Wednesday, July 9, 2025
Tuesday, July 8, 2025
பாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் .ரெட்டியபாளையம் .குருவரெட்டியூர்
அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் வெள்ளக்கரட்டூர்
ரெட்டியபாளையம் ,குருவரெட்டியூர்
SRI BALATHANDAYUDABANI THIRUKKOVIL, VELLAKKARADUR,
REDDIYAPALAYAM GURUVAREDDIYUR
மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலமலையின் இயற்கை அமைத்திச்சாரலிலே குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரன் அழகில் மயக்கும் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் கிராமத்தை சேர்த்த வெள்ளக்கரட்டூர் எனும் அழகிய ஊரில் குடிகொண்டு கடந்த நான்கு தலைமுறைகளாக அருள் பாலித்து வருகிறார் .
சிறிய அளவில் இருந்த திருக்கோவில் பல ஆன்மீக அன்பர்கள் முயற்சியால் பெரும் திருக்கோவிலாக தயாராகி வருகின்றது.
செல்லும் வழி :
பவானி வெள்ளித்திருப்பூரில் இருந்து முரளி சனிச்சந்தை செல்லும் வழியில் வெள்ளக்கரட்டுர் உள்ளது . சுமார் 500 வருடங்களுக்கு முன் சிறிய திருக்கோவிலாக ஆரம்பித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் நாட்களில் பிரமாண்ட பூஜை நடைபெறும் .பின்னர் திருக்கோவில் பழங்கால ஆலயமாக உள்ளதால் தற்போது மாற்றம் செய்து பெரும் திருக்கோவிலாக உருவாகி வருகிறது .
குருவரெட்டியூர் உட்பட 20 கிராமங்களுக்கு மலை மீதுள்ள முருகர் ஆலயம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் என்னும் சிறப்பை பெறுகிறது. பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்று வருவதால் திருக்கோவிலும் எண்ணம் இருந்தால் நேரில் சென்று திருப்பணிகளை பார்வையிட்டு தரலாம் .
இன்னும் ஒரு வருட காலத்தில் அழகான முருகப்பெருமான் ஆலயம் தயாராகி விடும் . இதனால் ஏழ்மை நிலையால் பழனி சென்று ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியாதவர்கள் வெள்ளக்கரட்டூர் வந்தே தரிசித்துக்கொள்ளலாம் .
முருகர் துதி:
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு
வள்ளி காந்தனைக் கந்தக்கடம்பனைக்
கார்மயில் வாகனனைச் சாந்துணைப்
போதும் மறவா தவர்கொரு
தாழ்வில்லையே,
திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள ஊர்கள் :
ஜரத்தல் ,முரளி, சென்னம்பட்டி,ஜோதிபுரம் ,கோனார்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் , கருங்கரடு, குருவரெட்டியூர்
பாலகுட்டைபட்டி பழையூர் ,புதூர் ,
பொரவி பாளையம் ,தொப்பபாளையம் ,
என இப்பகுதி மக்களுக்கு புதியதோர்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உருவாகி வருகிறது.
சுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி
ஆலய திருப்பணிகள்கள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறும்போது நம் வலைப்பதிவில் தகவல் அளிக்கப்படும் .
நன்றி
Subscribe to:
Posts (Atom)
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...