Tuesday, June 4, 2013

பிறந்த நட்சத்திரங்களுக்கேற்ற விருட்சப்பரிகாரம்

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் விருட்ஷசாஸ்திரம் என்ற நூலில் நாம்
பிறந்த நட்சத்திரங்களையும் அதற்கு ஏற்றார் போல் நாம் நடவேண்டிய
மரங்களையும் வகைப்படுத்தி உள்ளனர் .

 மரங்கள் விலை மதிப்பற்றவை.அவைகள் வெளியிடும் ஆக்சிஜன மனிதனின் சுவாசத்திற்கு பயன்படுகிறது அப்படியெனில் அந்த மரங்களை நடுவது எவ்வளவு உயர்வான புண்ணியம் தரும் ஆகவே மரம் நடுவோம்..சரி நம் நட்சத்திரத்திற்கேற்ற விருட்ஷத்தின் வகையினை பார்ப்போம் .


1.அசுவினி- எட்டி
2. பரணி -நெல்லி
3.கார்த்திகை -அத்தி
4.ரோகிணி -நாவல்
5.மிருகசீரிடம் -கருங்காலி
6. திருவாதிரை -செங்கருங்காலி
7. புனர்பூசம்-மூங்கில்
8.பூசம் -அரசு
9.ஆயில்யம் -புன்னை
10.மகம் -ஆலமரம்
11.பூரம்-புரசமரம் (பலாசு )
12.உத்திராடம்-அலரி இலந்தை
13.அஸ்தம் -அத்தி
14.சித்திரை -வில்வம்
15.சுவாதி -மருது
16.விசாகம் -விளாமரம்
17.அனுசம்-மகிழம்
18.கேட்டை - பிராய்
19.மூலம் -மாமரம்
20.பூராடம் -வஞ்சி
21.உத்திரம் -பலா
22.திருவோணம் -எருக்கு
23. அவிட்டம் -வன்னி
24.சதயம்--கடம்புமரம்
25.பூரட்டாதி -மாமரம்

26.உத்திரட்டாதி=   veapamaram

27. ரேவதி -இலுப்பை
ஆகியனவாகும் .

நட்சத்திரம் அறியாதவர்கள் வேம்பு நடலாம் அல்லது மழையை
பூமியை நோக்கி இழுக்கிற அத்தி,ஆலமரம் ,அரசமரங்களை நட்டு பராமரியுங்கள் .சமுக நலமும் அடுத்தவர்களுக்காக நாம்
 செய்யும் அன்பே ஆகும் .
அன்பே சிவம்
. நன்றி

Monday, June 3, 2013

ஸ்ரீ ஞானக்கோவை உடனமர் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் .தென் காளகஸ்தி ,பட்டைய காளிபாளையம் ,மராப்பம்பாளையம்

கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் புகழும் பழமையும் வாய்ந்த
சிவாலயங்களில் "தென் காளகஸ்தி " என்ற சிறப்புடன் விளங்குகின்ற
திருக்கோவிலாகும் . பவானி வட்டம் பட்டையகாளிபாளையம் என்ற அழகிய ஊரில்திருக்கோவில் அமைந்துள்ளது.



 செல்லும் வழி :


ஈரோட்டில் இருந்து கோபி செல்லும் வழியில் சுமார் 22 கி.மீட்டர் கவுந்தப்பாடிக்கு அடுத்த தாக வரும் மாரப்பம் பாளையம் பிரிவில் இருந்து இடப்பக்கம் திரும்பி சற்று தூரம் நடந்தால் பட்டைய காளிபாளையம் என்ற ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது ..

சிவபெருமான் இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . ஆந்திராவில்
உள்ள காளகஸ்திரி கோவிலுக்கு இணையாக போற்றப்படுகிற இந்த
திருக்களாத்தீஷ்வரர் திருக்கோவில் ராகு கேது பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.


மூலவர் : 


ஸ்ரீ திருக்காளத்திஸ்வரர்

 அம்பாள் : 


ஸ்ரீஞானப்பூங்கோதை

திருக்கோவில் வளாகம் ஸ்ரீ கண்ணப்பநாயனார் மடாலயம் என
சிறப்பிக்கப்படுகிறது .

