




திருமுருகர் துதி:
அஞ்சுமுகந் தோன்றின் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும்
தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்
அருள்மிகு திண்டல் ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில் . ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் உள்ளது.எதிரே அருகே திண்டல் வேளாளர் மகளீர் கல்லூரி (thindal vellar womens college) அமைந்துள்ளது .
அடிவாரத்திலுள்ள அரசமர விநாயகரை வணங்கி அருகே மற்றொருவிநாயகரை வணங்கி சில படிக்கட்டுகள் ஏறினால் இடும்பர் சன்னதி வருகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 100 படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் நாம் அடைவது கொடிமரம் வணங்கி, பின்பு ராஜ கோபுர அழகை தரிசனம் செய்து உள்ளே பிரமாண்ட மண்டபத்தில் மூலவர் ஸ்ரீ வேலாயுதசாமியை (ஸ்ரீ முருகர் )தரிசிக்கலாம்.
ஈரோட்டு நகரின் அருகில் அமைந்த ஒரே அழகான மலைக்குன்று அதில் முருகப்பெருமான் ஆட்சி செய்து வருகிறார் . அழகாக வடிவமைக்கப்பட்ட திருக்கோவில் வலப்புற விநாயகர் என சிறப்பான அமைப்புடன் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் தங்கத்தேர் பார்ப்பதற்கு அழகான ஒன்றாகும் .
திண்டல் ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில் மலையை சுற்றிலும் அழகான புல்வெளிகள் ,கலைநயத்துடன் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் ,அழகான பூங்கா போன்ற அமைப்பை மலையை சுற்றிலும் அமைத்துள்ளார்கள் .
பிரதிவார செவ்வாய் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் ,கிருத்திகை ,சஷ்டி,அம்மாவசை,பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது . ஈரோடு நகர மக்கள் வணங்கும் முக்கிய திருக்கோவில்களில் திண்டல் வேலாயுதசாமி திருக்கோவிலும் ஒன்று. பார்க்கவேண்டிய முருகர் ஆலயங்களுள் இதுவும் ஒன்று.
திண்டல் முருகரை வணங்க திருமணத்தடை , காரிய வெற்றி,நன்மக்கட்பேறு , கிடைக்கும்மென்பது பெரியோர்களின் கூற்று.
திண்டல் ஸ்ரீ வேலயுதசாமியின் வலைப்பக்கம் : www.thindalmurugan.tinfo.in
ஈமெயில் முகவரி: thindalmurugantemple@gmail.com
ஈரோட்டுப்பக்கம் வந்தால் இறைவனை தரிசித்து விட்டு எழுதுங்கள் .
நட்புடன் குரு.பழ.மாதேசு
No comments:
Post a Comment