Wednesday, March 20, 2013

ஞான சித்தர் ஸ்ரீ தோபா சுவாமிகள் வரலாறு பாகம் 1

                                                SRI THOBA SWAMY

                                            ஸ்ரீ தோபா சுவாமிகள்

 தொண்டை நாட்டில் வாழ்ந்த அற்புத ஞான சித்தராவார் .
வேலூரை அடுத்த சைதாப்பேட்டையில் கி.பி 1850ஆம் ஆண்டில் ஜீவசமாதியான மகானாவார் .

ஸ்ரீ தோபா சுவாமிகளின் இளமைக்காலம் :

திருச்சியில் வோளாளர் குலந்தில் சிவநாதப்பிள்ளைக்கும் ,சிவகாமி அம்மைக்கும் இராமேஷ்வரத்தில் அருள் புரியும் ஸ்ரீ இராமலிங்கநாதரை வேண்டி பிறந்த இராமலிங்கம் என்னும்  திருக்குழந்தையே தற்போது ஞான சித்தர் ஸ்ரீ தோபா சுவாமிகள் ஆவார் .


சிறு வயதில் ஆங்கிலேய காலாட்படையில் அரசுபணி செய்து வந்த தோபா
சுவாமிகளின் தாய் தகப்பனார் வயது மூப்பில் இறந்து விட தோபா சுவாமிகள்
எனப்படும் ராமலிங்கத்தின் நிலைகண்டு தமது காலாட்படையில் தோபா
சுவாமிகளையும் இணைத்துக்கொண்டனர் .

ஸ்ரீதோபா சுவாமிகள் திறமையை கண்டு வியந்த ஆங்கில அரசு அவரை சென்னைக்கு அனுப்பியது. இடையறாது சிவபக்தியும்,முருகரின் மேல் பற்று கொண்டவராய் இருந்தார் .

 ஸ்ரீ முருகப்பெருமானின் மேல் கொண்ட பக்தியினால் "அருட்பா" என்ற நூலைப்பாடியுள்ளார் . திருஞான சம்பந்தர் குருவாக ஏற்றல் : குருவருள் பெறாமல் யோக கலையிலும்,சிவபக்தியிலும் தெளிவ பெற முடியாதென உணர்ந்த தோபா சுவாமிகள் குருவை தேட அவர்க்கு எண்ணத்தில் தோன்றியது திருஞான சம்பந்தராவார் .

 தோபா சுவாமிகள்  திருஞான சம்பந்தரை நினைத்து தியானிக்கலானார் . ராமலிங்கம் எனப்படுகிற  ஸ்ரீ தோபா சுவாமிகளுக்கு திருஞான சம்பந்தர் காட்சியளித்து "உலகில்  உள்ளவற்றில் சிவம் மட்டுமே உண்மையானது அதைப்பின்தொடர்க" என அருளினார் .

 திருஞானசம்பந்தரின் குரு அருள் பெற்ற தோபா சுவாமிகள் ஆனந்தமடைந்தார் ..இந்நிலையில் ஆங்கில காலாட்படையிலிருந்து எதிரி நாட்டுடன் போர் புரிய  அழைப்பு வர, பணியில் இணைந்த இராமலிங்கம் என்கிற தோபா சுவாமிகள் எதிரி  நாட்டுடன் போர் புரிந்த பல அற்புதங்கள் செய்து போரில் தாம் இணைந்த ஆங்கில அரசுக்காக வெற்றி பெற்று தந்தார் .


 பல அற்புதங்களை செய்து  வெற்றி பெற வைத்த இராமலிங்கனாரை ஆங்கிலேய அதிகாரிகள் தேடினர் . அமைதியாய்  ஓர் இடத்தில் அமர்ந்து தியானத்தில் "தோ " "பா " "தோ" "பா" என்ற  வார்த்தைகளை மந்திரமாக உச்சரித்து வந்தார் . எதிரிப்படை வீழ்ந்ததை தளபதி   இராமலிங்கம் (தோபா சுவாமிகளிடம் ) விளக்கினார் .

