Tuesday, February 15, 2011

விஜயமங்கலம் அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயம்



விஜயபுரி கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர் ஆலய வழிபாடு :-

இறைவன் :
ஸ்ரீ நாகேஸ்வரர்
இறைவி: கோவர்த்தனாம்பிகை

அமைந்த ஊர்:
விஜயமங்கலம் ,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
திருக்கோவில் சிறப்பு :
தமிழகத்தின் மிகப்பழமையான ஊர்களில் கொங்கு நாடு எனப்போற்றப்படுகிற மற்றும் பழங்கால வரலாற்று ஏடுகளில் புரட்டினால் விஜயநகரப்பேரரசு அதன் தலைநகரம் விஜயபுரிதான் தற்போது விஜயமங்கலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

காலங்களின் உருமாற்றங்கள் இப்பகுதியை மாற்றினாலும் இறை சன்னதிகள் மட்டும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது மிகச்சிறப்பு. பழங்கால மன்னர்களும் புலவர்களும் நன்னூல் எழுதிய புலவர் பவணந்தி முனிவர் என பலரும் வந்த புண்ணிய பூமியில் வீற்றிருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ நாகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.எல்லா சிவாலயங்களை விட இது சற்றே மாறுபட்டது

விஷேச மானது.

1. சுயம்புவாக சிவபெருமான் காட்சி தருகிறார்
2.மேற்கு பார்த்தவாறு காட்சி அளிக்கிறார் . (பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்கும்)
3.பழங்கல்வெட்டுகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. இவ்வாறு விஜயமங்கலத்தை (vijayamangalam)பார்த்தவாறு அருள்புரியும் இறைவனுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஆவன செய்யப்படுகிறது.

உங்களால் முடிகிற போது நேரில் சென்று தரிசியுங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம் சேலத்திலிருத்து ( salem)கோயம்புத்தூர் (coimbatore) செல்லும் சாலையில் 90கி.மீட்டரிலும் ஈரோடு (erode )மாவட்டம் பெருந்துறையில் (perundurai)இருந்து 10 கி.மீட்டரிலும் அமைந்துள்ள இப்பழம்பெரும் நாகேஸ்வரர் ( nageswarar) ஆலயத்தை தரிசனம் செய்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழ இறை சித்தம் வேண்டுகிறேன்.

அருகிலுள்ள ரயில் நிலையம் ஈரோடு (erode) 30 கி.மிட்டர்,

மேலும் தகவல் வேண்டுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

Monday, February 7, 2011

அருள்மிகு அல்லால் ஈஸ்வரர் வடிவுடையம்மன் திருக்கோவில்


அல்லால் ஈஷ்வரர், வடிவுடையம்மன்


திருக்கோவில் அமைவிடம் :


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் ஈங்கூரில் அமைந்துள்ளது .

மூலவர் : அல்லால் ஈஷ்வரர்

அம்பாள்: வடிவுடைஅம்மன் .

ஸ்தல விருட்ஷம்: வில்வம் .
பெயர் காரணம் அல்லால் ஈஸ்வரர் என்றால் அல்லல்களை களைபவர்
எனப்பொருள்படும்.
ஸ்தல வரலாறு மற்றும் சிறப்புகள் :

கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஈஷ்வரர் ஆலயங்களில் இதுவும் ஒன்று.இங்கே சிவபெருமான் மேற்கு பார்த்த நிலையில் இருப்பது ஒர் தனிச்சிறப்பு, பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கிய இருக்கின்றன. அவ்வகையில் இக்கோவில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு அவ்வகையில் அல்லால் ஈஸ்வரரை தரிசனம் செய்தால் 12 ஈஸ்வரர் ஆலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்குமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்

.இக்கோவில் 50 ஆண்டுகளுக்களுக்கு மோலாகி தற்போது 7.2.11 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 50 பெண்கள் 5000 ரூபாய் வீதம் வசூலித்தும் ஆன்மிகப்பெரியோர்கள் ,சிவனடியார்கள் பேருதவியுடன் அல்லாலீஷ்வரர் கும்பாபிசேகம் மிக அருமையாக நடைபெற்றது.

அன்னதானம் மிகச்சிறப்பாக செய்து ஆன்மீகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து நானும் என் நன்பன் பார்த்தீபனும் கோபுர தீர்த்ததில் நனைந்து ( கோபுர தீர்த்தம் கோடி நன்மையாம்) வந்தேன்.

