Sunday, January 16, 2011

அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவில்,பாரியூர், கோபி , Arulmigu kondathu kaliamman thirukovil ,pariyur,gobi.




அருள்மிகு கொண்டத்துக்காளி அம்மன் திருக்கோவிIL


ARUL MIGU KONDATHU KALIAMMAN THIRUKOVIL :


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் என்றால் தமிழ் சினிமாவின் சில படங்கள் எடுக்கப்படும் பதிவுகள் இங்கே உள்ள இயற்கை காட்சிகளின் அழகில் அமைந்திருப்பது தான் அருள் மிகு கொண்டத்து காளி அம்மன் திருக்கோவிலாகும்.

கோபியில் இருந்து அந்தியூர் சாலையில் சுமார் 5 கி.மீட்டர் வயல் வெளிகளை பச்சையை ரசித்துச் சென்று பாரியூரில் இறங்கினால் திருக்கோவிலை அடையலாம்.பவானி ஆற்றின் வாய்க்கால்கால்கள் சுற்றிலும் ஒட தென்னை மரங்கள் மற்றும் இயற்கையின் குளுமை நம்மை ஆர்பரிக்கும் ஒர் அழகான கோவிலாகும்.

திருக்கோவில் உள் பிரகாரம் கருங்கற்களால் அழகாய் வடிவமைக்கப் பட்டுள்ளது.அங்கே மூலவராய் கொண்டத்து காளியம்மன் தம்மை காண வரும் பக்தர்களின் வரம் தரும் அம்பாளாக காட்சி தந்து பக்தர்களின் குறை நீக்கி அருள் புரிகிறார். இயற்கையின் எழிலுடன் அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்கு கோபி (cobi chettipalayam) பக்கம் வந்தால் வந்து விட்டு செல்லுங்கள்.

காரில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அந்தியூர் செல்லும் சாலையில் மேலும் பயணித்து அத்தாணி (athani) வரை வந்தால் இயற்கையை நன்கு ரசிக்கலாம். கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா தைமாதம் போகிப் பண்டிகையில் ஆரம்பித்து 5 நாள் வரை பொங்கல் திருவிழா காலங்களில் நடத்தப் படுவதால் கூட்டம் அலை மோதுகிறது.


பிரசித்தி பெற்ற முத்துப்பல்லாக்கில் கொண்டத்துக் காளியம்மன் பாரியூரில் இருந்து கோபி வரை வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது மிக அற்புதமான ஒன்று. ஈரோடு ரயில் நிலையத்தில் சுமார் 40 கி.மீட்டர். தங்கும் விடுதிகள் கோபி நகரில் உண்டு. கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஆலயம் .

மற்ற கோவில்களை போல் அல்லாமல் இங்கு ஒரு விதமான மண் திருநீரு தருகிறார்கள் இதுவும் விஷேசமான ஒன்று. இறைவியை தரிசித்து விட்டு எமக்கு எழுதுங்கள் .

ஸ்தல வரலாறு பின்னர் எழுதப்படும் .

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...