 இங்கு நடந்தது இறைவனின்
திருவிளையாடல் இதைக்கண்டு வியந்த ஆங்கிலேய தளபதி இவர் சாதாரணமனிதர்  அல்ல தெய்வீகம் பொருந்திய சித்தர் எனக்கண்டு தளபதியார் வணங்க படைவீரர்கள் அனைவரும் விழுந்து வணங்கினார் .

அன்றுமுதல் இராமலிக்கம் எனப்படுகிற ஞான
சித்தர் ஸ்ரீதோபா சுவாமிகள் என அழைக்கபடுகிறார் .நாமும் ஸ்ரீ தோபா
சுவாமிகள்கள் என்றே பார்ப்போம் .

தோபா சுவாமிகள் விளக்கம் : "தோடுடைய"
என்ற வார்த்தை சிவபெருமான் திருஞான சம்பந்தருக்காக அருளியது. திருஞானசம்பந்தரைக் குருவாக கொண்ட தோபா சுவாமிகள் தோடுடைய என்ற பாடலையே ( or)பா வையே ஞான மந்திரமாக உச்சரித்துக் கொண்டதால் தோபா சுவாமிகள் என்று அழைக்கபடுகிறார் ..

தொடர்ச்சியை தோபா சுவாமிகள் வரலாறு பதிவு 2 காண்க

Saturday, March 16, 2013

பங்குனி உத்திரம் வழிபாடு

மகேசனால் உண்டான மாதங்கள் பல வந்தாலும் பங்குனியில் வரும்
உத்திரநட்சத்திரம் மகத்துவம் வாய்ந்த இந்துக்களுக்குரிய அற்புத
திருநாளாகும்.ஏனெனில் இந்த அற்புத நாளில்தான் சிவன் பார்வதி திருமண
கயிலாயத்தில் நடைபெற்றதாக புராணங்கள் உரைக்கின்றன.

 தமிழ் கடவுளாம் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திர திருநாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

மங்கலகரமான பங்குனி உத்திர திருநாளில்தான்

முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணமும்,
 ரங்கநாதர் ஆண்டாள் திருமணம்,
தேவேந்திரன் இந்திராணி திருமணம் ,
பிரம்மா சரஸ்வதி திருமணம்
,தசரதபுதல்வர்கள் திருமணம்

ஆகிய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இறைவனுக்கே திருமணம் நடந்த பங்குனி உத்திர திருநாள் இந்த
வகையில் விஷேசமானது. மற்றொரு வகையில் சில தெய்வ அவதாரங்கள் இந்த இனியநாளில் அவதரிதிருக்கிறனர் .

அவர்கள் வள்ளி,ஐயப்பன்,அர்ஜுனர் ஆகியோராவர்  திருமுருகப்பெருமானின் திருக்கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று மிகுந்த விஷேசமான நாளாக கொண்டாடப்படுகிறது.

 திருச்செந்தூர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் , மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் ஆகிய
திருத்தலங்களில் விஷேச நிகழ்வுகள் நடைபெறும் .

ரதியின் வேண்டுதலுக்காக சிவபெருமான் மன்மதனை உயிர்பித்த நாளாகவும் பங்குனி உத்திரத்தை புராணம் போற்றுகிறது ,இந்த அரிய நிகழ்வையே வடமாநிலத்தோர் ஹோலிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது..

 விஷேசபலன்கள் :

 திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும்
விரதமிருந்து ஏதேனும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் ,சிவாலயங்களில் வழிபட திருமணம் ,குழந்தைப்பேறு போன்ற மங்கலங்கள் உங்கள் வாழ்வில் நடைபெறும் .

முடிவுரை :

வருகிற 26.3.13 முருகருக்குரிய செவ்வாய்கிழமை
நாளில் பங்குனி உத்திர திருநாள் வருகிறது. அடுத்த நாள் பெளர்ணமி திதியும்
வருகிறது. தமிழ் கடவுளாம் முருப்பெருமானையும் சிவனையும் வணங்கி உங்கள் வீட்டில் மங்கலங்கள் உண்டாக வாழ்த்துக்கள் .