 திருக்கோவில் சிறப்புகள் : 


18 சித்தர்களில்  ஒருவரான சட்டை முனி சித்தர் அவதரித்த ஸ்தலமாக கூறப்படுகிறது .காளகஸ்தியில் இருந்து வந்த சிவலிங்கமாகும் . திருக்காளகஸ்தி போலவே மூலவர்  சிவபெருமானுக்கு முன்பாக வராக சிலை  அமைந்திருப்பது மிகுந்த விஷேசமாகும் .

வாயு ஸ்தலமாக போற்றப்படுகிறது . மூலவர்க்கு பின்னால் உள்ள 27 விளக்கு
கொண்ட ஆவுடை அமைப்பு இங்கு காணப்படுவதும் விஷேசமான ஒன்றாகும்
,உச்சிக்காற்றில் மைய விளக்கு ஆடாது அசையாது காணப்படுவதும்
விஷேசமானதாகும் .


 ஸ்ரீ கண்ணப்பநாயனார் : 


திருக்கோவிலில் ஸ்ரீ கண்ணப்பநாயனாருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பெரிய புராணம் கூறுகிற 63 நாயன்மார்களில் கண்ணப்பநாயனாரும் ஒருவராவார் . இவருக்கு சிவன் காளகஸ்தியில் காட்சி கொடுத்து புராண வரலாறாகும் .

ஆந்திரமாநிலத்த ஆண்ட வேடுவர் குல அரசர்கள் திருக்கச்சராயர், பூலவராயர், காவலராயர் வழி வந்தவேடுவர் குல பெருமக்கள் பவானி பகுதியில் குடிவந்திருந்தனர் .

அப்பரம்பரையில் வந்த ஆன்மீக பெருமக்கள் சுமார் 900 வருடங்களுக்கு முன்
ஓடத்துறை கிராமம் பட்டையக்காளி பாளையம் ஸ்ரீ காளஸ்தீஸ்வரர் திருக்கோவில் எழுப்பியும் ,ஸ்ரீ கண்ணப்ப நாயனார் மடத்தினை வழிபட்டும் உருவாக்கிய அற்புத சிவாலயமாகும் . திருக்கோவில் வளாகத்தில் 15,16 ஆம் நூற்றாண்டுகல்வெட்டு அமைந்துள்ளது குறிப்பித்தக்கது .


பூஜை நேரம் : 


தினமும் ஒருகால பூஜை காலை 7 மணியில் 8 மணிவரை நடைபெறுகிறது.
அம்மாவசை.பெளர்ணமி,பிரதோஷ நாட்களில் விஷேசமாக நடைபெறுகிறது.

 வழிபாட்டின்பலன் :


 திருக்காளத்தீஷ்வரரை 63 நெய் தீபமிட்டு வணங்குபவர்களுக்கு
திருமணத்தடை, புத்திபாக்கியமின்மை ,காலசர்ப்ப தோஷம் நீங்கி ,ராகு கேது
தோஷம் நீங்கி நல்வாழ்வு கிட்டுமென்பது ஐதீகம் .

                                    திருக்கோவில் அமைப்பு :



எல்லா சிவாலயங்களைப் போலவே முகப்பில் அரசமரத்தடி விநாயகர் ,கொடிமரம்,பின்  மூலவர் ஸ்ரீ திருக்காளத்தீசரை வணங்கினால் பின் தனிச்சன்னதியாக ஸ்ரீ ஞானப்பூங்கோதை ,வணங்கி திருக்கோவில் சுற்றி வருகையில் ஸ்ரீகணபதி,ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீ துர்க்கை , ஸ்ரீசண்டிகேஷ்வரர் ,நவகிரகங்கள் , ஸ்ரீ காலபைரவர் என சிவாயத்தின் ஆகம விதிகளுடன் அழகேஅமைந்துள்ளது.


