Friday, May 24, 2013

தேர்வு என்பது முடிவல்ல

அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு பலருக்கு மகிழ்ச்சியை
அளித்தாலும்,செய்தித் தாள்களில் ஆங்காங்கே தேர்வு முடிவு வெளியானதும்
சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்திற்குரியது. அதற்கு சில காரணங்களை ஆய்வு செய்வோம்

 1. பெற்றோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு :


படிக்கின்ற எல்லா மாணவர்களும் டாக்டர் ,என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆவல்எல்லா பெற்றோர்களுக்கும் இருந்தாலும் ,அது குழந்தைகளின் படிக்கும்
திறனைப் பொறுத்ததே , வெறுமனே படி படி என வலியுறுத்தாமல,

அதிகபட்சம் மதிப்பெண் எடுக்க தேவையான வழிவகுத்தல்,போன்ற வற்றைச்செய்யலாம் . ஆகஅதிகபட்ச பெற்றோரின் எதிர்பார்ப்பு மதிப்பெண் வாங்காத நிலையில்ஏமாற்றமாவது குழந்தையின் எதிர்காலத்தை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது.


2.சுயமாக வளர விடுங்கள் : 


பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் டாக்டர்
,என்ஜினியர் போன்றவற்றை மட்டுமே விரும்புகின்றனர் . ஆனால்
மாணவ,மாணவிகளின் விருப்பம் என்னவாக தான் விரும்புகிறார்கள் என்பதைப் கண்டு அதே படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கை வைப்பது நல்லது


3.       தட்டிக்கொடுங்கள் :


 குறைந்த மதிப்பெண்கள் காலண்டு அரையாண்டு தேர்வில்
எடுத்தாலும் திட்டாமல் நல்ல மதிப்பெண் எடுக்க தட்டிக்கொடுங்கள் . அது
மதிப்பெண்கள் எடுக்க உதவும் .

4..சின்ன சின்ன பரிசுகள் : 

நல்ல மதிப்பெண்எடுத்து வருகின்ற குழந்தைகளுக்கு 
சின்ன சின்ன பரிசுகள் கொடுங்கள் .


5..விளையாட்டு : 


தினமும் மாணவர்கள் சற்று நேரம் விளையாட விடுங்கள் அது
மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்

6.. இறை வழிபாடு :


 அவ்வப்போது மனதை
ரிலாக்ஸ் செய்ய திருக்கோவில் கூட்டிச்செல்லுங்கள் . தன்னம்பிக்கையுடைய
குழந்தையாக உருவாக்குங்கள் .

 மாணவர்களே , 


10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு என்பது 1வருடத்திய தவம் போல அது உங்கள் எதிர்கால வாழ்க்கையை  தீர்மானிக்கும் என்றாலும் கூட மதிப்பெண் குறைவதால் தற்கொலைக்கு முயற்சிப்பது நமது குடும்பத்தை வெகுவாக பாதிக்கும் . படிக்காத எத்தனையோ பேர் மிகப்பெரிய சாதனையாளர் ஆகி இருக்கிறார்கள் .வாழ்க்கை பயணம் நீண்ட தொலைவு அதில் தேர்வு என்பது முடிவாகாது ..

 இன்றைய உலகின் முதல் பணக்காரர்

பில்கேட்ஸ் 


கூறிய இந்த பொன் வரியை வாசியுங்கள்

 " என்னுடன் படித்த நிறையபடிப்பாளிகள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் மைக்ரோ சாப்ட்நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .மிதமாக படித்த நானோ மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலாளியாக இருக்கிறேன் "

ஆக தேர்வும் படிப்பும் அறிவையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளத்தானே
தவிர அவையே வாழ்வின் முடிவாகது .

தற்கொலைகளை தவிர்த்து

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் . 


நன்றி

Thursday, May 23, 2013

திருமூலரின் எளிமையான வாழ்வியல் வழி

திருமூலர் என்கிற மகா சித்தர் தன் திருமந்திரத்தில் நான்கு வரிகளில்
மனிதர்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும்,அவற்றை பின் தொடர்பவர்களுக்கு வாழ்வில்
 துன்பங்கள் நீங்கி இன்பம் கிட்டும் என்பதில் ஐய்யமில்லை.

யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை,
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

 சரி திருமூலர் என்ன சொல்ல வருகிறார் ?

''யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை'' 


என்றால் கடவுளை வணங்க செல்லும்
ஏதேனும் இலையை கொண்டு செல்லுங்கள்..
 சிவனுக்கு வில்வம் பெருமாளுக்கு துளசி
மாரியம்மன் வேம்பு விநாயகருக்கு அருகம்புல்

அந்த கடவுளுக்குரிய இலைகளை
பூஜைக்காக கொண்டு செல்லுங்கள் என்கிறார் .

இரண்டாவது வரியில்

 "யாவர்க்கு மாம் பசுவிற்கொரு வாயுறை" 


 உலகிலுள்ள தெய்வங்கள் எல்லாம் பசுவின் உடலில்
ஐக்கியமாகியுள்ளது .பல திருக்கோவில்களில் பசுமாட்டிற்கு கோ பூஜை செய்தபின்னரே மூலவர்க்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

 அப்படி சிறப்பு வாய்ந்த பசு மாடு காணும் போது பழம் அல்லது புல் அல்லது அகத்திக்கீரை அளிப்பதுமிகுந்த நன்மையை அளிக்கும் .

மூன்றாவது வரி

"யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி "


 நாம் சாப்பிடும் போது காகம் ,நாய் ,எறும்பு போன்ற
உயிர்களுக்கு உணவிடுதல் .

நான்காவது வரியில்

 " யாவர்க்கு மாம் பிறர்க்கு இன்னுரைதானே"


நன்பர்களிடமோ ,புதிய நபர் ,மற்றும் பிறரிடம் பேசுகையில்
இன்சொல் பேசுங்கள் ,இறைவனைப்பற்றியோ , சமுகத்திற்கு நல்லன தருவதைப்பற்றியோபேசுங்கள் . முடிந்தவரை இப்பாடலின் பொருளை வாழ்வில் பயன்படுத்துங்கள்...

இறைவன் உங்களுடன் இருப்பார். நன்றி

Wednesday, May 15, 2013

ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் திருக்கோவில்,குட்டை தயிர்பாளையம், சித்தோடு

வைணவக்கடவுள்களில் ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானுக்கென தனி இடமுண்டு.தமிழகத்தில்பல ஆஞ்சநேயர் திருக்கோவில் இருப்பினும் தனிச்சிறப்பு கொண்டதாக சித்தோட்டின் அருகே குட்டை தயிர்பாளையத்தில் இருந்து ஸ்ரீ பக்தஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

 திருக்கோவில் செல்ல வழி:

ஈரோட்டில்இருந்து கோபி செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும், சித்தோட்டில்  இருந்து 4 கி.மீ தொலைவிலும் திருக்கோவில் அமைந்துள்ளது.

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் கிழக்கு நோக்கிய அமைப்பாகும் . திருக்கோவில்
இடப்புறம் சத்தியில் இருந்து ஈரோடு செல்லும் மாநில நெடுஞ்சாலையும்
வலப்புறம் பெரிய நீர்க்குட்டையும் அமைந்துள்ளது.குளிர்சியான இடத்தில்
நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுடன் அழகிய பசுமையான மரங்கள் சூழ
திருக்கோவில் அமைந்துள்ளது .

 மூலவர் :

ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் நின்றநிலையில் வணங்கிய நிலையில் அருள்பாலிக்கிறார் .பழங்கால ஆஞ்சநேயர்   திருவுருவமாக திருக்கோவில் அமைந்துள்ளது.

 ஸ்தலமரம் : இலந்தை மரம்

வாரபூஜை:

 திருக்கோவில் தினமும் திறந்திருந்தாலும் சனிக்கிழமை கூட்டம்
அலைமோதுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்ற வைணவ விஷேசநாட்களில் கூட்டம்அலைமோதுகிறது .

திருக்கோவில் சிறப்பு :

பழமையான திருக்கோவில் விஷேச
நாட்களில் பெருமாள் கருடனின் தரிசனம் இத்திருக்கோவிலின் மேலே காணலாம் .


