Monday, January 20, 2014

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி

         sribapanasaswamy temple history,bapanasam,

                   Ampasamuthiram thirunelveli



சுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,
ரியம்ப வாய்ந்ததுபாவநாசப்பெயரி லிங்கம்,
 வியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,
கயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்


 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .



தன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .

 அம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண  தூரத்தில் அமைந்துள்ளது .

 திருக்கோவில் அமைப்பு :


 பொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது . 


பாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=

பாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி
.பரஞ்சோதிலிங்கர் ,ஆகியனவாகும்

 ஸ்தல சிறப்புகள் : 


மனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .

ஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தலவிருட்ஷம் : 

முக்களா விருட்ஷம்

 தீர்த்தங்கள் : 


தாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்தம்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .

 ஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :


 பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .


திருக்கோவில் நடைதிறப்பு =

 காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430
முதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்
இரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .
பங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அகத்தியர்திருமணக்காட்சி பெறுதல் :


சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான
இமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.

உடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது  சிவன்

''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''


எனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .


நமச்சிவாயக்கவிராயர் : 


இவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை
பாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .

 முடிவுரை :

சிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .
பாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண
கோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை .

ஓம் சிவ சிவ ஓம்

Friday, January 3, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

பழைய வருடங்கள் அனுபவமாகவும்
 புது வருடம் கற்றுக்கொடுப்பதாகவும்
புதுப்புது உயர்வுகள் கிடைப்பனவாகவும்
புத்தாண்டு அமையட்டும் .

 இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014



 பேஸ்புக் ,
டிவிட்டர் ,
பிளாக் ,
 எஸ் எம் எஸ்

என எல்லா வகையிலும் வாழ்த்துக்கள் அனுப்பிய நன்பர்கள் எல்லோருக்கும்
சிவனருளால் எல்லா வளமும் நலமும் நீள் ஆயுள் குறையில்லா செல்வம் , என மேன்மை மிகு ஆண்டாக இருக்க வேண்டுமென

சித்தர்கள் சிவனின் ஆசிர்வாதம்

வேண்டி நிற்கிறேன் . ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, December 31, 2013

பெண் சித்தர் தரிசனம்

எம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார்         அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்தில்ஈரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நன்பருடன் பயணத்தை துவங்கினேன் .


சுமார் 50கி.மீட்டர் தாண்டி கொடுமுடி தாண்டி சாலைப்புதூர் வழியாக
சென்றால் நொய்யல் ஆற்றுப்பாலம் கடந்து சென்றால் சரவணபவன் ஹோட்டல்வருகிறது . அந்த ஊருக்கு வேட்டை மங்கலம் என்று பெயர் .சரவண பவன் எதிர்புறம் உள்ள ரோட்டில் பயணித்தால் 1 கி.மீ தூரத்தில் இடதுபுறம்   செல்லும் மண் ரோட்டில் பயணித்தால் பெண் சித்தர் தங்கியுள்ள வீடுஅமைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் வீட்டில் இந்த
பெண்சித்தர் பராமரிக்கப்பட்டு வருகிறார் .

 நாங்கள் சென்றபோது 10பேருக்கு மேலாக தரிசனம் பெற்று வந்தனர் . சித்தர் பித்தர்கள் போல காட்சி அளிப்பார்கள் ஆனால் பித்தர்கள் எல்லாம் சித்தர்கள் அல்ல. ஆனால் பெண் சித்தர் தெளிந்த முகம் . வாடா மகனே என அழைக்கின்ற பாங்கு . வயதில் முதிர்ந்தாலும் அன்பால் தடவுகின்ற கரங்கள் என பெண் சித்தர் பார்வைவித்தியாசமானது .

 முதலாக நான் சென்று வணங்கினேன் , முதுகை தொட்டு
ஆசிர்வாதம் செய்தார்கள் . தோல்பட்டை இரண்டு தட்டு தட்டி போக சொன்னார்கள். நான் வந்து உட்கார்ந்து கொண்டேன் .பின் என் நன்பர் சென்றார் ! அவருக்கு அங்கே இருந்த உணவுகளை ஊட்டி விட்டார் . 6 கவளம் ஊட்டி பின் ஆசிர்வாதம்செய்து அனுப்பினார் .

