Thursday, February 23, 2012

சுனாமியை விரட்டிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . திருச்செந்தூர்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
SRI SUBRAMANIAHA SWAMY TEMPLE THIRUCHENDUR

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
அமைவிடம்:தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தெற்கில்கடற்கரையில் அமைந்துள்ளது.திருநெல்வேலியிலிருந்து 55கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் விளக்கம் : திருச்செந்தூரின் நடுவில்அமைந்துள்ள சிவக்கொழுந்தீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டில் "திருச்செந்திலூர்" என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது வரலாறு.
காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் ஆக அழைக்கப்பட்டு வருகிறது.அருணகிரி நாதரின்பாடல்களிலும் திருச்செந்திலூர் எனும் வார்த்தைகளை காணலாம்.ஆறுபடை வீடுகளில்ஒன்றாக திருச்செந்தூர் விளங்குவது சிறப்பாகும்

காலம் :

திருச்செந்தூர் கால வரலாறு அறிய இயலாவிட்டாலும் கி.பி 875ல் இரண்டாம் வரகுணபாண்டியன் திருக்கோவில் வழிபாட்டு பூஜைக்காக உதவி செய்ததாக வரலாறு.

திருக்கோவில் மூலவர் மற்றும் உள் அமைப்பு :

சிவபூஜை செய்யும் தவக்கோலத்தில் சடைமுடியுடன் கடற்கரையாண்டியாக ஸ்ரீசுப்பிரமணியர் காட்சி தருகிறார் . நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் கிழக்குநோக்கிய நிலையில் நின்று நான்கடிச்சிலையாக நின்று அருள்புகிறார் .

பஞ்சலிங்கம் :

மூலவரை இடப்புறமாக சுற்றி செல்லும் வழியில் வலப்புறமூலையில் ஓர் குகையில் ஒரேபீடத்தில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளது. இச்சன்னதியில் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பூஜை செய்வதாக ஐதீகம் . ஆதலால் மானிடப் பூஜை இச்சன்னதிக்கு இல்லை. திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்த பின் அங்குள்ள திருக்கோவில் அலுவலர்களிடம் கேட்டால் ரூ5 டிக்கட் பெற்று பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

திருக்கோவிலில் வணங்க வேண்டிய சன்னதிகள் :


ஸ்ரீ வள்ளி அம்மன சன்னதி
ஸ்ரீ தெய்வானை சன்னதி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
63மூவர்
ஸ்ரீ ஜெகந்நாதர்
வீரபாகு,
வீரமகேந்திரர் ,
ஸ்ரீ நந்தீசுவரர் ,
ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
,ஸ்ரீ மயூர நாதர்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்
ஸ்ரீ சனிஷ்வரர்
ஸ்ரீ அருணகிரி நாதர் சன்னதி
ஆகிய சன்னதிகள் முக்கியமானதாகும் .


திருக்கோவில் திறந்திருக்கும் நேரமும் பூஜைகளும் :

எல்லா திருக்கோவில்களிலும் ஆறுகாலப்பூஜை நடைபெறுவது இயல்பு. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு 9காலப்பூஜைகள் நடைபெறுவது சிறப்பு திருக்கோவில் காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை திருக்கோவில் நடை திறந்தேஇருக்கிறது.

காலை 5.10 திருப்பள்ளி எழுச்சி
5.30 விஸ்வரூப தரிசனம்
5.45 கொடிமர நமஷ்ஹாரம்
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 தீபாராதனை
8.00காலசந்திபூஜை
10.00 கலசபூஜை
10.30 உச்சிகால அபிஷேகம்

12.00 உச்சிகால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தஜாம பூஜை
8.30 ஏகாத்த சேவை
8.45 பள்ளியறை பூஜை
9.00 நடை திருக்காப்பிடல்

விஸேச நாட்கள் :

ஆடி அமாவாசை ,வளர்பிறை சஷ்டி ,
திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ,
வைகாசி விசாகம் ஆகிய நாட்களாகும்

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் :

திருநெல்வேலி கலெக்டராக கி.பி 1803 லூசிங்டன் துரை இருந்தார் . அவர் திருசெந்தூர் திருவிழாவின் போது வந்திருந்தார் .ஸ்ரீ முருகப்பெருமான் அர்ச்சகர் விசிறி வீச திருவீதி உலா வருவதைக்கண்டு நக்கலாக " உங்கள் கடவுளின் சிலைக்கு வியக்கிறதோ? அதனால் விசிறி வீசுகிறீர்களா ? எனக்கேட்ட அர்ச்சகரும்" ஆமாம் " எனக்கூற "அப்படி எனில் நான் பார்க்க முடியுமா ".?என துரை கேட்க மாலைகள் அகற்றி காட்டிய போது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பெருமானின் உடல்கள் வேர்த்துள்ளதை கண்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் முருகப்பெருமான் அருள்சக்தியை கண்டு வியந்தார்.

முருகப்பெருமானை வணங்கி தமது காணிக்கையாக பல வெள்ளிப்பாத்திரங்களை அளித்து விட்டுச்சென்றார் . அப்பாத்திரங்கள் இன்றும் உள்ளது.

டச்சுக்காரர்கள் பயந்து ஓடிய கதை :

டச்சுக்காரர்கள் திருக்கோவில் ஐம்பொன் சிலைகள், மூலவர் ஆகியோரின் சிலைகளை திருடிக்கொண்டு கடல் மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தனர் பயணம் தொடங்கிய துவங்கிய கொஞ்ச தூரத்திலேயே கடுமையான அலைகளுடன் புயல்காற்று வீச பயந்து நடுங்கினர்.படகில் உள்ள முருகர் சிலைகளை எடுத்து கடலில் போடுங்கள் இல்லையெனில் எல்லோரும் கடல் சாக வேண்டியதுதான் எனக்கூற பயந்து திருச்செந்தூரில்எடுத்து வந்தமுருகப்பெருமானின் சிலைகள் கடலில் தூக்கிபோட்டுவிட்டனர்

சற்றுநேரத்தில் அலைகள் அமைதியாகி விடடச்சுக்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.அதன்பின் பக்தர் கனவில் வந்த முருகர் கடலில் ஓர் இடம் குறிப்பிட்டு அங்குதாம் இருப்பதாகவும் அவ்விடத்தில் எலுமிச்சை மிதப்பதாகவும் மேலே பெருமாள் கழுகு பறந்து அடையாளம் காட்டுமென கூற அதன்படி பக்தாதிகள் கடலில்சென்று முருகப்பெருமான் மீட்டதாக வரலாறு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...