 மறவாமல் முருகபெருமானுக்கு  பிடித்த செவ்வரளி மாலை., நெய் தீபத்துடன் சென்று முருகப்பெருமான் அருள்
பெறுங்கள் .நன்றி

Tuesday, March 5, 2013

மங்கலங்கள் உண்டாக்கும் மகாசிவராத்திரி வழிபாடு 10.3.13

மாசிமாதம் என்றாலே சிவராத்திரி சைவ பெருமக்களால் விரும்பி
வணங்கப்படுகின்ற வழிபாடாகும் . சற்றே பின் நோக்கி புராணத்திற்கு
செல்வோம் .

 பார்வதி ஒரு முறை சிவனின் கண்களை விளையாட்டாக தம்
திருக்கரங்களால் மறைக்க உலகமே இருண்டு விட சிவன் தன் நெற்றிக் கண்ணை திறந்து உலகத்திற்கே ஒளி கொடுத்த இனிய நாளே மகா சிவராத்திரியாகும் .

ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரிகள் வந்தாலும் மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

 அன்றைய தினம் சிவனை மனதில் வைத்து தியானித்தால் நம் துன்பங்கள் தூர ஓடிவிடுமென்பது உறுதி. அந்த வகையில் வருகிற 10.03.2013 ஆம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது.

 இந்த இனிய நாளில்  விரதமிருந்து அன்றைய இரவில் கண்விழித்து சிவாலயங்களில் இறைவனுக்காக நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வோர்க்கு தரித்திரம் நீங்கி செல்வவளம் மங்கலம் உண்டாகும்.

 மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரியில் சிவனை வணங்குவது வருடம் முழுவதும் சிவ வழிபாடு செய்வதற்கு நிகரானதாக கருதப்படுகிறது.

 சிவராத்திரி விரதமென்பது மாலை 6.00மணிமுதல் அடுத்த நாள்
காலை 6.00மணி வரை சிவாலயத்தில் நடைபெறும் 4 கால பூஜையில் கலந்து கொண்டு "ஓம்நமச்சிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து விரதமிருப்பதே ஆகும் .,,,

 சிவராத்திரியில் மிக விஷேசமான நேரமாக இரவு 11.30 மணி முதல்
நள்ளிரவு 1.00 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும் . நம்மிடம் பணம்
இல்லையே அன்னதானம் செய்ய முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள் .


10 ரூபாயில் வாங்கி அன்றைய தினம் அளிக்கிற வில்வத்திலும் ,1 லிட்டர்
பசும்பால் அபிஷேகத்திலேயே சிவபெருமான் மிகுந்த திருப்தி கொள்வார் .அவர்  நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல.

 ஆழ்ந்த பக்தியை மட்டுமே .

முடிவுரை :

 இன்றைய நாட்களில் மக்கள் பக்தியுடன் மட்டுமே கலிகாலத்தை
கடத்தியாக வேண்டுமென்பது வாரியார் பெருமானின் வாக்கு . ஆன்மீக வழிபாடுகள் எல்லோர்க்கும் வர எங்கும் அமைதி நீடிக்கும் .

 ஆதலால் ஆழ்ந்த சிவபக்தியை
மேற்கொள்வோம் . மறவாது 10.3.13 ஏதேனும் ஓர் சிவாலயத்தில்
சிவபெருமானுடன் கலந்திருப்போம் .
'' ஓம் நமச்சிவாய"

 பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன் நன்றி.

Monday, March 4, 2013

பர்வதமலை ஸ்ரீ மல்கார்ஜீனேஷ்வரர் தரிசனம் பாகம் 3

ஓர் வழியாக பர்வத மலையுச்சியை அடைந்தோம் . முகப்பில் ஸ்ரீ மகான் மௌனயோகி விட்டோபானந்தா சிவகுகை அன்னதானமடம் அமைந்துள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருக்கோவில் அருகே இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

 மூன்று சன்னதிகள் கொண்ட திருக்கோவிலின் முதல் சன்னதியில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் முருகப்பெருமான்  உள்ளனர் . இரண்டாவது சன்னதியில் ஸ்ரீமல்லிகார்ஜீனர் சிறிய லிங்க வடிவில் அழகே காட்சி அளிக்கிறார் .

