Thursday, January 12, 2012

பிணங்களாய் மனிதர்கள்


மனிதன் உயிருடன்
இருக்கையில் உணவிட்டு
கவனிக்காத உறவுகள்
இறந்த பின்
நெய்யும் பாலும்
இட்டும் பிணத்தை
அபிஷேகித்தன - உயிர் இருந்தும் பிணங்களாய்

திறக்கப்படாத பக்கங்கள்


அன்பே..!
நான் ஒவ்வொரு முறை
காதலைச்சொல்ல
வரும்போதும்
"நாம் நல்ல நட்புதான் "
என
நீ உறுதிப்படுத்திய பின்னும்
உனக்காக எழுதப்பட்ட
என் கவிதைப்பக்கங்கள்
திறக்கப்படாமலே உள்ளது.!
உன்னிடம் சொல்லாத
எம் காதலைப்போலவே..!

வயதானவர்களை வணக்கவேண்டிய தருணம்



வயதானவர்கள் என்றால் கேவலமா ? இன்று பொது இடங்களில் வயதானவர்களை சிலர் "பெரிசுகள் " "கிழடு "" கிழவி" என பல ஏகவசனங்களில் கூப்பிட பல இளைய தலைமுறைகள் தாய் ,தந்தையை அனாதை ஆசிரமங்களில் தவிக்க விட்டு தனிக்குடித்தனம் என தனிமையில் வாழ்கின்றனர் .

பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருக்க எல்லா வீட்டிலும் அன்பு பல்கிப்பெருகிருந்தது. தற்காலத்தில் அந்த நிலை மாறி சில குடும்பங்களில் வயதானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் . அந்த பெரியவர்கள் அல்லது வயதானவர்கள் முக்கியதுவத்தை விளக்க இந்த கதையை படித்துவிட்டு வாருங்கள் .


பழங்காலத்தில் ஒர் அரசன் இருந்தான் .அவன் தன் நாட்டில் வளர்ச்சி பாதையில் செல்ல தடையாக இருப்பது வயதானவர்கள் தான் என்ற எண்ணம் கொண்டு இருந்தான் .ஏனெனில் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் பராமரிப்பு செலவு என இருப்பதால்தான் நாட்டின் வளர்ச்சி குறைவதாக எண்ணி அமைச்சரை கூப்பிட்டு " நாளையில் இருந்து ஒரு வாரத்திற்குள் நம் நாட்டில் உள்ள 60 மேலுள்ள வயதானவர்களை கொன்று விடச்சொல்லி உத்தரவிட்டார் .

அப்படி கொல்ல அவர்கள் வீட்டில் யாரேனும் தடுத்தால் அவர்களையும் கொல்ல உத்திரவிட்டான் .அதன்படி நாட்டில் உள்ள 60வயதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் கொல்லப்பட்டனர் . சில காலம் கழிந்தது. நாட்டில் திடீரென உருவான வெள்ளப்பெருக்கால் நாட்டில் பலருக்கு இனம் புரியாத நோய் தோன்றியது. பலர் இறந்து போயினர் .

என்ன செய்வது எனத்திகைத்த அரசன் இந்த கொடிய நோயை தீர்த்து மக்களை காப்பாற்றுபவர்களுக்கு 1000 பொற்காசுகளும் அரசவையில் நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதாக அறிவித்தான் .

அடுத்த நாள் காலையில் ஓர் இளைஞன் சித்த மருந்துகள் அடங்கிய பெரிய குடுவையுடன் அரசவைக்கு வந்தான் . தான் நோயை குணப்படுத்துவதாகவும் ,அரசர் அனுமதிக்க வேண்டும் என அந்த இளைஞர் கேட்க அரசர் மக்களைக் காப்பாற்றும் படி வேண்டினான். மூலிகைச்சாற்றின் வித்தையால் ஒரே மாதத்தில் எல்லோர்க்கும் வைத்தியம் அளித்து காப்பாற்றினான் .

