Friday, June 28, 2013

ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் திருச்சிராப்பள்ளி


        SRIRANGAM SRI RANGANATHA SWAMY TEMPLE  TRICHY

" நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப்
 பால்விரிந்து அகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் ,
 பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த,
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் ,
 திருவுமர் மார்பன் கிடந்த வண்ணம் "
                                                                                                                 -சிலப்பதிகாரம்.

 திருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் புகழ் பெற்ற 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி தமிழகத்தின்
மத்திய பகுதியான ஸ்ரீ ரங்கத்திலிருந்து அருள்பாலிக்கிறார் .
மகாவிஷ்ணுவிக்கென அமைக்கபட்டுள்ள திவ்யதேச திருக்கோவில்களில்
முதன்மையானதாகும் .

திருக்கோவில் உருவான விதம் :

திருப்பாற்கடலில்
தோன்றிய திருவரங்கம் கோவில் விமானத்தை பிரம்மன் பல காலம் பூஜை செய்துவந்தார் . பின் இப்பூசையை சூரியன் அதன் பின் சூரிய வம்சத்தில் வந்த
இட்சுவாகு மன்னர் இந்த விமானத்தைஅயோத்திக்குவழிபடகொண்டுவந்தான்.

பின் இக்குலத்தில் பெருமாளின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமர் தன்
முடிசூட்டு விழாவிற்கு வந்த விபிஷணன் பக்திகண்டு அவர்க்கு அளித்தார் .
விழா முடித்து காவிரிக்கரை வழியே இலங்கைக்கு பயணித்த களைப்பினால்
காவிரிக்கரையில் விமானத்தை இறக்கி வைக்க அவ்விமானம் அங்கேயே நிலை கொண்டது '.

பின் பலமுறை முயற்சித்தும் விமானத்தை தூக்கமுடியாமல் கவலைப்பட
இதைக்கேள்விப்பட்ட விபிஷணர்க்கு ஆறுதல் சொல்லி அரங்கநாதர்
காவிரிக்கரையில் தங்கவே விரும்புகிறார். அதனால் ஸ்ரீ ரங்கநாதர்க்கு
திருக்கோவில் எழுப்பலாம் என்று தமது கனவைக்கூற, விபிஷ்ணர் விருப்பம்
போலவே உன் நாடான தென்திசையில் இலங்கை நோக்கி பள்ளி கொண்டருள்வதாக உறுதிகூறினார் .

முதலில் தர்மவர்ம சோழனால் அவ்விமானத்தை சுற்றி திருக்கோவில்
எழுப்பபட்டது . பின்காலத்தில் காவிரி வெள்ளத்தினால் திருக்கோவில்
அடித்துச்செல்ல தர்மவர்ம சோழர் பரம்பரையில் வந்த கிள்ளிவளவன் ஒரு கிளியை பார்க்க மகாவிஷ்ணுவின் ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் இருந்த இடத்தை காட்டியது.

அங்கு திருக்கோவில் கட்ட ஆரம்பிக்க பின் கனவில் இறைவனே காட்சி தந்து
தற்போது ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைவிடத்தை சுட்டிக்காட்டியதாக வரலாறு. சோழர்களால் கட்டப்பெற்ற அழகிய ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் பூலோகவைகுண்டம் என அழைக்கபடுகிறது.

 மூலவர் :ஸ்ரீ அரங்கநாதஸ்சுவாமி


திருக்கோவிலில் ஸ்ரீ அரங்கநாதர் பள்ளி கொண்ட உருவமாய் ஸ்ரீ
மகாலட்சுமியுடன் ஆதிசேடன் படுக்கையில் திருபாற்கடலில் காட்சி
அளிப்பதைபோல் அருள்பாலிக்கிறார் .

 திருக்கோவில் வரலாறு :


1000ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம்
நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு :

காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில்
ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. 156 ஏக்கர் பரப்பில் அமைந்த
மிகப்பெரிய திருக்கோவிலாகும் .இந்தியாவிலேயே 7 பிரகாரங்களை கொண்ட
திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் மட்டுமே என்ற பெருமையை பெற்றுள்ளது .
கோபுரங்கள் 21 ஆகும் தீர்த்தங்கள் 9 இருக்கின்றன.
s
 ஸ்தல விருட்சம்:புன்னை மரம்

 மங்களாசாசனம் : ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற
திருக்கோவிலாகும் .

ராஜகோபுரத்தின் உயரம் 236 அடியாகும் .ஸ்ரீ தொண்டாரடிப்
பொடி ஆழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம் . ஸ்ரீ
ராமனுஜர் இங்கு வாழ்ந்து முக்தியடைந்த சான்றோர்களில் ஒருவராவார் .


முடிவுரை :

 காலை 6.15 மணிக்கு விஷேசமான பூஜையாக குதிரை ,பசு, யானையுடன்
துவங்குகிறது ஸ்ரீ ரங்கத்தில் இப்பூஜை விஷேசமானது . கடந்த வாரத்தில் ஸ்ரீ
ரங்கப்பெருமானை இந்த பூஜையில் கலந்து கொண்டது மகிழ்வான ஓர் நிகழ்வு .
வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு முறை வணங்கிய அதே அருமையான நினைவுகளுடன் இறைவழிபாடு செய்தேன் . ஸ்ரீ ரங்கப்பெருமான் பற்றிய இப்பதிவில் பகிர்ந்துசிறிதளவே !

 மிகப்பெரிய சூட்சமங்கள் கொண்ட திருக்கோவில் தம்மை
நம்பியவர்கள் வாழ்வில் உயர்த்துகின்ற ஸ்ரீ ரங்கநாத பெருமான I வந்துவணங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிடுங்கள் .

நன்றி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கோவிலின் சிறப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்றி நட்பே

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...