத்தில் அவசரமாக ரகசியமாக கூட்டப்பட்ட மீட்டிங் .


கிரைம் புலி என்று சேலம் மாவட்டக் காவல்துறையினயரால் பாராட்டை வாரம் ஒருமுறை பெறுபவர் . எஸ் பி கோகுல் முன்பு ஏ.டி.எஸ்.பி மாதேஸ்வரன் , டி.எஸ்.பி சிவசங்கரன் மூவரும் அமர்ந்திருந்தனர் .

எஸ் .பி கோகுல் பேச ஆரம்பித்தார்.

"நம்ம அமைச்சர் பொண்ணு சுகந்தி காணாம போயி 12 மணி நேரம் ஆச்சு..! எல்லா இடத்தில இருந்தும் போன்ல பிரசர் .! நம்ம அமைச்சர் குழந்தை மாதிரி அழறார் . ஏதாச்சும் க்ளு கிடைச்சுதா மாதேஸ்..?

ஏடி.எஸ்.பி மாதேஸ் தனது பைலை புரட்டியவாறு " சார் பொண்ணுங்களை கடத்தற அக்கயுஷ்ட் லிஸ்ட்ல 5 கும்பல் இருக்கு சார் ..! இப்ப மூன்று டீம் இடத்தை மாத்திட்டாங்க சார் ! அவங்களை வாட்ச் பண்ணி ஓர் டீம் தேடிட்டிருக்கு சார் ! இரண்டு டீம் கோவை மத்திய சிறையில் இருக்காங்க ! ஆனா ஓர் சின்ன க்ளு நாம நம்புற இன்பார்மர் விஷ்ணு ஒர் டீம் கூட தொடர்பு இருக்கிறதாக ஓர் தகவல் இருக்கு சார் ..!


எஸ்.பி கோகுல் ஆச்சரியமாக ஏடி .எஸ்.பி மாதேசை பார்த்து விட்டு " அப்ப விஷ்ணுவையும் குளோஸ் வாட்ச் பண்டிறீங்களா..?

மாதேஸ் சற்றே உறுதியுடன் பேசினார் " ஆமாசார் ! அவன் நமக்கு வேலை செய்யற மாதிரி நம்ம டவுன் இன்ஸ்பெக்டர் ராஜீவ் கூட சுத்திட்டு இருந்துட்டு இப்பதான் வீட்டுக்கு போறானாம் !

எஸ்.பி கோகுல் தொடர்ந்தார் .

ஓ.கே அவனை அப்ப டீப்பா வாட்ச் பண்ணுங்க ! நம்ம மேல அவனுக்கு டவுட் வந்திடக்கூடாது.

இன்பார்மர் விஷ்ணு லிங்க் வைச்சிருக்கிற அக்யூஸ்ட் டீம் யாரு?

மற்றோர் பைலை எடுத்துக்காட்டிய ஏடி. எஸ் .பி மாதேஷ் சார் இவன் பேரு பிரகாஷ் .சேலம் அம்மாபேட்டை பக்கத்துல வீடு .இவன் இப்போ வீட்ல இல்லையாம் .அவன் வீட்டை வாட்ச் பண்ற எஸ் .ஐ புகழ் மாறன் அங்க இருந்து தகவல் சொன்னார் சார் !


அப்போது எஸ் .பி கோகுல் செல்போன் எஸ்.எம். எஸ் ஒலி ஒலித்தது .

அதில் ஓர் எஸ் எம் எஸ் SW H2 6F இதுதான் குறியீடு அதை ஏடிஎஸ்பி மாதேஸ் வாங்கிப்பார்த்தார் . சார் இதை நான் நோட் பண்ணிக்கறேன் .என்ற மாதேஸ்
'' சார் இன்பார்மர் விஷ்ணு யாருக்கு போன் செய்தாலும் டெக்கினிக்கல் எஸ் ஐ பார்த்தீபனை வாட்ச் பண்ணச் சொல்லிருக்கேன்''

. எஸ் பி கோகுல் வெரி குட் ஏடி எஷ் பி இப்ப எல்லா ஸ்டேசன்லயும் இன்ஸ்பெக்டர்ஸ் அலார்ட் பண்ணாடுங்க !

ஓகே சார் ! மறுபடி எஸ்.பி கோகுலின் செல்போன் ஒலித்தது .

அதில் விஷ்ணு இன்பார்மர் புகைப்படத்துடன் அழைப்பு

எஸ் பி கோகுல்போன் எடுத்து விஷ்ணுதகவல் ஏதாச்சும்இருக்கா?

சார் நான்முன்புஅனுப்பின எஸ்.எம் .எஸ் ஸ்டேட் ஹ வேஸ் H2 ல 6பீட்ல ஓர் கார் நிற்க்குது. இது சேலம் டு ஆத்தூர் ரோட்ல இருக்கு .பார்க்கச்சொல்லுங்க !அத விளக்கமா சொல்லத்தான் கூப்பிட்டேன் சார் !

உடனே எஸ்.பி கோகுல் தேங்ஸ் விஷ்ணு என்னோட ஆபீஸ் வரைக்கும் வந்திட்டு போ ஓர் வேலை இருக்கு!

அதற்கு விஷ்ணு "உடனே ஒரு மணி நேரத்தில் வர்றேன் சார் " என்றவாறு எஸ்.பியை பார்க்க எஸ்.பி அலுவலகம் கிளம்பினான்.

எஸ்.பி கோகுல் டெக்னிக்கல் எஸ் .ஐ பார்த்தீபனை போனில் அழைத்து உடனே இன்பார்மர் விஷ்ணுவின் இன்றைய தினம் யாருக்கெல்லாம் போன் செய்தார் என்ற விபரங்களை கொண்டு வரச்சொன்னார்.


அதே வேளையாக காலையில் இருந்து வாட்ச் செய்து கொண்டிருந்த எஸ்.ஐ பார்த்தீபன் கால்லிஷ்ட் உடன் எஸ்.பி கோகுல் முன்பு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முன் நின்றார் .

"பார்த்தீபன்,இன்பார்மர் விஷ்ணுசெல்போன்லயார்அதிகமாதொடர்புவச்சிருக்காங்க?

சார் பிரகாஷ்ன்னு ஓர் பழைய குற்றவாளி அவன் கூட 30 தடவை பேசியிருக்கான் பிரகாஷ் டவர்லொக்கேசன் சேலத்திலிந்து கோவை செல்லும் வழியில் 10 கி.மீட்டரில் காட்டுது சார் .! அதுபழைய குற்றவாளி பிரகாஷ் உடைய குரல்தான் என சோதித்து சரியாக சொல்ல வெரிகுட் தேங்க்ஸ் என்றவாறு

எழுந்த எஸ்பி கோகுல் டிஎஸ்பி சிவசங்கரனிடம் கீழ் புளோர்ள உங்க டீம் கூட வெயிட் பண்ணுங்க.அவனை நம்ம டவுன்ஸ்டேசன்ல வச்சு நல்லா கவனிங்க!

என்றார் வந்த விஷ்ணுவை தூக்கிப்போய் கவனித்தார் டிஎஸ்பி.
உண்மையை ஒப்புக்கொண்டான்.வோறொரு போலீஸ் டீம் கோவை ரோட்டில் பறந்தது.

அடுத்த நாள் காலைச்செய்தியின் தலைப்பு

"அமைச்சர் மகள் மீட்பு.பழங்குற்றவாளி
பிரகாஷ் உட்பட 4 பேருடன் போலீஸ் இன்பார்மர் விஷ்ணு கைது

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...