மன்னர் மகிழ்ந்து அந்த இளைஞர்க்கு பாராட்டு விழா நடத்த விரும்பி அந்த இளைஞரிடம் கேட்க இந்தப்பாராட்டுகுரிய ஓர் முக்கியமானவரை கூட்டிவர அனுமதிக்க வேண்டும் எனக்கேட்க அரசர் கூட்டி வருமாறு கூறினார் . அடுத்த நாள் பிரமாண்ட விழா அந்த இளைஞர் ஒரு பெரியவருடன் விழாவுக்கு வந்திருந்தார் .

அதிர்ச்சியுற்ற மன்னர் நாட்டில் ஒரு வயதானவர் கூட இருக்ககூடாது கொல்ல வேண்டும் என உத்திரவிட்டும் வயதானவருடன் விழாவுக்கு வந்துள்ளான என யோசித்தவாறு இளைஞனே நில் யார் இந்தப்பெரியவர் ? இவரை ஏன் கூட்டி வந்தாய் எனக்கேட்க ஜயா மன்னரே என்னை மன்னிக்கவேண்டும் !

நாட்டில் எல்லா வயதானவர்களையும் கொல்லும்படி உத்திரவிட்டீர்கள் . ஆனால் பாசத்தால் என் தாத்தாவை கொல்லாமல் பாதாள அறையில் பராமரித்து வந்தேன் .மக்கள் நோயால் இறந்து கொண்டு இருந்த போது எனது தாத்தா தன் சித்த வைத்திய திறமையால் இந்த நோயை எளிதாக தீர்க்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்து உங்களிடம் அனுப்பி வைத்தார் .

அதனால் தான் என்னால் இந்த கடுமையான நோயை தீர்க்க முடிந்தது எனக்கூற அதைக்கேட்ட மன்னர் பெரும் தவறு செய்து விட்டேனே ! நாட்டில் முக்கிய செல்வங்களில் பெரியோர்கள் என்று உணர்ந்து தம்மை மன்னிக்குமாறு அந்தப்பெரியவரிடம் வேண்டினார் . சொன்னது போலவே இளைஞருக்கும் , வயதானவர் நல்ல பொறுப்பில் வைத்து தொடர்ந்து நல் ஆலோசனைகள் வழங்கி நாட்டையும் நாட்டுமக்களையும் காக்குமாறு அந்த விழாவில் ஆயிரம் பொற்காசுகள் வழங்கி அறிவித்தார் .

கதை நல்லாயிருக்கா? படிச்சிட்டு மறக்க அல்ல இந்தக்கதை .

வயதானவர்களின் முக்கியதுவத்தை உணர்த்தவே இந்தக்கதை .
பெரியவர்கள் வயதானவர்கள் அனுபவ பொக்கிசங்கள் . அதை நன்கு உணர்ந்து பாதுகாத்து நம்முடன் வைத்து அரவணைப்போம் .

இனி வீட்டிலும் நாட்டிலும் பொது இடங்களில் வயதானவர்களை கண்டிப்பாக மதிப்பீர்கள் என்று நம்பிகிறேன் .ஏனெனில் எல்லா சமுக மாற்றங்களும் நம்மிடம் இருந்து கிளம்பவேண்டுமென் விரும்பும்
உங்கள் நட்பூ.

Sunday, January 8, 2012

ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி




ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை.

ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட்டை.பவானி.



ஈரோடு மாவட்டம் திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் அழகு மிகுந்த காவிரி நதிக்கரையின் அருகே பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் 3 கி.மீட்டரில் ஊராட்சிக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள மலையாகும் .
திருக்கோவில் செல்லவழி :
ஊராட்சிக்கோட்டையில் இறங்கி மலைப்பாதை வழியாக சுமார் 1500மீட்டர் உயரம் நடக்க வேண்டும் . 10அடிப்பாதையில் எளிமையான படிக்கட்டில் நடைப் பயணம் செய்ய வேண்டும். திருக்கோவில் செல்ல பயண நேரம் :ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் .உணவு,தண்ணீர் தேவைகளுடன் பயணிக்கலாம் .