ஈங்கூர் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த அல்லால் ஈஸ்வரப் பெருமானை வணங்கி உங்கள் வாழ்வின் அல்லல்கள் குறைந்து எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்.

Thursday, February 3, 2011

எம் இணையத்தை காண வந்த உங்களுக்கு

எம் இணையத்தை காண வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். ஆன்மீகம் சம்பந்தமான புது புது கோவில்கள் குறிப்பாக ஈரோடு மாவட்டக்கோவில்கள் தேடி கண்டு பிடித்து உங்களுக்கு அளிக்க ஆவலாக உள்ளேன். எனக்கு உங்களிடம் தேவை எல்லாம் உங்கள் மேலான கருத்துரைகள் மட்டுமே.வெளிநாடு வாழ் தமிழ் உள்ளங்கள் ஆன்மிக அன்பர்கள் தங்கள் விமர்சனங்களை எமக்கு அனுப்புங்கள். அது மேன்மேலும் எழுத தூண்டும் .கருத்துரைகள் அனுப்பிய சிவதமிழோன், vetrigee அவர்களுக்கு நன்றி.

Tuesday, January 25, 2011

பசு ,மாடு,கோமாதா


பசு : இடுகையின் தலைப்பை பார்த்தவர்களுக்கு பசுவிற்கு ஓர் இடுகையா ..? என ஆச்சர்யர்யம் அளிக்கலாம் ஆனால் நம் புராணங்களும் இந்து மதங்களின் நூல்களும் மிக மேன்மையாக சொல்லுகின்ற விஷயமாக பசு இருப்பது நிஜமே. அப்படி என்ன தான் இருக்கிறது பசு மாட்டில் என நம் ஆன்மிக அறிவை (?) வைத்து ஆராய்ததின் பலன் எமக்கு தெரிந்த சில விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன் .

புராணத்தில் எல்லா தெய்வங்களும் பசு மாட்டின் உடலில் வந்து இடம்புகுந்ததாகவும் மகா லட்சுமி கடைசியாக வந்த போது உலகின் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் இடம் கொடுத்து விட்டதாக பசு எனப்படுகிற கோமாதா சொல்ல சரி எனது சாணம் இடும் இடம் தான் உள்ளது எனச்சொல்ல மகா லட்சுமியும் கிடைத்த இடம் போதும் என அங்கே தங்கி விட்டதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.


ஆகவே தரித்திர நிலையில் உள்ளவர்கள் செல்வ வளம் இல்லாதவர்கள் அதிக பாவங்களை செய்து விட்டதாக எண்ணுபவர்கள் கன்றுடன் கூடிய பசு மாட்டை நம்பிக்கையுடன் ஒருமுறை சுற்றி வந்து பழம் அல்லது அகத்திக்கீரை கொடுத்து வணங்க எல்லா வளமும் நலமும் கிட்டுமெனவும் உலகின் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த புண்ணியம் கிட்டுமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பசுவின் பால்,தயிர்,நெய், கோமியம்,பசுஞ்சாணம் ஆகியவை சேர்த்துதான் பஞ்ச காவ்யம் தயாரிக்கப்படுகிறது. திருநீரு பசு சாணத்தில் தயாரிக்கப்படும் வெண் திரு நீரு உயர்வாக கருதப்படுகிறது. பசு மாட்டின் நிறத்தை பொறுத்து பாலின் பண்பு அமைவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள் . வெண்மை நிறம் கொண்ட பசுவின் பால் பித்த ரோகத்தை தீர்க்கும் . சிவப்பு நிறம் கொண்ட பசுவின்பால் வாத நோயை போக்கும் . வெண்புள்ளியும் கருஞ்சிவப்பு நிறமும் (கபிலை நிறம் ) கொண்ட பசுவின் பால் மூன்று ரோகமான வாதம் பித்தம் ,சிலோத்தும ரோகங்களை நீக்குவதாக பழங்கால நூல்கள் இயம்புகின்றன. இந்துவாக பிறந்த ஒருவர் இது போன்ற உயர்வுகளை கொண்ட பசுக்களை வதை செய்யாமலும்,அடிமாடுகளை விற்காமாலும் மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளாமல் கண்டிப்பாக தவிர்த்து ,

அன்புடன் பராமரித்து பசுக்களின் அருமையை உணர்ந்து சிவன் அருள் மட்டுமன்றி உலகின் அனைத்து தெய்வங்களின் அருளும் தடையின்றி பெற வாழ்த்துகிறேன்.

