




ஈரோடு மாவட்ட கோவில்கள்:
ஆலய தரிசனம் ;
ஆலய பெயர், முகவரி:
பெரிய குருநாத சுவாமி கோவில் பொரவிபாளையம்
வெள்ளித்திருப்பூர் பவானி வட்டம் ஈரோடு மாவட்டம்
கோவில் அமைவிடம் ; அந்தியூர் வெள்ளித்திருப்பூரில் இருந்து
குருவரெட்டியூர் செல்லும் வழியில் 5 கி.மீ ல்
மூலவர்: குருநாதசாமி.
கோவில் விபரங்கள் :
குருநாதசாமி கோவில் குருவரெட்டியூரில் இருந்து 3 வது கி.மீட்டரில் உள்ளது. பலமுறை எனது நண்பர்களுடன் சென்று வந்ததுள்ளதாலும் அங்குள்ள இறை அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனும் ஆர்வத்தின் விளைவே இக்கட்டுரை.
இக்கோவிலின் சிறப்பு அம்சமே மன நிலை சரியில்லாதவர்கள் பேய் பிசாசுகள் தொல்லையால் இரவு உறக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், ஏதேனும் தடைகளால் முன்னேற்றம் இன்றி தவிப்பவர்கள் என பலர் குறைகளை தீர்க்கும் தெய்வமாக குருநாதசுவாமிகள் விளங்குவது தனிச்சிறப்பு. சரி கோவிலுக்குள் செல்வோமா..?
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் மாலை நாம் சென்ற போது கோவிலின் முகப்பில் நம்மை வரவேற்பது ஊஞ்சல் மரங்களுக்களிடையில் பாம்பு புற்று அங்கே தரிசனம் செய்து சற்று தூரம் நடந்தால் அங்கே கோவிலின் முகப்பு நம்மை வரவேற்கிறது.
பெரிய குருநாதர் அழகாகவும் கம்பீரமாகவும் நமக்கு காட்சி தர பல பெண்கள் ஊதுபத்தியை கையில் பற்ற வைத்து இறைவனை கும்பிட்டவாறு நின்று கொண்டிருக்க அங்காங்கே உட்கார்ந்த படி தலை விரித்த படி சில பெண்கள் ஆடிக்கொண்டிருக்க நமக்கு கொஞ்சம் பயமாகதானிருக்கிறது சற்றே ஆசுவாசப்படுத்தி இறைவனை வணங்கி விட்டு உட்கார்ந்தோம் . இரவு எட்டு மணிக்கு குருநாதசாமிக்கு சிறப்பான பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2 பூஜைகள் நடக்கின்றது.
குக்கிரத்தின் அருமையான மரங்களுக்கிடையில் அமைதியான சூழ்நிலை இறை வழிபாட்டை அமைதியாக்குகிறது. இக்கோவிலில் பல மன நோயளிகள் , பேய் பிசாசு பிடித்தவர்கள் குணமாகிச் செல்வதையும் பல பேரின் அனுபவங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் நீங்களும் நேரில் சென்றால் கண்டிப்பாக உணரலாம்.
பஸ் வசதி:
அந்தியூரில் இருந்து கண்ணாமூச்சி செல்லக் கூடிய ஏ5 பஸ் மற்றொரு தனியார் பேருந்தும் உண்டு. பவானியில் இருந்து 30கி.மீ குருவரெட்டியூர்க்கு பி10, பி5, ஜெயகிருஷ்ணா.,முருகன் பஸ்களில் வந்து இறங்கி குருவரெட்டியூர் பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீ செல்ல குருநாத சாமி கோவிலை வந்து அடையலாம். கோவிலுக்கு வருபவர்கள் பூஜை முடித்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. வாகன ஏற்பாட்டுடனும் இரவு உணவு எடுத்து வருதல் சிறப்பு. கோவிலில் சிறிய கடை உண்டு.
விசேஷ பூஜை நாள் :
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 7 மணிக்கு மேல். உப செய்தி: அந்தியூர் புகழ் மாட்டுச்சந்தை சின்ன குருநாதசாமி கோவில் இக்குருநாத சாமிக்கு தம்பி முறை ஆவார். வருடாவருடம் ஆடி மாத குருநாதசாமி கோவிலுக்கு இக்கோவிலில் அழைப்பு விடுக்கப்பட்டு பெரிய குருநாதசாமி கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டுருக்கிறேன் .
எம் அனுபவம் :
இங்கு நல்லதொரு சக்தி இருப்பதாய் உணர்கிறேன்
நீங்களும் வந்து தரிசித்து விட்டு எழுதுங்கள் நன்றி.
No comments:
Post a Comment