Tuesday, February 15, 2011

விஜயமங்கலம் அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயம்



விஜயபுரி கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர் ஆலய வழிபாடு :-

இறைவன் :
ஸ்ரீ நாகேஸ்வரர்
இறைவி: கோவர்த்தனாம்பிகை

அமைந்த ஊர்:
விஜயமங்கலம் ,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
திருக்கோவில் சிறப்பு :
தமிழகத்தின் மிகப்பழமையான ஊர்களில் கொங்கு நாடு எனப்போற்றப்படுகிற மற்றும் பழங்கால வரலாற்று ஏடுகளில் புரட்டினால் விஜயநகரப்பேரரசு அதன் தலைநகரம் விஜயபுரிதான் தற்போது விஜயமங்கலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

காலங்களின் உருமாற்றங்கள் இப்பகுதியை மாற்றினாலும் இறை சன்னதிகள் மட்டும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது மிகச்சிறப்பு. பழங்கால மன்னர்களும் புலவர்களும் நன்னூல் எழுதிய புலவர் பவணந்தி முனிவர் என பலரும் வந்த புண்ணிய பூமியில் வீற்றிருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ நாகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.எல்லா சிவாலயங்களை விட இது சற்றே மாறுபட்டது

விஷேச மானது.

1. சுயம்புவாக சிவபெருமான் காட்சி தருகிறார்
2.மேற்கு பார்த்தவாறு காட்சி அளிக்கிறார் . (பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்கும்)
3.பழங்கல்வெட்டுகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. இவ்வாறு விஜயமங்கலத்தை (vijayamangalam)பார்த்தவாறு அருள்புரியும் இறைவனுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஆவன செய்யப்படுகிறது.

உங்களால் முடிகிற போது நேரில் சென்று தரிசியுங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம் சேலத்திலிருத்து ( salem)கோயம்புத்தூர் (coimbatore) செல்லும் சாலையில் 90கி.மீட்டரிலும் ஈரோடு (erode )மாவட்டம் பெருந்துறையில் (perundurai)இருந்து 10 கி.மீட்டரிலும் அமைந்துள்ள இப்பழம்பெரும் நாகேஸ்வரர் ( nageswarar) ஆலயத்தை தரிசனம் செய்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழ இறை சித்தம் வேண்டுகிறேன்.

அருகிலுள்ள ரயில் நிலையம் ஈரோடு (erode) 30 கி.மிட்டர்,

மேலும் தகவல் வேண்டுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...