Monday, April 18, 2011

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ,சோமேஷ்வரர் திருக்கோவில்,நங்கவள்ளி,மேட்டூர் வட்டம் ,சேலம் மாவட்டம்






அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ஆலயம்


Arulmigu laxmi narasimar thirukovil ,someaswara swamy temple

,சேலம்( salem)மாவட்டம் மேட்டூர் வட்டம்( mettur taluk) சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் வனவாசி(vanavsi) அருகில் நங்கவள்ளி(nangavlli) என்னும் ஊரில் அமைந்த ஓர் பழங்கால திருக்கோவிலாகும்.



இங்கு லட்சுமி நரசிம்மர் மூலவராக வேண்டும் வரம் தரும் வைணவத்திருத்தலமாகும்.

திருக்கோவில் இராஜகோபுரத்தின் மரக்கதவுகளின் சிற்ப வேலைப்பாடே அழகாக செதுக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.

அதைத்தாண்டி உள்ளே வந்தால் அனுமன் நம்மை வரவேற்க இடதபுறம் முழுமுதற்கடவுளான வன்னி மர வினாயரரும் ,அரசமர விநாயரரும் ஒன்றாய் அமர்ந்து நமக்கு அருள்புரிகின்றனர்.


பின் கோவிலுக்கு முன் கொடிமரம் வணங்கி அருகே துளசிமாடம் மற்றும் அஷ்டலட்சுமி மாடத்தில் 8 லட்சுமிகள் அருள்தர வணங்கி விட்டு உள் பிரகாரம் சென்றால் விஸ்வக்கேனர் சன்னதியை தரிசனம் செய்து அஹாபில லட்சுமி நரசிம்மர் தேவஸ்தானம் ,கருடாள்வார் தரிசித்து உள்ளே


மூலவரான லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் திருமணதடை, நல்வாழ்வு, நன்மக்கள் பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.

பிரசாதமாக துளசி,குங்குமம், சந்தனம், கற்கண்டு வழங்குகிறார்கள்.கோவில் உள் பிரகாரதில் சோமேஸ்வர் சன்னதி அமைந்து இருப்பது சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.

கோவில் எல்லா விஷேச நாட்களிலும் திறந்திருக்கும்.காலை06.00 முதல் 1200 மணிவரையும் மாலை 4.00 முதல் 08.00வரை .



பழங்கால இக்கோவில் பற்றிய விபரங்களின் தேடல் தொடரும். தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள். நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...