பின் குடும்ப சகிதமாக வந்து உணவு ,கேக், புகையிலை என
பக்தர்கள் வரிசையாக கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள் . அந்த பெண்
சித்தரை பார்த்தது புது வித அனுபவம் . பெண் சித்தர் அருகில் நகைகள்
அணியாமல் தான் செல்ல வேண்டும் என அறிக்கையுடன் முன்னே போர்டில்
அறிவிப்புடன் இருக்கிறது .

ஒருமணி நேரமாக தரிசனம் செய்த பின் கிளம்ப வணங்க வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட கேக் கொடுத்து வாழ்தினார்கள் . பெண்
சித்தரை தரிசிக்க செல்பவர்களை சில நேரம் சரமாரியாக கெட்டவார்த்தைகளில்திட்டுகிறார் . சில நேரத்தில் கோபப்பட்டு அடித்தும் விடுவாரம் . அப்படிஅடிபட்டு திட்டு வாங்கியவர்கள் கூட மறுபடி அம்மையை தரினசம் செய்யவருகிறார்கள் .


பழனி கணக்கன்பட்டி மூட்டை சித்தரே ஒரு பக்தரிடம் என் அக்கா கருர் பக்கமாகஇருக்கிறார் என கூறியதாக கூட தகவல் உண்டு . பலன் பெற்ற பல பக்தர்கள் வருகிறார்கள் முடிந்தால் சென்று தரிசியுங்கள் . சில பக்தர்கள் திட்டு
வாங்கிவிட்டு சித்தர்களின் பரிபாஷையை அறிய முடியவில்லையென
வியக்கிறார்கள் . சில தொலைக்காட்சிகளில் இவரைப்பற்றிய பதிவுகளை
ஒளிபரப்பி இருக்கிறது .

 நாம் அறிந்த தகவல் அவ்வளவே , அளப்பதற்கரிய
சக்தியை அளக்க அளவிட முடியாத சக்தி வேண்டும் . நம்மால் உணர முடிந்ததுகொஞ்சமே , வாய்ப்பு கிடைப்பின் சந்தியுங்கள் . உங்கள் வாழ்வில்
மாற்றமும் ஏற்றமும் நிகழும் .நன்றி

Sunday, November 3, 2013

தீபாவளிப் பயணம்

தீபாவளிக்காக மனைவியை பார்க்க பயணத்தை ஓர் குக்கிராம ரோட்டில்
துவக்கினேன் . 40 கி.மீட்டர் செல்ல மெதுவாக இருசக்கர வாகனத்தில்
பயணித்துக்கொண்டிருந்தேன் .

 ஆங்காங்கே பட்டாசு வெடிச்சத்தம் பயமுறுத்திக்கொண்டிருக்க காலை 7 மணிக்கு துவங்கிய பயணமது . கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் பயணித்த பின் லிப்ட் கேட்டபடி ஒரு 14 வயது பையன் நின்றிருக்கு ஆள் அரவமற்ற ரோட்டில் இருசக்கர வாகனத்தில் அந்த பையனையும் ஏற்றிக்கொண்டு பயணம் தொடர்ந்தது .

 வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டையுடன் இருந்த  அந்த பையன் கைரேகை பார்க்கிற சிறுவனாகத்தான் இருக்குமென கணித்து ஜோதிடம்
பார்ப்பாயா ? என கேட்டு ஆரம்பித்தேன் . ஆமாம் அண்ணா ஸ்கூல் லீவு அதான் கிளம்பிட்டேன் .

அப்பா நம்ப கணிப்பு கரெக்ட்தான் . தம்பி இன்னைக்கு தீபாவளி இன்னிக்குமா என்றவாறு எங்கிருந்து நடந்து வருகிறாய் எனக்கேட்க அண்ணா அப்பாவுக்கு போன வருஷம் விபத்து ஆயிடுச்சி நல்லா ஜோதிடம்
பார்த்திட்டிருந்த அப்பா படுத்திட்டார் .