முடிவுரை :


 கொங்கு நாட்டின் புகழ் மிக்க ஆலயங்கள் உண்டு. அவற்றில் சில நுட்பமான கண்ணுக்கு தெரியாத சிவாலயங்கள் உள்ளன . அவ்வகையில்
காண வேண்டிய ஆலயம். பழங்காலத் தொடர்புடைய பழமையான ஆலயம் . கண்டு ரசித்து வணங்கி கருத்துரையிடுங்கள் . ஓம் சிவ சிவ ஓம் .நன்றி

Friday, May 24, 2013

தேர்வு என்பது முடிவல்ல

அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு பலருக்கு மகிழ்ச்சியை
அளித்தாலும்,செய்தித் தாள்களில் ஆங்காங்கே தேர்வு முடிவு வெளியானதும்
சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்திற்குரியது. அதற்கு சில காரணங்களை ஆய்வு செய்வோம்

 1. பெற்றோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு :


படிக்கின்ற எல்லா மாணவர்களும் டாக்டர் ,என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆவல்எல்லா பெற்றோர்களுக்கும் இருந்தாலும் ,அது குழந்தைகளின் படிக்கும்
திறனைப் பொறுத்ததே , வெறுமனே படி படி என வலியுறுத்தாமல,

அதிகபட்சம் மதிப்பெண் எடுக்க தேவையான வழிவகுத்தல்,போன்ற வற்றைச்செய்யலாம் . ஆகஅதிகபட்ச பெற்றோரின் எதிர்பார்ப்பு மதிப்பெண் வாங்காத நிலையில்ஏமாற்றமாவது குழந்தையின் எதிர்காலத்தை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது.


2.சுயமாக வளர விடுங்கள் : 


பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் டாக்டர்
,என்ஜினியர் போன்றவற்றை மட்டுமே விரும்புகின்றனர் . ஆனால்
மாணவ,மாணவிகளின் விருப்பம் என்னவாக தான் விரும்புகிறார்கள் என்பதைப் கண்டு அதே படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கை வைப்பது நல்லது


3.       தட்டிக்கொடுங்கள் :


 குறைந்த மதிப்பெண்கள் காலண்டு அரையாண்டு தேர்வில்
எடுத்தாலும் திட்டாமல் நல்ல மதிப்பெண் எடுக்க தட்டிக்கொடுங்கள் . அது
மதிப்பெண்கள் எடுக்க உதவும் .

4..சின்ன சின்ன பரிசுகள் : 

நல்ல மதிப்பெண்எடுத்து வருகின்ற குழந்தைகளுக்கு 
சின்ன சின்ன பரிசுகள் கொடுங்கள் .


5..விளையாட்டு : 


தினமும் மாணவர்கள் சற்று நேரம் விளையாட விடுங்கள் அது
மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்

6.. இறை வழிபாடு :


 அவ்வப்போது மனதை
ரிலாக்ஸ் செய்ய திருக்கோவில் கூட்டிச்செல்லுங்கள் . தன்னம்பிக்கையுடைய
குழந்தையாக உருவாக்குங்கள் .

 மாணவர்களே , 


10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு என்பது 1வருடத்திய தவம் போல அது உங்கள் எதிர்கால வாழ்க்கையை  தீர்மானிக்கும் என்றாலும் கூட மதிப்பெண் குறைவதால் தற்கொலைக்கு முயற்சிப்பது நமது குடும்பத்தை வெகுவாக பாதிக்கும் . படிக்காத எத்தனையோ பேர் மிகப்பெரிய சாதனையாளர் ஆகி இருக்கிறார்கள் .வாழ்க்கை பயணம் நீண்ட தொலைவு அதில் தேர்வு என்பது முடிவாகாது ..

 இன்றைய உலகின் முதல் பணக்காரர்

பில்கேட்ஸ் 


கூறிய இந்த பொன் வரியை வாசியுங்கள்

 " என்னுடன் படித்த நிறையபடிப்பாளிகள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் மைக்ரோ சாப்ட்நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .மிதமாக படித்த நானோ மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலாளியாக இருக்கிறேன் "

ஆக தேர்வும் படிப்பும் அறிவையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளத்தானே
தவிர அவையே வாழ்வின் முடிவாகது .

தற்கொலைகளை தவிர்த்து

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் . 


நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...