Tuesday, October 24, 2017
மனம் கவர்ந்த பாடகி -பிரியங்கா
Monday, July 18, 2016
Wednesday, July 13, 2016
Monday, July 11, 2016
Sunday, July 10, 2016
Friday, July 8, 2016
மரங்கள் அடையாளங்கள், TREE IDENTIFICATION
மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் இனிய வேளையில் மரங்களின் அடையாளங்கள் பதிவிடலாம் என ஆர்வமாக உள்ளேன்.நீண்ட காலங்களுக்கு பின் பதிவு எழதலாம் என எண்ணியுள்ளேன்.மூலிகை பற்றிய பதிவுகள் இருக்கும்.தொடர்ந்து பயணிப்போம்,நன்றி
Thursday, July 7, 2016
Wednesday, July 6, 2016
Tuesday, December 1, 2015
அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும். சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில் கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி
அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும். சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில் கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி
Wednesday, July 22, 2015
அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி
சேலத்தில் பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் சித்தர்களை தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாதார் ஆன்மீக ஸ்தலமாக விளங்குவது அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி ஆகும் . சேலத்தில் பழைய சூரமங்கலம் அருகிலும்,சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து அரை கிமீ தொலைவில் திருவாக்கவுண்டனுாரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் ஜீவசமாதி அமைந்துள்ளது. சுவாமிகள் பற்றி. : கரூர் ஜமீன் வம்சாவழியில் 1859 ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .தம்மை பைத்தியம் என்று சுவாமிகள் கூறிக்கொள்வாராம், பக்தர்கள் இவரை அப்பா என்றே அழைத்தார்கள். ஆகையால் அப்பா பைத்தியம் என பக்தர்கள் அழைத்தார்கள்.12.2.2000 ஜீவசமாதி: தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆனார்கள்... நன்றி
Monday, June 22, 2015
அம்பிகை மாயம்மா ஜீவசமாதி
சித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்களை தரிசிக்க சேலம் வந்ததோம். மாயம்மா பற்றி விபரங்களை தேட 1920 முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வாழ்ந்த அம்பிகை அம்சம் கொண்டவர், பெண் சித்தராக வாழ்ந்து பல அற்புதங்கள் செய்தவர் என்பதை அறிந்தேன். செல்லும் வழி : சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா ஸ்டுடியோ அருகில், சேலம் சட்டக்கல்லூரி எதிரில் மாயம்மா ஜிவசமாதியாக அமைந்து அருள் பாலிக்கிறார்.9.2.1992 ஆம் நாள் மாயம்மா ஜீவசமாதியான நாளாகும். பல மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு சென்ற மாதம் மாயம்மாவை தரிசனம் செய்தவுடன் மனதில் அமைதி உண்டானதாக உணர்கிறேன். அம்பிகை அம்சமான தாய் மாயம்மாவை வணங்கி எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
Friday, May 15, 2015
கிச்சி குத்து மாரியம்மன் திருக்கோயில்
அண்மையில் ஓர் சிறப்பான ஓர் ஆலயத்தை தரிசித்து வந்தேன்.சக்தி அம்சமான
இந்த அழகிய திருக்கோயில் மூலவராக கிச்சி குத்து மாரியம்மன்
அடைந்துள்ளார். இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்
கொள்ளேகால் வட்டம் மாட்டெலி அருகில் சுள்ளுவாடி கிராமத்தில்
அமைந்துள்ளது.இது அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி - கொள்ளேகால் வழியில்
கர்கேகண்டீ 4 ரோட்டில் இருந்து 3கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.தரிசித்து வாருங்கள்.நன்றி
Saturday, January 17, 2015
Thursday, November 20, 2014
சைவ உணவின் மேன்மை
உயிரைக்கொன்று தின்பதால் அதன் உயிர்வலி அதை சாப்பிடும் மனிதர்களுக்கு
நோயாக தாக்குவதும் உண்மையே . உயிரைக்கொல்லாது சைவ உணவு சாப்பிடுபவர் பலர் நீண்ட ஆரோக்கியத்துடன் காண முடிகிறது . ஆனால் இன்றோ குடியும் அசைவ உணவும் மனிதனின் அன்றாட தேவையாகிவிட்டது .
