📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Friday, July 26, 2013

ஸ்ரீ காசி விஷ்வநாதர் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி. ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில்கள் ,கொமராபாளையம் ,திருச்செங்கோடு வட்டம்

திருச்செங்கோடு வட்டத்தில் கொமராபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொமராபாளையத்தில் பார்க்க வேண்டிய ஆலயங்களில் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி ,காசி விசுவேரசாமி, ஆஞ்சநேயர் திருக்கோவில் விஷேசமானது ,


கொமராபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் யார்
கேட்டாலும் சொல்லக்கூடிய தூரத்தில் காவிரியன்னையின் மடியில் பவானிக்கு கிழக்கே அமைந்த அற்புத திருக்கோவிலாகும் , திருக்கோவில் அமைப்பு மூன்று சன்னதிகள் அமைந்த திருக்கோவிலாகும் , திருக்கோவில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது .

 திருக்கோவில் முகப்பிலே ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி
சன்னதி முதலாக அமையப்பெற்றுள்ளது . ஸ்ரீ லட்சுமி நாராயணர் வணங்கி பின்இரண்டாவதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியை வணங்கிட செல்கிறோம் .

நாமக்கல்லில் இருப்பதைப்போன்ற பெரிய ஆஞ்சநேயர் சன்னதி கண்டு வியப்பாக இருக்கிறது .வணங்கிய நிலை ஆஞ்சநேயர் கண்டு வணங்கி நிற்க துன்பங்களை இன்பங்களாக மாற்றும் அனுமன் பிரமிக்கும் விதத்திலமர்ந்து ஆச்சர்யம் தருகிறார் .


மூன்றாவதாக ஸ்ரீ காசி விஷ்வேஸ்வரர் சன்னதியில் சிறிய லிங்கம் அமைதியான சன்னதி , சுற்றிலும் வன்னி ,வில்வம் ,இலந்தையென பல ஆன்மீக மரங்களுடன் கோவிலைச்சுற்றி வருகையில் மனம் அமைதியடைகிறது , இங்கே திருமாலும்,சிவனும் , ஸ்ரீ அனுமனும் காவிரி ஆற்றங்கரையில் ஒரத்தில் அமர்ந்திருப்பதால் பழங்கால ஆலயமாக கருதப்படுகிறது ,

 கொமராபாளையத்தில்இருப்பவர்களெனில் கண்டிப்பாக வணங்க வேண்டிய ஆலயமாகும் . சனிக்கிழமைநாளில் ஸ்ரீ அனுமனுக்கு விஷேசபூஜை நடைபெறுகிறது . திருக்கோவில் 6 முதல்11 வரையிலும் மாலை 4முதல் 8 வரையிலும் திறந்திருக்கும் , வாய்பிருப்பின்
இறையருள் பெற்றுச்செல்லுங்கள்.

 நன்றி .

1 comment:

ak said...

Get Blessings directly from Divine power 🙏Om shree thalpaakattu swamigal

He is a great Saint who lives among common people and doing many miracles in people life .

He always wears a turban on his head so everyone calls him by the name thalapakattu swamigal

As like Mookkupodi Siddhar, Thadikaara Siddhar, Thalaiyatti Siddhar and Mouna Siddhar in the recent past ,Sri Talapakattu Swamiji follows the same legacy

If Swamiji comes and visits your house means all the problems in your life will be solved by his power . But his visit is possible only if he decides to come to your home .

If you bring him home and seek his blessings means you will get blessings directly by your Kuladeivam and all the gods

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்