Sunday, January 16, 2011

அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவில்,பாரியூர், கோபி , Arulmigu kondathu kaliamman thirukovil ,pariyur,gobi.




அருள்மிகு கொண்டத்துக்காளி அம்மன் திருக்கோவிIL


ARUL MIGU KONDATHU KALIAMMAN THIRUKOVIL :


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் என்றால் தமிழ் சினிமாவின் சில படங்கள் எடுக்கப்படும் பதிவுகள் இங்கே உள்ள இயற்கை காட்சிகளின் அழகில் அமைந்திருப்பது தான் அருள் மிகு கொண்டத்து காளி அம்மன் திருக்கோவிலாகும்.

கோபியில் இருந்து அந்தியூர் சாலையில் சுமார் 5 கி.மீட்டர் வயல் வெளிகளை பச்சையை ரசித்துச் சென்று பாரியூரில் இறங்கினால் திருக்கோவிலை அடையலாம்.பவானி ஆற்றின் வாய்க்கால்கால்கள் சுற்றிலும் ஒட தென்னை மரங்கள் மற்றும் இயற்கையின் குளுமை நம்மை ஆர்பரிக்கும் ஒர் அழகான கோவிலாகும்.

திருக்கோவில் உள் பிரகாரம் கருங்கற்களால் அழகாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.அங்கே மூலவராய் கொண்டத்து காளியம்மன் தம்மை காண வரும் பக்தர்களின் வரம் தரும் அம்பாளாக காட்சி தந்து பக்தர்களின் குறை நீக்கி அருள் புரிகிறார். இயற்கையின் எழிலுடன் அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்கு கோபி (cobi chettipalayam) பக்கம் வந்தால் வந்து விட்டு செல்லுங்கள்.

காரில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அந்தியூர் செல்லும் சாலையில் மேலும் பயணித்து அத்தாணி (athani) வரை வந்தால் இயற்கையை நன்கு ரசிக்கலாம். கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா தைமாதம் போகிப் பண்டிகையில் ஆரம்பித்து 5 நாள் வரை பொங்கல் திருவிழா காலங்களில் நடத்தப் படுவதால் கூட்டம் அலை மோதுகிறது.


பிரசித்தி பெற்ற முத்துப்பல்லாக்கில் கொண்டத்துக் காளியம்மன் பாரியூரில் இருந்து கோபி வரை வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது மிக அற்புதமான ஒன்று. ஈரோடு ரயில் நிலையத்தில் சுமார் 40 கி.மீட்டர். தங்கும் விடுதிகள் கோபி நகரில் உண்டு. கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஆலயம் .

மற்ற கோவில்களை போல் அல்லாமல் இங்கு ஒரு விதமான மண் திருநீரு தருகிறார்கள் இதுவும் விஷேசமான ஒன்று. இறைவியை தரிசித்து விட்டு எமக்கு எழுதுங்கள் .

ஸ்தல வரலாறு பின்னர் எழுதப்படும் .

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் .நன்றி

Thursday, January 6, 2011

ஸ்ரீ ரங்கம்மா கோயில் ஸ்தல வரலாறு ,மாடு கட்டி பாளையம், விஜய மங்கலம். sri Rangangammal kovil temple history, madukattipalayam, vijayamangalam

ஸ்ரீ ரங்கநாயகி அம்மன் கோவில் (வைணவம்) வரலாறு

அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் இருந்து சென்னி மலை சாலையில் மாடுகட்டி பாளையம் - 638051 என்னும் ஊரில் உள்ளது. விஜயமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து 3கி.மி , பெருந்துறையில் இருந்து 7கி.மி . ஈங்கூரில் இருந்து 4கி.மீ தொலைவிலும் மாடுகட்டிபாளையம் எனும் சிற்றூரில் உள்ளது.

திருக்கோவில் நிஜ வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு கம்மாவர் மாடுகட்டி பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.அக்காலத்தில் நம்பூரார் துக்கினார் குலத்தில் நடந்த நிஜ வரலாறு. ரங்கம்மா தந்தை கொண்டம நாயுடு ரங்கம்மா தீயில் பாய்ந்து இறந்த பிறகு ரங்கம்மா பேர நாயுடு நினைவாக அவர்களுக்கு சிலை செதுக்கி கோவில் கட்டி வைத்தார். அந்தக்கோவில் இன்னமும் மாடுகட்டிபாளையத்தில் உள்ளது.