45 வயதிற்குள்ளாகவே கொடிய நோய்கள் தாக்குவதற்கு அசைவ உணவை அதிகம் புசிப்பதே காரணமாகும் . அப்ப சைவம் சாப்பிட்டால் நோயே வராதா என விதண்டாவாதம் பேசக்கூடாது .சித்தர்கள் உப்பை வறுத்தும் புளியை சுட்டும் சாப்பிட சொன்னார்கள் . நவநாகரீக உலகில் நுழைந்து பழையன எல்லாம் தொலைத்து விட்டோம் .
உண்ணும் உணவே விஷமென எல்லோரும் பேசுவதை கேட்க முடிகிறது . இன்றைய சூழலில்எல்லாமும் விஷமாகிவிட்டதென பழமையை தேடி ஓடுகிறார்கள் மக்கள் . இது நல்ல விஷயம் கி.பி 1500 முன் தொலைத்த நம் பாரம்பரியத்தை சித்தர்கள் எழுதிய புத்தகங்கள் , சித்தர்கள் தேடல் என இன்றைய மக்களின் சித்தர்களின் தேடல்மிக நல்ல விஷயம் .
சித்தர்கள் கலையில் ஜோதிடம் ,மாந்திரிகம் ,மருத்துவம்
என எதைப்பயின்றாலும் அசைவ உணவு தவிர்த்தால் சித்தர்கள் கலையில்
மேன்மையுறுவது எளிது.
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளை பூசித்தாலும்
மங்குற்போல் கோடிதானம் வள்ளலாய் வழங்கினாலும்.
சங்கையில்லாத ஞானசாத்திர முணர்ந்திட்டாலும் .
பொங்குறும் புலால் புசிப்போன் போய்நரகடைவானானன்றே .
கலையொலாமுணர்ந்தானேனும் கரிசற தெரிந்தானேனும் ,
மலையெனஉயர்ந்தானேனும் மன இயல் அகன்றானேனும் ,
உலகமெலாம் புகழ்ப் பல்லோர்க்குகுதவிய கையனேனும் ,
இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகடைவானற்றே ,
இத்திரனருள் கைப்பற்றி உயிர்க்கெலாம் இதத்தைச்செய்க ,
சத்திய இரக்கம்இன்றேல் முத்தியை சார்கிலார் - சற் , பக்தியால்
யோகம்சாரும் யோகத்தால் பரம் ஞானம் சித்தியாம் ,
இதற்காதாரம் ஜீவகாருண்யம் அன்றே ,
நன்றி
பஞ்சாட்சர பதி பசு பாச விளக்கம்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை,
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் ,
செல்லாகப் பற்றி தீவாய் நரகத்தின்
மல்லாகத் தள்ளி மறித்து வைப்பாரே
திருமூலர் திருமந்திரம்
இந்த
பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லை ! இரண்டாம் பாடலில் அசைவம் தின்போரைபுலையன் என திட்டுகிற திருமூலர் மாமிசம் உண்போரை எமன் தூதுவர் வந்து அழைத்துச்செல்வர் என்கிறார் . இந்த காலத்தில் உண்மையான நரகம் என்பதுநோய்தான் ,
அசைவ உணவு , மசாலா உணவுகள் அஜினோ மோட்டா உணவுகள் ,
செரிக்காத புரோட்டா உணவுகள் தவிர்த்து காய்கறி ,கீரைகள் சாப்பிடுதல்
நலம் . அதே போல மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாமென திருமூலர் சொல்கிறார் .
மனம் செம்மையாக முதல் படியே அசைவ உணவு
தவிர்ப்பதுதான் . மிருகத்தை தின்றால் மிருக உணர்ச்சியே வரும் . மானிட
உணர்வும், மனம் செம்மையாக ஆகவேண்டுமெனில் சைவத்தில் இருங்கள் .
உயிரைக்கொல்லக்கூடாது , அதை சாப்பிடக்கூடாது என விரும்பிய மகான்
திருவள்ளுவர் புலால் மறுத்தல், கொல்லமை என இரு அதிகாரங்கள் திருக்குறளில்எழுதினார் .
தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம்ஆளும் அருள்
26 அதிகாரம் புலால் மறுத்தல் 251
தன் உடம்பைபெருக்க அசைவ உணவு உண்பவர்க்கு அருள் எங்கிருந்து கிட்டும் , அருள்என்பது இறையருளாகவும் அது அசைவ உணவு உண்போர்க்கு கிட்டாது என்றும்வினவுகிறார்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .
குறள் 260ல் 26வது அதிகாரம் புலால் மறுத்தல்
பொருள்உயிர்க்கொலை செய்யாமல் , அதை கொன்று உண்ணாதவனை கை கூப்பி எல்லா உயிரும்தொழும் என்கிறார் . எல்லா உயிரும் தொழுமென்றால் உயர்ந்த யோகியாய் மனிதன் அசைவத்தை விட்டதும் மாறுகிறான் என்றே தோணுகிறது . திருவள்ளுவர் 33 வது அதிகாரத்தில் கொல்லாமை யின் அவசியத்தை பாடி இருக்கிறார் .
ஓன்றாகநல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
குறள் 323
உயிரைக்கொல்லாது இருத்தலே உயர்ந்த அறம் இரண்டவதாக உண்மை பேசுதல் நல்அறம் என்கிறார் . உயர்ந்த அறம் உயிர் கொல்லாமை என்கிறார் .
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
குறள் 327
பொருள் : தன் உயிரே போவதாக இருந்தாலும் மற்ற உயிரை போக்குதல் கூடாது அது கொடும் பாவம் என்கிறார் .
இப்படி பல மேற்கோள்கள் சித்தர்
பெருமக்கள் பாடியுள்ளார்கள் . அதையெல்லாம் விட்டு அசைவத்தை உண்பதால் பல நோய்கள் உருவாகிறது .
முடிவுரை :
எல்லாவற்றிக்கும் ஓர் அதிகாரம் எழுதிய திருவள்ளுவரே 2 அதிகாரம் எழுதியுள்ளார் எனில் சைவத்தின் மேன்மையை
உணருங்கள் . கடைசியா வாழ்ந்த வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்
பயணியுங்கள் . நோயில்லாமல் வாழலாம் , அசைவம் உண்பதில்லை என மன உறுதிகொள்ளுங்கள் .
பல ஆலயங்கள் தரிசித்தும் ஒன்றும் ஜெயிக்க முடியவில்லை
என்பதற்கு காரணம் அசைவ உணவு உண்பதே . இது என் தனிப்பட்ட ஆய்வே தவிரவேதவாக்கு அல்ல . இறைவன் படைத்தது எல்லாம் சாப்பிடதானே என்கிறசமாதானத்தை ஏற்க முடியாது .
முட்டை அசைவமே 40நாளில் குஞ்சு பொறிக்கிற
ஒன்று எப்படி சைவமாகும் . சைவமாக மாறுவதெனில் முழுக்க மாறுங்கள் . அது தவிர்த்து அசைவம் உண்டு விட்டு யோக பள்ளிக்கு செல்கிறார்கள் .தியானம்கற்கிறேன் என்கிறார்கள் . தன்னை தானே ஏமாற்றி கொள்வது இது ..
உயிர்கொலை புரியாது , புலால் உண்ணாது சைவத்தில் இருங்கள் .
இறையருளும கிரகங்களும் உங்களுக்கு நல்லதையே செய்யும் என்பது என் கருத்து .சித்தர்கள் சொல்லிவிட்டு சென்ற சைவ உணவை உண்ணுங்கள் . மனம் செம்மையாகி மேன்மை அடைவீர்கள் . இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .
கடந்த 1 வருமாக அடியேன் அசைவத்தை விட்டு
விட்டேன் . மனது தெளிவாக உள்ளது . நல்ல விஷயமென உங்களுக்கு தோன்றினால்சைவத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் . ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
. நன்றி .
ஒம் சிவ சிவ ஓம் .
