
அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில்
வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளது.
திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையத்தில் குடி கொண்டு கொங்கு வேளாளர் இனத்தில் சேரன்,பாண்டியன்,பனங்காடை குலத்தவர்களுக்கும், தேவர் குலத்தவரில் கணக்கன் கூட்டத்தாருக்கும் குலதெய்வமாகிய அருள் மிகு தங்கம்மன் கோவில் வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் அம்பிகையாக விளங்கி வருகிறது.
மூலவராக தங்கம்மன் சப்த கன்னிமார் வடிவில் அழகாக அமர்ந்திருக்கிறது.அருகிலேயே பிரமாண்டமான அக்கினீஷ்வரர் சன்னதியும் அலங்கரிக்கிறது. வெண்நாகப்புற்று சன்னதி தங்கம்மன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது.
பூஜை விபரங்கள் ; பிரதி அமாவசை காலை 11.00 மணிக்கும் பிரதி பெளர்ணமி அன்று மாலை 06.00மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நாட்களில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்காக ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அருகிலுள்ள அக்கினீஷ்வரருக்கு பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
போக்குவரத்து வசதி ;
தினமும் தங்கம்மன் கோவில் வழியாக செல்லும் பேருந்துகள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் ;
காலை 8.20 SRRBS பஸ் ஈரோடு ,8.45 ஆனந்த் பஸ் கொடிமுடி 0945 பஸ் நெம்பர் 47 கீரனூர் 10. 50 மணிக்கு 4B/47Bபஸ் படியூர்
மதிய நேரத்தில் திருப்பூரில் இருந்து செல்லும் பஸ்கள் 1.20 ஆனந்த் பஸ் கொடுமுடி 3.00 மணிக்கு 4B/47B படியூர் 3.15 SRRBS ஈரோடு ஆகியவையும்
மாலையில் திருப்பூரில் இருந்து தங்கம்மன் கோவிலுக்கு வர 6.20 ஆனந்த்பஸ் கொடுமுடி 6.50 பஸ் நெ 20 நால்ரோடு இரவு 9.10க்கு பஸ் நெ 20 நால்ரோடு ஆகிய பஸ் வசதிகள் உள்ளன.
வருடாந்திர பூஜை ; தமிழ்மாதம் ஆடிமாதக்கடைசியிலும் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் சிறப்பாக நடைபெறும். அது வருகிற கர வருடம் ஆடிமாதம் 25 ஆம் நாள் 10.08.2011 புதன் கிழமை அன்று சிறப்பாக பொங்கல் விழா நடைபெறும்.
அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு பூஜை, அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும் ; கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணி சங்கத்தினர்,, தம்மரெட்டிபாளையம் அஞ்சல், காங்கேயம் வட்டம் திருப்பூர் வட்டம் .
தொலை தொடர்புக்கு ;-STD 04294
திருக்கோவில் 258252,293278,
செயலாளர் வீடு 258224 258101
செயலாளர் அழைபேசி -;9486047324
பொருளார் அழைபேசி -9360194485.
காங்கேயம் நால்ரோட்டில் இருந்து 10கி.மீட்டர் தொலைவில்
உள்ள அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு வாருங்கள்.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.
வாழ்வில் எல்லா உயர்வுகளும் பெறுங்கள் .
திரக்கோவில் ஸ்தல வரலாற்றுடன் இடுகை விரிவாக்கப்படும்.
நட்புடன் குரு.பழ.மாதேசு.
குருவரெட்டியூர்
4 comments:
Thanks for this wonderful post. You helped me in identifying my Kula Thevem's temple.
My gof
My god is life
S THANGA PANDIYAN..,
MY GOD
SAMARAYAPATTI VILL & PO
UDUMALPET - 642204.
Post a Comment