வேதகிரியின் சிறப்புகள் :
ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை பஞ்சமூர்த்திகளில் முதன்மையானது. திருக்கோவில் தோன்றல் காலம் 600 முதல் 1000ஆண்டுகள் இருக்கலாம் . சைவ,வைணவத் திருத்தலங்கள் ஒன்றாக அமைந்திருப்பது ஓர் சிறப்பு.
திருக்கோவில் சென்றுவர சரியான பாதை பழங்காலத்தில் இல்லாததால் இப்பகுதியில் உள்ள வேதகிரி நற்பணி மன்றம் மற்றும் இங்குள்ள மக்களால் திருப்பணி 1997ல் தொடங்கி அயராத முயற்சியால் 2001 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் நாள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

பழங்காலத்தில் மலையின் மேற்பரப்பில் 2000அடி அகலம் மட்டுமே இருந்துள்ளது. திருப்பணிக்குழுவினர் அதை 27000 சதுர அடியாக ஆகம முறைப்படி அகலம் செய்து திருக்கோவில் மேற்பரப்பில் தற்போது 8 கோவில்களை சிறப்பாக அமைத்துள்ளார்கள் .

அப்படி திருப்பணி நடக்கும் போது வேதகிரி மலையின் நடுவில் ஸ்ரீ லிங்கேஷ்வரர் சுயம்பு மூர்த்தியாக தோன்றி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் . அவருக்கு தனிச்சன்னதி தற்போது நாம் பயணிக்கும் நடைபாதையின் நடுவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் மேலே அமைத்துள்ள கோவில்கள் :

ஸ்ரீ வேதகிரிஷ்வரர் ,ஸ்ரீ வேதநாயகி, வள்ளி,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் . பள்ளி கொண்ட நிலையில் வேதநாரயணர் ,வேதவியாசர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் .

ஸ்தலமரம் : ஆலமரம் அருகே ஸ்ரீ பெருமாள் பழங்கால சிலை அமைந்திருக்கிறது .இங்கு மூன்று பௌர்ணமி திதிகளில் வணங்கி வந்தால் திருமணத்தடை அகலும் . மூன்று அம்மாவசை திதிகளில் வணங்கிவந்தால் குழந்தைப்பேறு கிட்டுமென்பது ஐதீகம் .

ஜீவசமாதி :

திருக்கோவில் பழையவழி ஜீவாநகர் என்னும் பஸ் நிறுத்தத்தில் இருந்து செல்லும் வழியில் முருகர் கோவில் வலப்புறம் " ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதி" அமைந்துள்ளது.

1920களில் இப்பகுதிக்கு ஆத்தூரில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிற அருள் அன்னை இங்கேயே பலகாலமாக வாழ்ந்து ஆன்மீக சேவை செய்து வந்ததாகவும் .25.8.1971 ல் ஜீவசமாதி அடைந்து விட்டதாகவும் ,தம்மை நாடி வருபவர்கள் குறைகளை இன்றும் தீர்த்து வரும் அன்னை அவர் .

தற்போது அன்னையுடன் இருந்த முதியவர் தள்ளாத வயதில் சிறிய ஆசிரமத்தில் உள்ளார் .தற்போது ஒருவர் ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதிக்கு பூஜைசெய்து வருகிறார். அன்னையின் ஜீவசமாதியும் , அவர் தவம் செய்த சிறிய குகையும் தற்போதும் உள்ளது.

திருக்கோவில் மேலிருந்து பார்த்தால் பவானி, கொமராபாளையம் ,பெருமாள் மலை. காவிரியின் அழகும் தெரிகிறது. பஞ்சகிரிகளில் முதன்மையான

அருள்மிகு ஸ்ரீ வேதகிரிஷ்வரரை வந்து வணங்கி எல்லா வளமும் பெறுங்கள் .

Saturday, January 7, 2012

பிரியமானவேளே...! உன் வரவுவுக்காக..!


ப்ரியமானவளே..!
நீயாகவே எம்முள் வந்தாய் ..!
நீயாகவே நெடுந்தூரம் விலகிச்சென்றாய் ..!
காரணம் கேட்டால்
"உன்னைப்பிடிக்கவில்லை "
என்றாய்...!
என்னைப்பிடிக்கவில்லை
என்பதற்காகவே..!
உன்னை அதிகாமாய்
பிடிக்கிறதென்பதை அறிவாயா..?