Monday, November 10, 2014
G.P இராஜன் எனும் விருட்ஷம்
எனது அண்ணன் எல்.ஐ.சி முகவராக பவானி கிளையில் கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வந்தார் . எனது குடும்பத்தின்
மூத்த சகோதரனாக என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்திய ஆசான் .
அண்ணனின் நன்பர்கள் சென்னை ,கேரளம் ,வேலூர் , கர்நாடக என பல ஊர்
கூட்டிப்போய் ஆயுர்வேதம் முதல் அலோபதிவரை பார்த்தார்கள் .
சென்னையிலுள்ள ஒர் தனியார் மருத்துவமனை 40லட்சம் செலவாகுமென பேசியது ! அடையாரில் 25லட்சம் செலவாகும் என்றார்கள் ! எங்கே போவது ? ஏழை எங்கே போவான் ?
எப்படியும் இந்த உயிரைக்காப்பாற்றி விட வேண்டுமென சென்னையிலுள்ள ஓர்மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிட்சை கொடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில்வீட்டிற்கு வந்தார் . அடுத்த இரண்டு நாளில் முகம் வீங்கிய நிலையில் வாய் உட்பகுதியில் புண் ஏற்பட எது சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட வாந்திநிற்காமல் வரவும் என்ன செய்வதென புரியவில்லை !
இந்த சூழலில் சத்தியமங்கலம் அருகில் புற்று நோய்க்கு ஒர் வைத்தியர் மருந்து கொடுப்பதாக கேள்விப்பட்டு கிளம்பினோம் . அத்தாணியில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் வழியில் காளியூர் பிரிவு என்ற இடத்தில் சரவணா
சித்தவைத்திய சாலை கேள்விப்பட்டு அந்த வைத்தியரிடம் அனுப்பி வைத்தேன் .
எந்த மருந்திலும் 25 நாளாக நிற்காத வாந்தியை அந்த சித்த வைத்தியர்
1நாளில் நாளில் நிறுத்தி சாப்பிட வைத்தார் . 25 நாட்களாக சாப்பிடாத என்
அண்ணன் G.p இராஜன் அன்று முதல் 3 வேளை உணவு சாப்பிட்டார் .படிப்படியாக மருந்தும் சாப்பிட்டு படிப்படியாக குணமாக ஆரம்பித்தார் .
அந்தவைத்தியர்க்கு எனது நன்றிகள் .
பின் 6 மாதம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அந்த சித்த மருந்து சாப்பிட படிப்படியாக இரத்த வெள்ளணுக்கள் குறைந்து என குணமாக ஆரம்பித்தார் . ஹீமோதெரபில் கொட்டிய முடி வளர்ந்தது . அவரைப்பார்த்து ஆச்சர்யர்ப்பட்ட நன்பர்கள் பலரும் அப்போது உண்டு .மறுபடி தன் வேலையாக வெளியே கிளம்ப அக்டோபர் முதல் வாரத்தில் நோயின்தாக்கம் ஆரம்பித்தது .
முதல் உள்நாக்கில் புண் வந்து சாப்பிட முடியாமல்
செய்தது . மறுபடி உணவு சாப்பிட முடியாமல் போக சிவப்பணுக்கள் குறைந்து
வெள்ளையணுக்கள் மறுபடி அதிகமாக ஆரம்பிக்க பின் சித்த மருந்து கொடுத்து கேட்காமல் கடைசியாக 15 நாட்கள் சென்னை சென்று ஆங்கில வைத்தியம்பார்த்தும் சிகிட்சை பலன் இன்றி
கடந்த 18.10.14 அன்று காலை 4.15 மணிக்கூ
எனது அண்ணன் G.p இராஜன் இறைவனுடன் கலந்து விட்டார் .
இரத்த புற்று நோயில் 40வகை இருப்பதாக சொல்கிறார்கள் . எனது அண்ணாவுக்கு இருந்தது அதிகம் பாதிக்ககூடிய புற்று நோய் வகையாம் . ஆங்கில மருத்துவத்தில் எலும்பு மஜ்சை ஆப்ரேசன் செய்து மாற்றுவதே சிகிட்சை என்கிறார்கள் . அந்த ஆப்ரேசன் செய்தாலும் சிலகாலமே உயிர்வாழ வாய்ப்பு உள்ளதாம் .