முடிவுரை :

திருக்கோவில் சிறிய அளவே ஆயினும் சக்தி பெரியது. சாந்தமாய்
குளிர்ச்சியாய் அமைந்து அருள்பாலிக்கிற ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானை வந்து
வணங்கி அருள் பெற்றுச்செல்லுங்கள் . நன்றி

Sunday, May 12, 2013

ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் கந்தமலை மாரப்பம்பாளையம்

குன்று தோறும் குமரன் உறையும் இடமென என சான்றோர்களின் கூற்றிற்கு ஏற்ப   ஸ்ரீ முருகப்பெருமானின் பழமையான ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காளிங்கராயன் பாளையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் 4 வது கி.மீட்டரில் மாரப்பம்பாளையம் அருகே அமைந்த பழங்கால மலைக்கோவிலாகும்.


இங்கு முருகப்பெருமான் பழனி ஆண்டவராக அருள்பாளிக்கிறார் . திருக்கோவில் ஊரைத்தள்ளி கரடு முரடான மலையில் அமைந்திருக்கிறது. திருக்கோவில் அடிவாரத்தில் இருந்து மேலே சுமார் 150 கற்களால் அடிக்கி வைக்கப்பட்டபாறையில் நடந்து செல்லவேண்டும் .

 மலையெங்கிலும் ஊஞ்சல் மரங்களால் நிரம்பிஇருக்கிறது. கீழே அழகிய பாழியும் சற்றே வறட்சியை பிரதிபலிக்கிறது.திருக்கோவில் மலைமேலே கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ பழனி ஆண்டவர்அருள்பாலிக்கிறார் .நின்ற திருமேனில் ஸ்ரீ முருகப்பெருமான்அருள்பாலிக்கிறார்.


வாரபூஜை :

 வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் நடைபெறுகிறது .வளர்பிறை
சஷ்டியில்  இங்கு   விஷேசமாக  பூஜை  நடைபெறுகிறது.

 முருகப்பெருமானுக்குரியநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 12 முதல் 2க்குள் திருக்கோவில்இப்பகுதியை சேர்ந்த பூசாரியால் திறக்கப்படும் .

 திருக்கோவில் சிறப்பு:

எல்லா கோவில்களில்களைப் போல் இல்லாமல் மரத்தால் செய்யப்பட்ட
கோபுரகலசத்தை பார்க்கையில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் 1000
வருடங்களையாவது கடந்திருக்கும் என்பது புலனாகிறது.

 முடிவுரை:

பழங்காலத்திய ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோவில் படிக்கட்டுகள் மற்றும்
புதுப்பிக்கும் பணிகள் செய்து திருக்கோவிலை விரிவாக்கம் செய்தால் இன்னும்



அதிக பக்தர்கள் வருவார்கள் .யாரேனும் ஓர் பக்தர் அதற்காக
படைக்கப்பட்டுருப்பார் .ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் பார்க்க வேண்டிய
ஆலயம்.நன்றி

Monday, April 15, 2013

ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில், நசியனூர் (நசியனூர் கொங்குவேளாளர் இனத்தில் கண்ணன் குலத்தார் குலதெய்வம் )

                      SRI APPATHAL TEMPLE, NASIYANUR



 பழங்காலத்தில் வாழ்ந்த முன்னோர்களை அவர்களையே பிரதிஷ்டை செய்து கடவுளாக வணங்கி வருகிற கோவில்கள் பல உண்டு .
அந்த வகையில் நசியனூரில் சுமார் 1000முதல் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த
திருக்கோவிலாக நசியனூர் அப்பத்தாள் திருக்கோவில் விளங்கி வருகிறது .


கொங்கு வேளாளர் இனத்தின் நசியனூர் கண்ணன் குல கோத்திரத்தின் குல தெய்வமாகnஇந்த திருக்கோவில் அமைந்துள்ளது . கொங்கு வேளாளர் அல்லாது இங்குள்ள  எல்லா சமுகத்தினரும் விரும்பி வணங்கிச்செல்கிற திருக்கோவிலாக நசியனூர் ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில் அமைந்துள்ளது .

மூலவர் அமைப்பு :


அம்மையும் அப்பனும் இணைந்துள்ள உருவச்சிலையாக பழங்காலத்தில் கண்ணன் குல முன்னோர்களான அப்பாவையும் +ஆத்தாவும் இணைந்து அருள்பாலிப்பதால் இத்திருக்கோவில் அப்பத்தாள் திருக்கோவில் எனப்பெயர் பெறுகிறது. தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிற திருக்கோவிலாகும் .

வார பூஜை;

வெள்ளிக்கிழமையன்றும்

 வருட பூஜை;

  மார்கழி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.


