Monday, October 30, 2017

டெக்ஸ்வேலி TEX VALLEY

டெக்ஸ்வேலி  ( Tex Valley )                                                     அண்மையில் தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க செல்ல முடிவு செய்து எங்கே செல்வது என்று யோசித்த போது டெக்ஸ்வேலி சித்தோட்டில் இருக்கிறது அங்கு செல்லலாம் என நன்பர் கூற பயணித்தோம்
எங்கு உள்ளது? ஈரோட்டில் இருந்து 14 கி.மீ தொலைவில் சித்தோடு to கங்காபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. சேலம் to கோவை செல்லும் வழியில் சித்தோடு பை பாஸ் பிரிவு தாண்டி கங்காபுரத்தில் டெக்ஸ் வேலி அமைந்துள்ளது .
               
பயணித்து ஓர் வழியாய் டெக்ஸ்வேலி முகப்பு வந்ததாக விட்டது. கங்காபுரம் பைபாஸ் ரோடு மெதுவாக கடந்து வர வேண்டும்' இந்த பகுதிக்கு வந்தவுடன் நாம் ஏதோ வெளிநாட்டில் உள்ளது போல ஓர் உணர்வு , டெக்ஸ்வேலியின் முகப்பே அழகான வடிவமைப்பு கடந்து உள்ளே சென்றால் வலப்புறம் வாரச்சந்தை விற்பனை கூடம் கிட்டத்தட்ட 200 கடைகள் இவைகள் எளிமையான விலையில் துணிகள் விற்பனைக்கு உள்ளது. இதை தாண்டி பயணித்தால் மிகப் பெரிய கட்டிடம் நம்மை வரவேற்கிறது

 சுமார் 18 ஏக்கர் பரப்பில் 16 லட்சம் சதுர அடியில் சுமார் 450 கோடி மதிப்பீட்டில் 1650 கடைகள் பிரமாண்டமான 3 கட்டிடங்களில் உயர்ந்து நிற்கிறது. இங்கு கர்சீப் முதல் நமக்கு தேவையான அனைத்து துணிகளும் வாங்கலாம். இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக வளாகம், இங்கு பல ஆயத்த ஆடை நிறுவனங்கள் தங்கள் ஷோருமை திறந்துள்ளனர் .  

எல்லா தரப்பு மக்களும் வந்து துணிகள் வாங்கும் அளவிலேயே விலைகளும் உள்ளது. ஒரு நாள் வந்து பாருங்கள்.  சர்வதேச தரத்திற்கான ஓர் முயற்சி இதன் கட்டிடங்கள் அமைப்பு, அழகு ,                                                        டெக்ஸ் வேலியை உருவாக்கிய நல் உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்         

Tuesday, October 24, 2017

மனம் கவர்ந்த பாடகி -பிரியங்கா


விஜய்டி.வி சூப்பர்சிங்கர்பிரியங்கா                                    :    - -                                                                                                                             கடந்த சில நாட்களுக்கு பேஸ்புக்கில் எனது நண்பர் பதிவிட்டு இருந்த ஒரு வீடியோவை ரசித்தேன். விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பைனலில் பாடிய பாடல் அது.' " சின்ன சின்ன வண்ணக் குயில் " என துவங்கிய அந்த பாடல் கேட்டு மெய் மறந்த தருணம் அது, அட என்ன ஓர் அழகான குரல்.                                                                            " -                                  ஜென்சி, ஜானகி, அவர்கள் குரலை ரசித்து கொண்டிருந்த எனக்கு பிரியங்காவின் பாடல் கேட்ட போது இவர் நல்ல நிலைக்கு வருவார் என தோன்றுகிறது,.                                                                                          தனது உழைப்பால் தற்போது ஒரிரு சினிமா பாடல்கள் பாடி வரும் இவருக்கு தமிழ் திரையுலகம் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்' என்பது என் ஆவல் , மீண்டும் ஒரு ஜென்சி, ஜானகி வரிசையில் பிரியங்கா குரல் .                                                                                      பிரியங்கா மேன் மேலும் பல படங்களில் பாடி  நல்ல நிலைக்கு வர வேண்டும் அதுவே நம் ஆவலும் எம் வலைப்பூவில் இவரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் # வாழ்த்துக்கள் ப்ரியங்கா
     







Friday, July 8, 2016

மரங்கள் அடையாளங்கள், TREE IDENTIFICATION

மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் இனிய வேளையில் மரங்களின் அடையாளங்கள் பதிவிடலாம் என ஆர்வமாக உள்ளேன்.நீண்ட காலங்களுக்கு பின் பதிவு எழதலாம்  என எண்ணியுள்ளேன்.மூலிகை பற்றிய பதிவுகள் இருக்கும்.தொடர்ந்து பயணிப்போம்,நன்றி

Tuesday, December 1, 2015

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி


தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.                         ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

Wednesday, July 22, 2015

அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி

சேலத்தில் பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் சித்தர்களை தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாதார் ஆன்மீக ஸ்தலமாக விளங்குவது அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி ஆகும் .               சேலத்தில் பழைய சூரமங்கலம் அருகிலும்,சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து அரை கிமீ தொலைவில்  திருவாக்கவுண்டனுாரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் ஜீவசமாதி  அமைந்துள்ளது.                                                சுவாமிகள் பற்றி.    :     கரூர் ஜமீன் வம்சாவழியில் 1859  ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .தம்மை பைத்தியம் என்று சுவாமிகள் கூறிக்கொள்வாராம், பக்தர்கள் இவரை அப்பா என்றே அழைத்தார்கள். ஆகையால் அப்பா பைத்தியம் என பக்தர்கள் அழைத்தார்கள்.12.2.2000  ஜீவசமாதி:   தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆனார்கள்... நன்றி

Monday, June 22, 2015

அம்பிகை மாயம்மா ஜீவசமாதி


சித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்களை தரிசிக்க சேலம் வந்ததோம்.                                                                                                                                                                                                                                           மாயம்மா பற்றி விபரங்களை தேட 1920 முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வாழ்ந்த அம்பிகை அம்சம் கொண்டவர், பெண் சித்தராக வாழ்ந்து பல அற்புதங்கள்  செய்தவர் என்பதை அறிந்தேன்.                                                                                                                                செல்லும் வழி   :                                                    சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா ஸ்டுடியோ அருகில்,  சேலம் சட்டக்கல்லூரி எதிரில் மாயம்மா ஜிவசமாதியாக அமைந்து அருள் பாலிக்கிறார்.9.2.1992 ஆம் நாள் மாயம்மா ஜீவசமாதியான நாளாகும்.                                                                                                                                                                                        பல மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு சென்ற மாதம் மாயம்மாவை தரிசனம் செய்தவுடன் மனதில்  அமைதி உண்டானதாக உணர்கிறேன். அம்பிகை அம்சமான தாய் மாயம்மாவை வணங்கி எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Friday, May 15, 2015

கிச்சி குத்து மாரியம்மன் திருக்கோயில்

அண்மையில் ஓர் சிறப்பான ஓர் ஆலயத்தை தரிசித்து வந்தேன்.சக்தி அம்சமான
இந்த அழகிய திருக்கோயில் மூலவராக கிச்சி குத்து மாரியம்மன்
அடைந்துள்ளார். இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்
கொள்ளேகால் வட்டம் மாட்டெலி அருகில் சுள்ளுவாடி கிராமத்தில்
அமைந்துள்ளது.இது அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி - கொள்ளேகால் வழியில்
கர்கேகண்டீ 4 ரோட்டில் இருந்து 3கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.தரிசித்து வாருங்கள்.நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...