பூசாரியோ மற்றவர்களோ உள்ள செல்ல வேண்டுமானால் பக்கவாட்டாக உட்கார்ந்துதான் செல்ல வேண்டும். கோவில் உற்சவ விக்கிரகங்கள் வைக்க சிறிய மண்டபம் உள்ளது. அழகான கருட கம்பம் முன்புறம் உள்ளது. ரங்கம்மா கோவில் வடகிழக்கு மூலையில் கம்மவார் குல தெய்வமான எல்லம்மா ஸ்ரீ ரேணுகா தேவி சன்னதி உள்ளது. மற்றும் ஸ்ரீ ரங்கம்மாளின் வழிபாட்டு தெய்வமான ஸ்ரீ அங்காளம்மன் கம்பீரமாக காட்சி தருகிறது..

பிரமோற்சவம் :

கார்த்திகை மாதத்தில் , மற்றும் பிரதி மாத பெளர்ணமி பூஜை .. மிகச்சிறப்பாக அறங்காவலர் குழுவால் பூஜை ,விசேஷங்கள் நடைபெற்று வருகிறது.மற்ற நாட்களிலும் கோவில் திறக்கப்பட்டே இருக்கும்,

பூஜை விபரங்கள் :

பால் பூஜை காலை 06.00 மணிக்கு மேல் , உச்சி கால பூஜை பகல் 12.00 மணிக்கு மேல், சாயங்காலபூஜை : மாலை 0600 மணிக்கு மேல் .. ஓவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று திருமஞ்சன பூஜை காலை 10.00 மணிமுதல் 11.00 மணி வரை..

பஸ் வசதி :

விஜய மங்கலம் மெயின் ரோடு TO மாடுகட்டி பாளையம் ரங்கம்மா கோவில் பஸ் நெம்பர் C4 காலை 7.15, பகல் 1.45, மாலை 6.00 மணி.

எம் அனுபவம் : தெய்வீக பெண்ணாக வாழ்ந்து இறந்த ரங்கம்மா கணவருக்காக தீ மூட்டிய சிதையில் இறங்கிய வரலாறு கேட்க சிலிர்க்கிறது. இங்கு நிஜமாக வாழ்ந்த மனிதமும் கடவுள் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் தம்மை நாடி வருபவர்களுக்கு மக்கட்பேறு,திருமணம். நல்வாழ்வு இந்த அன்னை நிகழ்திய அற்புதங்கள் பலர் சொல்லக்கேட்டேன்.

உங்கள் குறைகளை ஸ்ரீரங்கம்மாளிடம் எடுத்து வைத்து நிறைவேற பெளர்ணமி அன்று வந்து தரிசித்து விட்டு நல்லது நடக்கும் பின் எனக்கு எழுதுங்கள்.. கோவில் பற்றி மேலும் தகவல்களை சேகரித்து எழுதுகிறேன் .

மேலும் விபரங்களை துக்கினார் நம்பூரார் சேம நல சொசைட்டியின் போன் தொடர்புகொள்ள நெம்பர் 04294-292124, .மற்றும் 9791571704.

திருக்கோவில் விபரங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தளத்தில் பார்க்க முகவரி www.srirangammal.com , ஸ்ரீரங்கம்மாவை நேரில் தரிசித்து விட்டு எழுதுங்கள் . நன்றி.

Wednesday, December 29, 2010

குப்பண்ணசாமி வருகை வரலாறு பாகம் 2


பழங்காலத்தில் கொங்கு நாடு பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது தென்னிலை என்னும் ஊரினை தலைநகராக கொண்டு "கொக்கராயன்" என்னும் குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான்,

அவர் மைசூரை ஆண்டு வந்த திப்பு சூல்தானுக்கு கப்பங்கட்ட மறுத்தார். அதனால் கோபம் கொண்ட திப்பு கொங்கு நாட்டில் இருந்து வந்து தம்மிடம் படைத்தளபதியாக இருக்கும் "குப்பண்ணக்கோ " என்பவரை அழைத்து நீர் சென்று கொங்கு நாட்டில் இருக்கும் கொக்கராயன் மீது படையெடுத்து அவன் செல்வங்களை கவர்ந்து வா என திப்பு சூல்தான் ஆணையிட குப்பண்ணக்கோ கலங்கிப் போனார் .

