Monday, February 7, 2011

அருள்மிகு அல்லால் ஈஸ்வரர் வடிவுடையம்மன் திருக்கோவில்


அல்லால் ஈஷ்வரர், வடிவுடையம்மன்


திருக்கோவில் அமைவிடம் :


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் ஈங்கூரில் அமைந்துள்ளது .

மூலவர் : அல்லால் ஈஷ்வரர்

அம்பாள்: வடிவுடைஅம்மன் .

ஸ்தல விருட்ஷம்: வில்வம் .
பெயர் காரணம் அல்லால் ஈஸ்வரர் என்றால் அல்லல்களை களைபவர்
எனப்பொருள்படும்.
ஸ்தல வரலாறு மற்றும் சிறப்புகள் :

கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஈஷ்வரர் ஆலயங்களில் இதுவும் ஒன்று.இங்கே சிவபெருமான் மேற்கு பார்த்த நிலையில் இருப்பது ஒர் தனிச்சிறப்பு, பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கிய இருக்கின்றன. அவ்வகையில் இக்கோவில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு அவ்வகையில் அல்லால் ஈஸ்வரரை தரிசனம் செய்தால் 12 ஈஸ்வரர் ஆலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்குமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்

.இக்கோவில் 50 ஆண்டுகளுக்களுக்கு மோலாகி தற்போது 7.2.11 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 50 பெண்கள் 5000 ரூபாய் வீதம் வசூலித்தும் ஆன்மிகப்பெரியோர்கள் ,சிவனடியார்கள் பேருதவியுடன் அல்லாலீஷ்வரர் கும்பாபிசேகம் மிக அருமையாக நடைபெற்றது.

அன்னதானம் மிகச்சிறப்பாக செய்து ஆன்மீகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து நானும் என் நன்பன் பார்த்தீபனும் கோபுர தீர்த்ததில் நனைந்து ( கோபுர தீர்த்தம் கோடி நன்மையாம்) வந்தேன்.

ஈங்கூர் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த அல்லால் ஈஸ்வரப் பெருமானை வணங்கி உங்கள் வாழ்வின் அல்லல்கள் குறைந்து எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...