பர்வதமலையின் சிறப்பே இங்கு வரும் பக்தர்கள் தாங்களே ஸ்ரீ மல்லிகார்ஜீனருக்கு அபிஷேகம் செய்யலாம் .பூஜை செய்யலாம்
என்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்வுடன் இங்கு வந்து இறைவனை தொட்டு
வணங்குகிறார்கள் .

கயிலாயத்தில் இருந்து சிவன் திருவண்ணாமலையில் இறங்க
முதல் அடியை பர்வத மலையில் வைக்க பர்வதமலை சிவனைத்தாங்காது கீழே இறங்க அடித்த அடியை திருவண்ணாமலையில் வைத்ததாக புராணம் இயம்புகிறது.

அதனால் இப்பதி தென் கயிலாயம் என போற்றப்படுகிறது. மூன்றாவதாக பிரம்மராம்பிகைஅம்பாள் சன்னதியாகும் . அம்பிகை அழகே உருக்கொண்டு காட்சி அளிக்கிறார் . இங்கு பூஜை செய்ய யாரும் இல்லை .

ஆதலால் நாமே பூஜிக்கலாம் . பர்வதமலை
செல்பவர்கள் செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் : 2 வேளை உணவு பாக்கெட் ,போதிய அளவு தண்ணீர் .குளுக்கோஸ் , இரவு தங்க வேண்டி இருப்பின்போர்வை, பூஜைக்கு தேவையான பொருட்கள் போதுமானதாகும் .

 இங்கு கொடியவிலங்குகள் ஏதும் இல்லை .தூரத்தில் இருந்து பார்த்தால் நந்தி
படுத்திருப்பதை போலவும் அதன் கொம்புகளுக்கு இடையில் திருக்கோவில்
அமைந்திருப்பதைப் போல பர்வதமலை அமைந்துள்ளது.

 காஞ்சி மகான் ஒருமுறை பர்வத மலை தரிசிக்கவந்த மலையே சிவனாக இருப்பதால் பர்வதமலை ஏறாமல் மலையை
சுற்றி வந்து வணங்கியதாக வரலாறு.பூண்டிமகான் தரிசித்த இடம் பர்வதமலை


சித்தர்கள் :

பல சித்தர்கள் வாழ்ந்து வரும் அற்புத சிவதலமாக பர்வதமலை
விளங்குகிறது. மானிட உருவிலும் பல பக்தர்களுக்கு ஆசிகள்
வழங்கியுள்ளார்கள் .

 நமது நன்பர் தேன் பூச்சிகள் வடிவிலும் , பருந்து
வடிவிலும் , ஏதேனும் சிறிய மிருகங்கள் வடிவிலும் , பைரவர் வடிவிலும்
காட்சி அளிப்பதாக கூற ஆச்சர்யப்பட்டு மேலே செல்ல வண்டுகளின் ரீங்காரம் நம்மை தொடர்ந்து வருகிறது.

மலை உச்சியில் பைரவர் அம்சமான நாய் மற்றும்
பருந்து ரீங்காரத்தையும் தரிசித்தோம் . மதியம் 12 மணிக்கு உச்சிகால
பூஜைக்கு வில்வத்தால் அர்சித்து ஸ்ரீ மல்லிகார்ஜீனரை தரிசித்து வரும்
வழியெல்லாம் சித்தர்களை மேற்கண்ட உருவில் கண்ட திருப்தியுடன் கீழே
இறங்கினாம் .

எளிதான மலை காலை 9 மணிக்கு துவங்கி 12 மணிக்கு தரிசித்து
மாலை 4மணி அளவில் பர்வதமலை கடலாடி அடிவாரத்தை அடைந்தோம் . யாரோ வைத்த காட்டுத்தீ மெளன குரு ஆசிரமம் எதிரே உள்ள மலையின் துவக்கத்தில் எரிந்து கொண்டிருக்க பயணம் சற்றே வித்தியாசமாக முடிந்தது.

முடிவுரை:

சிவனையும் சித்தர்கள் பற்றிய தேடல் இருப்பவர்கள் பெளர்ணமி ,அமாவசை, பிரதோஷ நாட்களில் ஸ்ரீ மல்கார்ஜீனரை வந்து வணங்குங்கள் . தேடலுடன் செல்பவர்கள்  கூட்டமில்லாத நாட்களில் பகலில் செல்வது நலம் .