தன் தாய் நாட்டின் மீதே படையெடுப்பதா ? என நினைத்து மனம் வருந்தி மன்னன் கட்டளைக்காக மனதை திடப்படுத்தி பெரும்படையுடன் கிளம்பினார்..கொங்கு நாடு வந்ததும் குப்பண்ணசாமி என்னும் தளபதியாருக்கு சக்கரசுவாசம் என்னும் விஷக்காய்ச்சல் தாக்கியது.

கனககிரி மலைச்சாரலில் தங்கிய அப்படை பிரிவு வீரர்களுக்கு தன் தளபதி குப்பியண்ணர் நோய்கொடுமை தாங்காமல் துன்படுவதை நீக்க வழி தெரியாமல் மருத்துவரை தேட அப்போது தம்பிரான் சுவாமிகள் என அழைக்கப்படும் செல்வக்குமார சாமிகள் துக்காச்சி ஊரில் விஷக்கடிக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்துவார் எனச்சொல்ல , படை வீ ரர்களும் நோயால் துன்பப்படும் தம்பிரான் சுவாமிகளிடம் அழைத்துச்சென்றனர்.

சுவாமிகளை கண்ட குப்பண்ணக்கோ அவரை நெடுசாண் கிடையாக விழுந்து வணங்க அவரை தம்பிரான் சுவாமிகள் தம் திருக்கரங்களால் எழச்செய்து அவர் நோயை தொட்டார். அவர் தொடவிக் கொடுத்தவுடன் குப்பண்ணர் உடல் குணமானது. அவர் அருட்பார்வையால் குணமான குப்பண்ணர் செல்வக்குமரன் என்கிற தம்பிரான் சுவாமிகளிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.

அதன் படியே சிஷ்யனாக குப்பணசாமியை ஏற்றுக்கொண்டார். குருவும் சிஷ்யனும் சேர்ந்து கிணறு வெட்டினர். இது தற்போதும் திருக்கோவிலில் உள்ளது. சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.


குப்பண்ணர் தன் குருநாதரின் கட்டளைப்படி கொல்லிமலை.குடமலை. சிவமலை,சென்னிமலை, வெள்ளிமலை, ஆகிய மலைகளுக்கு சென்று அமிர்தகரணி, சந்தானகரணி,சங்கரகரணி, வெண்சாரை, கருநொச்சி, ஆகிய மூலிகைகளை கொண்டு தம்மிடத்தில் பயிராக்கினார்.

இச்சூழ்நிலையில் தம்பிரான்சுவாமிகள் வயதாகிவிட தன் சிஷ்யர் குப்பண்ண சாமியை அழைத்து "தம்மால் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ செல்வமுத்து குமாரசுவாமிக்கும் சுயம்பு மூர்த்திக்கும் பங்கம் ஏற்படாத வகையில் பாதுகாப்புடனிருந்து வருக"! என கட்டளை இட்டு இறையடி சேர்ந்தார்.

அதன்படியே கோவிலை பாதுகாத்த குப்பண்ணர் தான் வயதாகி இறையடி சேரும் முன் ஊர்மக்களை அழைத்து " எம் குருநாதரையும் எம்மையும் தூய அன்புடன் நினைத்து இத்தீர்த்தத்தில் நீராடி இத்தீர்த்தத்தை உட்கொண்டும் வருவோர் கொடிய ரோகங்களிலும்,விஷக்கொடுமைகளிலிருந்தும் நீங்கி நலம் பெறுவார்கள் என்று கூறி இயற்கை எய்தினார்.

செல்வக் குமாரத் தம்பிரான் சாமிகள் உடல் அடக்கம் செய்த கால மாறுதல்களால் தற்போது அழிந்து விட்டன. தற்காலத்தில் குப்பண்ணசாமி இளம்பிள்ளை ஜமீன் கனவில் தோன்றி "நான் காவிரி ஆற்றில் வருவேன் என்னை எடுத்து வைத்திரு "என கட்டளை இட்டார். அடுத்த நாள் காவிரியில் நீராடும்போது வேங்கை கட்டையொன்று மிதந்து அவர் பக்கத்தில் வர அவர் அதனை விலக்கினார்.பலமுறை அக்கட்டை பக்கத்தில் வரவும் விலக்கவும் இருந்தார்.