 திருக்கோவில் செல்ல வழி:

 ஈரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள நசியனூர் வந்து திருக்கோவிலை அடையலாம் . சேலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் பிரிவில் ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில் அமைந்துள்ளது .

சுற்றிலும் தென்னை மரங்கள் நிற்க திருக்கோவில் அமைதியான இடத்தில் அழகேஅமைந்துள்ளது. பழங்கால ஆலங்களில் பார்த்து வணங்க வேண்டிய ஆலயங்களில் நசியனூர் அப்பத்தாள் திருக்கோவிலும் ஒன்றாகும் .

நன்றி

Monday, April 8, 2013

"சிவ" லிங்கமாகிய இறைவனின் வகைகள்

                          Type of sivalingam's

சிவபெருமான் சைவ உலகின் நின்று உலகின் படைத்தல் ,காத்தல் , அழித்தல்
என்கிற முத்தொழிலையும் கொண்டு சைவர்களால் விரும்பி இறைஞ்சி வேண்டுகிறவர். சிவன் எங்கும் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . சிவ லிங்கத்தில்  இரண்டு வகையுண்டு.

 அது பரார்த்த லிங்கம் மற்றும் இட்டலிங்கமாகும் .
பரார்த்த லிங்கத்தில் ஐந்து வகையுண்டு . அவைகள் பின் வருமாறு
குறிப்பிடப்படுகிறது.

 சுயம்பு லிங்கம் ( இருக்கும் நிலை ) : தாமாக

தோன்றிய திருவுருவங்களே சுயம்பு லிங்கங்கள் என அழைக்கப்படுகிறது.
சுயம்பாக தோன்றுகிற லிங்கத்தை சுயம்பு லிங்கமென சிவனடியார்களால் தேடி விரும்பி வணங்கப்படுகிறது.

 பல ஸ்தல புராணங்கள் காராம் பசு குறிப்பிட்ட இடத்தில் பால் செரிய அங்கே தோண்டினால் சுயம்பு லிங்கம் இருக்கும் .அதுபோல லிங்கம் சுயமாக தோன்றி மக்களால் கண்டு வணங்கப்படுகிறது . சுயம்பு லிங்கங்கள் விசேசமானதாகும்


 கணலிங்கம் :


 சிவகணங்களான ஸ்ரீவிநாயகர் ,ஸ்ரீ முருகர், ஆகியோரால்
பூஜிக்கப்பட்டு வணங்கப்படுகிற லிங்கங்கமாகும் .

 தெய்வீகலிங்கம் : (நடக்கும் நிலை ) 


விஷ்ணு முதலிய தேவாதி தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு
வணங்கப்பட்ட லிங்களாகும் .

 ஆரிடலிங்கம் :

அசுரர்கள் ,இருடிகள்,ராட்ஷசர்களால உருவாக்கப்பட்டு வணங்கப் பெற்ற லிங்கமாகும் 

 .

மானிடலிங்கம் : 


சித்தர்களால் ,அடியார்களால் ,இறைநிலையில் வாழ்ந்த
பெரியோர்களால் உருவாக்கம் செய்யப்பட்டு வணங்கி வந்த லிங்கம்மாகும்..

விஷேசமாக

உயர்வான லிங்கம் : 


 மானிட லிங்கத்தை விட உயர்ந்தது ஆரிடலிங்கம் ,
அதனிலும் உயர்ந்தது தெய்வீக லிங்கம் அதனினும் உயர்ந்தது கணலிங்கம்
அதனினும் உயர்ந்தது சுயம்புலிங்கமாகும் .

 இட்டலிங்கங்கள் :


 வாணலிங்கம்
.படிகலிங்கம் ,
இரத்தினலிங்கம் ,
லோக்ஜலிங்கம் ,சைல லிங்கம்
ஆகிய
ஐந்தாகும் .

 முடிவுரை :

 சிவ லிங்கமாகிய சிவபெருமானின் இந்தபதிவு என்
அளவில் சேர்த்துள்ளேன் . குறைகள் இருப்பின் ஆன்மீகப் பெரியோர்கள்
சுட்டிக்காட்டலில் திருத்தப்படும் . மற்றபடி எம் பதிவை படிக்க வந்த
உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டுகிறேன் .

 நன்றிகளாயிரம் .

 ஓம் சிவசிவ
ஓம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...