Thursday, July 25, 2013

திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஷ்வரர் திருக்கோவில்

வேதத் திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு ,
போதந் தருவது நீரு புன்மை தவிர்ப்பது நீறு,
ஓதத் தகுவது நீரு உண்மையி லுள்ளது நீரு ,
 சீதப்புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே ,

                                                                                                                 திருஞான சம்பந்தர்


எங்கும் நீங்கமற நிறைந்திருக்கிற சிவபெருமான் பல அற்புத திருத்தலங்களில் வீற்றிருக்கிறார் . அவ்வகையில் புகழ் பெற்ற ஸ்ரீ கம்பகரேஸ்வர்திருக்கோவில் சிறப்புடையதாகும்..

 மூலவர் :ஸ்ரீ கம்பகரேஸ்வரர்

 அம்பிகை :

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (தர்மஷம்வர்த்தினி)

ஸ்தல அமைவிடம் :

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருவிடைமருதூர் இரயில்
நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது. சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆகும் ,திருபுவன வீரபுரம் என்பதே பழங்காலப்பெயராகும் .

 திருக்கோவிலமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவாலயத்தில் முதல்கோபுரமாகிய திரு தோரணவாயில் கண்டுபின் திருமாளிகை திருவாயில் நுழைந்தும் ,பின் மூன்றாம் வாயிலான
அர்த்தமான திருவாயில் கடந்து செல்கிறோம் இது ஓர் விஷேச அமைப்பாகும், இதைகடந்தே மூலவரை தரிசிக்கிறோம் .

 மூலவரின் சிறப்புகள் :

ஸ்ரீகம்பகஷ்வரருக்கு நடுக்கம் தீர்த்த பெருமான், திருப்புவன ஈச்சரமுடையாக
தேவர் என்கிற மற்றொரு திருநாமம் உண்டு . தேவர்கள் ,பிரகலாதன் , பெருமாள்ஆகியோரின் கம்பத்தை ( பயம் அச்சம் ) நீக்கியதால் ஸ்ரீ கம்பகேஷ்வரர் எனஅழைக்கபடுகிறார் .

 தீர்த்தங்கள் 7 அமைந்துள்ளது

ஸ்தல விருட்ஷம் :வில்வம்

 வழிபட்டோர்கள் :

வருணன் , இலட்சுமி, விஷ்ணு , சித்ரதன் .நாரதர்
,வரகுணன் , இராஜராஜ சோழன் ஆகியோராவர்கள் .

பூஜைகள்;

 5 காலபூஜைகள்
நடைபெறுகிறது .

 காலம் ;

கி.பி 1900 துவக்கத்தில் 3ஆம் குலோத்துங்க சோழன்
வம்ஷ வழியினரால் துவக்கம் செய்யப்பட்ட திருக்கோவிலாகும் .

புராணம் :

இரணியன் என்ற அசுரன் பல்வகை வரங்கள் பெற்று யாராலும் சாகா வரம்
பெற்று வாழ்ந்து வந்தான் , அவனுக்கு பிரகலாதன் என்ற மகன் பிறந்தான் அவன் ஓம் நமோ நாராயண என்கிற மந்திரத்தை உச்சரித்து வர இரணியன் கோபமுற்று தம்மை வணங்கும் படி கர்வம் கொண்டு பிரகலாதனை அச்சுறுத்த பிரகலாதன்தந்தைக்கு பயப்படாமல் நாரயணரை உச்சரித்து வந்தான் .

கடுங்கோபமுற்ற இரணியன் பிரகலாதனிடம் நீ வணங்கும் நாராயணர் எங்குள்ளார் என செருக்குடன் கேட்க தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரென பிரகலாதன் பதிலளிக்க  உடனே அங்கிருந்த தூணை உதைத்த இரணியனை திருமால் நரசிம்மராக தோன்றி இரணியனை கொன்று இரத்தம் குடித்து இரணியனை கொன்றார் .

 இரணியன் இரத்தம் திருமாலின் உடம்பினுள் சென்றதால் திருமால் மதிமயங்கி உலகை அழிக்கத்தொடங்க தேவர்கள் ஓடி சிவனிடம் தஞ்சமடைய சிவன் சரபப்பறவை வடிவமாக்கி நரசிம்மரான பெருமாளை நோக்கி விரைந்தார் . தன்மீதுசரபப்பறவையின் நிழல் பட்டதும் நரசிம்மர் இயல்பு நிலையடைந்ததாக வரலாறு .


தம் தவறை உணர்ந்து திருமால் தேவர்கள் சிவனைப்பாடி அருள்பெற்றனர் ,
தங்களுக்கு விளைந்த கம்பத்தை (அச்சம் நடுக்கம் ) நீக்கியதால்
இச்சிவனுக்கு கம்பகரேஷ்வரர் நடுக்கம் தீர்த்த பெருமான்
என்றழைக்கபடுகிறார் .


திருவிடை மருதூர் செல்லும் போது
அருகிலுள்ள திருபுவனநாதரை வணங்கி விட்டு வாருங்கள் , எதற்கெடுத்தாலும் பயப்படுகிற சிலர் திருபுவன நாதரை வணங்குவது மிகச்சிறப்பு , நடுக்கம்தீர்த்த பெருமானை வணங்கி அச்சமில்லா வாழ்விற்கு அஸ்திரமிடுங்கள் .

 ஓம் சிவ சிவ ஓம்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...