Friday, January 18, 2013

கொடநாடு காட்சி முனையின் அழகு

நீலகிரி மாவட்டத்தில் அழகிய இடங்களில் கொடநாடு காட்சி முனையும் ஒன்றாகும்.சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மலைச்சரிவை கண்டு களித்துக் கொண்டேசென்றால் கோத்தகிரியில் இருந்து 19 கி.மீட்டர் தொலைவில் உள்ள கொடநாடு
காட்சிமுனையை அடையலாம் .

 கொடநாடு வியூ பாயிண்டில் ஹோட்டல் எதுவும்
கிடையாது .சிற்றுண்டி கடை ஒன்றும் மேலே மகளீர் சுய உதவிக் குழுவின்
பல்பொருள் அங்காடி ஒன்றும் உள்ளது. இங்கே நீலகிரி தைலம் டீத்தூள்கள்
கிடைக்கின்றது.

 கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்த்தால் வலப்புறம்
தூரத்தில் பவானி சாகர் அணைக்கட்டு தெரிகிறது. காட்சி முனையின் அருகே
வலப்புறமாக தெரிவது ரங்கசாமி குன்று ஆகும் .நடுவிரல்,
மோதிரவிரல்,ஆட்காட்டி விரல் போல ரங்கசாமி பில்லர் தெரிகிறது.

40வருடங்களுக்கு மேக மூட்டத்தின் காரணமாக ரங்கசாமி குன்றில் மோதி விமான விபத்து ஒன்று நடந்ததாக இங்குள்ள நன்பர் கூறினார் , ரங்கசாமி குன்றின் கீழே அழகான நீண்ட அருவி ஓடுகிறது . இடப்புறமாக மாயாறு U வடிவில்ஓடுகிறது.

அருகே தெங்குமரஹடா என்னும் கிராமம் அழகாக தெரிகிறது. கொடநாடு
காட்சி முனையின் கீழ் இறங்கி நடந்தால் இன்னோரு வியு பாய்ண்ட் வருகிறது . இங்கே இருந்து பார்த்தால் தெங்குமரஹடா கிராமம் சற்று அருகே தெரிகிறது.


ஊட்டியில் இருந்து 50கி.மீட்டருக்குள்ளே வரும் கொடநாடு காட்சி முனை
பார்க்கவேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும் . கொடநாடு காட்சிமுனை ஈரோடு
மாவட்டத்தின் பல இடங்களை மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் காணலாம் .
வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . நன்றி

Friday, January 11, 2013

நாகதோஷம் நீக்கும் திருநாகேஷ்வரர்

                                    ராகுதோஷம் போக்கும் திருநாகேஸ்வரம்
                                                                                                    

" நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம்
நண்ணுவார் கோளும் நாளும்
தீயவேணும் நன்காம் குறிகொண்மினே"

-(திருஞான
சம்பந்தர்)


மூலவர் : செண்பகராண்யேஸ்வர் \

அம்பாள் : கிரிகுஜாம்பாள்
(குன்று முலையம்மை) \

திருநாகேஸ்வரம் முன்காலத்தில் செண்பகப்பூ தோட்டமாக
இருந்தமையால் செண்பகாராண்யம் என்றும்
ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் என
இறைவனை அழைத்தும் , இறைவிக்கு கிரிகுஜாம்பாள் ,பிறையணிவாள் நூதல் அம்மை
என்றும் பொருளுண்டு.


 செல்லும் வழி : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
இருந்து வடகிழக்கே 7 கி.மீட்டர் தொலைவில் காரைக்கால் செல்லும் வழியில்
திருநாகேஸ்வரம் திருக்கோவில் அழகே அமையப்பெற்றுள்ளது.

நவகிரகங்களில்   ஒன்றான ஸ்ரீ ராகு பகவான் இங்குள்ள ஈசனை வழிபட்ட சாப நிவர்த்தி பெற்றதாக
வரலாறு,கெளமர் வழிபட்டு தன் மனைவி அகலியைப் பெற்றதும் பாண்டவர் தாம்
இழந்த நாட்டைப்பெற்றதும் ,திருநாகேஸ்வரத்தில் வணங்கியதால் பலன்
ஏற்பட்டதாம்

 நாகராஜர் திருக்கோவில் :நாகராஜர் தனது தேவியர்களான சிம்ஹி
,சித்ரலேகா உடன் தனி சன்னதியாக தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ரூ 500
கொடுத்தால் இருவர் பாலாபிஷேம் செய்து வரலாம் .

ஞாயிற்றுக்கிழமை 4.30
மணிக்கு திருநாகேஸ்வரத்தில் ராகுகால பூஜை துவங்குகிறது 04.30 மணி முதல்
06 .00 மணி வரை நடைபெறும் .நாகராஜருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது
பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள அற்புதமான விஷயமாகும்

.ஞாயிற்றுக்கிழமை
பாலாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு
பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் ,காலசர்ப்பதோஷம் , ஆகிய பல நாக தோஷங்கள்
நிவர்த்தி ஆகுமென்பது கண்கூடாகும் .

 திருக்கோவில் திறப்பு நேரம் : காலை
5மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம்
திறந்திருக்கிறது. ''

திருக்கோவிலில் சூரியனால் உண்டாக்கபெற்ற சூரிய
தீர்த்தம் ,மற்றும் திரிசூல தீர்த்தம் உட்பட 12 தீர்த்தங்கள்
அமைந்துள்ளது.

முடிவுரை : ஜோதிடம் கூறும் நாகர் சம்பந்தமான அனைத்து
கிரகதோஷங்களையும் திருநாகேஸ்வரம் வந்து ஸ்ரீ நாகநாதர்க்கு பாலபிஷேகம்
செய்தால் நீங்குவது தெளிவான உண்மையாகும் .

 தோஷ காரணங்களால்
திருமணமாகதவர்கள் கூட திருநாகேஷ்வரத்தில் ஞாயிறுக்கிழமை பாலபிஷேகம்
செய்து பின் திருமணஞ்சேரி வந்தால் திருமணம் கைகூடுகிறது .
அற்புதமான
பழங்கால திருக்கோவில் சென்று வாருங்கள் நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...