📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Saturday, November 12, 2011

sri malligeswarar tirukkovil,kothapalayam (karattupalayam) ,edapadi taluk






ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில்

அண்மையில் திருக்கோவில் விபரங்கள் சேகரிக்க காவேரி ஆற்றங்கரையின் படுக்கையில் அமைந்துள்ள பூலாம்பட்டி என்னும் அழகிய ஊரைக்கடந்து சித்தூர் வந்தடைந்தோம் , சித்தூரில் அமைந்த ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில் வணங்கிவிட்டு, அருகே உள்ள சிவாலயங்களைப் பற்றி விசாரித்தபோது அங்கே ஸ்ரீ மல்லிகேஸ் வரர் திருக்கோவில் இருக்கிறது.

எடப்பாடி சித்தூரில் இருந்து 7 கி.மீட்டர் என்க சரி பார்த்து விட்டு வரலாம் எனக்கிளம்பினோம் ..

இடையே மிகப்பெரிய முனிஸ்வரர் சிலையை பார்த்து வியந்துவிட்டு சித்தூரில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் வழியில் கொத்தா பாளையம் என்னும் ஊரில் கரட்டுப்பாறை என்னுமிடத்தில் ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில் அடிவாரம் வந்தடைந்தோம் .

பழங்கால கோவிலை சுத்தம் செய்து தயார் செய்துள்ளார்கள் .தற்போது மண் சாலை அமைத்துள்ளார்கள் . இருசக்கர வாகனம் மட்டும் மலை மேல் செல்கிறது. குன்று இருக்குமிடத்தில் குமரன் தானே இருக்கவேண்டும் . ஆனால் இங்கே சிவபெருமான் மல்லிகேஷ்வரராக அமைந்துள்ளார் .

சிறிய குன்று போன்ற அமைப்பில் உள்ள சிறிய மலையில் சிவன் அமைந்திருப்பது சிறப்பாகும் . ஒரு சிவனடியார் குன்றின் மேல் அமர்ந்த சிவாலயம் சேலம் மாவட்டத்தில் அமைந்து இருப்பது இங்குதான் எனசொன்னார் . பழைய திருக்கோவிலாக இருந்த ஸ்ரீ மல்லிகேஷ்வரர் திருக்கோவில் பார்க்க அழகாக தயராகி வருகிறது. ஓரு வருட காலத்தில் திருப்பணி நிறைவடையும் .

ஆன்மீக அன்பர்கள் நேரில் சென்று ஸ்ரீ மல்லிகேஷ்வரரை தரிசித்து திருப்பணிக்கு உதவலாம் . அண்மையில் நடந்த அன்னாபிஷேக விழாவில் பங்கு கொண்டுவிட்டு லிங்க உருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மல்லிகேஸ்வரரை வணங்கி விட்டு வந்தோம் .

பஸ் வசதி அதிகம் இல்லாத கிராமம் என்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வது சிறப்பு . சிறிய மலைக்கோவில் தான் சிவாலயம் தேடிச் செல்பவர்களுக்கு நிறைவளிக்கும் .


சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்தில் சித்தூரில் இருந்து நாச்சி பாளையம் வழியில் கொத்தாபாளையம் (கரட்டுப்பாளையம் )என்னும் ஊரில் இருக்கும் ஸ்ரீ மல்லிகேஷ்வரரை நேரில் சென்று பார்த்து வணங்கி விட்டு எழுதுங்கள் .

4 comments:

Agarathan said...

நண்பா உங்களது ஆன்மீக ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

M. நேத்ரா மாதேஸ்வரன் குருவரெட்டியூர் - 638504 said...

thank you friend

M. நேத்ரா மாதேஸ்வரன் குருவரெட்டியூர் - 638504 said...
This comment has been removed by the author.
M. நேத்ரா மாதேஸ்வரன் குருவரெட்டியூர் - 638504 said...
This comment has been removed by the author.

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்