 1 லட்சம் செலவாயிடுச்சி . அண்ணா வெளியூர்ல படிக்கிறான் . அக்கா வீட்ல இருக்காங்க , நான் லீவ்ல கேரளா போய் எங்க குல குருகிட்ட முறைப்படி ஜோதிடம் கத்துகிட்டேன் ஊரு கவுந்தப்பாடி பக்கத்துல சலங்க பாளையம் ஸ்கூல்ல +1 படிச்சிட்டிருக்கேன் .

நேத்து மதியம் 2 மணிக்கு கிளம்பினேன் எங்க மாமா கூட வந்து குருநாதசாமி
கோவில்ல தங்கிட்டேன் . நைட் சாப்பிடல குருநாதசாமி கோவில தங்கிட்டேன் .காலையில கிளம்பிட்டேன் 5 கி.மீ நடந்துட்டேன் அண்ணா . ! யாரும் கைரேகை பார்க்க கூப்பிடல .

பேசிக் கொண்டே வந்தான் .

 மனம் சிவ சிவா என கதறிக்கொண்டே வந்தது . ஏழ்மை கொடிது அதுவும் இளமையில் வறுமை மிகக்கொடியதென அவ்வையார் வரை வந்நு விட்டு சென்றார்கள் . தீபாவளி அன்று கூட புதுத்துணி இல்லாமல் பட்டாசு இல்லாமல் இனிப்பில்லாமல் இச்சிறுவனைப் போல் எத்தனை பேரோ?

கனத்த இதயத்துடன் தீபாவளிப்பயணம் கடந்து கொண்டிருந்தது
. சோறில்லாமல் தீபாவளி அன்று ஓர் சிறுவனா ? வழியெங்கும் ஹோட்டல் கடையை தேடி பவானி வந்து விட்டது .

 பவானி வந்ததும் பர்சில் கிடந்த ஐம்பது ரூபாயை எடுத்து சாப்பிட்டு விட்டு ஊருக்கு செல் எனக்கூறி செல்லும் வழியில் லட்டு வாங்கி தந்து சுவைக்கச்சொல்லி மேலும் பணம் வேண்டுமா எனக்கேட்க

மறுத்து கவுந்தப்பாடி செல்லுகிற பஸ்ஸ்டாப்பில் இறக்கி விட்டால் போதுமென நன்றி கூறி பயந்த கலந்த விழிகளுடன் கிளம்ப, நானும்
உன்னைப்போலிருந்து வந்தவன்தான் உயர்ந்த நிலைக்கு வருவாயென வாழ்த்தி குமாரபாளையம் கிளம்பி விட்டேன் .

இறைவா இக்குழந்தையை காப்பாற்று மனம் இறைஞ்சி வேண்டிக்கொண்டிருக்கிறது . அச்சிறுவனைப்பார்த்து இரண்டு
நாளாகியும் அவன் சொன்ன வாசகம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது
அச்சிறுவன் சொன்னது

 " அப்பாக்கு மட்டும் ஏக்சிடென்ட் ஆகலேன்னா ஊர்ல புது
துணி போட்டுட்டு பட்டாசு வெடிச்சிட்டிருப்பேன்."

 அப்போதைக்கு என்னால்
உதவ முடிந்தது . ஓர் வேளை உணவோ அல்லது கண்டீப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பான் .

மனம் வலித்தாலும் பின் சந்தோஷப்பட்ட தருணம் இது .
சரியான மனிதர்க்கு போய் சேர்ந்ததில் தீபாவளி கொண்டாடின திருப்தி .

எத்தனையோ தீபாவளிகள் கொண்டாடி இருப்பினும் கூட இது மறக்க முடியாத தீபாவளி

தலை தீபாவளியும் கூட

நன்றி

அன்பில் கரைத்த பயணம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல பயணத்தை துவங்கினேன் .