அழகு


அவள்
கூந்தலிலும்
முதுகிலும் ஏறி
தன்னை
அலங்கரித்துக் கொண்டது..!
அவள்
சூடிக்கொண்ட பூக்கள்

தேடல்



அன்பே...!

நீ பிரிந்த நேரங்களில்
எதிர்படும்
ஓவ்வொரு பெண்மையில்
எங்கேனும்
உன் சாயல்
தென்படுகிறாதாவென
தேடிக் கொண்டிருக்கிறேன்
நான்..!
உன்னைத்தேடி..!

காவிரி நதியில் மிதந்து காட்சிதரும் ஸ்ரீ நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவில்





அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீஷ்வரர் திருக்கோவில் .காங்கேயம் பாளையம் ஈரோடு மாவட்டம்
SRI NATTATRIESWARAR TEMPLE, kangayampalayam, erode



காவிரி நதிக்கரையில் புகழ் பெற்ற பல சிவலாயங்கள் உள்ளன. அவற்றில் பழமையான ஸ்ரீ நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும் .

திருக்கோவில் செல்லும் வழி :

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் 15 கி.மீட்டர் காங்கேயம் பாளையம் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரரை தரிசனம் செய்யலாம்

திருக்கோவில் மூலவர்: நட்டாற்றீஷ்வரர் ( NATTATRIESWARAR )

திருக்கோவில் பெயர் காரணம் :

காவிரி நதியில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதாலும் ,திருக்கோவில் சுற்றிலும் காவிரி நதி ஓட நடுப்பகுதி ஆற்றில் திருக்கோவில் அமைந்திருப்பதால் நற்றாற்றிஷ்வரர் (நடு+ஆறு+ ஈஸ்வரர் ) என அழைக்கப்படுகிறது .

திருக்கோவில் அமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவாலயமாகவும் ,பழங்கால திருக்கோவிலை சீர் செய்து அழகாக உருவாக்கியுள்ளார்கள் .ஈரோட்டில் இருந்து காங்கேயம்பாளையம் வழியாக வரும் பக்தர்கள் வசதிகாக திருக்கோவில் வர பாதை தயாராகி வருகிறது.

ஸ்தலமரமாக ஆத்திமரம் உள்ளது.

திருக்கோவில் சிறப்புகள் :

சித்தர்களில் ஒருவரான அகத்தியரால் பூஜித்து, வழிபட்ட பாடல் பெற்ற சிவலாயம். அதனாலேயே மூலவர் நட்டாற்றீஷ்வரர் எதிரே அமைந்த நந்தீஷ்வரர் பின்புறம் அகத்தியர் திருவுருவச்சிலை அமைத்து சிறப்பித்துள்ளார்கள் .

காவிரி நதியின் நடுவில் ஆற்றினுள் அமைந்த ஒரே சிவஷ்தலம் . 6300 ஆண்டுகள் பழமையான சிவலாயமென புகழப்படுகின்ற சிவாலயம் .

ஈரோடு மாவட்டத்தில் காவிரி நதிக்கரையின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவிலை வந்து பாருங்கள் . இறைவன் அருள் பெற்றுச்செல்லுங்கள். அருள்மிகு ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரர் அருளால் எல்லா வளமும் பெற்று உய்ய வேண்டுகிறேன் .

Saturday, December 31, 2011

நாளைய விடியல் உனக்காக


ஒவ்வொரு வருடமும்
முன்னைப்போலவே
புதிதாய் பிறக்கிறது..!

நட்பே ,

உனக்காகதான் அது.!
அறிவை மேம்படுத்தி
உயர் சிந்தனைகள் வளர்த்து..!
உரியதோர் இலக்கை தொட்டு.!
புதியதோர் அத்தியாயம் படைத்திடு..!
நீ முயற்சிக்கின்ற
எதிலும் வெற்றி பெறு..!
முடியுமாவென யோசிக்காதே..!
முயற்சித்தால் கண்டிப்பாக
வானம் வசப்படும் ..!
நாளைய விடியல் 1.1.2012
அதன் தொடக்கமாயிருக்கட்டும் ..!