அப்போது வீரன் போல் கையில் தண்டு ஓச்சி நின்ற நாம் காவிரியாற்றில் வருவோம் எடுத்து வைத்திரு என்ற கனவு நினைவில் வர அக்கட்டயை எடுத்துச்சென்று தூய்மையான இடத்தில் வைத்தனர். அந்த வேங்கை மரம் இரவு நேரங்களில் பல அற்புதம் நிகழ்த்தியது, அந்த ஜமின் கலங்கிப்போய் நிற்க கனவு நிலையில் வீரனாக காட்சியளித்த குப்பண்ணர் அன்பனே! செல்வமுத்துக் குமாரசாமி தம் கோவில் இருக்குமிடம் தெரிவித்தார்.

ஜமீன் தாரும் இறைவன் குப்பண்ணர் கட்டளைப்படி வேங்கை கட்டையில் குப்பண்ணசாமியின் திருவுருவம் அமைத்து எடுத்து வந்து பீடத்தில் நிறுத்தினார. அஷ்ட பந்தன விழா அமைத்த நேரத்தில் நாகப்பாம்பு அங்கு வந்து வேங்கை திருவுருவில் இருந்த குப்பண்ணரின் பீடத்தில் மூன்று முறை சுற்றி படுத்துக்கொண்டது. அதனை விரட்டியும் போகவில்லை.

தைரியத்துடன் ஆன்மீக அன்பர்கள் அதை தொட்டுப்பார்க்க அது அஷ்டபந்தன மருந்து போல் இருக்கமாயிருக்க கண்டு,நாக பந்தனமாக அதிசயம் கொண்டு திருவருள் நிலையை எண்ணி வியந்தனர்.அன்று முதல் இன்று வரை குப்பண்ணசாமி காக்கும் கடவுளின் திர உருவமாக காட்சி அளித்து அருள் செய்பவர் அவரே.

ஸ்ரீ செல்வக் குமாரத்தம்பிரான் சுவாமிகள் ஆத்மார்த்மாக வழிபட்டு வந்த மூர்த்தியே தற்பொழுது ஸ்ரீ செல்வக்குமார் சுவாமி என்னும் திரு நாமமுடன் விளங்கி வருகிறார். இளம்பிள்ளை ஜமீன்தாரால் அமைக்கப்பட்ட தாருபிம்பமே ஸ்ரீகுப்பண்ணசாமியாக விளங்கி மக்களின் தீராத பிணிகளை தீர்த்து அருள் புரிந்து வருகிறார்.

முனிவரான செல்வக்குமாரத் தம்பிரான் சுவாமிகளால் மூர்த்தி கீர்த்தி உடையதாக அமைத்துள்ளது. குப்பண்ணரும் தம்பிரானும் சேர்ந்து தொட்டபெருமையால் அமைந்த "சர்வரோக நிவாரண தீர்த்தக் கூவல்" தீர்த்தப்பெருமை கொண்டதாக அமைந்துள்ளது. மக்கள் எல்லாக்காலங்களிலும் வந்து வழிபட்டு செல்வதால் தலப்பெருமை கொண்டுள்ளது.

ஆகவே ஸ்தலம் மூர்த்தி ,தலம், தீர்த்தம் என்னும்படுயான உயர்ந்த ஸ்தலமாகும்.இத்தலத்தை வந்து வழிபட்டுச் செல்வோர் இகபர சாதனங்களை அடைந்து இன்புற்றி நோய் நீக்கம் பெற்று இன்புற்று வாழ்கின்றனர்.

ஸ்தலம் இருக்குமிடம் :

ஈரோடுமாவட்டம் 60வேலம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டிலிருந்து 10,29 நெ பஸ் கோவிலுக்கு வந்தடைகிறது.

கோவிலில் உள்ள மூர்த்திகள்:

ஸ்ரீ செல்வக்குமாரசாமி, ஸ்ரீவள்ளி,தெய்வானை, ஸ்ரீ குப்பண்ணசாமி, ஸ்ரீகருப்பராயர் ஸ்ரீ செல்வக்குமாரசாமித் தம்பிரான் கண்ட
சுயம்பு மூர்த்தி தீர்த்தம் :
கோவில் அக்னி பாகத்தில் உள்ள சர்வரோக நிவாரண தீர்த்தம்

திருவிழா :

ஆண்டு தோறும் மார்கழிப்பெளர்ணமி உள்ளிட்ட பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்.

வாரபூஜை:

ஞாயிறு தோறும். வந்து தரிசனம் செய்து இறையருள் பெருக. நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...