பிடிக்கொரு லிங்கமாக கருதப்படும் பர்வதமலை பல சூட்சமங்கள் கொண்டது. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் . திருவல்லிக்கேணி சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் பர்வதமலையில் திருப்பணிகள் நடைபெறுகிறது. வாழ்த்துக்கள்


அடிவாரத்தில் இருந்து 1 செங்கல் சுமந்து கோவில் திருப்பணிக்கு உதவலாம்
.திருக்கோவில் கமிட்டியிடம் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து இறையருள் செய்யுங்கள். உடலில் தெம்பு உள்ளபோதே பர்வதமலை செல்லுங்கள் .

திருவண்ணாமலை பேளூர் தென்மாதிமங்கலம் வழியாக சென்று பர்வதமலை ஸ்ரீபிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீர்னர் வந்து தரிசித்து நலமும் வளமும் பெறுங்கள்.நன்றி

Sunday, March 3, 2013

பர்வதமலை தரிசனம் பாகம் 2

ஸ்ரீ பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனர் திருக்கோவில் பருவதமலை
அமைப்பை முந்தைய பதிவில் பார்த்தோம் . சென்ற வாரம் பர்வதமலை செல்லாம் என நன்பர்களுடன் திருவண்ணாமலை சென்று ஸ்ரீ அருணாசலேஷ்வரரை தரிசனம் செய்ய,,

 சனிபிரதோஷமான 23.2.13 மாலையில் 5.30 மணிக்கு உள்ளே சென்று நந்தீசர் அபிஷேகம் பார்த்து வழிபட்டு அருணாசலேஷ்வரரை சிறப்பு தரிசனம் செய்ய சென்று சிவநாமம் சொல்லிய படியே 2 வருடம் கழித்து சிவபெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு மூலஷ்தானத்தை அடைந்து நிற்க,,

 எதிரே யாரோ முக்கியஸ்தர்  வர நான் என் நண்பர் குழுவுடன் நேராக அருணாசலீஷ்வரர் முன்பு சில நிமிடங்கள் நிற்க வைத்து தரிசனம் காட்டினார் .நீண்ட நாட்களுக்கு பின் பெரும் மனநிறைவுடன்விடுதி வந்து சேர்ந்தோம்.


இரவு பர்வதமலை பற்றி அறியாத மூவரும் எப்படி
செல்வதென யோசித்துக்கொண்டிருக்க அங்கே நன்பர் வாங்கி வந்த ஆன்மீக இதழில்  பர்வதமலை பற்றி கட்டுரையை படிக்க அடுத்த நாள் காலை திருவண்ணாமலையில்  இருந்து பர்வதமலை பயணத்தை கிளப்பினோம்

 சரியான வழிகாட்டுதல் அறியாததால் செங்கம் பஸ் ஏறி ஓர் வழியாக கடலாடி வந்து சேர்ந்தோம். இந்த வழியாக நடந்து பர்வதமலை அடிவாரத்தை அடைந்தோம் . இங்கே மெளன குரு  ஆசிரமம் அமைந்துள்ளது.

இங்கே குளிக்க சிறிய அளவில் குளியறை ஒன்று
உண்டு.நாங்கள் சென்றபோது மலை ஏற உதவியாக கஞ்சி ஊற்றினார்கள். அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் . மலையின் தொடக்கத்தில் இந்த வழியாக சென்றால் 7  கி.மீ பயணித்தால் உச்சியில் மல்லிகார்ஜீனரை தரிசிக்கலாம் என ஒரு பெண்மணி  சொன்னார் .

 பர்வதமலையில் புற்றுமண் அதிகமாக உள்ளது. கடலாடி வழியாக   சென்றால் பல பாம்பு புற்றுகளை காணலாம் . தூரத்தில் மலையுச்சியை   பார்த்தவாறே சென்றோம் . ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில்
பூத்துக்குழுங்குகின்ற மலர்கள் நீலப்புல்கள் என காட்சி அளித்தன.

