
கவிதை
தேடிக்களைக்கின்றேன் இறை "வா" :
பரபரப்பான
ஓவ்வொரு நாளும்
உன்னால் படைக்கப்படுகிறது,.!
இருப்பினும்
உனக்காக
நான்
ஒதுக்கிய நாட்கள்
அளவில்லாதது...!
எங்கும்
நீர் நீக்கமற
நிறைந்திருக்கும் "சக்தி"
என்றுணர்ந்த
எமக்கு என்றேனும்
ஒருநாள் ஒதுக்கு...!
அன்று நாம்
கைகோர்ந்து நடந்து ..!
உன்னால் பிறப்பிக்கப்பட்ட
இப்பிரபஞ்சத்தில்
எமக்கென
எழுந்துள்ள
வினாக்களுக்களுக்கு
நீங்கள்
அப்போது
பதிலளிக்கவேண்டும்..!
கேட்டுத் தெளிந்த
நான்
உன்னையும்
உன் காட்சி
பிம்பத்தையும்
எல்லோருக்கும்
அறிவிப்பேன் ..
உன் புகழ் தன்னை
வீதியெங்கிலும்
ஆதலால்
இறை" வா"
2 comments:
Aham brahmaasmi,thatthumasi,praknyaanam brahmam...sagothara...!!
neeyae athu....
DEAR friend, thanks for your comments,
Post a Comment