Friday, February 1, 2013

திருப்பங்கள் தரும் திருபாம்புரம் வழிபாடு

திருப்பாம்புர தரிசனம் தழழும் மேனியன்
தையல் ஓர்பாகம் அமர்ந்தனன் .
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி - சோற்றுத்துறை ,
கழலும் கோவை உடையவன்காதலிக்கும் இடம் ,
பழனம்,பாம்பணி,பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே.

 ஸ்ரீ
சுந்தரரின் நாட்டுத்தொகை


 மூலவர் : பாம்புரநாதர்
என்றும்
,ஷேசபுரிஸ்வரர் ,பாம்பீசர் , பாம்புரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் .


அம்பிகை- வண்டு சேர் குழலி
 என்றும் பிரமராம்பிகை ,வண்டார் பூங்குழலி
என அழைக்கப்படுகிறார் .

 ஸ்தல அமைவிடம் :

 கும்பகோணத்தில் இருந்து
காரைக்கால் செல்லும் வழியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி எனும்
ஊரில் இருந்து தென் திசையில் திருப்பாம்புரம் என்னும் அழகிய ஊர்
அமைந்துள்ளது.

 செல்லும் வழி :

1. கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி
வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தின் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி
வரலாம் .மயிலாடுதுறை திருவாரூர் சாலையும் குடந்தைசாலையும் ,காரைக்கால் சாலையும் சந்திக்கும் இடமான கொல்லுமாங்குடி பேராளம் ஆகிய ஊர்களுக்குஅருகே திருபாம்புரத்தை மினி பஸ் மூலம் அடையலாம்.


 ஸ்தல மரம் : வன்னிமரம்

 தீர்த்தம் : ஆதிசேட தீர்த்தம்

 சன்னதியின் சிறப்பு :

இராகு கேது ஏக சரீர சன்னதி

 ஸ்தல சிறப்பு:

காவிரி ஆற்றின் உள்ள பாடல் பெற்ற
ஸ்தலங்களில் 59 வது ஸ்தலம் .திருஞானசம்பந்தரால், திருநாவுக்கரசர் ,
சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

காலம் : 1200 ஆண்டுகள்
பழமையானது .கி.பி 1178முதல் 1218 வரை ஆண்ட 3 ஆம் குலோத்துங்க சோழன் காலத்திய கால்வெட்டே முதல் கல்வெட்டாகும் ,அதற்கு முந்தையகாலம் அறிய இயலாதது .

 ஸ்தல வரலாறு:

சிவனின் சாபம் நீங்க ஆதிசேடன் சிவராத்திரி
முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும் இரண்டாம் சாமத்தில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து
வழிபட்டு விமோச்கனம் பெற்றதாக வும் ,திருப்பாம்புரத்தில் வாழும்
பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதால் யாரையும்
தீண்டுவதில்லை.

 ஆதிஷேகட தீர்த்தம் :

 திருக்கோவில் முன்பாக அழகிய
தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இங்கே வரும் பக்தர்கள் குளித்து
ஆனந்தமடைகிறார்கள். ஆச்சர்யம் : திருக்கோவில் உள்ளே இறைவன் இறைவியின் மேல் நல்லபாம்பு சட்டை உரித்தது 2002ல் நடந்த அற்புத நிகழ்வாகும் .

முடிவுரை:

 கடந்த ஆறுமாதத்திற்கு முன்பூ சென்ற அற்புத திருக்கோவிலில்
திருப்பாம்புரமும் ஒன்றாகும் . பல தோஷங்கள் மற்றும் ஜோதிடத்தில்
கூறப்படும் நாகதோஷங்களை நீக்கும் அருமருந்தாக திருப்பாம்புரம்
விளங்குகிறது.

 இராகுவும் கேதும் ஓரே உடலாக விளக்கும் அற்புத பாடல்
பெற்ற ஸ்தலமாகும் . எனது இந்த குடந்தை பயணத்தில் சில மாற்றங்கள் எம்
வாழ்வில் ஏற்பட்டன. திருக்கோவில் உள்ளே கணீர் குரலில் பாடலுடன் பாடி
பூஜிக்கின்ற திருக்கோவில் சிவாச்சாரியாரை பார்த்து அதிசயித்து நின்றேன்
.
 நிறைவான திருக்கோவில் வந்து வணங்கி ஸ்ரீ திருப்பாம்புரநாதர்
அருளைப்பெற்று உய்யுங்கள் . நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...