இங்கு
விஷேச மூலிகைகள் இருக்கிறதாக நன்பர் சொன்னார் . ஆங்காங்கே சிறிய கடைகள்பணியாரக்கடைகள் மட்டுமே உண்டு.சற்று தூரம் நடந்தால் தென் மாதிமங்கலம்  இணையும் வழி வருகிறது. இரு வழியில் செல்பவர்களும் இங்கே இணைந்து சென்றால்  கடைசிமலையை அடைந்துவிடலாம் .


 செங்குத்தான பர்வதமலையின் கடைசிமலையில்
கடப்பாறைப்படி இதில் கடப்பாறையை பாறையில் துளையிட்டு இறுக்கி

இருக்கிறார்கள் .

அதைத் தொடர்ந்து தண்டவாளப்படி ஏணிப்படி ஆகாயப்படி என  திரிலிங்கான மலைப்பாதையில் கீழே பார்த்தால் தலை சுற்றும் சற்றே
சிரமமானதே என்றாலும் மலைகள் ஏறி பழக்கமுள்ளதால் எளிதாகவே இருந்தது.அடிவாரத்திலிருந்து 3மணி நேரத்தில் திருக்கோவிலை அடைந்தோம் .

வயதானவர்கள்
பெண்கள் குழந்தைகளுடன் 4மணி நேரத்தில் கடக்கலாம் . பெளர்ணமி இரவுகளில் கூட்டமான நாட்களில் 5 மணி நேரம் கூட ஆகுமாம் . தென்கயிலாயம் ,திரிசூலகிரி நவிரமலை என பர்வதமலைக்கு வேறுபெயர்களுண்டு.

வழியில் கல்லால்ஆன குன்று, பாறை இடுக்கில் கிணறு, அண்ணாமலையார் பாதம் என பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

அடுத்த பாகம் 3 ஆம் பதிவில் பர்வதமலை தரிசனம் தொடரும்

Saturday, March 2, 2013

பர்வத மலையின் அமைப்பு பாகம் 1

பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனேஷ்வரர் திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் வட்டம் பர்வதமலை எனும் அழகிய மலையில் குடிகொண்டு மக்களை காத்து வருகிறார்..

 திருவண்ணாமலை மாவட்டம் பேளூரில் இருந்து 20கி.மீட்டர்
தொலைவிலும், செங்கத்திலிருந்து 30கி.மீட்டர் தொலைவிலும் ,
திருவண்ணாமலையில் இருந்து 30கி.மீ தொலைவிலும் பர்வதமலை அமைந்துள்ளது.



4560அடிஉயரத்திலும் 5500ஏக்கர் பரப்பளவில் 26 கி.மீட்டர் சுற்றளவில்
அமைந்த மலையின் உச்சியில் திருக்கோவில் அமைந்துள்ளது. போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் தென்மாதிமங்கலம் வழியாக மலைக்கு செல்லும்வழியாகும் .

மற்றொரு வழி கடலாடி சென்று அங்கிருந்து அடிவார மெளனகுரு
ஆசிரமம் சென்று அடிவாரத்தில் இருந்து மலை ஏறுவது இதில் பக்தர்கள் அதிகம்பயன்படுத்துவது தென்மாதி மங்கலம் வழியாகும் .

தென் கயிலாயம் என போற்றப்படும் பர்வதமலை புராணகாலத்திய திருக்கோவிலாகும் .தென்மாதி மங்கலம்  வழியாக சென்றால் 1கி.மீ அடிவாரத்தை அடைந்து 7 முனிஷ்வரர்களை தரிசித்து


பின் பச்சியம்மன்,வீரபத்திரர்,ஆஞ்சநேயர் தரிசித்து 1250படிக்கட்டுபாதைகள்
கடந்து சென்றால் மலைப்பாதையின் கடலாடி வழியாக வரும்பாதையும் இணைந்து  திருக்கோவில் செல்லலாம் .

சுமார் 2000ஆண்டுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நன்னன் என்ற மன்னரால் கட்டப்பட்ட அழகிய திருக்கோவிலாகும் பாகம் 2 ல்
காண்க

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...