📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Thursday, December 23, 2010

அருள்மிகு மலைமாதேஸ்வர மலையின் சிறப்புகள்


"கன்னட நாட்டின் காவிரிக் கரையின், பொன்னாச்சி மலைச்சாரலிலே, உயர்ந்ததாய நடுமலை யொன்றதை யென்னென நான் சொல்வேன் "..... குரு சித்த கவி .
நூல் "மாதேஸ்வர சாங்கத்யம்" (கி.பி 1750).....


அருள்மிகு மாதேஸ்வரர்(MATHESWARAR) பற்றி பல சிவனடியார்களும், சித்தர் களும் பாடியிருக்க அவர்களில் ஒருவர் தான் குரு சித்தகவி இவர் மாதேஸ்வர மலைய(MATHESWARAN MALAI) வியந்து பாடியவர்.

மேலும் மாதேஸ்வர மலையின்(matheswaran malai hills) புகழை " காசி(kasi) கேதாரம்(KOTHARAM) ஸ்ரீசைலம்(SRI SAILAM) ராமேஸ்வரம்(RAMEASWARAM) வி ஷேச குடும்ப தீர்த்தமதில் , ஆயிரமுறை மூழ்குவதினும் பலவி , சேடமிதனைக் கேட்பவருக்கு" இதன் பொருள்: காசி.கேதாரம்,ஸ்ரீசைலம்.ராமேஸ்வரம் முதலிய இடங்களின் தீர்த்தங்களில் ஆயிரம்முறை ஸ்நானம் செய்த பலன் இதனைக்கேட்கும் பக்தர்களுக்கு கிட்டும் என்பதாகும்.


மாதேஸ்வர சுவாமி கோவில் பிரசாதங்கள் உங்களுக்கு வேண்டுமா?

நிர்வாக அதிகாரி, ஸ்ரீமலை மாதேஸ்வரசுவாமி தேவஸ்தானம்,மாதேஸ்வரன் மலை- 571490 கொள்ளேகாலம் தாலுக்கா முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி . உபசெய்தி: இக்கோவில் பற்றி மட்டும் அதிக இடுகைகள் எழுதக் காரணம் இக் கோவில் வேண்டுதலால் நான் பிறந்ததாக எனது தந்தையார் கூறுவார் .எனது பெயரையும் சுவாமியின் பெயரே வைத்து விட்டதால் ஒர் ஈர்ப்பு .

எம் கருத்துகள்: மேலான சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. நமக்கருகில் இருக்கும் ஓர் அற்புத பார்க்க வேண்டிய ஸ்தலம். இறைவழிபாடும் இயற்கையும்,அமைதியும் ஒருங்கே அமைந்துள்ள நம் வாழ் நாளில் பார்க்க வேண்டிய ஸ்தலம். கண்டிப்பாக பக்தியுடன் வாருங்கள்.

ஸ்ரீமாதேஸ்வரர் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் .

அடியேன் குரு.பழ.மாதேசு .
உங்கள் கருத்துரகள் எதிர்பார்க்கும் ஆருயிர் நட்பு.

சிவ சிவ

No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்