(எமது வலைப்பூவை தொடர்கின்ற அன்பு நட்புகளுக்கும் ,பேஸ்புக் ,டிவிட்டர் தொடர்கிற நட்புகள் ,மற்றும் சக வலைப்பூ நட்புகளுக்கும் , என் குருவை வாழ் நட்புகளுக்கும் , உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012 . HAPPY NEW YEAR WISHS - 2012 )

நட்புடன்
குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்

ஸ்ரீ திருமண்மலை கல்யாண லஷ்மிநாராயணப்பெருமாள் திருக்கோவில் ஒட்டப்பாளையம் . ஒலகடம்



திருமண்மலை
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் .
.ஒலகடம்


திருக்கோவில் செல்லும் வழி : ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஒட்டப்பாளையம் கிராமம் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் சாலையில் வெடிக்காரன்பாளையம் .தாண்டாம்பாளையம் என்னும் கிராமத்தில் உள்ளது. ஒலகடம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது.

திருக்கோவில் மூலவர் :
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோவில் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர் ஸ்ரீ கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் முற்றிலும் திருமண்ணால் திருமேனி கொண்டும் தாயாரை வலப்புறம் கொண்டு திருமண் கல்யாண லஷ்மி நாராயணராக திருமணக்கோலத்தில் திருமண்பெருமளாக காட்சி அளிக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் குன்றின் மேல் பெருமாள் திருக்கோவில் . சில நேரங்களில் இப்பெருமாள் உக்கிரமாகி நரசிம்ம மூர்த்தியாக மாறுவதால் இவர் "திருமண் லஷ்மி நரசிம்ம பெருமாளாக அழைக்கப்படுகிறார் . திருப்பதியைப் போன்று வேங்கடவன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார் . திருமண் என்றால் நாமக்கட்டி எனபொருள் . மூலவர் நாமக்கட்டியால் ஆனவர் என்பதே விஷேசம் . திருமண் எனப்படும் நாமக்கட்டியே இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இறைவனுக்கு பழமையான ஆலயம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட அழகான வைணவத்திருத்தலம் என போற்றப்படுகிறது. திருக்கோவில்
பலன்கள் : தனது வலப்புறத்தில் அன்னை பத்மாவதி தாயாரோடு இறைவன் திருமணகோலத்தில் காட்சி தருவதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால் நல்லபடியாய் திருமணம் நடைபெறுகிறது .
திருக்கோவில் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் வழியில் 3வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. திருக்கோவில் மேல் செல்ல பழங்காலத்தில் அமைக்கப்பட்ட 50 படிகட்டுகளும் ,

தற்போது அமைக்கப்பட்ட பாதைகள் சிறிய வாகனங்கள் செல்ல ஏதுவான பாதையும் உள்ளது. முகப்பில் உள்ள பெரிய ஸ்ரீ ஆஞ்சனேயர் சிலையும் ,அழகிய கொடிமரமும் வணங்கத்தக்கது. பூஜைகள் : பிரதிமாதம் ஏகாதசி திதி அன்று திருமண்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் . பிரதி மாதம் பெளர்ணமி மாலை 06.00 மணி முதல் 08.00 மணிவரை சத்திய நாராயண பூஜையும் ,சுதர்சண ஹோமமும் ,திருவிளக்கு பூஜையும் நடைபெறும் . பிரதிமாதம் பஞ்சமி திதி அன்று மகாலட்சுமிக்கு சிறப்பு சகஸ்கர நாமவளி பூஜை நடைபெறும் . பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனமும் ,சஹஸ்ரநாமாவளியும் ,தீபாரதனையும் நடைபெறும் . பிரதிமாதம் மூல நட்சத்திரத்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும் . திருக்கோவில் பற்றிய விரிவான ஆராய்வுகள் தேவைப்படுவதால் விரிவுபடுத்தப்படும் .

ஸ்ரீ சௌந்திரநாயகி உடனமர் வாகீஸ்வரர் திருக்கோவில் .பட்லூர் .வெள்ளித்திருப்பூர்





ஸ்ரீ செளந்திர நாயகி உடனமர் வாகீஷ்வரர் திருக்கோவில் ,பட்லூர் .வெள்ளித்திருப்பூர்


ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் புகழ் பெற்ற பழங்கால சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பழமையான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும் .

