Monday, July 1, 2013

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ,உறையூர் திருச்சி

                                   "திசுளாபுரவல்லியே நம ஓம் "


 ஸ்ரீ ரங்கம் அண்மையில் பயணித்து வந்த போது 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
திருக்கோவில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது .இது ஸ்ரீ அரங்கநாதசுவாமி  தேவஷ்தானத்திற்குட்பட்டது .

 திரு உறையூர் கோழியூர் எனவும் நிகளாபுரி
எனவும் அழைக்கப்படுகிறது. நந்த கோழ மகாராஜாவுக்கு குழந்தைபேறு
இல்லாக்குறை நீக்கி இலட்சுமி கமலமலரில் அவதரித்து இங்கே உறைந்த
காரணத்தால் இவ்வூர் திரு உறையூர் என்றும் உறந்தை என்றும்
அழைக்கப்படுகிறது .


 பெருமாள் இங்கே அழகிய மணவாளப்பெருமானாக நின்றநிலையில் அருள்புரிகிறார் .


 தாயார் மூலவராக வாஸல லட்சுமியாகவும்



உத்சவராக கமலவல்லி உறையூர் வல்லி எனவும் அழைக்கப்படுகிறார் . நந்த
சோழர் உறையூர் கமலவல்லி நாச்சியாரை பெருமாளுக்கு திருமணம் செய்து
வைக்கிறார் . திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் பார்த்த நிலையில் வடக்குதிசையில்
அமைந்துள்ளது .

கல்யாண விமானத்தில் அருள் புரிய இங்குள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் கமலபுஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது . காவேரி நதி ,
இதன் தீர்த்தமேயாகும் . திருக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


சிறப்பு :

திருப்பாணாழ்வார் அவதரித்த ஸ்தலம் . திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட ஸ்தலம் . கார்த்திகை மாதம் 10நாட்கள்
ரோகிணி நட்சத்திர உற்சவம் சிறப்பாக நடைபெறும் .

 திருக்கோவில் காலை 6.45
முதல் 12.00  வரையிலும் ,
மாலை 05.00முதல்
 இரவு 0800

முடிவுரை :

 ஸ்ரீ ரங்கம் ஆன்மீக சுற்றுலா சுற்றுலா செல்பவர்கள் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியாரை வணங்குங்கள் . மங்கலங்கள் உங்கள்வீட்டிற்கு வர அழகிய மணவாளப்பெருமானை வணங்கி வாருங்கள் . நல்லது பலவும்
உங்கள் வாழ்வில் கிட்டும் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...