பேஸ்புக்கில் பகிர்ந்ததைப்போல ஏதேனும் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் பண்டிகை நாளில் கழிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தீபாவளிக்கு முந்தைய நாள் மதியம் பயணித்து 2 கிலோ ஜிலேபியுடன்

 கொமராபாளையத்தில் இருந்து எடப்பாடி வழியில் அமைந்துள்ள கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் சென்று அவர்களுக்கு இனிப்பைக் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னது நெகிழ்வான நிமிடங்கள்.

 பெரிய அளவில் 25 வருடமாக நடந்து வருகிற இந்த மையம் 165 மனித இதயங்களுடன் நடந்து வருகிறது . ஆறு விதமான பிரிவினர்கள் இங்கு பாதுகாக்கப்படுகிறார்கள் ,


 உதவ விரும்புகிறவர்கள்=


 k.கோவிந்தராஜன் 1/285
பரிசல்துறை ,புளியம்பட்டி ,
புள்ளாக்கவுண்டன்பட்டி அக்ரஹாரம் அஞ்சல்
சங்ககிரி வட்டம் சேலம் மாவட்டம்

 தொடர்புக்கு : 04288260157 ,
9362060157, 9842295560
 web :www.bfdc-trust.in

mait i.d : bftc.trusu@gamail.com

என்ற தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 மன நிறைவான சிறு உதவி . முதல் தடவையாக இப்படி ஓர் இடத்தில் நேரம் கழித்ததும் இனிப்பு தந்ததும் அவர்களுக்கு வாழ்வில் உறவுகளாக யாரோ ஒருவர் இருக்கிறார்களென்ற அர்த்தம் புரிய வைத்திருக்கும்,
 நமக்கும் கூட

முடிவுரை :

நீண்ட பயணத்தில் முக்கிய தருணமாக இதைக் கருதுகிறேன் , இனி
இவ்விடம் அடிக்கடி செல்வேன் .

 வாய்ப்பும் வளமையும் கிட்டும் வரை

நன்றி

Friday, November 1, 2013

மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருக்கோவில் இறைவன் ஆட்கொண்ட ஸ்தலம்

பட்டினத்தார் திருக்கோவில் சென்னையில் உள்ள திருவெற்றியூரில் இறங்கி
அருகே மார்க்கெட் வழியாக சிறிது தூரம் நடைப்பயணத்தில் அடையலாம் .


பட்டினத்தாரின் இயற்பெயர் சுவேதரண்யர்

 தந்தை பெயர் சிவநேசன்

 தாய் ஞானக்கலை


 பிறப்பு காவிரி பூம்பட்டினம் பூம்புகார் மயிலாடுதுறை
திருக்கடையூர் ஆகும் . மக்களால் அழைக்கப்பட்ட பெயரே பட்டினத்தார்
என்பதாகும் . பட்டினத்தாரின் மனைவி சிவகலை என்பதாகும் . 10ஆம்
நூற்றாண்டில் மருதவானர் சிவனாக வந்து ஆட்கொண்டதாக வரலாறு . இவர் சீடர் பத்ரகிரியார் .

சிவனிடம் திருவிடைமருதூர் பேய்கரும்பு பெற்ற இடமாகும்
.அக்கரும்பு இனித்த இடமே திருவெற்றியூராகும் .

 இறைவனுடன் கலத்தல் :

ஆடிமாதம் உத்திர நட்ஷத்திர திருநாளில் சென்னை அருகேயுள்ள
திருவெற்றியூரில் சிவனிடம் இரண்டறக்கலந்தார் . அவ்வாறு கலந்த இடமே
திருவெற்றியூராகும் . பட்டினத்தார் வள்ளலார் ஆகியோர்களுக்கு ஜீவசமாதி
கிடையாது . இவர்கள் இருவரும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சிவபெருமானுடன் கலந்தவர்கள்.

