Wednesday, June 18, 2014

ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்

அன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளாக்கில் இல்லாததால் நிறைய பேர்க்கு தெரியாமல் போய்விடுகிறது .


ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அருகில் அலைவாய்மலை அடிவாரத்தில் ஸ்ரீ கொங்கணசித்தருக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது . ராசிபுரம் அடுத்த பொன்மலை .உலைவாய்மலை .அலைவாய் மலையில் ஸ்ரீ சித்தேஸ்வரர் திருக்கோவில் ஒன்றும் அதில் உள்ள சித்தர்சுவாமிக்கு 4 கரங்கள் உள்ளதாம். இத்திருக்கோவில் கொங்கணசித்தர் ,போகரால் உருவாக்கப்பட்டதாக வரலாறு .


இதன் அருகே கூனவேலம் பட்டி அருகில் இராவணன் சகோதரி சூர்பனகைக்கு
திருக்கோவில் உலகிலேயே ஒரே கோவில் தனிக்கோவிலாக அமையப்பெற்றுள்ளதென அப்பகுதி நன்பர் சொன்ன தகவல் ஆச்சர்யத்தின் உச்சம் , ஸ்ரீ கொங்கணர் சித்தர் கோவில் இராசிபுரம் வெண்ணந்தூர் சாலையிலேயே இருப்பதால் எளிதில்
தரிசிக்கலாம் .

 மூலவராக ஸ்ரீ கொங்கணசித்தர் இருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு ஸ்ரீ கொங்கணரின் அருள் முழுமையாக கிட்டும் . 



திருக்கோவில் சுற்றி போகர் ,அகத்தியர் சிலைகளும் அமைந்துள்ளது . ஸ்ரீ கொங்கணர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அலைவாய் மலை என ஸ்ரீ கொங்கணரின் வாழ்வியல் தொடர்ச்சி தமிழகத்தில் கொங்கணர் பலகாலம் வாழ்ந்து ,சித்தமருத்துவம்
,பாஷாணக்கட்டுகள்,ரசவாதம் ஆகிய துறைகளில் உயர்ந்து நின்று திருப்பதி
திருமலையில் ஜீவசமாதியாகியுள்ளார் என்பது புலானாகிறது .

 மேலும் இங்கு உலைவைத்து ஊதியதிற்கான சான்றுகளும் சித்தர்கள் குகைகளும் உள்ளதாக கூறுவது ஆய்வுக்குரியது . அதனாலேயே உலைவாய்மலை என அழைக்கப்படுகிறதாம் .எப்படியோ புதிய சித்தர் ஆலயம் கண்டதில் மகிழ்ச்சியே . அப்பகுதிக்கு செல்லும் வாய்பிருப்பின் ஸ்ரீ கொங்கண சித்தர் அருள் பெற்றுச்செவ்லுங்கள். நன்றி

 முடிவுரை : 


அலைவாய் மலை ராசிபுரம் பகுதிகள் நமக்கு புதிது ,குறை
இருப்பின் சுட்டிக்காட்டவும் . இப்பகுதி சித்தர் ஆலயங்கள் ,பதிவுகள்
இருப்பின் லிங்க் கொடுங்கள் , மறுபடியும் ஓர் புதிய பதிவுகளுடன்
சந்திக்கிறேன் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...