எப்படியாயினும் இரத்தப்புற்று நோயை தற்காலிகமாக தள்ளிப்போடவே மருந்து இருக்கிறது என் வாழ்வில் நேர்ந்த உண்மை . இந்த பதிவின் நோக்கமே
யாரையும் குறை சொல்ல அல்ல . என் வாழ்வில் என் அண்ணாவிற்கு
நேர்ந்தவற்றை உங்களுக்கு தெரிந்து கொள்ளவே இந்த பதிவு . இது போன்ற
குணப்படுத்த முடியாத நோய்களில் பலரும் தினம் செத்துப்போவது ஏற்க முடியாது
இதற்கெல்லாம் மருந்து கண்டுபிடிக்க யாரேனும் இந்த பூமியில் அவதரிக்கவேண்டும் . பல ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டு மருந்தில்லா நோய்களைகுணப்படுத்த பல உயர்ந்த மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கவேண்டும் .நான்அன்றாடம் வேண்டி இறஞ்சுகிற சிவபெருமானும் , ஸ்ரீ வெங்கடாசலபதியும்சித்தர்களூம் இதைச்செய்யவேண்டும் .
வாழ்வின் எந்த சுகமும் அனுபவிக்காது, தினமும் காலையில் எழுந்து ஸ்ரீ செல்வ விநாயகரையும் ,ஸ்ரீ கக்குவாய்மாரியம்மனையும் வணங்கிவிட்டே சாப்பிட செல்கிற என் அண்ணன் ,புகை மது பழக்கம் இல்லாதவர் எப்படி இந்த நோய் தாக்கியது என ஆற்றாமை இன்று வரை தொடர்கிறது . எப்படியும் என் தம்பி என்னைக்காப்பாற்றி விடுவான் என நம்பிய என் அண்ணாவின் ஆத்மாவிற்கு பதில் சொல்ல வழியின்றி வலியில்
தவித்துக்கொண்டிருக்கிறேன் .
என் இப்போதைய வேண்டுதல் எல்லாம் அவர்விரும்பிச்செல்கிற திருப்பதியிலோ திருவண்ணாமலையிலோ இறைவனின் நிழலில் இளைப்பாறவேண்டும் என்பதே !
இந்த முக்கிய தருணத்தில் எனக்கும் என்
குடும்பத்தினருக்கும் தோள் கொடுத்த நன்பர்கள் பலருக்கும் நன்றி.
1.முதலில் திரு. செந்தில்குமார் M.S ராணிமருத்துவமனை ,அந்தியூர்
நெருங்கிய நன்பர்கள்
Tr. Murugan, Devolopment Officer, bhavani branch
Tr,palanisamy lic agent bhavani branch
Tr,perumal lic agent bhavani branch
Tr.kulandaisamy siddavaithiyar ,saravana sidda hospital ,kaliyur pirivu,sathyamamangalam,
உட்பட பல நன்பர்கள் பல்வேறு உதவிகள்
எனது நன்பர்கள் பார்த்திபன் நடராஜ் சீனிவாசன் என ஓர் பெரிய
பட்டியலே உள்ளது. அவர்களுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . இந்த
பதிவை படித்ததும் இந்த பதிவு அவசியமா என பல நட்புகள் கேட்கக்கூடும் .
இரத்தப்புற்று நோய் எந்த அளவு ஓர் குடும்பத்தை பாதிக்குமென
விளக்கியிருக்கிறேன் .
இன்றைய காலத்தில் புற்றுநோய் ஒர் கொடிய எமனாக
உருவாகி வருகிறது . மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் , அடுத்த வரும்
பதிவுகளில் நோயில்லாமல் மனிதன் வாழ புற்றுநோய் பற்றியும் ஆய்வு செய்துசமர்பிக்கிறேன்.
இந்த பதிவை படிக்கும் நட்புகள் எனது அண்ணன் G.pஇராஜனுக்காக அவர் ஆத்மா இறையருளுடன் கலக்க ஓர் நொடி வேண்டி கொள்ளுங்கள்.
. நன்றிபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...