பட்டினத்தார் திருவாரூரில் பாடிய பாடல் :

 ஆருரார்இங்கிருக்க அவ்வூர் திருநாளென்று
 ஊருர்கள் தோறும் உழல்வீர் -நேரே ,
உளக்குறிப்பை நாடாத ஊர்மக்காள் நீவீர்,
விளக்கிருக்க தீத்தேடுவீர் .


பொருள் :

திருவாருர் உடையாரகிய சிவன் இங்கிருக்க அந்த ஊரில் திருநாள்
என்று ஊர்கள் தோறும் அலைவோரே நேராக மனக்கருத்தை ஆராயத மூடர்களே நீங்கள் தீபமிருக்க நெருப்பை தேடுகிறீர்கள் .

 பொன்மொழி :

 "காதற்ற ஊசியும்வாராது கடைவழிக்கே "
இறந்த பின் காது உடைந்த ஊசியை கூட எடுத்துச்செல்ல
முடியாது அப்படியிருக்க பொன் ,
பொருள் மேல் ஆசை விலக்கி துறவறம் பூண்டவர்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் ஆவார் .

 பட்டினத்தார் பற்றி பதிவை நீண்டதாக
எழுதலாம் . மகா சித்தர் .

 முடிவுரை :

இறைவன் பட்டினத்தாரை ஆட்கொண்ட
இடமான திருவெற்றியூர் வந்து வணங்குங்கள் .
 மிக அருமையான இடமாகும்.
தரிசியுங்கள் நன்றி.

Saturday, October 19, 2013

கண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்

திருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்கிற தலைப்பில் நீண்ட நாட்களாய் எழுத வேண்டும் என்கிற ஆவல் .    பல வேலைப்பளுவின் காரணமாக எழுத முடியாமல் போனது . மரங்களைப்பற்றியும் அவைகளைப் பற்றிய மருத்துவ குணங்களையும் அறிய ஆவல் .

யார் புண்ணியமோ ?
சித்தர்களின் ஆசிர்வாதமோ! விட்டகுறை தொட்ட குறையோ ! நன்பர் ஒருவரின்உதவியால் 3 மாதங்களுக்கு முன் ஓர் சித்தமருத்துவரை சந்தித்தேன் . அவரை  கண்ட  பின்  சித்த மருத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் . அவரிடம் பழகிய பின் சித்த மருத்துவம் பற்றியும் சித்த வைத்தியர்கள் மேலும் அதிக மரியாதையை ஏற்படுத்தியது . அலோபதி வளர்ந்த பின் நம் பாரம்பரிய சித்த மருந்துவத்தையும் , மருத்துவர்களையும் மறந்து அலட்சியபடுத்திவிட்டோம் .


18 சித்தர்களும் நமக்கு கிடைத்த வரம் . அவர்கள் சொல்லிவிட்டு சென்ற
மருந்துகள் மிக ஆச்சர்யமானது . அலோபதி மருந்துவர்களால் கைவிடப்பட்ட
காமாலை ,புற்றுநோய் , ஆஸ்துமா போன்ற கடுமையான நோய்கள் கூட சாதாரணமாக சரி  செய்துவிட்டுச்செல்கிற சித்த மருத்துவர்கள் உள்ளார்கள் . அந்த வகையில் நான் சந்தித்த சித்த மருத்துவர் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது  போல சில தெரியாத மூலிகை பற்றியும் விளக்கி சொல்ல

 அலோபதியை விட்டு நல்ல மருந்து நல்ல மருத்துவ மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிற , தீர்க்கின்ற திறமை கொண்ட வைத்தியரை
நம் வலைப்பூ வழியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்பது என் ஆவல் . அவர் பெயர்

திரு  k. ஜோதி மணி பரம்பரை சித்த வைத்தியர் ,

பழைய  எண் =730 புதிய   எண் = 829 

 ஜோதி டீ  ஸ்டால் ,, மாட்டாஸ்பத்திரி பிரிவு, 

காளிங்கராயன் பாளையம் அஞ்சல் .