திருக்கோவில் செல்ல வழி :

பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி செல்லும் வழியில் 20கி.மீட்டர் தொலைவில் பட்லூர் என்னும் அழகிய ஊரில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிக்கிறார் . அந்தியூரில் இருந்து நால்ரோடு வந்து (8 கி.மீட்டர் ) பட்லூரை அடையலாம் .

பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் நால்ரோட்டில் இறங்கி சுமார் 1 கி.மீட்டர் வடக்கில் பயணித்தால் திருக்கோவிலை அடையலாம் . திருக்கோவில் தோன்றிய காலம் 1000 ஆண்டுகள் இருக்குமென இங்குள்ள ஸ்தல மரமான வில்வமும் ,அருகேயுள்ள அரசமரங்களும் இயம்புகின்றன.

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ வாகீஷ்வரர்(தாமரை பீடத்தில் சிவ லிங்கமாக அமைந்துள்ளார் )

அம்பாள் :

ஸ்ரீ செளந்திர நாயகி

மூலவர் :
திருக்கோவில் சாமி லிங்க உருவில் தாமரை மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வாகீஷ்வரர் காட்சி அளிக்கிறார் .திருக்கோவில் சிவலிங்கம் கிழக்கு பார்த்தவாறு அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறம் பழங்காலத்தில் சிறுகற்களால் வெளிப்பிரகாரம் கட்டப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. திருக்கோவில் எப்போதும் திறந்திருக்கும் . அமைதியான சூழலில் சிவதரிசனத்திற்கு ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் ஏற்புடையது.

திருக்கோவில் பெரிய அளவில் எடுத்துச்செய்ய யாரேனும் வருங்காலத்தில் வரக்கூடும் . எளிமையாக இருந்தாலும் கம்பீரமாக காட்சிதரும் சிவாலயம் . ஸ்ரீ செளந்திரவல்லி அம்பாள் தனிச்சன்னதியாக அழகாக நேர்த்தியான வடிவமைப்பில் அமர்ந்திருக்கிறார் . முகப்பில் உள்ள நந்தீஷ்வரர் உயிர்புடையவர் ,

திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்ரீ கணபதி, பன்னிருகரம் கொண்ட ஸ்ரீமுருகப்பெருமான் .ஸ்ரீ சண்டிகேஷ்வரர் , ஸ்ரீ காலபைரவர் என ஓர் பழங்கால சிவாலயத்தை வழிபட்ட திருப்தி ஏற்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் சிவாலயத்தை தேடி வழிபடுபவர்களாக இருந்தால் வந்து வணங்கி செல்லுங்கள் .

ஸ்ரீ வாகீஷ்வரர் உங்களுடன் இருக்க வேண்டுகிறேன் .

Friday, December 30, 2011

நன்பா 2012


நன்பா .. !
முந்தைய வருடங்கள் போலவே
இந்த வருடமும்
"புகை பிடிக்கமாட்டேன்"
" சாரயம் குடிக்கமாட்டேன்"
அதை மறப்பேன்
இதை விடுவேன் என

ஆயிரமாயிரம் சபதங்களை
ஏற்றுக்கொண்டு மறந்து விடு..?
கண்டிப்பாக நியாபகப்படுத்த வரும்
அடுத்த வருடமும்
ஓர் இனிய புத்தாண்டு .




எமது வலைத்தளத்தை பின் தொடர்கின்ற வலைப்பூ நன்பர்களுக்கும் ,இதர வலைப்பூவை நிர்வாகிக்கும் என் இனிய வலைப்பதிவாளர்களுக்கும் ,பேஸ் புக் ,டுவிட்டரில் உள்ள என் ஆழ்ந்த அன்பு நட்புகளுக்கும் , எனது குருவரெட்டியூர் நட்புகளுக்கும் எப்போதும் என்னைக்கருத்துரைகளில் குட்டுகிற வாசக நட்புகளுக்கும் என் இதயம் கனிந்த 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

ஜொள்


மலர்களைப் பார்த்து
ஜொள் விட்டது..!

இலையில் பனித்துளி..!

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...