பவானி வட்டம் ,

 ஈரோடு மாவட்டம் 

அவரின் தொடர்பு எண் :

 9842985473  

                                   
               
    தொடர்பு கொள்ளுங்கள் . சரி எமக்கு தெரிந்த சித்த
வைத்தியரை அறிமும் செய்து விட்டேன் அவர் கீழ்கண்ட நோய்களால் பாதிக்கபட்ட நோயாளிகளை தீர்க்கிறார் .

 மஞ்சள் காமாலை b, c வகைகள் ,தலைவலி, அல்சர்,பக்கவாதம் ,ஜீரணக்கோளாறு , தோல் நோய்கள் ,வாய்வுக்கோளாறு, கட்டி இல்லாத பெரும்பாடு ,மலச்சிக்கல் , சக்கரைநோய்அக்கி, மூத்திர எரிச்சல் ,                         உடல் பலம் அதிகரிக்க,சளி,இருமல் ,உடல் தேற இளைக்க,சோரியாசிஸ்,ஆண்மைக்குறைவு எந்த நிலையாயினும் ,குழந்தையின்மை,வீ.டி.ஆர் .எல் ,மூத்திர எரிச்சல்

 இப்படி 20 விதமான நோய்களை தீர்க்க தன் 35 வருட ஆய்வில் கண்டுணர்ந்து பல நோயாளிகளை தீர்த்துள்ளார்.


 தினமும் இடைவிடாது விஷ்ணு பூஜை செய்கிற சித்த மருத்துவர் . உங்களுக்கோ நன்பர்களுக்கோ உறவினர்களுக்கோ மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பின் தொடர்பு கொண்டு சித்த வைத்திய முறையில் பல தலைமுறையாக சித்தமருத்துவம் செய்கிற இவரை நாடி நலம் பெறுங்கள்.

 மேற்கூறிய நோய்கள் அல்லாத நோயாக இருந்தாலும் தொடர்பு கொண்டு கேளுங்கள் .நான் பார்த்த சித்த மருத்துவர்களில் நியாயமானவர் என்பதாலேயே அவருக்காக இந்த
பதிவை எழுதினேன் .

 அவசர உலகில் அலோபதியில் ஊசியை போட்டுக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறோம் . சித்தமருத்துவம் அல்லது சித்தம் என்றால்
முடிவு பெற்றது என பொருள் கொள்ளலாம் . சித்த மருத்துவத்தால் நோய்
முற்றுப்பெறுகிறது என்பதே உண்மை .

 நோயின்றி மனிதன் வாழ வேண்டும் என்று சதா விரும்புகிற நல்ல மனிதர் . 


பல மூலிகைகளை ஆய்வு செய்தவர் . என்னளவில்
நான் பார்த்த அருமையான சித்த வைத்தியர் . மருந்துகள் தேவைப்படின்
அவரின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு வரும் முன் கூறிவிட்டு வாருங்கள்.நன்றி

 முடிவுரை : 


 சித்த வைத்தியம் மிக உயர்வானது , மக்கள் அதன்
அருமை கண்டு கொள்ளாமல் அலோபதியை ஓடுகிறார்கள் . 18 சித்தர்கள்
பல்லாயிரக்கணக்கான மருந்துகள் தயாரித்து நம் முன்னோர்களை காத்தனர்
. இன்றோ அலோபதியை மட்டும் நம்புகிறோம் ,

அலோபதியை விட சித்த மருத்துவம் சிறந்த மருத்தெனக் கொண்டு பலரும் பல நோய்களுக்கு இன்று சித்த மருத்துவத்தையும் சித்தர்களை தேடியும் பயணிக்கிறார்கள் . அவ்வகையில்எமக்கு தெரிந்த சித்த வைத்தியரை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன் .
நோயின்றி மனிதன் வாழ வேண்டும் ,

 வலியில்லாமல் நோயை  தீர்க்க சித்த மருத்துவம்  தேர்வு செய்ய வேண்டும் .
 அதனால் சித்தர்கள் சொல்லிச் சென்ற மருத்துவம்
புகழ்பெற வேண்டும் .

அதுவே என் ஆர்வமும் கூட ,நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...